செவ்வாய், 9 ஜூன், 2009

2009-06-09

புனேவிலிருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நமது மூதாதையர்களின் அற்புத கலை படைப்பு தான் எல்லோரா குகை கோவில்கள்,சைவம்,புத்த மற்றும் சைன மத கடவுளர்களை, மலைகளைகுடைந்து தத்துருபமாக செதுக்கி இருக்கிறார்கள்.பண்டைய மனிதர்களின் இக்கலை படைப்பை காண கண் கோடி வேண்டும்.எல்லோரா குகை கோவிலை காண புனேயிலிருந்து ஔரங்கபாத்திற்கு பேருந்து அல்லது ரயிலில் சென்று ,அங்கிருந்து 30 கிமீ தொலைவுள்ள எல்லோரா குகை கோவில் எனும் மனிதனின் அற்புத கலை படைப்பை வாடகை வாகனத்தில் சென்றடையலாம்.
மேலே இணைக்க பட்டுள்ள புகைபடம் , கடந்த வாரம் நான் அந்த அற்புதத்தை பரவசபட்டப்போது கிளிக்கியது......

-- காதல் தோல்வி --

உன் இதயம்

இரும்பென்று

தெரியாமல்

மோதியதில்

என் இதய கண்ணாடியில்

சேதம்....

-- காதல் தோல்வி --

உன் இதயம்

இரும்பென்று

தெரியாமல்

மோதியதில்

என் இதய கண்ணாடியில்

சேதம்....


அன்பு நண்பா உனக்கு,

எழுதுகோல் பரிசளிக்க எண்ணியது என் மனம்

மைபோல் தீருமோ நட்பு மனம் ரணமானது

கண்ணாடிபொருள் பரிசளிக்க எண்ணியது என் மனம்

உடைந்திடுமோ நட்பு மனம் ஓலமிட்டது !

புத்தகம் பரிசளிக்க எண்ணியது என் மனம்

மறந்திடுமோ நட்பு மனம் காயப்பட்டது

சாவிக்கொத்து பரிசளிக்க எண்ணியது என் மனம்

மூடிதிறக்கும் சிலநொடிதான் நட்பு மனம் ஒப்புக்கவில்லை !

கைக்குட்டை பரிசளிக்க எண்ணியது என் மனம்

தொலைந்திடுமோ நட்பு மனம் கலங்கி நின்றது

கடிகாரம் பரிசளிக்க எண்ணியது என் மனம்

இடையில் நின்றிடுமோ நட்பு மனம் நிசப்தமானது !

ஐய்யகோ மறந்துவிட்டேனடா நண்பா,,

என் இதயத்தை உனக்கு பரிசளித்ததையும்

துடிக்கும் பொதெல்லாம் என் நினைவு உனக்கு வருமென்பதையும்.............



அன்பு நண்பா உனக்கு,

எழுதுகோல் பரிசளிக்க எண்ணியது என் மனம்

மைபோல் தீருமோ நட்பு மனம் ரணமானது

கண்ணாடிபொருள் பரிசளிக்க எண்ணியது என் மனம்

உடைந்திடுமோ நட்பு மனம் ஓலமிட்டது !

புத்தகம் பரிசளிக்க எண்ணியது என் மனம்

மறந்திடுமோ நட்பு மனம் காயப்பட்டது

சாவிக்கொத்து பரிசளிக்க எண்ணியது என் மனம்

மூடிதிறக்கும் சிலநொடிதான் நட்பு மனம் ஒப்புக்கவில்லை !

கைக்குட்டை பரிசளிக்க எண்ணியது என் மனம்

தொலைந்திடுமோ நட்பு மனம் கலங்கி நின்றது

கடிகாரம் பரிசளிக்க எண்ணியது என் மனம்

இடையில் நின்றிடுமோ நட்பு மனம் நிசப்தமானது !

ஐய்யகோ மறந்துவிட்டேனடா நண்பா,,

என் இதயத்தை உனக்கு பரிசளித்ததையும்

துடிக்கும் பொதெல்லாம் என் நினைவு உனக்கு வருமென்பதையும்.............



More than a Blog Aggregator

by RATHI SELVAN
இரவு நேரத்தில் நீ இன்றி நானா ?
நெஞ்சம் பதைபதைக்கிறது...
உன் உடல் கொண்டு என் உடல்
மறைப்பதில் தான் எத்துனை சுகம்...!
உன்னை அணைத்து உறங்கிய சில
இரவினில் மூச்சு திணறலும் உண்டு...
ஆயினும்,
எனை குளிர் பயத்திலிருந்து காக்கும்
உன் பணி உயர்வானது
யார் இவள் தெரிகிறதா???
.
.
.
.

வேறு யார்... என் இரவு காதலி சால்வை தான்!!!

கருத்துகள் இல்லை: