
அவன் விர்ரென பைக்கைத் திருப்பினான்....அரை வட்டமடித்து என்னைக் கடந்து போகும் முன்.....
"ஹெல்மெட் செக் பண்றாங்க.....பாத்து" என்று காற்றில் கத்திவிட்டுப் போனான்.....
கொஞ்சம் ஆனந்தமாகவும் அந்த முகம் தெரியா மனிதனின் மேல் எல்லையில்லா அன்பும் ஒரு நிமிடம் வந்தது... நான் ரொம்ப அவசரத்தில் இருந்தேன்...திரும்பிப் போகவா....அல்லது தப்பிச்சுரலாமா என்ற நினைப்போடு...மேலும் என் பைக்கை ஓட்டினேன்......
மற்றுமொருவன் ......."அடத் திரும்புங்க....ஹெல்மெட் போடலையா? காக்கிச் சட்டை நிக்குது" என்று கத்திவிட்டுப் போனான்.....
இன்னும் ஆனந்தமாக இருந்தது......சக மனிதன்மேல் மனிதர்களுக்கு எவ்வ்ளோ அக்கறைன்னு.....சந்தோஷமாகவே இருந்தது........மனிதநேயம் இல்லை...இல்லைன்னு சும்மா எல்லோரும் பாட்டுப் பாடுறாங்கன்னு.....மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.....
நானும் தூரத்தில் காக்கிச் சட்டையைப் பார்த்ததும்...பைக்கைத் திருப்பினேன்........என் பங்குக்கு ரெண்டு மூணு பேருக்கு காக்கிச் சட்டையைப் பற்றித் தகவல் கொடுத்தேன்.....(ஏதோ என்னாலான உதவி!!!)
எம்.ஐ ரோடைப் பிடித்து கட் ரோட்டில் புகுந்து போய் விடலாம் என நினைத்துத் திரும்பினால் ஒரே கூட்டம்.....அடப் பாவமே ஆக்ஸிடென்ட்......பைக் பக்கத்தில் ஒரு இளைஞன் ரத்தவெள்ளத்தில் கிடந்தான்.......அதே வயதுடைய பெண் கை கால்களில் பெருங்காயத்துடன் முகமெல்லாம் ரத்தத் தீற்றல்களினுடனும்....உயிருடன்.....துடித்துக் கொண்டிருந்தாள்....
"போலீஸ் வரட்டும்."
"போலீஸ் கேஸ்..."
"பைக் கையில் கிடைத்தால் கண்மண் தெரிவதில்லை........"
"அட உயிர் இருக்குப்பா...."
".எங்கே பிழைக்கப் போவுது?...."
"யாராவது ஆட்டோ கூப்பிடுங்கப்பா..."என்றெல்லாம் பல குரல்கள்....
யாரும் அசையவில்லை...............
காக்கிச் சட்டை பற்றித் தகவல் சொன்னவர்களும் கூட அசையவில்லை.....
நானும்தான்....
தற்செயலாக அவன் தலையைப் பார்த்தேன் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.....

எத்தனைத் திரையுலக நட்சத்திரங்களின் கனவு….ஆஸ்காரிற்கான கதவினை 'கமல் திறந்து வைப்பாரா..அமீர்கான் திறந்து வைப்பாரா..என்று ஏக்கப்பட்டு, 'ஆஸ்கார்' ! பரிந்துரை செய்யப்பட்டாலேயே கொண்டாடிய காலங்கள் நினைவிலேயே இருக்கின்ற பொழுதினிலேயே....இன்று நனவாய்…! Great AR Rahman!!!
பதட்டமாய் இருந்தது பரிசுபெற்ற படைப்பாளி மட்டுமல்ல.. இந்தியத் திரையுலகின் அபிமானிகளும்தான்..
உழைப்பிற்கும், தொழிலின் நேசிப்பிற்கும், திறமைக்கும் கிடைக்க வேண்டிய பரிசு… சரியான தருணத்தில் கிடைப்பதற்கும் கடவுளின் ஆசி வேண்டும். ரஹ்மானுக்கு அது எட்டியிருக்கின்றது!
மெல்லிசையால் தமிழனைத் தன்பால் ஈர்த்தவர் எம்எஸ்வி
இன்னிசையால் இந்தியனையும் தன்பால் ஈர்த்தவர் இளையராஜா
தன்னிசையால் அகில உலகினையும் இந்தியத்தமிழன்பால் ஈர்த்தவர் ரஹ்மான்!
இதில் இவருக்கில்லாமல் அவருக்கா..அவருக்கில்லாமல் இவருக்கா என்று மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வேறுபடுத்திப் பார்க்கமல், எல்லோரும் ஒரே தமிழ்க்குடும்பம்தான் என்ற நோக்கில் ஒன்றுபட்டு ரஹ்மானைப் பாராட்டுவோம்…!
இசைப்புயலே..இந்தக் கிரீடம் முள்கிரிடமாய் மேலும் பல பொறுப்பினைக் கொடுத்து முடக்கிவிடாமல், மலர்க்கீரீடமாய் மேலும் பல மெல்லிசை பரப்ப வாழ்த்துக்கள்!
Tamil,camera,gadgets,science,microsoft,google

எத்தனைத் திரையுலக நட்சத்திரங்களின் கனவு….ஆஸ்காரிற்கான கதவினை 'கமல் திறந்து வைப்பாரா..அமீர்கான் திறந்து வைப்பாரா..என்று ஏக்கப்பட்டு, 'ஆஸ்கார்' ! பரிந்துரை செய்யப்பட்டாலேயே கொண்டாடிய காலங்கள் நினைவிலேயே இருக்கின்ற பொழுதினிலேயே....இன்று நனவாய்…! Great AR Rahman!!!
பதட்டமாய் இருந்தது பரிசுபெற்ற படைப்பாளி மட்டுமல்ல.. இந்தியத் திரையுலகின் அபிமானிகளும்தான்..
உழைப்பிற்கும், தொழிலின் நேசிப்பிற்கும், திறமைக்கும் கிடைக்க வேண்டிய பரிசு… சரியான தருணத்தில் கிடைப்பதற்கும் கடவுளின் ஆசி வேண்டும். ரஹ்மானுக்கு அது எட்டியிருக்கின்றது!
மெல்லிசையால் தமிழனைத் தன்பால் ஈர்த்தவர் எம்எஸ்வி
இன்னிசையால் இந்தியனையும் தன்பால் ஈர்த்தவர் இளையராஜா
தன்னிசையால் அகில உலகினையும் இந்தியத்தமிழன்பால் ஈர்த்தவர் ரஹ்மான்!
இதில் இவருக்கில்லாமல் அவருக்கா..அவருக்கில்லாமல் இவருக்கா என்று மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வேறுபடுத்திப் பார்க்கமல், எல்லோரும் ஒரே தமிழ்க்குடும்பம்தான் என்ற நோக்கில் ஒன்றுபட்டு ரஹ்மானைப் பாராட்டுவோம்…!
இசைப்புயலே..இந்தக் கிரீடம் முள்கிரிடமாய் மேலும் பல பொறுப்பினைக் கொடுத்து முடக்கிவிடாமல், மலர்க்கீரீடமாய் மேலும் பல மெல்லிசை பரப்ப வாழ்த்துக்கள்!
Tamil,camera,gadgets,science,microsoft,google
காதல் அது ஒரு
தான்தோன்றீஸ்வரம்
தானாகவே உருவாகும்
காதல் அது சில
மோதலில் ஆரம்பமாகி
சாதலில் முடியும்
காதல் அது மிக
இரகசியமாக ஆரம்பித்து
பொது இடங்களில் திரையிடும்
காதல் அது
உள்ள உரசலில் அடைபட்டு
உடல் உரசலில் உடைபடும்
காதல் அது
சொல்லாமல் தவிக்கும்
சொல்லிவிட்டு சலிக்கும்
காதல் அது
சந்தோசத்தில் சிரிக்கும்
சந்தேகத்தால் மரிக்கும்
காதல் அது
அன்பானவர்களுக்கு அமுதம்
அழகானவர்களுக்கு ஆபத்து
காதல் அது
கனிவாக பேசி
தனிமையில் ஊமையாகும்
காதல் அது
சில்மிசம் செய்யும்
விசமும் அருந்தும்
காதல் அது
விண்ணிலும் பறக்கும்
மண்ணுக்குள்ளும் புதைக்கும்
காதல் அது
உறவுகளை உருவாக்கும்
பெற்றோர்களையும் பிரிக்கும்
காதல் அது
பலரிடம் வாழ ஆசைப்படும்
சிலரிடம் மட்டும் வாழும்
என்னிடமும் காதல் வந்திச்சு
அதை இன்றுவரை சொல்லாமல்
சிரித்து பழகுகின்றேன்
பிரியாமல் உன்னோடு..
எப்போது உன் காதலை
என்னிடம் சொல்லி
மாலையிடப் போறாய்
என் பிணத்துக்கு நீ..?
ஆம்
காதல் அது
உயிரோடு சாகவைக்கும்
உயிர்கொள்ளி......!

என்றோ ஓர்நாள்
உன்னை என்
நண்பனின் வீட்டு
புகைப்படத்தொகுப்பில்
கண்டதும் ரசித்தேன்
உன் அழகான மூக்கு
நெளி நெளி தலைமுடி
வெண்பல் தெரிய சிரிப்பு
கண்களில் காதல் பார்வை
அரும்பு மீசை
மிருதுவான கைவிரல்கள்
வானத்தை தொடும் உயரம்
சறுக்கியது என் மனம்
ரொம்பவே பிடித்தது
கண்களால் ரசித்தேன்
உன் பெயரை கேட்டறிந்தேன்
உச்சரித்து மகிழ்ந்தேன்
நீ இருக்கும் படத்தை மட்டும்
யார் கண்ணிலும் படாமல்
களவாடினேன்
ஏதோ சாதித்ததாக
எனக்குள்ளே சந்தோசப்பட்டேன்
கனவில் அடிக்கடி உன்னோடு
கதைகள் பல பேசினேன்
நேரில் காண்பேன் என்ற நம்பிக்கையோடு
நாட்களை நகர்த்தினேன்
அன்று ஒருநாள் உனை கண்டதும்
உன் அருகில் வந்து உனைத்
தொட்டுப் பார்க்க விரும்பினேன்
எட்டவே நின்று கொண்டேன்
நீ யாருடனோ
நீண்ட நேரமாக கலகல
நகைப்போடு பேசியதை
கைத்தொலைபேசியில் நான்
ஒலிப்பதிவாக்கினேன்
அன்றிலிருந்து இன்றுவரை
உன் குரலையும்
புகைப்படத்தையும்
கேட்டும் பார்த்தும்
உன்மேல் என்காதலை
சுமந்தவாறே
நடமாடுகின்றேன் உனக்காக
இது எதுவரையில்......?
விடை தெரியாமல் பல
வினாக்களை மனசுக்குள்
புதைத்துக்கொண்டு
உன் புகைப்படத்திற்கு
என் காதலை சொன்னபடி
உன் குரலை கேட்டவாறே
தினமும் தூங்குகின்றேன்
நாளைய விடியலில்
உனை சந்தித்து
என் காதலை சொல்வேன்
என்ற எண்ணத்தில்....
உன்னை என்
நண்பனின் வீட்டு
புகைப்படத்தொகுப்பில்
கண்டதும் ரசித்தேன்
உன் அழகான மூக்கு
நெளி நெளி தலைமுடி
வெண்பல் தெரிய சிரிப்பு
கண்களில் காதல் பார்வை
அரும்பு மீசை
மிருதுவான கைவிரல்கள்
வானத்தை தொடும் உயரம்
சறுக்கியது என் மனம்
ரொம்பவே பிடித்தது
கண்களால் ரசித்தேன்
உன் பெயரை கேட்டறிந்தேன்
உச்சரித்து மகிழ்ந்தேன்
நீ இருக்கும் படத்தை மட்டும்
யார் கண்ணிலும் படாமல்
களவாடினேன்
ஏதோ சாதித்ததாக
எனக்குள்ளே சந்தோசப்பட்டேன்
கனவில் அடிக்கடி உன்னோடு
கதைகள் பல பேசினேன்
நேரில் காண்பேன் என்ற நம்பிக்கையோடு
நாட்களை நகர்த்தினேன்
அன்று ஒருநாள் உனை கண்டதும்
உன் அருகில் வந்து உனைத்
தொட்டுப் பார்க்க விரும்பினேன்
எட்டவே நின்று கொண்டேன்
நீ யாருடனோ
நீண்ட நேரமாக கலகல
நகைப்போடு பேசியதை
கைத்தொலைபேசியில் நான்
ஒலிப்பதிவாக்கினேன்
அன்றிலிருந்து இன்றுவரை
உன் குரலையும்
புகைப்படத்தையும்
கேட்டும் பார்த்தும்
உன்மேல் என்காதலை
சுமந்தவாறே
நடமாடுகின்றேன் உனக்காக
இது எதுவரையில்......?
விடை தெரியாமல் பல
வினாக்களை மனசுக்குள்
புதைத்துக்கொண்டு
உன் புகைப்படத்திற்கு
என் காதலை சொன்னபடி
உன் குரலை கேட்டவாறே
தினமும் தூங்குகின்றேன்
நாளைய விடியலில்
உனை சந்தித்து
என் காதலை சொல்வேன்
என்ற எண்ணத்தில்....

முகவரி இன்றி தனித்தபோது
என் விழிகளில் தவழ்ந்த
முகவரி நீ தான் அன்பே
உன் முதல் பார்வையிலேயே
என் சோகவலிகளையும் மறந்து
இதமான வலியொன்றை
இதய வாயிலில் உணர்ந்தேன்
முகவரிக்குள் குடி கொண்டு
நீ அவஸ்தை என நினைத்து
என் விழிகளில் தவழ்ந்த
முகவரி நீ தான் அன்பே
உன் முதல் பார்வையிலேயே
என் சோகவலிகளையும் மறந்து
இதமான வலியொன்றை
இதய வாயிலில் உணர்ந்தேன்
முகவரிக்குள் குடி கொண்டு
நீ அவஸ்தை என நினைத்து
முதல் வலியுனையே இன்பமாக
சுமந்தேன் இதயத்தில்..
அன்று முதல்..என் இதயம்
சுமந்தேன் இதயத்தில்..
அன்று முதல்..என் இதயம்
உனக்காகவே இயங்குகிறது
என் எண்ணங்கள் யாவும்
உனையே நினைக்கின்றது.
என் இதய வாசல் அழகானது
தினம் தினம் பலகடிதங்களை
வரைந்தேன் என் புதிய
இதய முகவரிக்கு..
பதில் மடல் வராத போதும்
என் இதய முகவரிதனை
தரிசிக்காமல் நகர்வதில்லை
என் எண்ணங்கள் யாவும்
உனையே நினைக்கின்றது.
என் இதய வாசல் அழகானது
தினம் தினம் பலகடிதங்களை
வரைந்தேன் என் புதிய
இதய முகவரிக்கு..
பதில் மடல் வராத போதும்
என் இதய முகவரிதனை
தரிசிக்காமல் நகர்வதில்லை
என் நாழிகைகள்..!!
இதயத்தில் உன்னையே
இதயத்தில் உன்னையே
முகவரியாக சுமக்கிறேன்
நிஜத்தில் ஏனோ உன்
நிஜத்தில் ஏனோ உன்
வீட்டைக் கடக்கையில்
தாடுமாறுகின்றேன்
உன் முகாரி ராக குரலைக்
கேட்கையில் மெளனமாகின்றேன்...
என் இதயத்திற்கு
முகவரியானவளே
எதற்காக நீ
முடங்கி கிடக்கின்றாய்
என்னை எப்போ உன்
முகவரியாக்குவாய் சொல்?
தாடுமாறுகின்றேன்
உன் முகாரி ராக குரலைக்
கேட்கையில் மெளனமாகின்றேன்...
என் இதயத்திற்கு
முகவரியானவளே
எதற்காக நீ
முடங்கி கிடக்கின்றாய்
என்னை எப்போ உன்
முகவரியாக்குவாய் சொல்?
என் காதலின் முகவரியே
நம் காதலுக்கு நீ
முதல்வரியாகுவாயா
இல்லையேல்
முற்றுப்புள்ளியாகுவாயா?
நம் காதலுக்கு நீ
முதல்வரியாகுவாயா
இல்லையேல்
முற்றுப்புள்ளியாகுவாயா?


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக