சனி, 27 ஜூன், 2009

2009-06-27



More than a Blog Aggregator

by சத்ரியன்




வா
வன்னித்
தமிழா
வா

அகதியாய் அல்ல...

நீ
மனிதனாய்
இருந்தவரை
மதிக்கவில்லை
எவனும்.
இனியும் தான் ...!

உன்
தலைமை அழிக்க
கள்ளப்படை அனுப்பிய
குள்ளநரிகளை
அழிக்க ...

வா
வன்னித் தமிழா
வா

அகதியாய் அல்ல.
அரக்கனாய்...!


உங்கள் வீட்டுப் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில்
போடட்டும்
என்று சொன்னதற்கே
துள்ளியெழுந்து வந்து
துடித்து வந்து
கேள்வி கேட்கும்
கணவான்களே!
அங்கே எங்கள்
வீட்டுப் பெண்கள்
துகிலுரிக்கப் பட்டு
துறத்தித் துறத்திக்
கற்பு சூறையாடப் பட்டபோது
என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

எவளுக்கோ நடக்கிறது!
நமக்கென்ன என்றுதானே!
இன்று அந்நிலை
நம் வீட்டுப் பெண்களுக்கும்
வந்திடுமோ
என்ற அச்சம்
உங்களுக்கேன் வந்தது?

பாவத்தில் பங்குபெற்றோர்க்குத்தானே
சாபங்கள் பலிக்கக் கூடும்?
மடியினில் கனமில்லாமல்
மனதினிலேன் பயம் கொண்டீர்?

உள்ளுக்குள் உறைக்கின்றதென்றால்
நம் நாடிழைத்த
கேட்டில் நீரும்
பங்கு பெற்றீரா?
அல்லது
எம்மவர்க்கு நேர்ந்த
கொடுமை கண்டு
கைகொட்டி ரசித்தீரா?

சாபம் கண்டு
உமக்கென்ன பயம் வந்தது?
பாவம் செய்தது உண்மையெனில்
சாபத்தின் பலனை
தின்றுதானே ஆகவேண்டும்!

நரமாமிசம் புசித்தவர்களைக்
காக்கத்தானே
ஐநா சபையினிலும்
ஆதரித்துப் பேசுகின்றீர்!
இரக்கமற்ற இந்தியா
இருந்தாலென்ன
அழிந்தால்தான் என்ன?

அந்நிய நாட்டுப்
பிரச்சினையில்
தலையிடுதல் நடவாதென்று
சொல்லிக் கொண்டுதானே
உளவுக் கருவிகளும்
வக்கணையாய்
ஆயுத உதவிகளும்
செய்து முடித்தீர்!

செத்து மடிந்த
எங்கள் அண்ணன்மாரின்
ஆவிகள்
உங்களைச் சும்மா விட்டுவிடுமா?
கதறியழுதத் தாய்மார்கள்
சார்பில்தானே
தாமரையும்
சாபம் விடுத்தார்!

தவறிழுத்தோர்தானே
அஞ்ச வேண்டும்?
சாப விமோச்சனம்
தேட வேண்டும்?

சாபம் விடுத்தல்
தவறென்று
தடியெடுத்து வந்த
தைரிய சாலிகளே!
உங்கள் துள்ளல்தானே
நிரூபிக்கிறது
பாவத்தில் உங்களுக்கும்
பங்கு உண்டு என்பதனை?

ஏ பாரதமே!
எம்மினத்திற்கெதிராக
நீ தவறிழைத்தது
நிஜமென்றால்
அக்கருஞ்சாபம் பலிக்கட்டும்!
பாரத மாதா
ஒரு
பத்தினி அல்லவென்று
பாரோர் தூற்றட்டும்!


More than a Blog Aggregator

by நாமக்கல் சிபி
வீரர்கள்
வீழ்த்தப்படுவதில்லை!
விதைக்கப் படுகின்றனர்!

விதைகள்
விருட்சங்களாகும்
விரைவில்!

நாங்கள்
பிறந்த இடம்
தவறாகிவிட்டது!
இல்லையெனில்
உன்னுடனேயே
இருந்திருப்போம்
சமர் களத்தில்!

இது இரங்கற்பா
ஆகிவிடாது!
நீ என்றென்றும்
இருக்கிறாய்
எங்கள் மனதில்!
எங்கள் உறுதியில்!
எங்கள் மனோதிடத்தில்!
நம்புகிறோம் இன்னும்!
உம் விடியல்
பிறக்கும்
விரைவில்!


More than a Blog Aggregator

by நாமக்கல் சிபி


பெரு மழை நின்றுவிட்ட
அமைதியானதொரு
மாலைப் பொழுதில்
விடாது வீசும்
சில்லென்ற காற்றும்
உன் கேசம்
கலைத்த பொழுதுகளை
நினைவு படுத்தி விடுகிறது!

உறங்கங்கள் தொலைத்த
இரவுப் பொழுதுகளின்
நிசப்தம்
கவிதைகளின்
முயற்சிகளில்
கசங்கிய காகிதங்களாய்

மனதின் வலி
மீண்டு மீண்டும்
உன்னையே நினைவூட்டுகிறதே!

காரணமேயின்றி
கணப் பொழுதில்
"என்னை மறந்துவிடென்று"
நீ கூறிச் சென்ற
அந்த சாலையின் முடிவு
மீண்டும் மீண்டும்
கடந்து செல்லும்போதெல்லாம்
நின்று திரும்பிப்
பார்க்கச் செய்கிறது!

ஒருவேளை
நீ திரும்பவந்து
எனக்கெனக்
காத்திருப்பாயோ என்று?

நமக்காகக் காதலா
காதலுக்காக நம்மையா
எப்படிப் படைத்தான்
இறைவன்?
எப்படி இருந்தாலும்
நமக்காகக் காதலும்
காதலுக்காக நாமுமாய்த்தான்
இருக்கின்றோம்!
உனைத் தீண்டும்போதெல்லாம்
கன்னம் சிவக்கிறாயே!
நான் தொட்டுவிடக் கூடாதென்று
எச்சரிக்கைச் சின்னமா?
வியந்து கேட்டால்
இன்னும் சிவக்கிறாய்!
"ச்சீ போடா" என்கிறாய்!


Add Imageஅணைப்பின் சுகம்
அவ்வப்போது தருகிறாய்!
எப்போதும் கிடைக்குமா
என்றால்
"போடா மடையா"
என்று
பொய்க்கோபம் காட்டி
இன்னும் இறுக
அணைத்துக்கொள்கிறாய்!
கொள்கைப் பிடிப்பில்
உறுதியாய்த்தான் இருக்கிறாய்!

நேசம் என்றால்
என்னவென்று
நெஞ்சில் சாய்ந்து
கேள்வி கேட்கிறாய்?
அடி! மடப் பெண்ணே!
நீ என் மேல்
காட்டுவதன் பெயர்தானடி
நேசம்!
அருகில் இருக்கும்போதும்
இமைக்காமல் பார்க்கிறாய்!
தொலைவில் நகர்ந்துவிட்டால்
விழிகளால் தேடுகிறாயே!
இதுதானடி நேசம்!
இதற்குப் பெயர்தானடி
காதல்!


அப்படியும்
உனக்குப் புரியவில்லை
என்றுதானே
உருவம் கொடுத்து
விளக்கி இருக்கிறேன்!
இதோ உன் நேசம்!
இதோ நம் காதல்!
உன் மடியினில்
உறங்குதடி!
உருவம் இல்லாமல்
நம் இருவருக்குள்ளும்
இயங்கி வந்த
நம்மை இயக்கி வைத்த
அந்த
உன்னதமான காதல்!
வீழ்பவன் அங்கே!
எம்மினத்தவனே!
மாள்பவன் அங்கே!
எம்மினத்தவனே!

ஆயுதம் கொடுத்தவன்
எவனெனக் கண்டால்
ஐயஹோ கொடுமை!
அவனோ எம்மிடத்தவனே!

ஐய்யோ! ஐய்யோ!
பாதகம் புரிந்தோம்!
இனியும் வேண்டாம்!
நிறுத்துக உதவியை!

அகதியாய் வந்தால்
அவலமாய் வாழ்வு!
சிங்கள வீரர்க்கு
சிறப்புப் பயிற்சிகள்!

என்னே கொடுமை!
என்னே விந்தை!
நம்மினத்தவர்க்கே
நாமிழைத்த கொடுமை!

ஐய்யோ! ஐய்யோ!
பாதகம் புரிந்தோம்!
இனியும் வேண்டாம்!
நிறுத்துக உதவியை!

எங்கள் உறவுகள்
உதிர்க்கும் உதிரம்!
இனியும் பொறுத்திட - எம்
இதயமும் வெடித்திடும்!

அரசுகள் முயன்றே
அமைதியைக் காப்பீர்!
எம் உறவுகள்
பிழைக்க
அவர்தம்
உரிமைகள் உடைமைகள்
அனைத்தையும் காக்க
எம் குரல் ஒலிக்கும்!
நித்தமும் இங்கே!

இவ்வொரு குரலோசை
ஓய்ந்து போகலாம்!
எம் உயிர்களின்
ஓசை
தேய்ந்திடலாமோ!
தமிழரின் ஓசை
தாழ்ந்திடலாமோ!

விரைவில் ஒலிக்கும்!
வெற்றியின் முரசு!
எம் தமிழினம்
ஜெயிக்கும்!
படைத்திடும் அரசு!

கருத்துகள் இல்லை: