செவ்வாய், 16 ஜூன், 2009

2009-06-16

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனைக்கு காரணகர்த்தாவாகிய தியாகி பொன்.சிவகுமாரனின் 35 ஆம் ஆண்டு நினைவு நாளினை ஈழத் தமிழர்கள் இன்று வெள்ளிக்கிழமை நினைவுகூருகின்றனர்.

1974 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள் தனது 24 ஆவது வயதில் சயனைட் அருந்தி களப்பலியான பொன்.சிவகுமாரன் ஈழப்போராட்டதின் புதிய வரலாற்றை தொடக்கி வைத்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உரும்பிராய் கிராமத்தில் 26.08.50 ஆண்டில் பொன்னுத்துரை - அன்னலட்சுமி தம்பதியினரின் மூன்றாவது மகனாக பிறந்த சிவகுமாரன் இளவயதிலேயே பொதுவுடமைக் கருத்துக்கொண்ட சமூகச் செயற்பாட்டாளனாக விளங்கினார்.

1970 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான கல்வித் தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்காக உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் பொன்.சிவகுமாரன் விளங்கினார்.

1974 ஆம் ஆண்டு ஐனவரி 10 ஆம் நாளில் இடம்பெற்ற படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிக்கு தண்டனை வழங்க முயற்சித்திருந்த வேளையில் காவல்துறையால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்ய முயற்சிக்கையில் சயனைட் அருந்தி களப்பலியானார் பொன்.சிவகுமாரன்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனைக்கு காரணகர்த்தாவாகிய தியாகி பொன்.சிவகுமாரனின் 35 ஆம் ஆண்டு நினைவு நாளினை ஈழத் தமிழர்கள் இன்று வெள்ளிக்கிழமை நினைவுகூருகின்றனர்.

1974 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள் தனது 24 ஆவது வயதில் சயனைட் அருந்தி களப்பலியான பொன்.சிவகுமாரன் ஈழப்போராட்டதின் புதிய வரலாற்றை தொடக்கி வைத்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உரும்பிராய் கிராமத்தில் 26.08.50 ஆண்டில் பொன்னுத்துரை - அன்னலட்சுமி தம்பதியினரின் மூன்றாவது மகனாக பிறந்த சிவகுமாரன் இளவயதிலேயே பொதுவுடமைக் கருத்துக்கொண்ட சமூகச் செயற்பாட்டாளனாக விளங்கினார்.

1970 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான கல்வித் தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்காக உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் பொன்.சிவகுமாரன் விளங்கினார்.

1974 ஆம் ஆண்டு ஐனவரி 10 ஆம் நாளில் இடம்பெற்ற படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிக்கு தண்டனை வழங்க முயற்சித்திருந்த வேளையில் காவல்துறையால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்ய முயற்சிக்கையில் சயனைட் அருந்தி களப்பலியானார் பொன்.சிவகுமாரன்.

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்
ஆதி

- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.

Plastic waste - கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே

- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்

பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்
ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்
அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?

சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை

அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.

-நன்றி: ஆதி
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்
ஆதி

- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.

Plastic waste - கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே

- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்

பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்
ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்
அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?

சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை

அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.

-நன்றி: ஆதி

கருத்துகள் இல்லை: