புதன், 10 ஜூன், 2009

2009-06-10



More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
The new iPhone 3G S commercial




More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
The new iPhone 3G S commercial


நாம பிரபு மாமா தானுங்க .....
செல்போனை கண்டுபிடித்தவன் கூட இப்படி போஸ் தந்து இருக்க மாட்டான். ஒரு டுப்பக்குர் போன் வைச்சு இவன் தர அளபிரை (லொள்ளு) தாங்க முடியல.....
எல்லோரும் போன் கால் பண்ண வைத்து இருந்த .....
இவன் மட்டும் தான் missed call கூடுக்கவே போன் வைத்து இருப்பான்......
அதுவும் இந்த ப்ரீ sms scheme ல இருக்கானா.....
அதனால் மிட் நைட் வந்த போதும் sms அனுப்பியே தொல்லை கூடுப்பான்.....
அதுக்கு reply வேற தந்தாகணும் இல்லாட்டி missed call கள் தந்து கொண்டே இருப்பான். அதனாலே நான் இரவு வந்தால் போனை ஆப் பண்ணிடுவேன்.......
ஒரு வாட்டி ss மியூசிக் ல இவன் முகம் வருதுன்னு சொல்ல எத்தனை missed call...
அந்த செல்போனுக்கே கால் இல்லமால் பண்ணிட்டான்.....
அப்ப எல்லாம் கடவுள் கிட்ட ஒரு கேள்வி தான் கேட்ப்பேன்......
ஏன் தான் இவனுக்கு எல்லாம் செல்போன் கிடைத்தது என்று .......
அம்புட்டு தொல்லைங்க ......
இவனுக்கு நண்பனாக இருப்பது ரொம்ப கஷ்டம் ; அதுக்கு எல்லாம் ஸ்பெஷல் பயிற்சி எல்லாம் வேண்டும் .....
ஒரு சூப்பர் மாடல் செல் போன் பார்த்துவிட கூடாது, உடனே அதை வைச்சு பெரிய பிசினஸ் மேன் அளவுக்கு பீல் பண்ணி போஸ் ஒன்னு தந்து ஒரு போட்டோ எடுத்துடுவான்....
கூட்டமாக இருக்கும் இடத்தில இவன் செல்போனை வைத்து பண்ணுற லொள்ளு இருக்கே ; கடவுளுக்கே தங்காது.......
ஏதோ எல்ல நடிகைகளும் இவனுக்கு போன் பண்ணுற மாதிரி picture ஒட்டுவான்....
இவனுக்கு எனக்கு அடிக்கடி "ப்ளீஸ் கால் மீ" அப்படின்னு ஒரு மெசேஜ் அனுப்புவான். நானும் நம்பிட்டு ; போன் பண்ணினால்; "மச்சான் ஒன்னு இருக்கு , அனா அது இல்லை" என்ற அளவுக்கு பேசுவான். அப்ப எனக்கு ஒரு சந்தேகம் வரும் ; இவன் சீரியஸ் ஆ பேசுறனா இல்லாக்காட்டி காமெடி பண்ணுறன ன்னு ஒரே குழப்பமாக இருக்கும் .......
சில நேரம் நானே காசுக்கு ததிகினத்தோம் போட்டு கொண்டு இருப்பேன் ; அப்ப இவன் போன் பண்ணி "மச்சான் ரீ-சார்ஜ் பண்ணி விடுடா" என்று "அன்புயாக" சொல்லுவான்.........
அப்ப அப்ப போன் பண்ணி வேலு நாயக்கர் மாதிரி "பண்ணனும் பண்ணனும் ; வாழ்க்கை ல எதாவது பண்ணனும்" ன்னு ஒரு மணி நேரம் பேசுவான். அனா கடைசி வரைக்கும் என்ன பண்ணனும் ன்னு சொல்லவே மாட்டான்.
அப்ப எல்லாம் எனக்கு ஒரு பாட்டு பாட தோனும் ; அது
"மச்சான் மச்சான் ....
நீ ஏன்டா செல்லை வைச்சு இருக்க....
இரேலு ஜென்மம் எடுத்தாலும்
நீ செல் வாங்க கூடாது ......."
ஆமாங்க ...... இவன் கிட்ட ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்து இருக்கணும். இவன் செல்போன் லீலைகளை சொல்ல இந்த ஒரு blogspot போதாது.... இன்னும் தேவைப்படும்......
ஜோதி ஆம்கே, 15 வயதாகும் இந்த இந்திய சிறுமியின் பெயர் தற்போது உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

ஒரு அடி 11 1/2 அங்குல உயரம் மட்டுமே கொண்ட ஜோதி ஆம்கே, உலகிலேயே மிகவும், குள்ளமான சிறுமி என்ற பெயரை பெற்று இருக்கிறார். 6 மாத கைக்குழந்தை போல் பெற்றோர், சகோதர-சகோதரிகளின் இடுப்பில் தொற்றிக் கொள்ளும் இந்த சிறுமியின் எடை வெறும் 6 கிலோதான்.

மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரை சேர்ந்த ஆம்கே கிஷன்-ரஞ்சனா தம்பதிகளின் கடைக்குட்டிதான் இவள்.

இந்த தம்பதியினருக்கு பிறந்த அர்ச்சனா(23), சதீஷ்(22), ரூபாலி(18) மூவருமே சராசரி வளர்ச்சியுடன் பிறந்தவர்கள். ஹார்மோன் சுரப்பு கோளாறு காரணமாக ஜோதியின் உயரமோ, உடலோ வயதுக்கு தகுந்த வளர்ச்சியடையாமல் போய்விட்டது. இதனால் பொம்மை போன்ற தோற்றத்தில்தான் அவர் காணப்படுகிறார்.

3 வயதானபோது, தன் வயதையொட்டிய சிறுமிகள் ஆர்வத்துடன் புத்தக மூட்டையை சுமந்து கொண்டு வண்ணத்துப்பூச்சி போல் பள்ளிக்கூடம் செல்வதை பார்த்த ஜோதிக்கும் அவர்களை போல் தானும், பள்ளிக்கூடத்துக்கு துள்ளிக்குதித்து கொண்டு செல்லும் ஆவல் ஏற்பட்டது. மேலும் படிக்க

கருத்துகள் இல்லை: