செவ்வாய், 9 ஜூன், 2009

2009-06-09


ஐநாவில் சிறிலங்காவிற்கு ஆதரவாக ஓட்டளித்ததற்காகவும் பெரியார் திக பொதுச்செயலாளர் கோவை கு.இரமகிருட்டிணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த இந்திய அரசைக்கண்டித்தும் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

audio: http://download822.mediafire.com/015cthxmkzug/andmitdydoy/pdk28052009.mp3



இன்று(28.05.2009) மாலை 5.30 மணியளவில் தூத்துக்குடி 1 ஆம் நுழைவு வாயில் காந்திசிலை அருகில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன் முன்னிலையில் ஆதித்தமிழர் பேரவையின் சு.க.சங்கர் கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தினை தொடங்கிவைத்தார்.



புரட்சிகர இளைஞர் முன்னணியின் இரா.தமிழரசன், இந்தியப்பொதுவுடைமைக் கட்சியின் மாவட்டச்செயலாளர் ஆ.மோகன்ராசு ஆகியோர் கண்டன உரையாற்றிய பின்னர் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் விளக்கவுரையாற்றினார்.



அவரது தனது உரையில் ஈழத்தமிழரையும் தமிழக மீனவர்களையும் கொன்ற இராசபக்சேவுக்கு ஆதரவாக ஐநாவில் ஓட்டளித்த இந்திய அரசையும் அதற்கு ஆதரவான கருணாநிதியையும் கண்டித்து உரையாற்றினார். தன் மகன்களுக்காக பதவி வாங்க விமானம் மூலம் தில்லி சென்று பேசும் கருணாநிதி இலட்சக்கணக்கான என் தமிழ் மக்கள் செத்துக்கொண்டிருப்பதை தடுக்க காகிதத்தில் எழுதி அனுப்புவதேன் என்று கருணாநிதியின் உண்மை உருவை மக்களுக்கு எடுத்துக்கூறினார்.



ஈழத்துக்கு ஆதரவாக செயல்படும் தமிழுணர்வாளர்களை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைப்பதையும் ஈழமக்களை கொல்ல இந்தியா வாகனம் மூலம் அனுப்பிய கனரக ஆயுதங்களை தடுத்து நிறுத்திய பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் மேல் தேசிய பாதுகாப்பு சட்டத்தினை பாய்ச்சிய இந்திய அரசைக்கண்டித்தும் உரையாற்றினார்.



இந்நிகழ்வில் கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கத்தின் அருட்திரு பணி.சுந்தரிமைந்தன் அவர்கள் நிறைவுரையாற்றினார். பெரியார் திராவிடர் கழகத்தின் செ.செல்லத்துரை நன்றியுரையாற்றினார். நிகழ்வில் பெரியார் திக வின் சா.த.பிரபாகரன், கோ.அ.குமார், அறிவுபித்தன், வே.பால்ராசு, க.மதன், வ.அகரன், ரவிசங்கர், கனகராஜ், ஆதித்தமிழர் பேரவையின் வே.மனோகர்,கண்ணன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் லெனின், சுஜித் மற்றும் திரளான தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.


இணையத்தில் செய்திகாண:
www.ibctamil.co.uk
மீனகம்

Expose of the hidden massacre; 20,000 Tamil civilians killed in days

Friday, 29 May 2009 00:27 administrator
E-mail Print PDF

[Video Inside] Times photographs expose Sri Lanka's lie on civilian deaths at beach - by Catherine Philp and Michael Evans.

On Wednesday evening the Sri Lankan delegation at the United Nations Human Rights Council in Geneva was celebrating after its victory in fending off an investigation into alleged war crimes committed by its army.

மேலும் படங்களை காண: http://tamilnational.com/news-flash/1183-the-hidden-massacre-20000-killed.html

Report of 20,000 civilians killed is 'very credible'

Saturday, 30 May 2009 01:30 administrator
E-mail Print PDF

Twenty thousand civilians were killed in Sri Lanka's final push against Tamil Tiger rebels, claims a UN confidential report.



More than a Blog Aggregator

by த.ஜீவராஜ்

தனித்திருந்த வாழ்க்கையது
கசத்திருந்த நாளொன்றில்
கண்ணெதிரே கண்டேன்
அந்தக் கள்ளியை - என்
நெஞ்சத்தைத் கொள்ளைகொண்ட
அன்புச் செல்வியை


தனியாகச் சிரித்ததில்லை
தலையணை மறந்ததில்லை
என்னவோ ஆச்சு எனக்கு
எங்கேயோ போச்சு மனது - ஆகா
நண்பர்கள் பட்ட துன்பம்
நான்படலானேனே இப்போது


உடுப்பது எடுக்கச் சென்றால்
உணவது அருந்தச் சென்றால்
தனியாகச் சிரித்துக்கொண்டேன்
கேட்டால் வெடுக்கென்று
முறைத்துக் கொண்டேன் -ஐயோ
இப்படி மாறிப்போனேனே


வாழ்க்கையின் வசந்தமிது
வந்தது எனக்குமிப்போ
கவிதைகளால் எல்லாம்
சொல்லத் தெரியலையே! - என்
கனவெல்லாம்
கீறிக் காட்டிட முடியலையே!


Bookmark and Share




போன வார கடைசியில் லட்டு மாதிரி மூணு நாளு லீவு வுட்டாங்களா என்னா பண்றது ஏது பண்றதுன்னு தெரியாம முழுச்சிகிட்டு இருந்தேன்..பெங்களூர் ஊரே காய்சல் வந்து காலியானது போல இருக்கும்..சரி பசங்களோட வயநாடு போகலாமன்னு முடிவு செய்து வெற்றிகரமாக போய் வந்தாச்சு.



வய நாடு - வயல் நாடு என்பது வய நாடாக மருவியது.. கர்நாடாகா கேரளா எல்லையில் இருக்கும் அழகான கேரள மாவட்டம். மேற்க்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 2000 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

எங்கு பார்த்தாலும் அடர்ந்த காடு , தேயிலை தோட்டம் மேற்க்கு தொடர்ச்சி மலைக்கே சிகரம் என இந்த இடத்தை சொல்லாம்.

ஊட்டி கொடைக்கானல் அளவிற்க்கு கோடையில் வெயில் தெரியாத அளவிற்க்கு இங்கு தட்ப வெட்பம் இருப்பதில்லை.. இருந்தாலும் பரவாயில்லை...40 'யில் காய்வதற்க்கும் 30' யில் காய்வதற்க்கும் வித்யாசம் இருக்குல்லே..

ஜின் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நல்ல சீதோஷ்ணமாம் நாங்க போனது மே மாதத்தில் ம்ம் பரவாயில்லை..



எப்படி போகலாம்

மைசூரில் இருந்து 120 கிலோ மீட்டர்.. அல்லது கோழி கோட்டில் இருந்து 60 கிலோ மீட்டர்

என்னதான் பார்க்கலாம்



தேயிலை தோட்டங்கள், பானாசுரா தோட்டம், செம்ப்ரா peak, எடக்கல் குகை,சூச்சிபுறா அருவி, முத்தங்கா சரணாலயம்,பூக்கோடல் ஏரி, லக்கடி அருவி ( இங்கு தான் காவிரியின் கிளை நதியான கபிணி உருவாகிறது)..இப்படி சொல்லிகிட்டே போகலாம்


முன் ஒரு காலத்தில் வீரப்பனின் ஏரியாவ இருந்த பாந்திப்பூர் பக்கம் தான்.. சர்வ சாதரணமாக வீரப்பனிடம் தப்பி பிழைத்த யானைகளை பார்க்கலாம்..

என்ன செல்வாகும்..

இங்கு இருக்கும் ரிசார்ட்டுகள் நம் பர்ஸை பதம் பார்க்கும் அளவிற்க்கும் இன்னமும் வளரவில்லை. இதனால் தைரியமாக போகலாம்..அப்படியே மறந்தும் சேட்டா ரிசார்ட் ரேட் ரொம்ப ரொம்ப குறைவுன்னு சொல்ல வேண்டாம்..

தமிழ்நாடு எல்லையும் அங்க்கே தட்டு படுவதால் சரளமாக அனைவரும் தமிழ் பேசுகிறார்கள்.. மலையாளத்தில் சம்சாரிக்கிறார்கள் கன்னடாவில் மாத்தாடுகிறார்கள்.. so no problem..

south india என்பதால் சாப்பட்டு பிரச்சனையும் இல்லை..



புதுசா கல்யாணம் ஆணவங்க தேனிலவு செல்ல நல்ல இடம்..ஏற்கனவே கல்யாணம் ஆணவங்களும் போய் வயத்தெரிசலை நல்லா கொட்டிகிட்டு வரலாம்..

மலை ஏறுவது பின் இறங்க முடியாம அய்யோடான்னு கதறுபவர்கள் வண்டலூர் சூவோட தங்களின் கோடை பயணத்தை நிறைவு செய்து கொள்ளலாம்..

வேற ஏதாச்சும் டெயில் பீஸ்..

குடிகாரர்கள், டூர் போனால் குடித்தே ஆக வேண்டும் என்ற பாட்டில் விரதம் இருப்பவர்கள் கேரள அரசால் பயங்கரமாக கலாய்க்க படுகிறார்கள்..அங்கே கேரள அரசால் நடத்தபடும் ஒயின் ஷாப்பில் நீண்ட வரிசையில் பொறுமையான நின்று குவார்ட்டர்கள் வாங்குபவர்களை ஆண்டவன் கண்டிப்பாக ரட்சிப்பான்..

எச்சரிக்கை..

கேரளாவில் எல்லா இடத்திலும் குப்பை போடுவது பொது இடங்களில் தம் அடிப்பது சுற்றுலா தளங்களில் பெண்களிடம் வம்பு செய்வது போன்ற வீர தீர காரியங்களுக்கு நன்றாக சுலுக்கு எடுக்கபடுகிறது.



பத்திரமாக பெங்களூர் கொண்டு வந்த சேர்த்த tempo traveler க்கு நன்றி

கருத்துகள் இல்லை: