சனி, 27 ஜூன், 2009

2009-06-27



More than a Blog Aggregator

by rammalar
இலக்கு
---------
இலக்கை அடைய இஷ்டப்படு
அதற்காக நாளும் கஷ்டப்படு
தடைகள் வந்தால் தகர்த்திடு
எதிர்ப்புகள் வந்தால் எதிரத்திடு

நீதிநெறி கொண்டு உழைத்திடு
வெற்றியை நோக்கி உயர்ந்திடு

தோல்வியைத் தோற்கடி.

உயர்வு உண்மைக் கல்வெட்டு
பொய்யானால் நீர்மேல் எழுத்து

----------------------------------------------------

கூண்டுக் கிளி
---------------
ஒற்றை நெல் மணிக்காக
ஊருக்கெல்லாம் சீட்டு எடுத்து
எதிர்காலம் சொல்லும் கிளியே
கூண்டை விட்டுச் சுதந்திரமாய்
நீ சுற்றித் திரிய
என்று எடுப்பாய்- சீட்டு.


----------------------------------------------------


காலம்
---------
நல்லது கெட்டது
நேரத்தில் இல்லை
நல்லவன், கெட்டவன்
பிறக்கையில் இல்லை
நெல்மணி ஆளைப்
பார்த்து உணவு ஆவதில்லை
தாயாராகும் இடத்தில் இல்லை கருப்பு,
வெள்ளைப் பணம்

பஞ்ச பூதங்கள் பாகு பாடு பார்ப்பதில்லை
தெயவத்தின் முன் பேதம் இல்லை
கடமையை மட்டும் செய் கண்ணே!
காலம் எல்லாம் நல்ல நேரம்தான் உனக்கு!

--------------------------------------------------------

நகைப்பூ
--------------
விருந்தை முடித்து
தாம்பூலம் தரித்து
இரவல் நகையில் ஜொலித்து
புகைப்படத்துக்குப் புன்னகைத்து

உறவில் பல கதை பேசி
உள்ளூர மனம் வெந்து
விடை பெற்று வருகையில்

பரிசைத் தர மறந்து விட்டோம்
என மகன் சொன்னான்

தெரிந்தே மறந்தது
அவனுக்கு எப்படித் தெரியும்.


-----------------------
>சு.வேதா இராமன்
வானமே எல்லை -கவிதை தொகுதி
மணிமேகலைப் பிரசுரம்


More than a Blog Aggregator

by rammalar
இலக்கு
---------
இலக்கை அடைய இஷ்டப்படு
அதற்காக நாளும் கஷ்டப்படு
தடைகள் வந்தால் தகர்த்திடு
எதிர்ப்புகள் வந்தால் எதிரத்திடு

நீதிநெறி கொண்டு உழைத்திடு
வெற்றியை நோக்கி உயர்ந்திடு

தோல்வியைத் தோற்கடி.

உயர்வு உண்மைக் கல்வெட்டு
பொய்யானால் நீர்மேல் எழுத்து

----------------------------------------------------

கூண்டுக் கிளி
---------------
ஒற்றை நெல் மணிக்காக
ஊருக்கெல்லாம் சீட்டு எடுத்து
எதிர்காலம் சொல்லும் கிளியே
கூண்டை விட்டுச் சுதந்திரமாய்
நீ சுற்றித் திரிய
என்று எடுப்பாய்- சீட்டு.


----------------------------------------------------


காலம்
---------
நல்லது கெட்டது
நேரத்தில் இல்லை
நல்லவன், கெட்டவன்
பிறக்கையில் இல்லை
நெல்மணி ஆளைப்
பார்த்து உணவு ஆவதில்லை
தாயாராகும் இடத்தில் இல்லை கருப்பு,
வெள்ளைப் பணம்

பஞ்ச பூதங்கள் பாகு பாடு பார்ப்பதில்லை
தெயவத்தின் முன் பேதம் இல்லை
கடமையை மட்டும் செய் கண்ணே!
காலம் எல்லாம் நல்ல நேரம்தான் உனக்கு!

--------------------------------------------------------

நகைப்பூ
--------------
விருந்தை முடித்து
தாம்பூலம் தரித்து
இரவல் நகையில் ஜொலித்து
புகைப்படத்துக்குப் புன்னகைத்து

உறவில் பல கதை பேசி
உள்ளூர மனம் வெந்து
விடை பெற்று வருகையில்

பரிசைத் தர மறந்து விட்டோம்
என மகன் சொன்னான்

தெரிந்தே மறந்தது
அவனுக்கு எப்படித் தெரியும்.


-----------------------
>சு.வேதா இராமன்
வானமே எல்லை -கவிதை தொகுதி
மணிமேகலைப் பிரசுரம்
அம்மா நான் கடலை ஆயப்போறேன்...
வணக்கம் நண்பர்களே சென்ற பதிவில் ன்மீது கல்லெரிந்தவர்கள்-புளியமரம் பற்றி படித்த சில நண்பர்கள் அலைபேசியில் அழைத்து "இனிய நினைவுகளை நினைவுப் படுத்திவிடீர்கள் மிக்க நன்றி" என்று கூறினார்கள். அதேபோல் ஒரு நண்பர் புளியங்கொட்டையில் செய்த காகித புட்டியை எடுத்துக்கொண்டு கடலை ஆய செல்வதையும் எனக்கு ஞாபகப்படுத்திவிட்டார். ஆமாங்க சிறுவகளாய் இருக்கும் பொழுது தோட்டதிற்கு கடலை ஆய சென்ற ஒரு மகிழ்ச்சியான அனுபவம் அவற்றையும் உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சியே.

புன்சை நிலங்களிலும், வானம்பார்த்த நிலங்களிலும் துவரைப் பயிருக்கு ஊடுப்பயிராக நிலக்கடலையும் பயிர் செய்வார்கள். துவரைக்கு முன்பாகவே அக்டோபர், நவம்பர் மாதங்களில் கடலை பக்குவத்திற்கு வந்துவிடும். கடலை செடி குத்துக்கடலை, கொடிக்கடலை என இரு வைகை உண்டு. பக்குவத்திற்கு வந்த கடலைச்செடியை லாபகமாக கடலையுடன் பிடுங்குவார்கள். குத்துக்கடலை செடி புடுங்க சுலபமாகவும், கொடிக்கடலை கொஞ்சம் சிரமமாகவும் இருக்கும். கொடிக்கடலையில் ஒரு காயில் மூன்று பருப்புகள் என அதிகமாக இருக்கும். குத்துக்கடலையில் பொதுவாக ஒரு காயில் இரண்டு பருப்புதான் இருக்கும்.

இப்படி லாபகமாக புடுங்கிய கடலைச்செடியை போரைப்போல் குவித்து வைத்திருப்பார்கள். அந்த கடலைகளை செடிகளிருந்து ஆயத்தான் நாங்கள் அந்த காகித புட்டியை எடுத்துக்கொண்டு செல்வோம். பள்ளிக்கு சென்ற நேரம் போக கடலை ஆய நாங்கள் செல்வோம். கடலை ஆயும் பொழுது கொல்லைகார தாத்தாவிற்கு தெரியாமல் சில கடலைகளை வாயிலும் சிலகடலைகள் புட்டியிலும் வைப்போம். எப்படியும் தூரத்திலிருந்து அந்த தாத்தா நாங்கள் சாப்பிடுவதை பார்த்துவிடுவார். " எலேய் யாருட கடலை ஆயமா கடலையை சாப்பிடுவது அப்பறம் வயித்துக்கு நோவுனா என்ன சொல்லக்கூடாது" என்று வாஞ்சையுடன் தாத்தா கத்துவார்.

நான்கு புட்டி கடலை ஆய்ந்தால் ஒரு புட்டி கூலியாக கொடுப்பார்கள். நாங்கள் திண்ன மீதிதான் புட்டிக்கு கடலை வரும். கூலி கடலைக்காக வருகின்றோமோ இல்லையோ கடலையை தாத்தாவிற்கு தெரியாமல் சாப்பிடுவதற்காகவே அடிக்கடி கடலை ஆய வருவோம். கடலையை காம்பு இல்லாமல் ஆயவேண்டும் காம்பு அதிகம் இருந்தால் ஐந்து புட்டிக்கு ஒரு புட்டிதான் கூலியாக கிடைக்கும். காம்பு அதிகமாக இருந்தால் ஆயவேண்டாம்
என்று தடுத்துவிடுவார்கள். நான் மட்டும் காம்பு இல்லாமல் ஆய மிகவும் சிறமப்படுவேன்.

சாப்பிட்ட கடலைக்கு கண்டிப்பாக தலைவலியோ வயிற்றுவலியோ வரும் என்று பாதுகாப்பாக அம்மா வெல்லக்கட்டி கொடுத்து அனுப்புவாள். எல்லோரும் அப்படிதான் வெல்லக்கட்டி எடுத்து வருவார்கள். கடலையை சாப்பிட்டதும் வெல்லக்கட்டி சாப்பிட்டால் நோவு வராது என்பது அனுபவம். கடலை ஆய சென்றால் கடலையும் கிடைக்கும் வெல்லக்கட்டியும் கிடைக்கும் என்பதில் எத்தனை மிகிழ்ச்சி.

இப்படி கூலியாக கிடைத்த கடலையை வீட்டில் வைத்திருந்து அடைமழை காலங்களில் உப்பிட்டு வேகவைத்தும், வறுத்தும் சாப்பிட்டால் அடைமழையின் சீற்றம் தெரியாமலே போய்விடும். இப்படி இயற்கையான வாழ்க்கையை இன்று இழந்துவிட்டோம் என்பதுதான் மனதின் வருத்தம்.

இப்படிப்பட்ட கிராமத்து அனுபவங்களுடன்
ஆ.ஞானசேகரன்.

அம்மா நான் கடலை ஆயப்போறேன்...
வணக்கம் நண்பர்களே சென்ற பதிவில் ன்மீது கல்லெரிந்தவர்கள்-புளியமரம் பற்றி படித்த சில நண்பர்கள் அலைபேசியில் அழைத்து "இனிய நினைவுகளை நினைவுப் படுத்திவிடீர்கள் மிக்க நன்றி" என்று கூறினார்கள். அதேபோல் ஒரு நண்பர் புளியங்கொட்டையில் செய்த காகித புட்டியை எடுத்துக்கொண்டு கடலை ஆய செல்வதையும் எனக்கு ஞாபகப்படுத்திவிட்டார். ஆமாங்க சிறுவகளாய் இருக்கும் பொழுது தோட்டதிற்கு கடலை ஆய சென்ற ஒரு மகிழ்ச்சியான அனுபவம் அவற்றையும் உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சியே.

புன்சை நிலங்களிலும், வானம்பார்த்த நிலங்களிலும் துவரைப் பயிருக்கு ஊடுப்பயிராக நிலக்கடலையும் பயிர் செய்வார்கள். துவரைக்கு முன்பாகவே அக்டோபர், நவம்பர் மாதங்களில் கடலை பக்குவத்திற்கு வந்துவிடும். கடலை செடி குத்துக்கடலை, கொடிக்கடலை என இரு வைகை உண்டு. பக்குவத்திற்கு வந்த கடலைச்செடியை லாபகமாக கடலையுடன் பிடுங்குவார்கள். குத்துக்கடலை செடி புடுங்க சுலபமாகவும், கொடிக்கடலை கொஞ்சம் சிரமமாகவும் இருக்கும். கொடிக்கடலையில் ஒரு காயில் மூன்று பருப்புகள் என அதிகமாக இருக்கும். குத்துக்கடலையில் பொதுவாக ஒரு காயில் இரண்டு பருப்புதான் இருக்கும்.

இப்படி லாபகமாக புடுங்கிய கடலைச்செடியை போரைப்போல் குவித்து வைத்திருப்பார்கள். அந்த கடலைகளை செடிகளிருந்து ஆயத்தான் நாங்கள் அந்த காகித புட்டியை எடுத்துக்கொண்டு செல்வோம். பள்ளிக்கு சென்ற நேரம் போக கடலை ஆய நாங்கள் செல்வோம். கடலை ஆயும் பொழுது கொல்லைகார தாத்தாவிற்கு தெரியாமல் சில கடலைகளை வாயிலும் சிலகடலைகள் புட்டியிலும் வைப்போம். எப்படியும் தூரத்திலிருந்து அந்த தாத்தா நாங்கள் சாப்பிடுவதை பார்த்துவிடுவார். " எலேய் யாருட கடலை ஆயமா கடலையை சாப்பிடுவது அப்பறம் வயித்துக்கு நோவுனா என்ன சொல்லக்கூடாது" என்று வாஞ்சையுடன் தாத்தா கத்துவார்.

நான்கு புட்டி கடலை ஆய்ந்தால் ஒரு புட்டி கூலியாக கொடுப்பார்கள். நாங்கள் திண்ன மீதிதான் புட்டிக்கு கடலை வரும். கூலி கடலைக்காக வருகின்றோமோ இல்லையோ கடலையை தாத்தாவிற்கு தெரியாமல் சாப்பிடுவதற்காகவே அடிக்கடி கடலை ஆய வருவோம். கடலையை காம்பு இல்லாமல் ஆயவேண்டும் காம்பு அதிகம் இருந்தால் ஐந்து புட்டிக்கு ஒரு புட்டிதான் கூலியாக கிடைக்கும். காம்பு அதிகமாக இருந்தால் ஆயவேண்டாம்
என்று தடுத்துவிடுவார்கள். நான் மட்டும் காம்பு இல்லாமல் ஆய மிகவும் சிறமப்படுவேன்.

சாப்பிட்ட கடலைக்கு கண்டிப்பாக தலைவலியோ வயிற்றுவலியோ வரும் என்று பாதுகாப்பாக அம்மா வெல்லக்கட்டி கொடுத்து அனுப்புவாள். எல்லோரும் அப்படிதான் வெல்லக்கட்டி எடுத்து வருவார்கள். கடலையை சாப்பிட்டதும் வெல்லக்கட்டி சாப்பிட்டால் நோவு வராது என்பது அனுபவம். கடலை ஆய சென்றால் கடலையும் கிடைக்கும் வெல்லக்கட்டியும் கிடைக்கும் என்பதில் எத்தனை மிகிழ்ச்சி.

இப்படி கூலியாக கிடைத்த கடலையை வீட்டில் வைத்திருந்து அடைமழை காலங்களில் உப்பிட்டு வேகவைத்தும், வறுத்தும் சாப்பிட்டால் அடைமழையின் சீற்றம் தெரியாமலே போய்விடும். இப்படி இயற்கையான வாழ்க்கையை இன்று இழந்துவிட்டோம் என்பதுதான் மனதின் வருத்தம்.

இப்படிப்பட்ட கிராமத்து அனுபவங்களுடன்
ஆ.ஞானசேகரன்.

Surya Jyothika Diya - Family Photos









Surya Jyothika Diya - Family Photos









கருத்துகள் இல்லை: