வியாழன், 18 ஜூன், 2009

2009-06-18



More than a Blog Aggregator

by Nilofer Anbarasu
படத்துல இருக்குறது என்னன்னு தெரியுதா? விபூதி (திருநீறு) தான் அது. சுமார் 40 வருசத்துக்கு முன்னால, எங்க ஐயா (அம்மாவோட அப்பா) எங்க மாமாவுக்கு கொஞ்சம் விப்பூதி கொடுத்தாராம். அதை அவர் பத்திரமா வச்சிருந்து 6 வருஷம் முன்னால எங்க அண்ணன் கப்பல் வேலைக்குப் போகும்போது, மடலில் இருந்து கொஞ்சம் விபூதி எடுத்து அதோடு இந்த விப்பூதி கொஞ்சம் கலந்து "தைரியமா போயிட்டு வாங்க, எப்பவாவது பயமா இருந்தா இந்த விபூதிய எடுத்து பூசிக்குங்க, அய்யா கொடுத்தது" என்று சொல்லி கொடுத்தாராம். ஒரு இரண்டு வருஷம் முன்னாடி நான் வேலைக்காக முதன் முதலாக மும்பை போனபோது எங்க அண்ணன் இந்த விபூதியில் இருந்து கொஞ்சம் எடுத்து அதோடு வீட்டில் சாமி முன்பு இருந்த விபூதி கொஞ்சம் கலந்து ஒரு பேப்பரில் மடித்து "அய்யா கொடுத்த விபூதியாம் இது, நான் வேலைக்கு போறப்ப மாமா கொடுத்தாங்க, அதுல கொஞ்சத்த இதுல வச்சுருக்கேன், வேனுங்குறப்ப எடுத்து பூசிக்க" என்று சொல்லி என்னிடம் கொடுத்தார். எங்க அய்யாவையே இதுவரை பார்த்திராத எனக்கு, கையில் உள்ள திருநீறில் ஒரு சில துகள்கள் அவர் கைபட்டது என்று நினைக்கும் போதும், பூசிக்கொள்ளும் போதும் ஏதோ அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிய உணர்வு வரும்.
சில நேரங்களில் சமய அடையாளங்கள் என்பதையும் மீறி ஆத்மதிருப்திக்கு இதுபோன்ற விஷயங்கள் ரொம்பவும் தேவைப்படுகிறது.


More than a Blog Aggregator

by Nilofer Anbarasu
படத்துல இருக்குறது என்னன்னு தெரியுதா? விபூதி (திருநீறு) தான் அது. சுமார் 40 வருசத்துக்கு முன்னால, எங்க ஐயா (அம்மாவோட அப்பா) எங்க மாமாவுக்கு கொஞ்சம் விப்பூதி கொடுத்தாராம். அதை அவர் பத்திரமா வச்சிருந்து 6 வருஷம் முன்னால எங்க அண்ணன் கப்பல் வேலைக்குப் போகும்போது, மடலில் இருந்து கொஞ்சம் விபூதி எடுத்து அதோடு இந்த விப்பூதி கொஞ்சம் கலந்து "தைரியமா போயிட்டு வாங்க, எப்பவாவது பயமா இருந்தா இந்த விபூதிய எடுத்து பூசிக்குங்க, அய்யா கொடுத்தது" என்று சொல்லி கொடுத்தாராம். ஒரு இரண்டு வருஷம் முன்னாடி நான் வேலைக்காக முதன் முதலாக மும்பை போனபோது எங்க அண்ணன் இந்த விபூதியில் இருந்து கொஞ்சம் எடுத்து அதோடு வீட்டில் சாமி முன்பு இருந்த விபூதி கொஞ்சம் கலந்து ஒரு பேப்பரில் மடித்து "அய்யா கொடுத்த விபூதியாம் இது, நான் வேலைக்கு போறப்ப மாமா கொடுத்தாங்க, அதுல கொஞ்சத்த இதுல வச்சுருக்கேன், வேனுங்குறப்ப எடுத்து பூசிக்க" என்று சொல்லி என்னிடம் கொடுத்தார். எங்க அய்யாவையே இதுவரை பார்த்திராத எனக்கு, கையில் உள்ள திருநீறில் ஒரு சில துகள்கள் அவர் கைபட்டது என்று நினைக்கும் போதும், பூசிக்கொள்ளும் போதும் ஏதோ அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிய உணர்வு வரும்.
சில நேரங்களில் சமய அடையாளங்கள் என்பதையும் மீறி ஆத்மதிருப்திக்கு இதுபோன்ற விஷயங்கள் ரொம்பவும் தேவைப்படுகிறது.
இது ஒரு அனிமேட்டட் மூவி, மருந்துக்கு கூட மனிதர்களின் வாசம் படத்தில் கிடையாது. நியூயார்கில் உள்ள சென்ட்ரல் பார்க் ஜூவில் படம் ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே எவ்வளவு நுணுக்கமாக அனிமேஷன் செய்திருக்கிறார்கள் என்பது புரிந்துவிடுகிறது. ஒரு ஐம்பத்து பேரை ஒரு காட்சியில் காண்பிக்கிறார்கள் என்றால், அனைவருடைய உடல் அசைவுகள், காற்றில் அசையும் அவர்களுடைய ஆடை வரை அனைத்தையும் துல்லியமாக அனிமேஷன் மூலம் சாத்தியப்படுதியிருக்கிறார்கள். படத்தில் Marty என்கி்ற வரிகுதிரையும் Alex என்கி்ற சிங்கமும் உங்கள் மனதை கொள்ளை கொள்வது உறுதி. Marty காட்டு வாழ்க்கை விரும்பி ஜூவில் இருந்து தப்பித்து செல்ல, அதனுடைய உற்ற நண்பனான Alex, Melman (ஓட்டகசிவுங்கி), மற்றும் Gloria (காண்டாமிருகம்) அதனை தேடி ஜூவில் இருந்து தப்பிக்கும். இந்த மூன்று மிருகமும் ரயில்வே ஸ்டேஷனில் Marty சந்திக்க, அங்கிருக்கும் மக்கள் எல்லாம் அலறியடித்துக்கொண்டு ஓடுவதும், இந்த மிருகங்களை போலீஸ் துப்பாக்கி முனையில் சுற்றி வளைப்பதும், பின்னனி இசையும் சேர்ந்து அணிமேட்டது படம் பார்க்கிறோம் என்கின்ற உணர்வையே மறக்கடிக்கிறது.

கேமராவில் காட்டை படம்பிடிப்பது எவ்வளவு சிரமமோ அதைவிட சிரமம் அனிமேஷனில் படம்பிடிப்பது. இந்த படத்தில் அனிமேஷன் மூலம் ஒரு அடர்ந்த காட்டையே உருவாக்கியிருக்கிறார்கள். செடி, கொடி, மரம், புல், பூச்சி என்று எதையும் விட்டுவைக்கவில்லை. சாப்பிட அசைவம் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்படும் சிங்கம் ஒரு கட்டத்தில் உணர்வை அடக்கமுடியாமல் தன் நண்பனான வரிகுதிரையிம் மீதே பாய்வதும் பின்னர் வருந்தி தன்னைத்தானே சிறைவைத்துகொள்வதும் அருமையான செண்டிமெண்ட். கிளைமாக்ஸ் இல் படையெடுத்து வரும் நரிகளிடம் இருந்து தன் நண்பர்களை காப்பாற்ற சிங்கம் சண்டைபோடுவது காமெடி கலந்த action காட்சி.

குழந்தைகளுக்காக எடுக்கக்கூடிய இது போன்ற படங்கள் நம்மை போன்ற பெரியவர்களுக்கும் பிடித்திருப்பது இயக்குனருடைய திறமையாக இருந்தாலும், self evaluate செய்து பார்த்தல் மிகப்பெரிய மரங்களுக்கு கீழே முளைத்திருக்கும் மெல்லிய சின்ன சின்ன காளான்களை போல் நமக்குள் இன்னும் அந்த பிள்ளை மனசு துளிர்விட்டபடி இருப்பது புரியும்.

சுல்தான் தி வாரியர் - கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ள படம், பல கோடிகள் முதலிடு, ஒரு அனிமேட்டட் படத்திற்கு இவ்வளவு செலவு செய்கிறார்களே படம் ஓடுமா என்று அவ்வப்போது தோன்றும். Madagascar பார்த்தபின்பு, சற்றே அனலிஸ் செய்து படத்தை எடுத்து, நல்ல முறையில் மார்க்கெட்டிங் (குசேலன் போல் இல்லாமல்) செய்தால் நிச்சயம் வெற்றி பெரும் என்று தோன்றுகிறது. அனிமேட்டட் படம் என்பதால், இரண்டரை மணி நேரம், 5 பாடல், 4 சண்டை காட்சி போன்ற சராசரி ரஜினி பட பார்முலா இதற்கு பொருந்தாது. சற்றே அதிலிருந்து வெளியில் வந்து 1.45 மணி நேர படமாக, விறுவிறுப்பு குறையாமல் நிறைய presence of mindஉடன் கூடிய காமெடி கலந்து எடுத்தால் செஞ்சுரி அடிப்படுது உறுதி. மேலும் தமிழ் சினிமாவிற்கு ஒரு புது ரூட்ஐ காட்டிய பெருமையையும் தட்டிசெல்லலாம். நிறைய அனிமேஷன் படமும் வருவதற்கு வாய்ப்பு ஏற்ப்படும். ரஜினி என்ற பெயர் இருந்தால் போதும் படம் ஓடிவிடும் என்ற நினைப்புடன் படம் எடுதுக்கொண்டிருந்தால், தயாரிப்பாளர் அடிக்கடி குசேலனை நினைத்துக் கொள்வது நலம்.
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?


More than a Blog Aggregator

by Nilofer Anbarasu
02/22/09, 1.20PM:
Picture Courtesy: Cartoonist Mike Mikula
உலகமே எதிர்பார்க்கும் ஆஸ்கார் விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளன. முன்பு எப்பொழுதையும் விட இந்த முறை இந்தியர்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நாம் அதிகம் எதிர்பார்க்கும் Slumdog Millionaire பட குழுவினருக்கும் குறிப்பாக A.R.Rahmanக்கு விருது பெற வாழ்த்துக்கள்.

Update: 02/22/09, 9.00PM:
Picture Courtesy: NDTV
8 விருதுகளை தட்டிச்சென்ற Slumdog Millionaire பட குழுவினர்க்கும், உலகஅரங்கில் இந்தியாவிற்கு பெருமை தேடிதந்த 'Madras Mozart' A.R.Rahmanக்கும், 'Sound Wizard' Resul Pookuttyக்கும் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: