ஸ்டாலின் குலதெய்வம் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டாராம். "ஆதி" சங்கர்தான் உடனே நினைவிற்கு வருகிறார். பண்ணாரிக் கோயிலில் இவர் தீ மிதிக்கப் போய் தீ மிதிப்பது "காட்டுமிராண்டித்தனம்" என்ற கலைஞர் என்ன சொல்வார் என்று பார்ப்போம். பெரியார் தனி மனித வழிப்பாட்டை / கடவுள் எதிர்த்தே புரட்சி செய்ய முயற்சித்தார். ஓரளவு வென்றும் காட்டினார்.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இரு விதங்களில் இந்நிகழ்வை அணுகலாம்.
ஒரு கோணம்
ஸ்டாலினின் நேர்மை – ஊருக்காக ஒரு வேடத்தை போட்டுக்கொண்டிருக்காமல் தன் நிலையை பட்டென்று உடைத்துப் போட்டது.
இன்னொன்று
பெரியாருக்குப் பின் அவரது சீடர்களும் , தோழர்களும் பகுத்தறிவென்பதை கேலிக் கூத்தாக்கி விட்டார்கள். பெரியாரின் நிழலில் வந்த கலைஞரோடு இந்தப் பாரம்பரியம் முடிவுறுமா என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.
ஆக தற்போதைக்கு விமர்சகர்களுக்கு நன்றாக மெல்லக் கிடைத்த அவல். அவரவர்கள் தத்தமது நிலைக்கேற்ப வெவ்வேறு கோணங்களில் மென்று கொள்ளலாம்.!!
****
அடுத்தது , தேமுதிகவால் தான் நாங்கள் தோற்றோம் என்று தோழர் நல்லகண்ணு சொல்லியிரூக்கிறார். நேற்று வந்த தேமுதிக தமது தலைமை கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும் மக்களுக்கு நம்பிக்கையூட்ட முடிகிறது.
ஆனால் கம்யூனிஸ்டுகள் ஏதாவது ஒருதிராவிடக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஒருசில எம்பி , எம்.எல்.ஏ சீட்டுக்களுக்காக கொள்கைகளை அடகு வைத்ததைத் தவிர மக்களுக்கு என்ன நம்பிக்கை தந்தார்கள்?
அடுத்தவர்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு தோழர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொண்டு தமிழக மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் ஏதாவது செய்ய முயற்சிக்க வேண்டும் என்பதே நமது அவா.
****
சுற்றுலாவிற்கு சிறந்த இடம் இலங்கை என்று இந்தியா பிரச்சாரம் பண்ணப் போகிறதாம்.
ஆமாம் உலகத்திலேயே சர்வதேசமும் கூட்டுச் சேர்ந்து ஆயிரக்கணக்கான மக்களை இரத்த வெள்ளத்தில் மிதக்க விட்ட முள்ளி வாய்க்கால் போன்ற கடற்கரை எங்குதான் காணக்கிடைக்கும்?
நடத்துங்கள்……….
அப்படியே அங்கங்கே மிச்சமிருக்கும் தமிழனின் இரத்தம் கலந்த நந்திக்கடலில் படகுப் போக்குவரத்தும் ஏற்படுத்துங்கள். உங்கள் ஆதிக்க வெறியின் மிச்சத்தை ஒவ்வொரு படகும் சொல்லிக்கொண்டிருக்கட்டும்.
****
பாஜக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அருண் ஜெட்லி ராஜினாமாவாம். ஏற்கெனவே புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல் இப்போது பாஜகவில் வெடிக்கத் துவங்கியிருக்கிறது.
ஜஸ்வந்த் சிங் , முரளி மனோகர் ஜோஷி , ஷெகாவத் , யஷ்வந்த் சின்கா என்று பட்டியல் நீளுகிறது. பாரதிய ஜனதாவும் இன்னொரு ஜனதா தளம் ஆகப் போகிறதா என்ற அச்சம் ஏற்படுகிறது. நூறு ஆண்டுகள் ஆனாலும் அங்கங்கே அவ்வப்போது பிரிவுகள் நடந்தாலும் இன்னமும் உயிரோடிருக்கும் காங்கிரஸ் கட்சியைப் பற்றிய பிரமிப்புதான் மிஞ்சுகிறது.
அத்வானி மக்களால் மட்டுமல்ல , கட்சிக்காரர்களாலும் கூட முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது இன்றைய நிகழ்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. வாஜ்பாய் போன்ற இன்னொரு தலைவரை கட்சி சீக்கிரம் கண்டுகொள்ள வில்லையென்றால் இன்னொரு ஜனதா தளமாக அங்கங்கே பிரிந்து சிறு சிறு பிராந்தியக் கட்சிகளாக மாறி விடும் அபாயமிருக்கிறது.
அது நாட்டுக்கும் நல்லதல்ல , அக்கட்சிக்கும் நல்லதல்ல. ஒரு கட்சியே பெரிய கட்சி , வலுவான எதிர்க்கட்சி இல்லையென்றால் ஆரோக்கிய சனநாயகத்துக்கு வழியிருக்காது.
ஏற்கெனவே ஆரோக்கிய சனநாயகம் இருந்து கிழிச்சதா என்று நீங்க கேட்கும் கேள்வி என் காதில் விழவில்லை என்பதால் மீ த எஸ்கேப்பு.
ஸ்டாலின் குலதெய்வம் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டாராம். "ஆதி" சங்கர்தான் உடனே நினைவிற்கு வருகிறார். பண்ணாரிக் கோயிலில் இவர் தீ மிதிக்கப் போய் தீ மிதிப்பது "காட்டுமிராண்டித்தனம்" என்ற கலைஞர் என்ன சொல்வார் என்று பார்ப்போம். பெரியார் தனி மனித வழிப்பாட்டை / கடவுள் எதிர்த்தே புரட்சி செய்ய முயற்சித்தார். ஓரளவு வென்றும் காட்டினார்.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இரு விதங்களில் இந்நிகழ்வை அணுகலாம்.
ஒரு கோணம்
ஸ்டாலினின் நேர்மை – ஊருக்காக ஒரு வேடத்தை போட்டுக்கொண்டிருக்காமல் தன் நிலையை பட்டென்று உடைத்துப் போட்டது.
இன்னொன்று
பெரியாருக்குப் பின் அவரது சீடர்களும் , தோழர்களும் பகுத்தறிவென்பதை கேலிக் கூத்தாக்கி விட்டார்கள். பெரியாரின் நிழலில் வந்த கலைஞரோடு இந்தப் பாரம்பரியம் முடிவுறுமா என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.
ஆக தற்போதைக்கு விமர்சகர்களுக்கு நன்றாக மெல்லக் கிடைத்த அவல். அவரவர்கள் தத்தமது நிலைக்கேற்ப வெவ்வேறு கோணங்களில் மென்று கொள்ளலாம்.!!
****
அடுத்தது , தேமுதிகவால் தான் நாங்கள் தோற்றோம் என்று தோழர் நல்லகண்ணு சொல்லியிரூக்கிறார். நேற்று வந்த தேமுதிக தமது தலைமை கொஞ்சம் முன்னப்பின்ன இருந்தாலும் மக்களுக்கு நம்பிக்கையூட்ட முடிகிறது.
ஆனால் கம்யூனிஸ்டுகள் ஏதாவது ஒருதிராவிடக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஒருசில எம்பி , எம்.எல்.ஏ சீட்டுக்களுக்காக கொள்கைகளை அடகு வைத்ததைத் தவிர மக்களுக்கு என்ன நம்பிக்கை தந்தார்கள்?
அடுத்தவர்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு தோழர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொண்டு தமிழக மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் ஏதாவது செய்ய முயற்சிக்க வேண்டும் என்பதே நமது அவா.
****
சுற்றுலாவிற்கு சிறந்த இடம் இலங்கை என்று இந்தியா பிரச்சாரம் பண்ணப் போகிறதாம்.
ஆமாம் உலகத்திலேயே சர்வதேசமும் கூட்டுச் சேர்ந்து ஆயிரக்கணக்கான மக்களை இரத்த வெள்ளத்தில் மிதக்க விட்ட முள்ளி வாய்க்கால் போன்ற கடற்கரை எங்குதான் காணக்கிடைக்கும்?
நடத்துங்கள்……….
அப்படியே அங்கங்கே மிச்சமிருக்கும் தமிழனின் இரத்தம் கலந்த நந்திக்கடலில் படகுப் போக்குவரத்தும் ஏற்படுத்துங்கள். உங்கள் ஆதிக்க வெறியின் மிச்சத்தை ஒவ்வொரு படகும் சொல்லிக்கொண்டிருக்கட்டும்.
****
பாஜக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அருண் ஜெட்லி ராஜினாமாவாம். ஏற்கெனவே புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல் இப்போது பாஜகவில் வெடிக்கத் துவங்கியிருக்கிறது.
ஜஸ்வந்த் சிங் , முரளி மனோகர் ஜோஷி , ஷெகாவத் , யஷ்வந்த் சின்கா என்று பட்டியல் நீளுகிறது. பாரதிய ஜனதாவும் இன்னொரு ஜனதா தளம் ஆகப் போகிறதா என்ற அச்சம் ஏற்படுகிறது. நூறு ஆண்டுகள் ஆனாலும் அங்கங்கே அவ்வப்போது பிரிவுகள் நடந்தாலும் இன்னமும் உயிரோடிருக்கும் காங்கிரஸ் கட்சியைப் பற்றிய பிரமிப்புதான் மிஞ்சுகிறது.
அத்வானி மக்களால் மட்டுமல்ல , கட்சிக்காரர்களாலும் கூட முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது இன்றைய நிகழ்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. வாஜ்பாய் போன்ற இன்னொரு தலைவரை கட்சி சீக்கிரம் கண்டுகொள்ள வில்லையென்றால் இன்னொரு ஜனதா தளமாக அங்கங்கே பிரிந்து சிறு சிறு பிராந்தியக் கட்சிகளாக மாறி விடும் அபாயமிருக்கிறது.
அது நாட்டுக்கும் நல்லதல்ல , அக்கட்சிக்கும் நல்லதல்ல. ஒரு கட்சியே பெரிய கட்சி , வலுவான எதிர்க்கட்சி இல்லையென்றால் ஆரோக்கிய சனநாயகத்துக்கு வழியிருக்காது.
ஏற்கெனவே ஆரோக்கிய சனநாயகம் இருந்து கிழிச்சதா என்று நீங்க கேட்கும் கேள்வி என் காதில் விழவில்லை என்பதால் மீ த எஸ்கேப்பு.
எழுதியவர்_____________________________--------------------------செம்மதி
------------------------------------------------------------------
நான்கு வேலிகளுக்குள்
சிறைப்பிடிக்கப்பட்டது
எமது வாழ்வு
மிருகக் காட்சிச்சாலையில்
அடைக்கப்பட்ட
குரங்குகளைப்போல
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்க
நாம் காட்சிப்பொருள்
எங்களை வைத்தே
பல வித்தைகள் காட்டி
பணம் தேடுகிறார்கள்
பல சிம்மாசனம்
எம்மீதே போடப்பட்டுள்ளன
எமது அசைவுகள்
அவற்றை சாய்க்கா விட்டாலும்
ஆட்டம் காண வைக்கக்கூடியவை
நாம் காட்டு மூங்கில்கள் ஆனோம்
யுத்தம் எம்மீது பல
துளைகளை இட்டுள்ளது
வீசுகின்ற காற்றக்கள்
துளைகள் ஊடே சென்ற
பல நாதங்களை எழுப்புகின்றன
மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி
தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றன
காலம் எமக்க
கடிவாளம் இட்டுள்ளது
எமது சிந்தனைகள்
திசை திருப்பப்படுகின்றன
கடிவாளத்தின் கயிறுகள்
இரண்டும் ஒருவன் கையில் இல்லை
இரண்டு கயிறுகளும் மாறிமாறி
இழுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன
நாம் பயணிக்கவேண்டி பாதை
எமக்கு தெரிகின்றது
ஆனால் பாதங்கள்
பாதை மாற்றப்படுகின்றன
எவ்வாறு இருப்பினும்
நாளைய நம்பிக்கைகளுடன்
இன்றைய நமது
பொழுதுகள் களிக்கின்றன....
-------------------------------------------------------------










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக