செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23



More than a Blog Aggregator

by ச. ராமானுசம்
உன்னை இழந்து
உன் நினைவிலும், காமத்திலும்
நான் படும் வேதனைகள்
நித்தமும் உடன்கட்டை எனக்கு.
(கள்ள தொடர்பில் கருவுற்ற நடை பாதையில் வாழும் பெண் ஒருத்தி, பிறக்க போகும் தன் குழந்தையை நோக்கி கூறுவது)

நாங்கள் ஒருவரை ஒருவர் இரையாக்கி உண்டதில்
தோன்றிய என் அடிவயிற் று ஜீரணமே !
இனி நீ பூமியில் படப்போகும் வேதனைகளை பட்டியலிடுவேன் கேள்.

நான் அடி வயிறில் ஜீரணித்ததை விட
மேல் வயிறில் ஜீரணித்தது குறைவுதான்
ஆகையால், என் முலையில் நீ வாய்வைத்து உறிஞ்சினால் ஊறப்போவதென்னவோ உன் வாயின் எச்சில் மட்டுமே
சுவைக்காக என் மார்பில் காய்ந்த வியர்வையை அதில் கலந்து கொள்.

இப்பொழுது கிடைத்து கொண்டிருக்கும் ஒருவேளை உணவுக்கும் நாளை உத்திரவாதமில்லை.
உன் அக்காளின் தந்தையை போல்
இப்பொழுது உன்னை எனில் ஊட்டியவனும் ஓடிவிடகூடும்.
பின்பு, கோவில்படிகட்டுகளும் சாலைசந்திபுகளும் நம் தொழில்கூடமாக மாறிவிடக்கூடும்.

மழை பெய்தால் நனைய பழகிகொள்
வெயில் அடித்தால் காய பழகிகொள்
குளிரடித்தால் நடுங்கி கொள்
ஆனால், பசி எடுத்தால் மட்டும் அடக்கிகொள்

நிலவை பார்த்து உறங்கிகொள்
கதிரை பார்த்து விழித்துகொள்
ஏதோ ஒரு விடியலில் இருந்து, உன்னருகே நான் இருக்கபோவதில்லை.

ஆணாக பிறந்து விட்டால், உணவு விடுதியின் எச்சில் சேற்றிலும்
வாகனப் பழுது பார்க்கும் கடைகளில் எண்ணையிலும் அமிழ்ந்து போவாய்.
பெண்ணாக பிறந்து விட்டால், வயது வரும் முன்பே
வயதுக்கு வரவழைக்க படுவாய்.

இதை அனுபவிக்கதானா,என் வயற்றில் துடிப்புடன் காத்திருக்கிறாய்
காம தீயில் பிரிந்த என் சுடரே !

உன் பிஞ்சு கால்களால் என் அடிவயற்றில் உத்தரவிடு இப்பொழுதே.
ஜிரணித்திருந்தாலும் வலுகட்டாயமாக உன்னை வாந்தி எடுத்து விடுகிறேன்.


நடு சாமத்து ஊத காத்தில்
உறக்கம் கலஞ்ச நீ
கொலுசொலி எழுப்பி என்னை அலைச்சய
ஏத்தா?

அம்மூரு சொக்கனாச்சியம்மன் கொடையில
ஆத்தா காபாத்துன்னு கண்மூடி நா கிடக்க
கோயில் வாசலோரம் நட்ட வாழமரத்து காய்பிடுங்கி
என் மேல விட்டெறுஞ்சி என் கவனம் கலச்சியே
ஏத்தா?

சிவனேன்னு குளிச்சிட்டு
ஒத்தையடி ஆத்தங்கரையில
ஈர வேட்டியை உலத்திகிட்டு நா வரையில
ஆத்துல கல் எரிஞ்சி என் மேனி நனைச்சியே
ஏத்தா?

கரும்பு காட்டுகுள்ள
பூச்சி பொட்டு பட்டுரும்ன்னு
கவனமா தண்ணி பாக்கையில
தலை நிறைய பூ வச்சி
என்னை இழுத்து உன் தனம் மேல போட்டயே
ஏத்தா?

கண்ணாலம் முன்னால கை வைச்சா தப்புன்னு
இரவைக்கு தோட்ட காவலுக்கு நான் போக
பின்னாலையே வந்து
உன் தவாணியில பாய் விரிச்சியே
ஏத்தா?

உச்சி வெயிலு மண்டைய பொளக்குதுன்னு
அம்மூரு சுடுகாட்டு ஆலமரத்துகடியில
ஆட்டோட உன் நினைப்பில் நா கிடக்க
அரவமில்லாம அசலுரூ மாப்பிள்ளை கூட
குலுங்குற கூண்டு வண்டியில
உன் உசிரை குலுங்காம புடிச்சிகிட்டு
குனிச்ச தல நிமிராம
குணவதியா போறியே
ஏத்தா?
என் தலைவா !!! உன்னை காணாமல்

பசலை நோய் வரவில்லை...

வளையல் கை நழுவி ஓடவில்லை......

சோலைவனம் பாலைவனம் ஆகவில்லை...

என் கனவில் எப்போதும் நீ வரவில்லை....

நீ அனுப்பும் பணக்கட்டுகளும் மகிழ்ச்சி தரவில்லை....

ஆடிக்கு என்னை அழைத்து போக என்அம்மாவும் வரவில்லை....

உன்னை பற்றி விசாரிப்பவர்களிடம் பதில் சொல்ல மனமில்லை...

திருமணம் முடிந்து முதல் ஒருமாதம் நீ முகம் கொடுத்து பேசவில்லை...

மறுமாதம் உன் பெருமை பற்றியை சிலாகித்தாய்...

மூன்றாம் மாதம் மூன்றடி பெட்டியுடன் பறந்து விட்டாய் அயல்தேசம்...

வருடமும் ஓடி விட்டது இன்றோடு.

ஏனோ! உன் தாலி கூட என் கழுத்தை உறுத்துகிறது இரவெல்லாம்.....

மனதை விட என் உடலுக்கு துணை தேடுகிறது இப்போது.

என் உடல் திரியில் நீ காமத்தீ ஏற்றி விட்டு சென்று விட்டாய்....

எனனயே நினைத்து இன்னமும் ஏங்கும் அவன்

அதற்க்கு எண்ணை ஆகி விடுவானோ என்ற பயம் உயிர் கொல்கிறது.

என்னை அலங்கரிக்க வேண்டாம்! என் தலைவா!!

சீக்கிரம் வந்து என்னை அணைத்து கொள்.

நீ காலம் தாழ்த்தி வரும் முன்பு ...

நானும் அவனும் காற்றில் கலந்திருப்போம்.

எஞ்சிய கரியை நீ பூசிக்கொள் உன் முகத்தில்.

நீ கொண்டுவரும் டாலர்களை குவித்தாலும்

மீண்டும் திரியாகாது கரி.
எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
எப்படி இப்படி எல்லோரும் உஜாலாவுக்கு மாறிட்டாங்க???

சொட்டு நீலம்டோய் உஜாலாவை சொல்லலை.

இப்ப யாரைக் கேட்டாலும் சொல்லும் விடயம்
யோகா& தியானம்.

பள்ளிக்கூடத்துல பசங்களுக்கு யோகா ஒரு பீரியடாவே
கட்டாயமா வெச்சிருக்காங்க.

எனக்கு P.M.S பிராப்ளத்தின் போது சந்திச்ச டயட்டீஷியன்
காலையில் என்னை யோகப்பயிற்சி செய்யச் சொன்னார்.

ஆர்தோ டாக்டரிடம் சென்ற நண்பருக்கு பொழுது
யோகாவை பரிந்துரைத்து மெடிட்டேஷன்
செய்யுங்கள் என்று சொன்னாராம் டாக்டர்.

வாய்ப்புண் என்று மருத்துவரிடம் சென்ற
அயித்தானுக்கு மெடிட்டேஷன் செய்யச் சொன்னாராம்.
(வாய்ப்புண்ணுக்கு வயிற்றுப்புண் மட்டும் காரணமில்ல,
டென்ஷன்(ஆபிஸ் டென்ஷன் தான்னு சொன்னா
நம்பவா போறீங்க!)

சைனஸுக்காக ஆஷிஷை ஹோமியோபதி
மருத்துவரிடம் அழைத்துச் செல்ல அவர்
மருந்து கொடுத்து தினமும் யோகா,மெடிட்டேஷன்
செய்யச் சொல்லுங்க. மிகவும் நல்லது.
It will help for personality development also என்றார்.

மருத்துவர்கள், கவுன்சிலிங் எக்ஸ்பர்டுகள்,
உடற்பயிற்சியாளர்கள் என எல்லோரும் பரிந்துரைப்பது
யோகாவைத்தான். அதான் எல்லோரும் உஜாலாவுக்கு
மாறிட்டாங்களான்னு கேக்கறேன்?

அனைவரும் யோகா, தியானத்தை
பரிந்துரைப்பது ஏன்??

யோகா நம் உடலுடன் சேர்த்து மனதையும்
புத்துணர்ச்சியாக்குகிறது. யோகா உடம்பை
மட்டுமல்ல உள்ளூக்குள்ளூம் நம்மை
வலுவாக்குகிறது.






ஈஷா, ஆர்ட் ஆஃப் லிவிங்க் போன்ற இயக்கங்கள்
யோகப்பயிற்சி கற்றுத்தருகின்றன.

இலங்கையில் இருந்த பொழுது ஆர்ட் ஆஃப் லிவிங் பயிற்சியில்
யோகா கற்கும் வாய்ப்பு கிடைத்தது. (ஒரு விஷயம் கேட்கணும்.
இங்கே மட்டும் 5 நாள்பயிற்சிக்கு 3000. முழு நாள் என்றாலும்
அதிகமாக இருக்கு. அங்கே தினம் 3 மணிநேரம் 1 வார பயிற்சிக்கு
1500 ஸ்ரீலங்கன் பணம்தான் கொடுத்தேன்)

யோகா கற்று பயிற்சி செய்ய ஆரம்பித்த பின் புதிதாய்பிறந்ததாய்
உணர்ந்தேன்.எடை குறைப்புக்கு இதை விட மிகச்சிறந்த வழி இருக்கவே
முடியாது.



என்னுள் எத்தனையோ மாற்றங்கள். மன்ச்சோர்வு குறைந்தது.
மெடிட்டேஷன் செய்வதால் டென்ஷன் குறைந்து உடம்பும்
மனதும் லேசானது போலிருக்கும். எந்த வேலையையும்
பொறுமையாக செய்ய உடம்பும், மனமும் ஒத்துழைக்கும்.






"கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை
ஒத்துக்கொள்" என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.


யோகக்கலையையும் கற்றுக்கொள்வதாலும் நம்
கவலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
யோகா பற்றிய விக்கிப்பீடியாவுக்கு





தினமும் காலையில் 30 நிமிடம் செலவழித்தால் நாளெல்லாம்
புத்துணர்ச்சியாக இருக்கலாம். எங்கும் எவராலும் பரிந்துரைக்கப்படும்
யோகக்கலையை கற்று ஆரோக்கியாமாக வாழலாம்.
உங்க பாட்டு என்ன மாயம் செஞ்சுச்சுன்னு தெரியலை அப்துல்லா :))

ஆஷிஷுக்கும் அம்ருதாவுக்கும் உங்க பாட்டு எப்பவும்
மண்டையில் ஓடிகிட்டே இருக்கும் போல.

அடிக்கடி கேட்டுகிட்டே இருந்து, இப்ப அடிக்கடி
முனுமுனுக்கும் பாடலாகி போச்சு உங்க பாட்டு.

கோமா பின்னூட்டத்துல சொல்லியிருந்தது போல
எஃப் எம்கள் அலறப்போகின்றன.

பாட்டைக் கேட்டதற்கப்புறம் தான் உங்களை சந்திச்சாங்க.

பொதுவா அவங்களுக்கு பாடல்கள் தன்னிச்சையா தெரியாது.
திரையில் ஓடும்போது அல்லது கேட்கும் போது கூட
பாடித்தான் பழக்கம்.

"காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா" மட்டும் விதிவிலக்கா
முனுமுனுக்கப்படுவது ஆச்சசரியம்... :)) ஆஷிஷ் டான்ஸ்
ஆடிக்கொண்டே அந்த பாட்டைப் பாடுவது சூப்பரா இருக்கும்.

சரி மேடைக்கு ஏன் வரச்சொன்னேன்???

மேட்டர் இருக்கு. சனிக்கிழமை இசையருவி டீவியில் நடந்த
இசைக்கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோரின்
ராம்ப் ஷோ பார்த்துக்கொண்டிருந்தோம்.

அம்ருதா உடனே, "நம்ம அப்துல்லா மாமா ஏன் ராம்ப்
ஷோவில் கலந்துகொள்ளவில்லை?!!" எனும் கேள்வியை
எழுப்பினாள்.

மாமா பாட்டு இப்பத்தானே ரிலீஸ் ஆகியிருக்கு?

ஆயிடுச்சுல்ல. அப்ப மாமாவும் பாடகர்தான். சோ
மாமாவும் ராம்ப் ஷோவுல வந்திருக்கணும்!!!!!
இது ஆஷிஷ்.


என்னத்த சொல்ல.

சீக்கிரமே இது மாதிரிஒரு நிகழ்ச்சியில் சுசித்ரா,
மஹதி போன்ற இசைக்குயில்களுடன் ஒரு ராம்ப் ஷோவில்
நீங்க கண்டிப்பா கலந்து கொண்டே ஆகவேண்டும்.

அப்துல்லா கண்டிப்பா மேடைக்கு வரவும்.

ஆமா சொல்லிட்டேன்.

கருத்துகள் இல்லை: