சனி, 27 ஜூன், 2009

2009-06-27

உறவுகள், கல்யாணம், திருமதி செல்வம், மெட்டி ஒலி, மகள், கண்மணியே, வசந்தம், திருப்பாவை. பெயர்கள் எல்லாம் மங்களகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த மெகா சீரியல் எல்லாத்திலும் குடும்பச்சண்டை, பழிவாங்கல், பொறாமைதான் தீம்.

நான் ஊரில் இருக்கும்போது சீரியலே பார்க்கமாட்டேன். டிவியில் நியூஸ், சினிமா பார்ப்பேன். ஒரு மாதமாக சிகாகோவில் மகள் வீட்டில், பேரன், பேத்தி, ப்ளாக், டிவி நியூஸ் சன்/சி.என்.என் என்று இருந்தாலும் சன் டிவியில் சீரியல் பார்க்க பழகிவிட்டேன். என் இரண்டு வயது பேரன், சன் டிவி பார்க்கையில் சேனல் மாத்தவே விட மாட்டான்.பாடல் காட்சிகளுடன் டைட்டில் ஓடும்போதுதான் திரையில் எல்லோரும் சிரிக்கிறார்கள். சில சீரியலில் அதிலும் சண்டையும் கோபமும்தான்.


உறவுகளில் கிருஷ்ணனை (ஆஹா படத்தில் ஸ்ரீராமை, உதவாக்கரை,உதவாக்கரை என்று அப்பா திட்டுவது போல) தினம் தற்குறி, தற்குறி என்று அவர் அப்பா திட்டுகிறார். அண்ணன் முகுந்தனுக்காக காயத்ரியை பெண் பார்க்க கிருஷ்ணன் போய் அவளிடம் ( படித்தால் மட்டும் போதுமா சிவாஜி அண்ணனுக்காக பார்க்கச் சென்று ராஜசுலோசனாவிடம் பேசியதுபோல) தட்டுத்தடுமாறி ஆங்கிலம் பேசினார்.


அண்ணன் முகுந்தனோ (ப.ம.போதுமா அண்ணன் பாலாஜி மொட்டைக்கடிதம் எழுதியது போல)தன்னைப் பற்றி விசாரிக்கும் பெண்ணின் அப்பாவிடம், கெட்டவன் என்று டீக்கடைக்காரரை சொல்ல வைக்கிறார். கடைசியில் கிருஷ்ணனுக்கும் காயத்ரிக்கும் ( ப.ம.போதுமா சிவாஜி-ராஜசுலோசனா போல) இன்று கல்யாணம் ஆகிவிட்டது.

கிரியேட்டிவ் ஹெட்களே கொஞ்சம் மாத்தியோசிங்க.

ஊரில் சீரியல் நடக்கும் நேரத்தில் யார் வீட்டுக்கும் செல்ல முடிவதில்லை. அவர்களுக்கு தொந்திரவு வேண்டாமே என்று ஃபோன் பண்ணி, ஃப்ரீயான்னு கேட்டுத் தான் போவேன்.


தூர்தர்ஷன் மட்டும் இருந்த நாளில் நான் பார்த்த சீரியல்கள், பத்திரிகை தொடர்கதை போல வாரம் ஒருநாள்தான். பாலச்சந்தரின் 'ரயில் சினேகம்' (நி.ரவி-இந்திரா), 'பெண்' என்று வாரம் ஒரு பெண்ணின் வெற்றிக் கதையை சுகாசினி இயக்கி வந்தது. 'பரமார்த்தகுருவும் சீடர்களும்' சீரியலை விடியோ காஸட்டில் ரிகார்ட் செய்து அடிக்கடி பார்ப்பேன். நல்ல காமெடி.


பத்திரிகைகளில் ஒருபக்கக் கதை வருவது போல அரைமணி நேரக்கதை என்று தினம் ஒரு கதை படமாக்கலாம். தனி காமெடி, குழந்தைகளுக்கான சீரியல் என்று வகைப் படுத்தி எடுத்தால் எல்லா சீரியலும் மகா சீரியல்தான்
உறவுகள், கல்யாணம், திருமதி செல்வம், மெட்டி ஒலி, மகள், கண்மணியே, வசந்தம், திருப்பாவை. பெயர்கள் எல்லாம் மங்களகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த மெகா சீரியல் எல்லாத்திலும் குடும்பச்சண்டை, பழிவாங்கல், பொறாமைதான் தீம்.

நான் ஊரில் இருக்கும்போது சீரியலே பார்க்கமாட்டேன். டிவியில் நியூஸ், சினிமா பார்ப்பேன். ஒரு மாதமாக சிகாகோவில் மகள் வீட்டில், பேரன், பேத்தி, ப்ளாக், டிவி நியூஸ் சன்/சி.என்.என் என்று இருந்தாலும் சன் டிவியில் சீரியல் பார்க்க பழகிவிட்டேன். என் இரண்டு வயது பேரன், சன் டிவி பார்க்கையில் சேனல் மாத்தவே விட மாட்டான்.பாடல் காட்சிகளுடன் டைட்டில் ஓடும்போதுதான் திரையில் எல்லோரும் சிரிக்கிறார்கள். சில சீரியலில் அதிலும் சண்டையும் கோபமும்தான்.


உறவுகளில் கிருஷ்ணனை (ஆஹா படத்தில் ஸ்ரீராமை, உதவாக்கரை,உதவாக்கரை என்று அப்பா திட்டுவது போல) தினம் தற்குறி, தற்குறி என்று அவர் அப்பா திட்டுகிறார். அண்ணன் முகுந்தனுக்காக காயத்ரியை பெண் பார்க்க கிருஷ்ணன் போய் அவளிடம் ( படித்தால் மட்டும் போதுமா சிவாஜி அண்ணனுக்காக பார்க்கச் சென்று ராஜசுலோசனாவிடம் பேசியதுபோல) தட்டுத்தடுமாறி ஆங்கிலம் பேசினார்.


அண்ணன் முகுந்தனோ (ப.ம.போதுமா அண்ணன் பாலாஜி மொட்டைக்கடிதம் எழுதியது போல)தன்னைப் பற்றி விசாரிக்கும் பெண்ணின் அப்பாவிடம், கெட்டவன் என்று டீக்கடைக்காரரை சொல்ல வைக்கிறார். கடைசியில் கிருஷ்ணனுக்கும் காயத்ரிக்கும் ( ப.ம.போதுமா சிவாஜி-ராஜசுலோசனா போல) இன்று கல்யாணம் ஆகிவிட்டது.

கிரியேட்டிவ் ஹெட்களே கொஞ்சம் மாத்தியோசிங்க.

ஊரில் சீரியல் நடக்கும் நேரத்தில் யார் வீட்டுக்கும் செல்ல முடிவதில்லை. அவர்களுக்கு தொந்திரவு வேண்டாமே என்று ஃபோன் பண்ணி, ஃப்ரீயான்னு கேட்டுத் தான் போவேன்.


தூர்தர்ஷன் மட்டும் இருந்த நாளில் நான் பார்த்த சீரியல்கள், பத்திரிகை தொடர்கதை போல வாரம் ஒருநாள்தான். பாலச்சந்தரின் 'ரயில் சினேகம்' (நி.ரவி-இந்திரா), 'பெண்' என்று வாரம் ஒரு பெண்ணின் வெற்றிக் கதையை சுகாசினி இயக்கி வந்தது. 'பரமார்த்தகுருவும் சீடர்களும்' சீரியலை விடியோ காஸட்டில் ரிகார்ட் செய்து அடிக்கடி பார்ப்பேன். நல்ல காமெடி.


பத்திரிகைகளில் ஒருபக்கக் கதை வருவது போல அரைமணி நேரக்கதை என்று தினம் ஒரு கதை படமாக்கலாம். தனி காமெடி, குழந்தைகளுக்கான சீரியல் என்று வகைப் படுத்தி எடுத்தால் எல்லா சீரியலும் மகா சீரியல்தான்
Vijay, Sangeetha, Sanjay - Family Photos





Vijay, Sangeetha, Sanjay - Family Photos






பாபா ஆம்தே, முரளிதர் என்ற பெயர் தாங்கி ஒரு பிராமண குடும்பத்தில் 1914 ஆம் ஆண்டு கிறிஸ்துவின் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் (டிசம்பர் 26) பிறந்தார். 'பாபா' எனப்படும் பெயர் அவர் மேல் உள்ள பிரியத்தினால் அவர் சிறுவயதிலிருந்த பொழுது அவரது பெற்றோரால் அவருக்கு சூட்டப்பட்டது.

சிறுவதிலிருந்தே அவரிடம் முற்போக்கு சிந்தனை காணப்பட்டது. படிப்பில் அவ்வளவாக நாட்டம் இல்லாமல் வீட்டில் வேலை செய்பவரின் குழந்தைகளுடன் விளையாடி கழித்தார். இதனால் அவரை ஆச்சாராமான அவருடைய தந்தைக்கு பிடிக்காமல் போனது. தாயின் அரவணைப்பிலேயே வாழ்ந்தார் ஆம்தே.

வக்கீலுக்கு படித்த ஆம்தே, சுதந்திர போராட்டத்தில் கைது செய்யப்பட தியாகிகளுக்காக வாதாட ஆரம்பித்து தன்னையும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தி கொண்டார்.

காந்தீய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், காந்தியை போலவே கதராடை உடுத்தி விளிம்பு நிலை மனிதர்களுக்காக பாடுபட ஆரம்பித்தார்.

அவர் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்திலிருந்து கைவிடப்பட்ட தொழுநோயாளிகளிடம் அவரின் இளகின மனம் சென்றது. அவர்களை ஒதுக்கி வைத்த சமூகத்திடம் அவர்களைப்பற்றி விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. இதற்காக கல்கத்தா சென்று தொழுநோயை பற்றி படித்தார். பின்னர் தொழு நோயாளிகளுக்காக ஆசிரமமான 'அனந்த வனத்தை' நிறுவினார். 1952 இல் அரசாங்கத்தின் 250 ஏக்கர் நிலம் பெற்று ஆசிரமங்கள் அமைத்தார். ஆனந்த வனத்தில் வசிக்கும் குழந்தைகள்

நோயாளிகளையும் சமூகத்தில் கைவிடப்பட்டவர்களையும் ஆசிரமத்தில் சேர்த்து அவர்களுக்கு இலவச வைத்தியம் அளித்தார்.

அவருககு பக்க பலமாக இருந்து உதவியவர் அவருடைய துணைவி சாதனா.அவரது இரண்டு மகன்களையும் மருத்துவர்களாக படிக்க வைத்த பாபா அவர்களையும் தனது புனித பணியை தொடரச் செய்தார்.

இப்போது ஆனந்த வனத்தில் இரண்டு மருத்துவமனைகள், ஒரு பலகலை கழகம், ஒரு அநாதை இல்லம் மற்றும் கண் பார்வையற்றவர்கள் மற்றும் காத்து கேளாதோர் பள்ளிகள் உள்ளது.

அவர் சமூக சேவகியான மேத்தா பட்கருடன் இணைந்து நர்மதா அணைக்கட்டு போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

ராமன் மகசேசே, பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் என பல விருதுகள் அவரை தேடி வந்தது.

இப்படி ஆண் வடிவத்தில் ஒரு அன்னை தெரேசாவாக விளங்கிய பாபா ஆம்தே புற்றுநோயால் தாக்கப்பட்டு பிப்ரவரி 9, 2008 அன்று உயிர் நீத்தார்.

ஆனந்தவனம் இன்றும் இந்த மா மனிதனின் தியாக வாழ்க்கைக்கு சாட்சியாக நிற்கிறது.

தகவல் உதவி நன்றி: விக்கிபீடியா

பாபா ஆம்தே, முரளிதர் என்ற பெயர் தாங்கி ஒரு பிராமண குடும்பத்தில் 1914 ஆம் ஆண்டு கிறிஸ்துவின் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் (டிசம்பர் 26) பிறந்தார். 'பாபா' எனப்படும் பெயர் அவர் மேல் உள்ள பிரியத்தினால் அவர் சிறுவயதிலிருந்த பொழுது அவரது பெற்றோரால் அவருக்கு சூட்டப்பட்டது.

சிறுவதிலிருந்தே அவரிடம் முற்போக்கு சிந்தனை காணப்பட்டது. படிப்பில் அவ்வளவாக நாட்டம் இல்லாமல் வீட்டில் வேலை செய்பவரின் குழந்தைகளுடன் விளையாடி கழித்தார். இதனால் அவரை ஆச்சாராமான அவருடைய தந்தைக்கு பிடிக்காமல் போனது. தாயின் அரவணைப்பிலேயே வாழ்ந்தார் ஆம்தே.

வக்கீலுக்கு படித்த ஆம்தே, சுதந்திர போராட்டத்தில் கைது செய்யப்பட தியாகிகளுக்காக வாதாட ஆரம்பித்து தன்னையும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தி கொண்டார்.

காந்தீய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், காந்தியை போலவே கதராடை உடுத்தி விளிம்பு நிலை மனிதர்களுக்காக பாடுபட ஆரம்பித்தார்.

அவர் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்திலிருந்து கைவிடப்பட்ட தொழுநோயாளிகளிடம் அவரின் இளகின மனம் சென்றது. அவர்களை ஒதுக்கி வைத்த சமூகத்திடம் அவர்களைப்பற்றி விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. இதற்காக கல்கத்தா சென்று தொழுநோயை பற்றி படித்தார். பின்னர் தொழு நோயாளிகளுக்காக ஆசிரமமான 'அனந்த வனத்தை' நிறுவினார். 1952 இல் அரசாங்கத்தின் 250 ஏக்கர் நிலம் பெற்று ஆசிரமங்கள் அமைத்தார். ஆனந்த வனத்தில் வசிக்கும் குழந்தைகள்

நோயாளிகளையும் சமூகத்தில் கைவிடப்பட்டவர்களையும் ஆசிரமத்தில் சேர்த்து அவர்களுக்கு இலவச வைத்தியம் அளித்தார்.

அவருககு பக்க பலமாக இருந்து உதவியவர் அவருடைய துணைவி சாதனா.அவரது இரண்டு மகன்களையும் மருத்துவர்களாக படிக்க வைத்த பாபா அவர்களையும் தனது புனித பணியை தொடரச் செய்தார்.

இப்போது ஆனந்த வனத்தில் இரண்டு மருத்துவமனைகள், ஒரு பலகலை கழகம், ஒரு அநாதை இல்லம் மற்றும் கண் பார்வையற்றவர்கள் மற்றும் காத்து கேளாதோர் பள்ளிகள் உள்ளது.

அவர் சமூக சேவகியான மேத்தா பட்கருடன் இணைந்து நர்மதா அணைக்கட்டு போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

ராமன் மகசேசே, பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் என பல விருதுகள் அவரை தேடி வந்தது.

இப்படி ஆண் வடிவத்தில் ஒரு அன்னை தெரேசாவாக விளங்கிய பாபா ஆம்தே புற்றுநோயால் தாக்கப்பட்டு பிப்ரவரி 9, 2008 அன்று உயிர் நீத்தார்.

ஆனந்தவனம் இன்றும் இந்த மா மனிதனின் தியாக வாழ்க்கைக்கு சாட்சியாக நிற்கிறது.

தகவல் உதவி நன்றி: விக்கிபீடியா

கருத்துகள் இல்லை: