செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23


உயிர்க்கொல்லி வன்முறை (Bio terrorism) . பல ஆங்கில படங்களில் பார்த்திருக்கிறோம்.

ஈராக்கில் உயிர்க்கொல்லி ஆயுதங்களை தேடி சதாமை தூக்கிலிட்டு தன் அமைதி சமாதான முகத்தைக் காட்டினார் புஷ்.

ஆனால் இராஜ பக்‌ஷே ஒருப்படி மேலே சென்று விட்டார்.

யாரையும் உள்ளே விடுவதில்லை.

புலிகளின் அச்சுறுத்தலாம். அதுதான் புலிகளை ஒழித்துவிட்டோமே??!!.

அவர்கைகளில் கிலிஸ்டர் பாம் இல்லை.

பாஸ்பரஸ் குண்டுகள் இல்லை...

கனரக ஆயுதங்கள் இல்லை....

ஆனால் தினசரி கொலைகளை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கிறார். வெளியே தெரிவதில்லை... எனென்றால் போரை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு இறப்புகள் எப்படி நிகழும்.. என்று உலகை கேட்பார். இந்தியாவும் பக்க வாத்தியம் இசைக்கும்.

இருவர் மட்டுமே தங்க வேண்டிய முகாமில் 15 முதல் 20 பேர்வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை...

ஒரு வேளை உணவுக்கே தட்டேந்தி பல மணிநேரக் வரிசையில் நிற்க வேண்டும்.

கழிப்பறையில் எப்போதும் 15 பேர் நின்று கொண்டு இருக்கும் நிலைமை...

உயிர்காக்கும் மருந்துகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை, சிகிச்சை இல்லை...

இன அழிப்பு செய்யப்பட்ட போரில் குடி பெயர்ந்து கொண்டே இருந்த மக்களில் பல பேருக்கு ஊட்டச்சத்து குறைப்பாட்டுக்கு ஆட்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள்...

ஊட்டச்சத்துக்கு ஆட்பட்டாலேயே அனைத்து சந்தர்ப்பவாத நோய்கள் தோன்றும்.

இந்நிலை சிங்கள அரசால் இப்போது செயற்கையாக தோற்றுவிக்கப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டே இராஜபக்சே நவீன சித்தரவதை முகாம்களாக மாற்றியுள்ளார்.

ஆம் தினமும் பிணங்கள் விழுந்து கொண்டே இருக்கிறது.. இவை கணக்கில் வராது. இது ஒருவ்கை டெரர்ரிசம். பையோ டெரர்ரிசம் நவீன வடிவம். கடந்த 15 நாட்களில் சின்னம்மை (Chicken pox) பரவி வருகிறது.

இது காற்றில் பரவும் நோய். இருவர் மட்டுமே தங்க வேண்டிய முகாமில் 15 முதல் 20 பேர்வரை தங்க நேர்ந்தால் கொள்ளை நோயாக வெளிப்படுகிறது.

ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்நோய்க்கு குறுகிய காலத்திலேயே ஆட்பட்டு விடுகின்றனர்.

சுமார் 15 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிகிறது.

பிறகு...

நீரினால் பரவும் நோய்களான தீவிர குடல் அழற்சி ,வயிற்றுப்போக்கு மற்றும் காலரா தோன்றினால் மனித இழப்பு அதிக மாகும். ஆனால் அச்சூழ்நிலைகள் நிறையவே அங்கு உண்டாக்கப்பட்டு வருகிறது.

டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற கொசுக்களினால் பரவும் நோய்களும் வரவாய்ப்பிருக்கிறது..

இந் நோய்கள் செயற்கையாக இராஜபக்சேவினால் தோற்றுவிக்கப்படுகிறது.

இறப்பை நோயின் மீது போடவே இச்சதியாகும்.

ஐநா கண்டு கொள்ளாது.

பாகிமூன் சீன பாசத்தில் உள்ளார்.

பக்சேவோ இந்தியாவின் நேசத்தில் உள்ளார்.

உலக நாடுகள் இத்திரை மறைவு மனிதப்பேரழிவை தடுக்க வேண்டும்.

உலக சமூதாயத்தின் பார்வையில் இவ்வன்செயல் மறைக்கப்படுகிறது என்பது உண்மையே.

எப்படியோ தொற்றிக்கொள்கின்றன

ஒவ்வொரு முறை
ஊருக்குச் செல்லும்போதும்
யாரோ இனங்கண்டு
சொல்கிறார்கள்

பிறகுதான் உணர்கிறேன்
நானும்

மூலம் தேடி அலைக்கழிகிறது
இருப்பு கொள்ளாத மனது

விலாசம் விசாரித்தவரோ,
விலாசம் சொன்னவரோ,
தள்ளுவண்டிக்காரரோ,
பக்கத்து வீட்டுக் குழந்தையோ,
கோயில் வாசல் பிச்சைக்காரரோ
பேருந்துப் பயணத்தில்
அருகமர்ந்து தூக்கம் கெடுத்தவரோ,
அடிக்கடி போகும் தெருவில்
சண்டையிடும்
கருத்த பருமனான பெண்ணோ

யாரோ
ஓட்ட வைத்துப் போய்விடுகிறார்கள்
சில
பரிச்சயமற்ற வார்த்தைகளையும்
அர்த்தமற்ற ஒலிக்குறிப்புகளையும்
ஒரு காதலை சொல்வதற்கே நாக்கு தள்ளிப் போகிறது. இதில் பத்து காதல்களை வைத்து படமெடுக்கிறார்கள். அந்த பத்தரைமாற்று தங்கம், திரைப்படக் கல்லூ‌ரி மாணவர் ஆர்.வி.பார்த்திபன்.

பத்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் (இவர்கள் அனைவரும் இறுதியாண்டு படிப்பவர்கள்) பத்து முதலாமாண்டு மாணவிகளை காதலிக்கிறார்கள். இதுதான் படத்தின் கதை. இதனை எழுதியிருப்பவரும் ஒரு பொறியியல் கல்லூ‌ரி மாணவிதான். பெயர் ஏ.நிர்மலா. படத்தின் வசனத்தையும் இவரே எழுதியிருக்கிறார்.

படத்துக்கு தேவைப்படும் பத்து ஹீரோக்களையும் சென்னை, தேனி, கோவை என்று வெ‌வ்வேறு ஊர்களிலிருந்து பொறுக்கி எடுத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பொறியியல் கல்லூ‌ரி மாணவர்களாம். மாணவிகளாக நடிக்க ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.

படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறவர் திரைப்படக் கல்லூ‌ரி மாணவர் நிர்மல் ரா‌ஜ். ராகவ் என்பவர் இசையமைக்கிறார். தாமரை, நா.முத்துக்குமார், லலிதானந்த் பாடல்கள் எழுதுகின்றனர். படத்துக்கு உன் வருகைக்காக ஆனந்தி என பெயர் வைத்துள்ளனர்.

முன்பு திரைப்படக் கல்லூ‌ரி மாணவர்கள் வித்தியாசமான படங்களை எடுத்தனர். இப்போது ஒன்றுக்கு பத்து காதலை சொல்வதை வித்தியாசம் என நினைக்கின்றனர். ம்... சிலபஸை சேஞ்ச் பண்ணியாகணும்.
கவிதாலயா தயா‌ரிப்பில் ‌ஜீவன் நடிக்கும் படம், கிருஷ்ணலீலை. படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஸெல்வன் படத்தை இயக்கியிருக்கிறார்.

‌ஜீவனின் ப்ளேபாய் இமேஜை மாற்றுவதாக கிருஷ்ணலீலை இருக்கும் என்றார் ஸெல்வன். தனது தாயின் சபதத்தை நிறைவேற்றுகிறவராக இதில் நடித்திருக்கிறார் ‌‌ஜீவன்.

கலெக்டர் அலுவலகம் அருகில் டீக்கடை வைத்திருப்பவர் ‌‌ஜீவனின் தாய். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் மனுக்கள் பொட்டலம் கட்ட ‌ஜீவனின் தாயின் கடைக்கு வருகிறது. இது சிறுவனான ‌‌ஜீவனை உறுத்துகிறது. மனுக்களை எடுத்துக் கொண்டு கலெக்டர் அலுவலம் செல்கிறார் ‌ஜீவன். இது பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

கோபமாகும் கலெக்டா, ‌ஜீவனின் தாயின் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்துகிறார். காயப்படும் அந்த தாய், என்னுடைய மகனையும் கலெக்டராக்கி இந்த அநியாயங்களை தட்டி கேட்பேன் என்கிறார். அதன்படி ‌ஜீவனை படிக்க வைத்து கலெக்டராக்குகிறார். கலெக்டராகும் ‌‌ஜீவன் அநியாயங்களை தட்டிக் கேட்பார் என நீங்களே ஒரு ஸ்கி‌ரின்ப்ளே எழுதினால் ஏமாந்தீர்கள்.

மாவட்ட ஆட்சியாளராவார் என்று எதிர்பார்த்த ‌‌ஜீவன் ஆக்டராகிறார். நடிகராக இருந்து கொண்டே அவர் தாயின் சபதத்தை எப்படி நிறைவேற்றுகிறார், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது கிருஷ்ணலீலை.

படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தை ‌ரிலீஸ் செய்யும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.


More than a Blog Aggregator

by panguvaniham
A

கருத்துகள் இல்லை: