செவ்வாய், 16 ஜூன், 2009

2009-06-16

வருத்தமாக இருக்கிறது என்பதற்காக நிஜம் பொய்யாகிவிடுவதில்லை
பிரபாகரன் இறப்பு பற்றியல்ல என் கவலை... பின்னாளில் பிரபாகரன்போல் வரத்துடிப்பவர்கள் பற்றியே என் சிந்தனை. சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்பது பற்றிய மிதப்பை மீறி, அதே பாட்டில் வளர்ச்சி நோக்கிப்பாடப்பட்ட ஆலைகள் கல்விச்சாலைகள் குறித்து யோசிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது.
ஆலைகள் உருவாக்க முதலாளிகள் நிறையபேர் இந்தியாவிலிருந்தே துடிப்பாகக்காத்திருக்கிறார்கள்,
கல்விச்சாலைகள்?
முப்பது ஆண்டுகள் போரிட்டுப்படிக்காத தலைமுறை, அடுத்த முப்பது ஆண்டுகளிலாவது பாடம் பயில வேண்டாமா..
படிக்காதவன் என்ன செய்யமுடியும்...படித்தவர்களே வாக்களிப்பதால் வாழ்க்கை மாறும் என்று நம்பும்போது.. ஈழம், புலி, பீற்றல், பொய்...எல்லாமும் செளகரியமான, பாதுகாப்பான அந்நிய அன்னியோன்னியத்தின் வெளிப்பாடுகளாகிவிட்ட வேதனையான நிஜத்தில், பொய்களாகிப்போவதென்றாலும், கனவுகளை மீட்டுப்பார்ப்போம்..
அங்கே குழந்தைகள் காத்திருக்கிறார்கள்
உங்கள் பதிவுகளுக்காக அல்ல, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உணவுப்பொட்டலங்களுக்காக அல்ல, உங்கள் முதலாளிகள் போடப்போகும் சாலைகளுக்காகவும் அவற்றின் ஓரம் உருவாகப்போகும் ஆலைகளுக்காகவும் அல்ல, நீங்கள் தருவதாகப்பாவனை காட்டும் மருத்துவ உதவிக்காகவும் அல்ல...
அந்தக்குழந்தைகளின் கண்களில் ஒரு புரியாத வருங்காலம் வெறுமையாய் மின்னுகிறது..
என்ன செய்யலாம்?
பதிவெழுதி,
பார்ப்போர் எண்ணிக்கை எண்ணி
நாளை காலை பத்திரிக்கை படிப்போமா..பழக்கமில்லாமல் புதிதாய் உருப்படியாய் சிந்திப்போமா?
இவ்வளவும் பேச எனக்கு வாய் தான் இருக்கிறது, செயலில் இறங்க வசதியில்லை..இருப்போர் காதில் இது விழுமா என்று கூடத்தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டுத்தட்டுத்தடுமாறி..தட்டச்சு செய்கிறேன்..வக்கில்லாமல்தான்!
வருத்தமாக இருக்கிறது என்பதற்காக நிஜம் பொய்யாகிவிடுவதில்லை
பிரபாகரன் இறப்பு பற்றியல்ல என் கவலை... பின்னாளில் பிரபாகரன்போல் வரத்துடிப்பவர்கள் பற்றியே என் சிந்தனை. சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்பது பற்றிய மிதப்பை மீறி, அதே பாட்டில் வளர்ச்சி நோக்கிப்பாடப்பட்ட ஆலைகள் கல்விச்சாலைகள் குறித்து யோசிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது.
ஆலைகள் உருவாக்க முதலாளிகள் நிறையபேர் இந்தியாவிலிருந்தே துடிப்பாகக்காத்திருக்கிறார்கள்,
கல்விச்சாலைகள்?
முப்பது ஆண்டுகள் போரிட்டுப்படிக்காத தலைமுறை, அடுத்த முப்பது ஆண்டுகளிலாவது பாடம் பயில வேண்டாமா..
படிக்காதவன் என்ன செய்யமுடியும்...படித்தவர்களே வாக்களிப்பதால் வாழ்க்கை மாறும் என்று நம்பும்போது.. ஈழம், புலி, பீற்றல், பொய்...எல்லாமும் செளகரியமான, பாதுகாப்பான அந்நிய அன்னியோன்னியத்தின் வெளிப்பாடுகளாகிவிட்ட வேதனையான நிஜத்தில், பொய்களாகிப்போவதென்றாலும், கனவுகளை மீட்டுப்பார்ப்போம்..
அங்கே குழந்தைகள் காத்திருக்கிறார்கள்
உங்கள் பதிவுகளுக்காக அல்ல, உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உணவுப்பொட்டலங்களுக்காக அல்ல, உங்கள் முதலாளிகள் போடப்போகும் சாலைகளுக்காகவும் அவற்றின் ஓரம் உருவாகப்போகும் ஆலைகளுக்காகவும் அல்ல, நீங்கள் தருவதாகப்பாவனை காட்டும் மருத்துவ உதவிக்காகவும் அல்ல...
அந்தக்குழந்தைகளின் கண்களில் ஒரு புரியாத வருங்காலம் வெறுமையாய் மின்னுகிறது..
என்ன செய்யலாம்?
பதிவெழுதி,
பார்ப்போர் எண்ணிக்கை எண்ணி
நாளை காலை பத்திரிக்கை படிப்போமா..பழக்கமில்லாமல் புதிதாய் உருப்படியாய் சிந்திப்போமா?
இவ்வளவும் பேச எனக்கு வாய் தான் இருக்கிறது, செயலில் இறங்க வசதியில்லை..இருப்போர் காதில் இது விழுமா என்று கூடத்தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டுத்தட்டுத்தடுமாறி..தட்டச்சு செய்கிறேன்..வக்கில்லாமல்தான்!
49(ஓ)..கொஞ்சம் கேவலமாகவே இருக்கிறது.
தோழர்களைப்போல், போலி ஜனநாயகத்தின் தேர்தலை விட்டுவிலகி இருந்திருக்கலாம்.. வாக்களிக்காமல் இருப்பதை விட வாக்கிட்டு வெறுப்பை வெளிப்படுத்தலாமே என்று தான் மாலை வரை யோசித்துவிட்டு சாவடிக்குப்போய்
கையெழுத்திட்டுவிட்டு, "49ஓ போடணும்" என்றேன். அந்த ஆசாமி/அதிகாரி சத்தமாகஇவர் 49 என்றார். ஓரமாய் இருந்த இரண்டு கழகத்தின் கண்மணிகளும் குறிப்பெடுத்துக்கொண்டார்கள்..அவசரமாய் ஒருவர் வீடியோ எடுத்தார்..அதிகாரி போல் இருந்தவர்" சரி" என்றார்..." போன தேர்தலில் ஒரு பதிவேட்டில் கையெழுத்து போட்டேனே அது போல் இப்போது எங்கே" என்றால், தேவையில்லை என்றார்கள்..என் முகத்தில் என்னவோ தொந்தரவு தெரிந்ததாலோ, அவசரமாக ஒரு காகிதத்தைக்கிழித்து இதில் கையெழுத்து போடுங்கள் என்றார்கள்..
அந்த காகிதம் நான் வெளிவந்தபின், உள்ளே சென்ற பஜ்ஜி துடைக்கப்பயன்பட்டிருக்கும்..
பக்கத்து அறையில் என் மனைவிக்கும் இப்படியே..

கொஞ்ச‌ம் அல்ல நிறையவே கேவலமாக உணர்ந்து கையாலாகாத மெளன கோபத்துடன்..தொலைகாட்சியில் அலசப்படும் அப்பட்டமான பேரங்களைப் பார்த்துவிட்டு..
கறைபடிந்த கையைக்கழுவக்கூட முடியாமல்
காத்திருக்கிறேன், அடுத்த தேர்தலையாவது புறக்கணிக்க‌
49(ஓ)..கொஞ்சம் கேவலமாகவே இருக்கிறது.
தோழர்களைப்போல், போலி ஜனநாயகத்தின் தேர்தலை விட்டுவிலகி இருந்திருக்கலாம்.. வாக்களிக்காமல் இருப்பதை விட வாக்கிட்டு வெறுப்பை வெளிப்படுத்தலாமே என்று தான் மாலை வரை யோசித்துவிட்டு சாவடிக்குப்போய்
கையெழுத்திட்டுவிட்டு, "49ஓ போடணும்" என்றேன். அந்த ஆசாமி/அதிகாரி சத்தமாகஇவர் 49 என்றார். ஓரமாய் இருந்த இரண்டு கழகத்தின் கண்மணிகளும் குறிப்பெடுத்துக்கொண்டார்கள்..அவசரமாய் ஒருவர் வீடியோ எடுத்தார்..அதிகாரி போல் இருந்தவர்" சரி" என்றார்..." போன தேர்தலில் ஒரு பதிவேட்டில் கையெழுத்து போட்டேனே அது போல் இப்போது எங்கே" என்றால், தேவையில்லை என்றார்கள்..என் முகத்தில் என்னவோ தொந்தரவு தெரிந்ததாலோ, அவசரமாக ஒரு காகிதத்தைக்கிழித்து இதில் கையெழுத்து போடுங்கள் என்றார்கள்..
அந்த காகிதம் நான் வெளிவந்தபின், உள்ளே சென்ற பஜ்ஜி துடைக்கப்பயன்பட்டிருக்கும்..
பக்கத்து அறையில் என் மனைவிக்கும் இப்படியே..

கொஞ்ச‌ம் அல்ல நிறையவே கேவலமாக உணர்ந்து கையாலாகாத மெளன கோபத்துடன்..தொலைகாட்சியில் அலசப்படும் அப்பட்டமான பேரங்களைப் பார்த்துவிட்டு..
கறைபடிந்த கையைக்கழுவக்கூட முடியாமல்
காத்திருக்கிறேன், அடுத்த தேர்தலையாவது புறக்கணிக்க‌


More than a Blog Aggregator

by Dr.Rudhran
மே 10, மாலை என்று பல பதிவுகளில் விளம்பரப்படுத்தப்படும் நிகழ்ச்சி குறித்து சில சிந்தனைகள்...
தீபாவை தெரியும், மற்றவர்களில் சிலரைப்பார்த்திருக்கிறேன், சிலருடன் பேசியிருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் என் பங்கேற்பு எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
நேரடியாய் பரிச்சயம் ஆகாமலேயே நன்கு பழகியவர்களைப்போன்றதொரு நெருக்கத்தை வலையுலகம் நம்மில் பலருக்கு அமைத்துத்தந்துள்ளது.

ஆனாலும்---
இப்போதுதான் அன்புள்ள தீபா என்று ஆரம்பித்து..
உன் பதிவில் தான் இதன் ஆரம்பம், அதனால் உனக்கே இதற்கான முதல் வாழ்த்தும் நன்றியும்.
இவ்வளவு பரபரப்பாக இது எதிர்பார்க்கப்படுவது உள்ளே ஒருவித சலனத்தையே ஏற்படுத்துகிறது.
இது வரை என்னை யாருமே வருகிறாயா என்று கேட்கவில்லை, ஆனால் நான் வரத்தான் போகிறேன்.. இம்மாதிரி விஷயங்களுக்கெல்லாம் அழைப்பு தேவையில்லைதான்..ஆனாலும் ஏனோ ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்கிறது.
இன்னும் பொறுப்பாக..வருவதாய் அறிவிக்கப்படுபவர்களின் முன் ஒப்புதலோடு இனி வரப்போகும் நிகழ்வுகள் அமைய வேண்டும்.
இது ஒரு கெளரவப்பிரச்சினையல்ல.., ஒரு செளகரியம் சம்பந்தப்பட்ட விஷயம்.
நாளை சந்திப்போம்....ஷாலினியிடமாவது கேட்டு நிச்சயித்து விட்டார்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
என்று எழுதி முடித்தேன் ...
பதிவர்கள் உருப்படியாகவும் காரியங்கள் செய்வார்கள் என்று காட்ட முயற்சிக்கும் இந்த நிகழ்வுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்களும் வாழ்த்துகளும் இருந்தாலும்,

ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு சிலர் அறிவிப்பில் முன்வைக்கப்பட்டால் அவர்களிடம் ஒப்புக்க்காகவேனும் ஓர் ஒப்புதல் அவசியம் என்பது என் கருத்து .

சரி
அன்புடன் சில விஷயங்களுக்கு சிலரை அழைக்கவேண்டியதில்லை, அவர்கள் வருவது இயல்பாக எதிர்பார்க்கப்படும் ஒன்று என்றே நாம் நினைத்துக்கொண்டாலும்.. அந்த நெருக்கம் எப்படி வலைஉறவுகளில் உருவாகிறது என்பதை இப்போது நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். இதை ஆங்கிலத்தில் சற்றே யோசித்திருக்கிறேன் ..
இதை இன்னும் ஆழமாக நாம் கவனித்தால் நாளை இதன் மூலம் இன்னும் சில சமுதாய சாத்தியங்கள் எனக்கு கனவுகளாக விரிகின்றன.

அப்புறம்,
நாளைஎதிர்பார்ப்புகள் குறைய இருந்தால் மகிழ்ச்சிகள் கூடும் என்பது என் எண்ணம். நான்உரையாற்ற வரவில்லை, உரையாடத்தான் வருகிறேன்

சந்திப்பின் பின் இது குறித்து எழுத முயல்கிறேன்.
இதை வருத்தத்தோடு இல்லை ..அக்கறையோடு தான் எழுதுகிறேன்


More than a Blog Aggregator

by Dr.Rudhran
மே 10, மாலை என்று பல பதிவுகளில் விளம்பரப்படுத்தப்படும் நிகழ்ச்சி குறித்து சில சிந்தனைகள்...
தீபாவை தெரியும், மற்றவர்களில் சிலரைப்பார்த்திருக்கிறேன், சிலருடன் பேசியிருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் என் பங்கேற்பு எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
நேரடியாய் பரிச்சயம் ஆகாமலேயே நன்கு பழகியவர்களைப்போன்றதொரு நெருக்கத்தை வலையுலகம் நம்மில் பலருக்கு அமைத்துத்தந்துள்ளது.

ஆனாலும்---
இப்போதுதான் அன்புள்ள தீபா என்று ஆரம்பித்து..
உன் பதிவில் தான் இதன் ஆரம்பம், அதனால் உனக்கே இதற்கான முதல் வாழ்த்தும் நன்றியும்.
இவ்வளவு பரபரப்பாக இது எதிர்பார்க்கப்படுவது உள்ளே ஒருவித சலனத்தையே ஏற்படுத்துகிறது.
இது வரை என்னை யாருமே வருகிறாயா என்று கேட்கவில்லை, ஆனால் நான் வரத்தான் போகிறேன்.. இம்மாதிரி விஷயங்களுக்கெல்லாம் அழைப்பு தேவையில்லைதான்..ஆனாலும் ஏனோ ஒரு சங்கடம் இருக்கத்தான் செய்கிறது.
இன்னும் பொறுப்பாக..வருவதாய் அறிவிக்கப்படுபவர்களின் முன் ஒப்புதலோடு இனி வரப்போகும் நிகழ்வுகள் அமைய வேண்டும்.
இது ஒரு கெளரவப்பிரச்சினையல்ல.., ஒரு செளகரியம் சம்பந்தப்பட்ட விஷயம்.
நாளை சந்திப்போம்....ஷாலினியிடமாவது கேட்டு நிச்சயித்து விட்டார்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
என்று எழுதி முடித்தேன் ...
பதிவர்கள் உருப்படியாகவும் காரியங்கள் செய்வார்கள் என்று காட்ட முயற்சிக்கும் இந்த நிகழ்வுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்களும் வாழ்த்துகளும் இருந்தாலும்,

ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு சிலர் அறிவிப்பில் முன்வைக்கப்பட்டால் அவர்களிடம் ஒப்புக்க்காகவேனும் ஓர் ஒப்புதல் அவசியம் என்பது என் கருத்து .

சரி
அன்புடன் சில விஷயங்களுக்கு சிலரை அழைக்கவேண்டியதில்லை, அவர்கள் வருவது இயல்பாக எதிர்பார்க்கப்படும் ஒன்று என்றே நாம் நினைத்துக்கொண்டாலும்.. அந்த நெருக்கம் எப்படி வலைஉறவுகளில் உருவாகிறது என்பதை இப்போது நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். இதை ஆங்கிலத்தில் சற்றே யோசித்திருக்கிறேன் ..
இதை இன்னும் ஆழமாக நாம் கவனித்தால் நாளை இதன் மூலம் இன்னும் சில சமுதாய சாத்தியங்கள் எனக்கு கனவுகளாக விரிகின்றன.

அப்புறம்,
நாளைஎதிர்பார்ப்புகள் குறைய இருந்தால் மகிழ்ச்சிகள் கூடும் என்பது என் எண்ணம். நான்உரையாற்ற வரவில்லை, உரையாடத்தான் வருகிறேன்

சந்திப்பின் பின் இது குறித்து எழுத முயல்கிறேன்.
இதை வருத்தத்தோடு இல்லை ..அக்கறையோடு தான் எழுதுகிறேன்

கருத்துகள் இல்லை: