சனி, 27 ஜூன், 2009

2009-06-27

இந்த வருஷம் ஆரம்பிச்சதிலேர்ந்தே ஒரே போட்டி மயமா இருக்கு! தினம் தினம் தமிழ்மணத்தைத் திறந்தா போட்டி என்ற வார்த்தை முகப்புப் பக்கத்துல ஒரு இடத்துலயாவது இல்லாம இருக்கிறதே இல்லை! அந்த அளவுக்குப் போட்டிகள்!

பிளாக்குட் போட்டி, உரையாடல் போட்டி, இப்ப ரீசண்டா வந்திருக்குற உயிரோடை போட்டி, etc.etc..

போட்டிக்கு எழுதுற கதைகளைப் படிச்சி முடிக்கவே நமக்கு தாவு தீருது! இதுல நாம வேற எந்தப் போட்டில கலந்துக்குறது, எதை விடுறது தவிச்சிப் போயி கிடக்குற என்னை மாதிரி சுறுசுறுப்பான(!?) பதிவர்களுக்காக (மட்டுமே) இந்த சிறப்புப் போட்டி!

உங்க மூளையைக் கசக்க வேண்டாம், ரூம் போட்டு யோசிக்க வேண்டாம்.
இந்த போட்டியின் ஸ்பெஷாலிட்டியே ரொம்ப சிம்பிளா எண்ட்ரி கொடுக்க வேண்டியதுதான்!
நடுவர்களுக்கும் அத்தனை கஷ்டமான வேலை இல்லை! படிச்சி விமர்சனமெல்லாம் எழுதி, திருத்தி மார்க் போட்ட வேண்டியதில்லை!
(பாவம்! நீங்களும் எத்தனை கதைதான் படிச்சி தாவு தீருவீங்க...)

இந்த போட்டியைப் பத்தி:

ஒண்னுமில்லைங்க! இந்தப் போட்டியில கலந்துக்காம இருக்கணும்! அதான் போட்டியே!

.
.
.
.
.
.
.
என்னாது பரிசு என்னவா? கொமட்டுலயே குத்திப்புடுவேன் குத்தி..!

-------------------------------------------------------------------------------------

(ஐயா திரட்டிகளே, போட்டி நடத்தும் நிர்வாகிகளே...! ஐபிஎல், ஐசிசி, டெஸ்ட் மேட்ச், ஒன் டே, 20/20 எல்லாம் ஒரே நேரத்துல வெச்சா எப்படி பிளேயர்ஸ் களைச்சி போயிடுவாங்களோ அதே மாதிரி

எக்கச் சக்க போட்டிகள்(குறிப்பா சிறுகதைகளுக்கு மட்டுமே நிறைய), அதுவுமிலலாம ஏகப்பட்ட தொடர்கள்(டெஸ்ட் மேட்ச்)?

பதிவர்களைப் பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு?


More than a Blog Aggregator

by நாமக்கல் சிபி
நாய் 'களோடு
ஒரு
நரி
தெருவிலும்
சாலையிலும்

காதைத் துளைக்கும்...
குரைப்புச் சத்தம்
கேட்கிறது...

நாய்'களுக்கு
குரைப்பது
பழக்கமே....
நரிக்குமா?

எப்போது
புரியும்
இந்த
நரிக்கு
அது
குரைத்துக்கொண்டிருக்கிறது
என்பது....??????

நாய்களோடு
நரியைப்
பார்க்க..........
சகிக்கவில்லைதான்....
என்ன செய்வது...
நரி
வெளியில்
வரும்
நாளை
நோக்கி........

மூலப் பதிவு : ஓ நண்பனே நண்பனே

எதிர் பாட்டு :


More than a Blog Aggregator

by நாமக்கல் சிபி
எனக்காக கொட்டிக்கொண்ட
நாட்கள் சென்று

யாருக்காகவோ
கொட்டிக்கொள்ள வந்தேன்

யாருக்காகவோ
கொட்டிக்கொள்வதை
நிறுத்தினேன்..

எனக்காக
எப்போதாவது
கொட்டிக்கொண்ட
பொழுதுகள்

சாம்பார்
இல்லாத
சாப்பாடுகளாயின...

இருப்பினும்
பார்சலில்
வரும்
அன்பான
ஃபுல் மீல்ஸ்கள்

"உனக்காக நீ கொட்டிக்கொள்ளாதே"

இது
சாப்பாடு
இது சாம்பார்
இது
கூட்டு
இது பொறியல்
என்று
சொல்ல

எனக்கு
யாரும்
இருந்ததில்லை

சொல்லுபவர்
அத்தனை
பேரும்
சாப்பாட்டு இராமன்கள்!!

விழுங்கியது
ஜீரணிக்கும் - மறுநாள்
காலையில் வெளியில் வரும்
மறந்தும் போவேன்..

மீண்டும்
ஆரம்பிப்பேன்..

மீண்டும்
முடிப்பேன்...

யாருக்காகவோ....
.
.
,
.
எனக்காக நான்
ஏப்பம் விட்டதில்லை
என்பதில்
மட்டும்
வில்லுக்கும்
தெளிவு....

- எதிர்கவுஜ ஏழுமலை

மூலக் கவுஜை : இவங்களோட பார்வையில்

(அவங்க பதிவை கவுஜை என்று இராம் சொன்னதால் மட்டுமே எதிர் கவுஜை எழுத வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன்)
கதை











[போட்டிக்கு அல்ல]
பார்வைகள் பதிவுலே கவிதாக்கா பலபேர்கிட்டே அவங்கவங்களுக்கு பிடிச்ச ஸ்வீட் பேர் கேட்டதாகவும் எல்லாரும் அவங்களை அழவைச்சதாகவும் எழுதி இருக்காங்க!

உண்மையில என்ன நடந்ததுன்னு நீங்களே பாருங்க!

--------------
Daar All
Plz send me your favorite "sweet" item name. (example laddu, halwa, pasanthi..etc)
Kavi
----------------
பால்கோவா

நட்புடன்,

நாமக்கல் சிபி.
----------------
சிபி நன்றி
இன்னொரு பிடித்த ஸ்வீட் சொல்லுங்க.. அல்ரெடிஓருத்தங்க இதை சொல்லிட்டாங்களே...
---------------------
நானே செஞ்ச பால்கோவா!

(இதை யாரும் கண்டிப்பா சொல்லி இருக்க முடியாது)
நட்புடன்,

நாமக்கல் சிபி.
----------------------
பிச்சிப்புடுவேன் பிச்சி.. :)))))))))))
ப்ளீஸ்ப்பா. .எனக்கு வேற உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட் பேரு சொல்லுங்க...
-----------------------
பிச்சிப் போடுவதற்கு அதென்ன ஜிலேபியா?
யாருக்கு பிடிச்ச ஸ்வீட் சொல்லணும்? எனக்கு பிடிச்சது பால்கோவாதான்!

நட்புடன்,

நாமக்கல் சிபி.
--------------------------
ஹய்யோ..
சரி பால்கோவா தவிர வேறு என்ன ஸ்வீட் பிடிக்கும்...
சொல்லிடுங்களேன்..
--------------------------
எனக்கு காரா பூந்தி பிடிக்கும்!

நட்புடன்,

நாமக்கல் சிபி.
--------------------
பிசாசே... காராபூந்தி.. காரம். .நான் கேட்டது ஸ்வீட்டூஊஊஊஊஊஊ
oru purpose kaha ketta.. sollanum.. solungapa... enn eppadi oyira vaangareenga ??? avvvvvvvvvvvvv !!
--------------------
ம்ஹூம்!
எனக்கு பால்கோவாதான் பிடிக்கும்!
இன்னொருத்தரும் சொல்லிட்டாங்க என்பதற்காக நான் மாத்திக்க முடியுமா என்ன?
.வேணும்னா சோன் பப்படின்னு எழுதிக்குங்க! (லுலுங்காட்டிக்காகத்தான், நிஜமா எனக்கு பால்கோவா தான் பிடிக்கும்)

நட்புடன்,

நாமக்கல் சிபி.
-----------------------------------
sari... :)))))))))) thanks.. eppa avanga kitta mathikka solli kettu paarkirean..
avanga enna solla poraangalo ponga..





More than a Blog Aggregator

by நாமக்கல் சிபி
நீர்க்குமிழிகளின்
மீதேறி வான்தொட
நான் எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியுமே
தோல்வியில்தான்
முடிகிறது!

ஏனோ
எத்தனை முறை
விழுந்தாலும்
என் புத்திக்கு
எட்டுவதேயில்லை!
நீர்க்குமிழிகள்
பயணத்துக்கு
உதவாதென்பது!

பின் குறிப்பு: இது வேறெங்கும் பிரசுரிக்கப் படவில்லை!

இன்னொரு பின் குறிப்பு:
மேற்கண்ட பின்குறிப்பு அனுஜன்யா பதிவுகளைப் படித்து நானும் போட்டுக் கொண்டதல்ல!

கருத்துகள் இல்லை: