செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23


"கந்தசாமி" பட ரிலீசை எதிர்பார்த்து இருக்கிறார். ஸ்ரேயா. திரையுலக அனுபவம் பற்றி அவர் சொல்கிறார். தமிழில் ஜெயம் ரவிக்கு ஒரு ராசி உண்டு. அவருடன் நடிக்கும் புதுமுக நடிகைகள் எல்லோரும் பிரபலமாகி விடுவார்கள். சதா, திரிஷா, அசின், ஜெனிலியா என அப்பட்டியல் நீள்கிறது.

ஆனால் எனக்கு அது நேர் விரோதமாக இருந்தது. அவருடன் நான் நடித்த "மழை" படம் சரியாக போகவில்லை. இதனால் ராசி இல்லாத நடிகை என எனக்கு முத்திரை குத்தினார்கள். இனி தமிழ் படங்கள் அவ்வளவு தான் என்று நினைத்து தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அப்போது தான் "சிவாஜி" படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படம் வெற்றிகரமாக ஓடியது. ரஜினியால் நான் அதிர்ஷ்ட சாலியானேன். ராசி இல்லாத நடிகை என்ற "இமேஜ்" விலகியது. என் வாழ்க்கையில் சிவாஜி ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. இப்போது கந்தசாமி படம் வரை கொண்டு வந்து விட்டுள்ளது.
நான் சாய்பாபா பக்தை. எந்த கஷ்டம் வந்தாலும் அவர் கைவிடமாட்டார். சினிமா என்பது கோடிகள் புரளும் தொழில். இதில் கிளாமர் முக்கியம். அழகு, உழைப்பு, அதிர்ஷ்டம் ஆகிய மூன்றும் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது.
முதல் படத்தில் இருந்தே என்னை கிளாமர் நடிகையாகத்தான் பார்க்கிறார்கள். என்னுடைய உடல் வாகுக்கு புடவை கட்டி நடித்தால் எடுபடாது. ரசிகர்கள் விரும்பமாட்டார்கள். கிளாமருக்கும் ஒரு எல்லை வைத்து இருக்கிறேன். அளவோடு தான் இருக்கும். கதைக்கு தேவையான அளவு கவர்ச்சி காட்டுவேன்.
நம்பர் ஒன் நடிகை போட்டியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லா நடிகைகளுமே ஒவ்வொரு கால கட்டத்தில் நம்பர் ஒன் ஆக இருப்பார்கள். யாருக்கும் அது நிரந்தரமானது அல்ல.

தருண்கோபி கதாநாயகனாக நடித்த மாயாண்டி குடும்பத்தார் படத்தை இயக் கியவர் ராசுமதுரவன். அப் படம் வெற்றிகரமாக ஓடும் சந்தோஷத்தில் இருக்கிறார். அடுத்து "கோரிப்பாளையம்" என்ற படத்தை இயக்குகிறார். இது பற்றி அவர் கூறியதாவது:-

குடும்ப உறவுகளில் உள்ள சிக்கல்களையும், பாச உணர்வுகளையும் மையப்படுத்தி மாயாண்டி குடும்பத்தார் படத்தை எடுத்தேன். அனைத்து தரப்பினர் மத்தியில் அப்படம் அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடுகிறது. ஆயிரக்கணக்கானோர் படத்தை பாராட்டி கடிதங்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒவ் வொரு வரும் தங்கள் வீடுகளில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதாக தெரிவித்துள்ளனர்.
கதை தான் ஹீரோ. பெரிய கதாநாயகர்கள் கதையை நம்ப வேண்டும் இயக்குனர்களை சுதந்திரமாக படங்கள் எடுக்க விட வேண்டும். கதாநாயகர்கள் தலையிட்டு கதையை மாற்றினால் படம் அடிபட்டு போகும். தருண்கோபி இப்படத்தில் அழுது சிறப்பாக நடித்தார். பெரிய ஹீரோக்கள் இது போன்று கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க மறுக்கிறார்கள். அந்த நிலைமை மாற வேண்டும்.
அடுத்து "கோரிப்பாளையம்" படத்தை இயக்குகிறேன். யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. வைகை ஆற்று மேம்பாலத்திலும் அதன் அடியிலும் நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதை. ஆபாசம், வன்முறை இருக்காது. ஒரு இளைஞன் சந்திக்கும் சிறிய சம்பவம் அவன் வாழ்க்கையை எப்படி திருப்பி போடுகிறது என்பதே கதை.

சிம்பு, விஷாலை தருண் கோபி, விமர்சித்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. இனிமேல் அவர்களை பற்றி பேச வேண்டாம் என்று அவரிடம் கூறியுள்ளேன்.

இவ்வாறு ராசுமதுரவன் கூறினார்.

நடிக்க சான்ஸ் கேட்டு மிரட்டிய ஸ்லம்டாக் மில்லியனர் நாயகன் கைது!

slumdog.jpg

மிரட்டல்களில் பல வகை. அதில், இது புதுவகை. ஆஸ்கார் விருது பெற்ற படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் குவிஸ் போட்டியில் வெற்றி பெற்று கோடி ரூபாய் பரிசு பெறும் கதாபாத்திரத்தில் நடித்தவர் இளம் நடிகர் அஜீத் பாண்டே. அவர், நடிக்க வாய்ப்பு கேட்டு  தயாரி்ப்பாளர் ராமானந்த் சாகரை தொலைபேசியில் மிரட்டியதாக கைது செய்யப்பட்டார்.

பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் ராமானந்த் சாகர். இவருடைய நிறுவனத்துக்கு கடந்த மே மாதம் ஒரு அனாமத்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் தன்னை ஹூஸ்ரி என்று கூறிக்கொண்டார். பிரபல தாதாவான ஷோட்டா சகிலின் நண்பர் என்றும், உங்கள் நிறுவனம் எடுக்கும் சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் ஸ்லம்டாக் மில்லியனர் பட நாயகன் அஜீத் பாண்டேவுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் தனக்கு ரூ.20 லட்சம் பணம் தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கொலையும் செய்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

மும்பை காவல்துறையின் விசாரணையில் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தது நடிகர் அஜீத் பாண்டே தான் என்பது தெரியவந்தது.

இது குறித்து காவல்துறை துணை ஆணையர் ராகேஷ் மரியா கூறுகையில்,

”கடந்த மே 24ஆம் தேதி அஜீத் பாண்டே போன் செய்து இவ்வாறு மிரட்டியிருக்கிறார். தன்னை ஹூஸ்ரி என்றும் கூறியிருக்கிறார்” என்றார்.

அஜீத் பாண்டேவை அவர் பயன்படுத்திய செல்போனின் சிம்கார்டு காட்டிக் கொடுத்துவிட்டது. கைது செய்யப்பட்ட அவர், உள்ளூர் நீதிமன்றத்தால் ஜூன் 27 வரை காவல்துறை விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: