கன்னியாகுமரியில் உள்ள வான்தொடும் திருவள்ளுவர் சிலையைக் காண்பது என் கனவு். நெடுநாள் கனவு நிறைவேறியது. தமிழகத்தின் மிக அழகான கடற்கரைகளில் ஒன்று கன்னியாகுமரி. வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடலின் சங்கமம் கன்னியாகுமரியின் சிறப்பு. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் இங்கு காத்திருந்து காண வேண்டியவை. சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்களால் ஆளப்பட்ட பகுதி.
உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவரின் சிலை 133 அடி உயரம். 7000 டன் எடை. செப்டம்பர் 1990 ல் கட்ட ஆரம்பித்து ,இடையில் சில வருடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இறுதியாக ஜனவரி 1, 2000 ல் கட்டி முடிக்கப்பட்டது. விவேகானந்தர் பாறைக்கருகில் நிறுவப்பட்டது. அம்பாசமுத்திரம், கன்னியாகுமரி மற்றும் சங்கராபுரம் ஆகிய பகுதிகளின் கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. ஏறத்தாழ 150 சிற்பக்கலைஞர்களின் பங்களிப்பால் உருவானது. காண வேண்டிய அதிசயங்களில் ஒன்று!
கடற்கரைக்கு காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் அழகு சேர்ப்பவை. தவிர பகவதி அம்மன் ஆலயம், விவேகானந்தர் சிலை, சுனாமி நினைவுச்சின்னம் போன்ற பல குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தன்னகத்தே கொண்டது கன்னியாகுமரிக் கடற்கரை. அன்றைய தினங்களில் முத்து வணிகத்திற்குப் பெயர் பெற்ற கடற்கரை. யாவரும் காணவும்!
உருத்தரிப்ப தற்குமுன் உயிர்புகுந்த நாதமும்
கருத்தரிப்ப தற்குமுன் காயம் என்ன சோணிதம்
அருள்தரிப்ப தற்குமுன் அறிவுமூலா தாரமாம்
குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடும் குருக்களே. 221
எங்கும்உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு போடுவார், பாடுசென்று அணுகிலார்
எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?
உங்கள்பேதம் அன்றியே உண்மைஇரண்டு இல்லையே? 222
அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்ப்
பெரியதாகி உலகுதன்னில் நின்றபாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறுசெய்த வேடமிட்ட மூடரே,
அறிவினோடு பாரும்இங்கும் அங்கும் ஒன்றதே. 223
வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினம்செபிக்கு மந்திரம்
முந்துமந்தி ரத்திலோ, மூலமந்திரத்திலோ,
எந்தமந்தி ரத்திலோ ஈசன்வந்து இயங்குமே? 224
அகாரகார ணத்திலே அனேகனேக ரூபமாய்
உகாரகார ணத்திலே உருத்தரித்து நின்றனன்
மகாரகார ணத்திலே மயங்குகின்ற வையகம்
சிகாரகார ணத்திலே தெளிந்ததே சிவாயமே. 225
அவ்வெழுத்தில் உவ்வுவந்து அகாரமும் சனித்ததோ?
உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றைஒன்றி நின்றதோ!
செவ்வைஒத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வையொத்த ஞானிகாள், விரித்துரைக்க வேணுமே. 226
மிவ்வை - நற்குணம்
ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபம்அற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்துநின்ற வத்துவை
ஆதியான தொன்றுமே அற்றதஞ் செழுத்துமே. 227
வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்
நானிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாதது ஒன்றுமில்லை தயங்கி ஆடுகின்றதே! 228
சுழித்ததோர் எழுத்தைஉன்னி சொல்லுமுகத்து இருத்தியே
துன்ப்இன்ப முங்கடந்து சொல்லும்நாடி யூடுபோய்
அழுத்தமான அக்கிரத்தின் அங்கியை எழுப்பியே
ஆறுபங்க யம்கடந்து அப்புறத்து வெளியிலே. 229
விழுத்தகண் குவித்தபோ தடைந்துபோய் எழுத்தெலாம்
விளைந்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை ஆனதே. 230
திரு அண்ணாமலை ஜோதிடம்,
அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்
S.சங்கர் குருக்கள்
http://sankarngpd.mywebdunia.com/
http://temple.mywebdunia.com/
http://astrology-vastu.mywebdunia.com/
http://sankarngpd.blogspot.com/
http://paleeswarantemple.blogspot.com/
http://newgummidipundi.blogspot.com/
http://sankarngpd.spaces.live.com/
கும்மிடிப்பூண்டி
+919444175185
அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்
S.சங்கர் குருக்கள்
http://sankarngpd.mywebdunia.com/
http://temple.mywebdunia.com/
http://astrology-vastu.mywebdunia.com/
http://sankarngpd.blogspot.com/
http://paleeswarantemple.blogspot.com/
http://newgummidipundi.blogspot.com/
http://sankarngpd.spaces.live.com/
கும்மிடிப்பூண்டி
+919444175185
அள்ளிநீரை இட்டதேது? அங்கையில் குழைந்ததேது?
மெள்ளவே முணமுணவென்று விளம்புகின்ற மூடர்காள்
கள்ளவேடம் இட்டதேது கண்ணைமூடி விட்டதேது?
மெள்ளவே குருக்களே, விளம்பிடீர் விளம்பிடீர். 211
அன்னைகர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
முன்னையே தரித்தும் பனித்துளிபோலாகுமே;
உன்னிதொக் குளழலும் தூமையுள்ளுளே அடங்கிடும்
பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே. 212
அழுக்கறத் தினங்குளித்து அழுக்கறாத மாந்தரே,
அழுக்கிருந்தது எவ்விடம், அழகில்லாதது எவ்விடம்.
அழுக்கிருந்தது எவ்விடத்து அழுக்கறுக்க வல்லீரேல்
அழுக்கிலாதது சோதியோடு அணுகிவாழ லாகுமே. 213
அணுத்திரண்ட கண்டமாய் அனைத்துபல்லி யோனியாய்
மனுப்பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர்
சனிப்பதுஏது; சாவதுஏது; தாபரத்தின் ஊடுபோய்
நினைப்பதுஏது? நிற்பதுஏது; நீர்நினைந்து பாருமே. 214
ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும் அப்புறம்
சோதியாகி நின்றிலங்கு சுருதிநாத சோமனை
போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த ஞானிகள்,
சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே! 215
ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகா ரணத்திலே
நாக்கைமூக்கையுள் மடித்து நாதநாடி யூடுபோய்
ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லீரேல்
பார்க்கப்பார்க்கத் திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே. 216
அஞ்சும்அஞ்சும் அஞ்சும்அஞ்சும் அல்லல்செய்து நிற்பதும்
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அமர்ந்துளே இருப்பதும்
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே ஆதரிக்க வல்லீரேல்
அஞ்சும்அஞ்சும் உம்முளே அமர்ந்ததே சிவாயமே. 217
அஞ்செழுத்தி னாதியாய் அமர்ந்துநின்றது ஏதடா?
நெஞ்செழுத்தி நின்றுகொண்டு நீசெபிப்பது ஏதடா?
அஞ்செழுத்தின் வாளதால் அறுப்பதாவது ஏதடா?
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்துரைக்க வேண்டுமே. 218
உயிரிருந்தது எவ்விடம்? உடம்பெடுப்பு தன்முனம்?
உயிரதாவது ஏதடா? உடம்பதாவது ஏதடா?
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா?
உயிரினால் உடம்பெடுத்த உண்மைஞானி சொல்லடா. 219
சுழித்தவோர் எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே
துன்ப்இன்ப முங்கடந்து செல்லுமூல நாடிகள்
அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே
ஆறுபங்க யம்கலந்து அப்புறத் தலத்துளே. 220
திரு அண்ணாமலை ஜோதிடம்,
அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்
S.சங்கர் குருக்கள்
http://sankarngpd.mywebdunia.com/
http://temple.mywebdunia.com/
http://astrology-vastu.mywebdunia.com/
http://sankarngpd.blogspot.com/
http://paleeswarantemple.blogspot.com/
http://newgummidipundi.blogspot.com/
http://sankarngpd.spaces.live.com/
கும்மிடிப்பூண்டி
+919444175185
அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்
S.சங்கர் குருக்கள்
http://sankarngpd.mywebdunia.com/
http://temple.mywebdunia.com/
http://astrology-vastu.mywebdunia.com/
http://sankarngpd.blogspot.com/
http://paleeswarantemple.blogspot.com/
http://newgummidipundi.blogspot.com/
http://sankarngpd.spaces.live.com/
கும்மிடிப்பூண்டி
+919444175185
சிவவாக்கியம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துதேவ ராகலாம்
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துவானம் ஆளலாம்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொண்ட வான்பொருள்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொள்ளும் உண்மையே. 201
பொய்க்குடத்தில் ஐந்தொதுங்கிப் போகம்வீசு மாறுபோல்
இச்சடமும் இந்திரியமும் நீருமேல் அலைந்ததே
அக்குடம் சலத்தைமொண்டு அமர்ந்திருந்த வாறுபோல்
இச்சடம் சிவத்தைமொண்டு உகந்தமர்ந்து இருப்பதே. 202
பட்டமும் கயிறுபோல் பறக்கநின்ற சீவனைப்
பட்டறிவினாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா;
திட்டவும் படாதடா, சீவனை விடாதடா
கட்டடாநீ சிக்கெனக் களவறிந்த கள்வனை. 203
அல்லிறந்து பகலிறந்து அகப்பிரமம் இறந்துபோய்
அண்டரண்ட மும்கடந்த அனேகனேக ரூபமாய்ச்
சொல்லிறந்த மனமிறந்த சுகசொரூப உண்மையைச்
சொல்லியாற என்னில்வேறு துணைவரில்லை ஆனதே. 204
ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே. 205
அங்கலிங்க பீடமும் அசவைமூன்று எழுத்தினும்
சங்குசக் கரத்திலும் சகல வானத்திலும்
பங்குகொண்ட யோகிகள் பரமவாசல் அஞ்சினும்
சிங்கநாத ஓசையும் சிவாயம்அல்ல தில்லையே. 206
அசவை - அசுபா மந்திரம்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்;
அஞ்செழுத்தும் நெஞ்சழுத்து அவ்வெழுத் தறிந்தபின்
அஞ்செழுத்தும் அவ்வின்வண்ணம் ஆனதே சிவாயமே. 207
ஆதரித்த மந்திரம் அமைந்தஆக மங்களும்
மாதர்மக்கள் சுற்றமும் மயக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ, எங்கும்ஆகி நின்றதோ?
சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே. 208
அக்கரம் அனாதியோ, ஆத்துமா அனாதியோ?
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ?
தக்கமிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ?
மிக்கவந்த யோகிகாள், விரைந்துரைக்க வேணுமே. 209
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராமஎன்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோய் அடைப்பதாம்
அன்பரான பேர்கள்வாக்கில் ஆழ்ந்தமைந்து இருப்பதே. 210
திரு அண்ணாமலை ஜோதிடம்,
அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்
S.சங்கர் குருக்கள்
http://sankarngpd.mywebdunia.com/
http://temple.mywebdunia.com/
http://astrology-vastu.mywebdunia.com/
http://sankarngpd.blogspot.com/
http://paleeswarantemple.blogspot.com/
http://newgummidipundi.blogspot.com/
http://sankarngpd.spaces.live.com/
கும்மிடிப்பூண்டி
+919444175185
அருள்மிகு ஸ்ரீ பாலீஸ்வரன் திருக்கோயில்
S.சங்கர் குருக்கள்
http://sankarngpd.mywebdunia.com/
http://temple.mywebdunia.com/
http://astrology-vastu.mywebdunia.com/
http://sankarngpd.blogspot.com/
http://paleeswarantemple.blogspot.com/
http://newgummidipundi.blogspot.com/
http://sankarngpd.spaces.live.com/
கும்மிடிப்பூண்டி
+919444175185
| தமிழரின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி சுவீடனில் கவனயீர்ப்புப் போராட்டம் |
| [ சனிக்கிழமை, 06 யூன் 2009, 03:11.35 PM GMT +05:30 ] |
இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் யப்பான், இத்தாலி, அமெரிக்கா, இலங்கை தூதுவரகங்கள் அமைந்திருந்த வீதிகளுடாக சென்று சுவீடன் வெளிவிவகார அமைச்சு ஊடாக சுவீடன் பாராளுமன்றை அடைந்தது. இப் போராட்டத்தில் டென்மார்க், பின்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும் பலர் வந்து கலந்து கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எமது மக்களுக்கு சுதந்தரமான, கௌரவமான வாழ்வுரிமை அவர்களின் சொந்த நிலத்திலே கிடைக்கும்வரை இவ்வகையான தொடர் போராட்டங்கள் சுவீடனிலும் நடைபெறவுள்ளன. எனவே சுவீடன் வாழ் தமிழர்களை தொடர்ச்சியாக இவ்வகையான போராட்டங்களிலே பங்குகொள்ளுமாறு உரிமையுடன் வேண்டுகின்றோம்.
|












கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக