
என்னை அடக்கிவிட்டு
நான் மறந்த நிலையில்
என்னயே ஆட்சி செய்கிறது.
சில உணர்வுகளை
மூளை சரி செய்யமுன்
முந்திக்கொள்கிறது
அந்த நச்சுப் பிசாசு.
காறித் துப்பும் அளவிற்கு
காழ்ப்பு வார்த்தைகள்.
எங்குதான் கற்றுக்கொண்டதோ !
மின்னலின் வேகத்தோடு
மனக் கதவை மூடிவிட்டு
அள்ளிக் கொட்டிவிட்டு
ஆசுவாசமாய் மூச்சுவிடுகிறது.
அறுத்து எறிதலே நல்லதோ !
பார்வைகளில்
பட்டு எரிவது நானல்லவா.
கட்டித்தான் வைக்கிறேன்.
பட்டென்று கட்டவிழ்த்து,
மண்டியிட்டாலும்
மீண்டும் பொறுக்கமுடியா
பித்தப் பேச்சால் பச்சை குத்திவிட்டு,
மனதை முறித்துவிட்டு
முழுசுகிறது என்னைப் பார்த்து.
பசப்பிப் பம்முகிறது !
சொந்தங்களை...நட்புக்களை
பிளந்த பூமியாய், உடைந்த வானமாய்
கசப்பு வார்த்தைகளால் கீறி
உப்பும் தேய்க்கிறது.
நினைக்கவே நெஞ்சு வலிக்க
எத்தனை உறவுகள் தூரமாகிப் போனது.
இடியும் விழாதோ தலையில் !
தூக்கத்திலும் விழித்துக்கொண்டு
காவல் இருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை
மனதைக் குதறும் அந்தக் குரங்கு
எழும்பி எகிறாதபடிக்கு.
கறையான் கூடு கட்ட
பாழாய்ப்போன அந்த நாக்கில் !!!
ஹேமா(சுவிஸ்)
எதன்மீதும் புனிதம் கற்பிக்கப்பட்டால்தான் அதனை முன்னிறுத்தி மக்களை மதவாதிகளாக ஆக்கமுடியும். இதனை உணர்ந்திருந்த மதங்கள், மடங்களையும் திருச்சபைகளையும் உருவாக்கின. அதன் தலைவர்கள் புனிதர்களாகி வழிபாட்டுக்-குரியவர்கள் ஆனார்கள். இவர்கள் இயற்கைக்கு மாறாக இல்லறம் தவிர்த்து மனித சமுதாயத்தில் தம்மை உயர்ந்தவர்களாக, தனித்தவர்களாக அடையாளப்-படுத்திக் கொண்டனர். ஆனாலும், இவர்களது வாழ்வியலோ மிக உயரிய வசதிகள்
குழந்தைக் கொலைகள் பைபிளில்!பாவம் அறியாத பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்ய வேண்டும் என்ற உபதேசம் நிச்சயமாக கடவுளின் உபதேசமாக இருக்க முடியாது. இனவெறி கொண்ட புரோகிதர்களின் கைச்சரக்காகவே இதனைக் கருத முடியும்.மோசே என்னும் தீர்க்கதரிசிக்கு கர்த்தர் கட்டளையிட்டதாக பைபிளில் இடம் பெற்றுள்ள வன்முறைகளை இத்தொடரில் காண்போம்.மிதியான் என்ற நகரத்து மக்களைப் பழிவாங்குமாறு மோசேயிடம் கர்த்தர் கூறினாராம். அதைத்
ஏகத்துவம் தளத்தில் வந்த பின்னூட்டங்கள்அஸ்ஸலாமு அலைக்கும்,அன்புள்ள ஏகத்துவம் தள நிர்வாகிகளுக்கு நான் மிஸ்ட் என்ற புனைப்பெயரில் tamilchristians தளத்தில் கிறிஸ்தவர்களின் அவதூறுகளுக்கு எதிராக என்னுடைய கட்டுரைகளை பதித்து கொண்டு வருகிறேன், ஆனால் நபி (ஸல்) ஆயிஷா(ரலி) அவர்களுக்கிடையே நடந்த திருமணத்தை கொச்சை படுத்தும் விதமாக அங்கு ஒரு விவாத கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது, அதில் என்னுடைய மறுப்புகளை எடுத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக