செவ்வாய், 16 ஜூன், 2009

2009-06-16

வேறொன்றும் சொல்வதற்கில்லை....

வலிகள் பொதுவானவை....

பாரபட்சம் பார்ப்பதில்லை....

ம்ம்ம்ம்ம்....

கடந்து போகும் இன்னொரு

துன்பியல் நிகழ்வு....
வேறொன்றும் சொல்வதற்கில்லை....

வலிகள் பொதுவானவை....

பாரபட்சம் பார்ப்பதில்லை....

ம்ம்ம்ம்ம்....

கடந்து போகும் இன்னொரு

துன்பியல் நிகழ்வு....
இலங்கையிலிருந்து கெட்ட செய்தியொன்று இன்றைக்குள் வெளியாகலாமென நண்பரொருவர் சற்றுமுன் தொலைபேசினார். NDTV ல் கூட புலிகள் வசமிருந்த மக்கள் முற்றாக விடுவிக்கப்பட்டு விட்டதாகவும். அதிபர் ராஜ பக்‌ஷே எந்த நேரத்திலும் முக்கியமான செய்தியினை அறிவிப்பாரெனவும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

விவரமறிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள்...

கவலையாயிருக்கிறது....ம்ம்ம்ம்ம்
இலங்கையிலிருந்து கெட்ட செய்தியொன்று இன்றைக்குள் வெளியாகலாமென நண்பரொருவர் சற்றுமுன் தொலைபேசினார். NDTV ல் கூட புலிகள் வசமிருந்த மக்கள் முற்றாக விடுவிக்கப்பட்டு விட்டதாகவும். அதிபர் ராஜ பக்‌ஷே எந்த நேரத்திலும் முக்கியமான செய்தியினை அறிவிப்பாரெனவும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

விவரமறிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள்...

கவலையாயிருக்கிறது....ம்ம்ம்ம்ம்


More than a Blog Aggregator

by யாழினி அத்தன்

அன்று
தொலை நிலவாய்
தூர நின்று சிரித்தாய்
பின்
கொளுத்தெரிந்த என்
காம இச்சைக்கு
பலியானாய்

இன்று
நாளற உனை
பத்துமுறையாவது
முத்தமிடுகிறேன்
சில நேரம்
என் சொந்தக்
காதலி
முன்னாலே
இருந்தாலும்
போதவில்லை

மறந்துவிட அவள்
இறைஞ்சியும், அழுதும்
மறுத்துவிட்டேன்
தீர்க்கமாய்
உனை மறக்க

அடுத்தவனுக்கில்லை
என்னின்பம் என்று
அனுபவித்தபின்
அநியாயமாய்
எரித்து
மீதமுள்ள
குற்றுயிரையும்
காலால் பறிக்கிறேன்

ஒரு தூக்கு தண்டனை
தியாகி போல
நீயும்
மெளனமாய்
ஏற்றுக் கொள்கிறாய்

இருந்தும் என்ன?
கடவுளுக்கா உன்னை
காணிக்கை
செய்யப் போகிறார்கள்
இந்த மானுட
ஜென்மங்கள்

அமைதியான
வீட்டுக்குள்
இன்று நடந்த
அந்த அரங்கேற்றம்

கண்மூடிய
தங்கை
கலைந்து போன
அனுபவிப்பில்
நான்
அரைகுறையாய்
ஆதரவேதுமற்று

இனி அம்மா
அப்புறம் அப்பா
ஒவ்வொருவராய்
உன்னை
முழுகச் சொல்வார்கள்
முடிந்தால்
கண்ணீர் விட்டு
கதறுவார்கள்

தெரியட்டும் அவர்களுக்கும்
நம் காதலின் ஆழம்
என்னவென்று.
பின்
விட்டுவிடுவேன்
இந்த
திருட்டு அங்கீகாரத்தை
ஆனால்
உன்னை மட்டுமல்ல!

ஆள் அரவமில்லாத
அடர்ந்த காட்டுக்குள்ளே
திக்குத் தெரியாமல்
அலையும் ஊதக்காற்றிற்கு
உன் புல்லாங்குழல்தானே
முகவரி தந்தது.

தப்பை மூங்கிலுக்குள்ளே
காற்றின் நர்த்தனம்.
உருவெடுத்த இசைக்கு
உயிர் கொடுத்தது
நீயா? நானா? என்ற
அறியாமைச் சண்டைவேறு
நீயில்லாத நேரத்தில்!

முறுக்கேறிய கம்பியிழைகள்
இளமை ததும்பும்
புதுக்காதலி போல
மரப் பேழையோடு
வெட்கம்விட்டு
கொஞ்சி குலாவ
உருவான பாட்டுகளில்
சொக்குகின்ற காதல்ரசங்கள்!

உன் தாலாட்டுகளில்
உறங்கிப்போன குழந்தகளெல்லாம்
இன்று
தத்தம் குழந்தைகளை
உறங்க வைக்க
அதே தாலாட்டை
தேடி அலையும்
ரகசியம் சொல்வாயோ?

சோகம் சுமந்து
சாகும் மனிதனெல்லாம்
உன் கீதங்களை
கேட்டு
மனக் கவலைகளை
தூர வீசிவிட்டு
சிரித்துக் கொண்டுதானே
சாகின்றான்.

அன்றாடங் காய்ச்சிக்கு
பாதி வயிறு
நிரம்பிய நாட்களிலே
உன் பாட்டுத்தானே
மீதி வயிற்றை
நிரப்பும்.

உருகாத மெழுகாய்
நின்ற
கர்நாடக ராகங்கள்
உன் இசையொளி
முன்னால் உருகிப்போக
அதனால்
ஒளி பெற்றதென்னவோ
எம்
தமிழ்நாட்டு கிராமங்கள்தான்.

உன் ஓராயிரம்
பாட்டுகளை ஓயாமல்
ஒலித்து மகிழ்ந்த
ஒலிப் பேழைகளெல்லாம்
தன் வாய்வலித்து
மறந்ததைக் கூட
எவரிடமும் சொல்வதில்லை!

சிம்பொனித் தமிழனே!

எங்கள் பயணங்கள்
எங்கே முடியுமோ
அதுவரை
கொண்டு செல்லும்
எங்கள் இதயத்தோடு
ஒட்டிப் போன
உன் அதிர்வலைகள்!

கருத்துகள் இல்லை: