புதன், 17 ஜூன், 2009

2009-06-17

மக்களுக்கு எதிரான கடந்தகால புலிப் பாசிசத்தை, சுயவிமர்சனம் விமர்சனம் செய்யாத பாசிசத்துக்கான புதுப் புலுடாப் பிரகடனம். தமிழினத்தை தொடர்ந்து தமக்குள் அடிமையாக வைத்திருக்க, வலது பாசிட்டுகள் புலுடாப் பிரகடனம்.
ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களையும், ஓடுக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களையும், ஒடுக்கப்பட்ட உலக மக்களையும் சார்ந்து நின்று போராட மறுக்கும் வலதுசாரிய புலிப் பாசிசம், நாடு கடந்த தமிழீழ புலுடாப் பிரகடனத்தைச் செய்கின்றது.

கடந்த காலத்தில் தமிழினத்தை அழித்த கும்பல், இன்று இதன் மூலம் தாம் வாழ நாடு கடந்த புலுடாத் தமிழீழப் பிரகடனத்தைச் செய்கின்றனர்.

இதன் மூலம்

1. புலத்தில் பினாமிகளின் பெயரில் உள்ள பாரிய புலிச் சொத்துகளை, புலித் துரோகிகள் தமதாக்க புலுடாத் தமிழீழப் பிரகடனத்தைச் செய்கின்றனர்.

2. தொடர்ந்தும் புலத்து மக்களை.....
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/


More than a Blog Aggregator

by சந்தனமுல்லை
கதை - I

ஆகாஷ் வந்து சைக்கிளை எடுத்துக்கிட்டு "அம்மா, பை, நான் பீச்சுக்கு போறேன்"னு சொல்லிட்டு சைக்கிள் ஓட்டிகிட்டு போனான். அப்போ நாய்குட்டியும், நானும் வர்றேன்-ன்னு சொன்னதும் நாய்க்குட்டியை பின்னால உட்கார வைச்சிக்கிட்டு ஆகாஷ் பீச்சுக்கு போனான்! கூடையிலே ஒரு பால், பிஸ்கட், தண்ணி எல்லாம் ஆகாஷோட அம்மா சைக்கிள்லே வச்சிருந்தாங்க! பீச்சுக்கு போனா, அங்கே நிறைய அலை வந்ததாம். ஆகாஷூக்கு அதைப் பார்த்ததும் ரொம்ப ஜாலியாகிடுச்சாம்! ஆகாஷும் நாய்க்குட்டியும் பால் விளையாடினாங்களாம்! அப்புறம் அலைக்கிட்டேயும் தூக்கிப் போட்டாங்களாம். அலையும் திரும்ப அவங்களுக்கு பாலை கொண்டு வந்து கொண்டு வந்து கொடுத்ததாம். ஒரு தடவை அலை பாலை கொண்டு வந்துக் கொடுக்கலையாம். ஆகாஷ், பால் எங்கே, நாம விளையாடணுமேன்னு கேட்டப்போ, அலை சொல்லிச்சாம், பால் உள்ளே போய்டுச்சுன்னு! அப்போ நாய்க்குட்டி சொல்லிச்சாம், ஆகாஷ் எனக்கு நீந்தத் தெரியும், நான் போய் பார்த்து எடுத்துக்கிட்டு வர்றேன்-ன்னு சொல்லிட்டு போச்சாம்! அங்கே போனா ஒரு பால் வந்து ஒரு மீன்கிட்டே இருந்துச்சாம். அது நாய்க்குட்டிக்கிட்டே சொல்லிச்சாம், நாந்தான் ஆகாஷ்க்கிட்டே பாலை கொண்டு வந்து கொடுப்பேன், நாந்தான் கொடுப்பேன்-ன்னு சொல்லிச்சாம்! நாய்க்குட்டி மீனுக்கிட்டே சொல்லிச்சாம்,நீ தண்ணிலே இருந்து வெளிலே வந்தா நடக்க முடியாது, நானே போய் கொடுக்கிறேன்,மிக்க நன்றின்னு சொல்லிட்டு வாங்கிட்டு வந்து ஆகாஷ்கிட்டே கொடுத்துச்சாம்! அப்புறம் ஆகாஷூம் நாய்க்குட்டியும் மீனும் அலையும் ஜாலியா பால் விளையாடிட்டு அவங்களுக்கு பை சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டாங்களாம்!!




கதை - II

ஒருநாள் ஆகாஷ் பட்டம் விடலாம்னு பட்டம் செஞ்சு எடுத்துக்கிட்டு ஒரு க்ரவுண்டுக்கு போனான். அங்கே எல்லோரும் கலர் கலரா பட்டம் விட்டுக்கிட்டு இருந்தாங்க! ஆகாஷோட பட்டம் வேகமா பறந்து மேலே போச்சா, போய் ஒரு மரத்துலே மாட்டிக்கிச்சு. அப்போ நாய்க்குட்டி, மரத்து மேலே போய் எடுக்கலாம்னு பார்த்தா அதாலே மேலே ஏறவே முடியல. அப்போ ஆகாஷும் நாய்க்குட்டியும்,(birdie) பேர்டீக்கிட்டே போய் எங்களுக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா, எங்க பட்டம் மரத்துலே மாட்டிக்கிச்சு, அதை உன்னாலே எடுத்துக் கொடுக்க முடியும்னு சொன்னதும் பேர்டீயும் பறந்து போய் மேலே இருந்த பட்டத்தை எடுத்துக் கொடுத்துச்சு. ஆகாஷும் நாய்க்குட்டியும், ரொம்ப தாங்ஸ், பேர்டி, ன்னு சொல்லிட்டு ஜாலியா பட்டம் விட்டாங்க!! பேர்டீயும் பை பை ஆகாஷ், நாய்க்குட்டின்னு சொல்லிட்டு பறந்து போய்டுச்சு!




போன வருஷம் பப்புவை காலையில் சாப்பிட வைக்க நான் சொன்ன கதைகள்தான் ஆகாஷ் கதைகள்,வெண்மதி கதைகள், வர்ஷினி கதைகள் எல்லாம்! இப்போதைக்கு இதுதான் நினைவில் இருக்கு! இந்தக் கதைகள் எல்லாம் ஆகாஷுக்கும்,வெண்மதிக்கும் வர்ஷினிக்கும் சமர்ப்பணம்! (பின்ன என்னையும் கொஞ்சமா யோசிச்சு கதை சொல்ல வைச்சாங்க இல்ல!)

கொஞ்ச நாளைக்கு அப்புறம், நான் கதை சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளேயே, பப்பு, கடகடன்னு சாப்பிட்டுட்டு இல்லன்னா பாலை வாங்கி ஒரே மொடக்-ல குடிச்சுட்டு போன மர்மம் தான் எனக்கு புரியலை! :-)

வடகொரியாவின் அணுசக்தி இலட்சியங்களை எட்ட அனுமதிப்பானது ஆசியாவின் சமவலுவை குலைப்பதுடன் உலகிற்கே அச்சுறுத்தலாக அமையும் என அதிபர் ஒபாமா தென்கொரிய அதிபர் லீ ம்யுங் பக் உடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். ஒபாமாவின் கருத்துக்களுடன் உடன்பட்ட லீ பின்னர் உரையாற்றும் போது சமீபத்தில் வட கொரியாவில் சிறைப் பிடிக்கப்பட்ட அமெரிக்கப் பத்திரிகையாளர்களை வட கொரிய அரசு விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

மேலும் வாசிக்க...


இந்திய மாணவர்களுக்கெதிரான இனவெறித் தாக்குதல்கள் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியாவில், கெளரவ நீதிபதியாக இந்தியர் ஒருவரை ஆஸ்திரேலிய அரசு நியமித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்திலேயே இந்நியமனம் நடைபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவில், 83ம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வரும், மோதி விசா என்பவரே இவ்வாறு கெளரவ நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த, மோதி விசா 65 வயதுடையவர்.

தொடர்ந்து வாசிக்க


More than a Blog Aggregator

by Cinema Virumbi
Nowadays, it is fashionable for people to
say 'That's no Rocket Science!' whenever
they want to say that a certain subject
is not all that difficult. They overdo it
so much that I feel like shouting at them :

'You idiot! Rocket Science itself is no Rocket Science!'

Cinema Virumbi

________________________________________________________________________


More than a Blog Aggregator

by அது ஒரு கனாக் காலம்



கடந்த இரண்டு நாட்களாக மனம் ரொம்பவும் பதைபதைக்கிறது ...

வெள்ளிகிழைமை , துபாயில் உள்ள ஒரு வீட்டில், அம்மாவும் இரண்டு குழைந்தைகளும் மதியம், ஒரு சைனீஸ் உணவகத்தில் மதிய உணவு வாங்கி உண்டுருக்கிறார்கள் ... அது food poision ஆகி , நிறைய முறை, வாந்தி, மற்றும் லூஸ் மோஷன் ஆகி, அருகில் உள்ள ஒரு கிளீனிக்கில் போய் கான்பித்திரிக்கிறார்கள் .. மூவருக்கும் சிகிச்சை அளித்த அந்த கிளினிக், தாயாரை I.C.U வில் அட்மிட் செய்து, குழ்ந்தைகளை மருந்து கொடுத்து டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள் ... அந்த குடும்ப தலைவர் அங்கு இல்லை , அபு தாபி சென்றுள்ளார்.

குழைந்தைகள் வீடு திரும்பும் பொழுதே, மறுபடியும் வாந்தி... நிலைமை மோசமாகிறது, இம்முறை அந்த குழ்ந்தைகளை ஒரு பெரிய அரசு மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள் ... போகும் வழியிலேயே சின்ன பெண் இறந்து விடுகிறாள் , பையனும் சிறுது நேரத்தில் மருத்துவமனையில் இறந்து விடுகிறான், ... தயார் இன்னும் I.C.U வில்.

கொஞ்ச நாட்களாகவே பத்திரிக்கையிலும் , மற்றும் வேறு வழிகளிலும் , நிறைய எச்சரிக்கை வந்தவண்ணம் இருந்தன, கோடை கடுமை, எனவே வெளியில் வாங்கி
சாப்பிட வேண்டாம் , பார்த்து வாங்கவும், .....

நாங்கள் இங்கு வந்த பிறகு, நிறைய இது போன்ற விபத்துகளை நிறைய பார்த்து விட்டோம் ..சில வருடங்களுக்கு முன், அருகில் உள்ள அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு மலையாளி வாலிபரும் , அவருடைய மனைவியும், மனைவி food poision ஆகி , நிறைய வாந்தி எடுத்தாள் என்பதற்காக, கணவன் அவரை ஆஸ்பிட்டலில் சேர்த்தும் காப்பாற்ற முடியவில்லை, அதை விட சோகம், அவரும் அதே போல உடனே இறந்து விட்டார்...

நிறய கேள்விகள்

இபோழுது இறந்த அந்த சின்ன சிறுசுகள் , ஒரு நல்ல மேல் குடியை சேர்ந்தவர்கள் ...நல்ல வசிதியான குடும்பம், அவர்கள் உணவு அருந்தியோதோ ( வாங்கியதோ ) ஒரு நல்ல உணவகம். ( ஸ்டார் உணவகம் ) ... எப்படி அவர்கள் மட்டும் பாதிப்பு அடைந்தார்கள் ...

அடந்த கிளினிக்கில் ஏன் அம்மாவை I.C.U வில் வைத்து கொண்டு , குழ்ந்தைகளை டிஸ்சார்ஜ் செய்தார்கள்... மூவரும் ஒரே உணவைதான் சாபிட்டார்கள், ஒரே குடும்பம், அப்பா வேறு உடன் இல்லை , அவர்களையும் அருகில் வேறு ரூமில் சிகச்சை என்ற பெயரில் ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்கலாம் ... சக்திஉள்ள அம்மாவே I.C.U என்றால் குழந்தைகளின் நிலைமை பற்றி யோசித்திருக்கலாம்.

சரி, கிளீனிக்கில் தான் அப்படி சொன்னார்கள் என்றால்
, கூட போயிருந்த நண்பர்களோ / உறவினர்களோ ...குழந்தைகள் இங்கயே இருக்கலாம் என்று சொல்லி அங்கேயே, இருந்திருந்தால் ஒரு வேலை சரியான சிகிச்சை , சரியான சமயத்தில் கிடைத்திருக்கலாம்

விதி மிகவும் கோரமாக விளையாடி இருக்கிறது .

FOOD POISON என்ன அவ்வளவு கொடிய அரக்கனா... அதற்க்கு முதல் உதவி - உடன் சிகச்சை போன்றவை கிடையாதா ?

ஏன் ஆஸ்பிட்டல் சென்ற பின்னும் .. காப்பாற்ற முடிவதில்லை ?

எனக்கு தெரிந்த வரை, இந்தியாவில் இது போன்ற சாவுகளை நிறைய கேள்விப்பட்டதில்லை .. பள்ளியில் மதிய உணவில் பல்லி/ பாம்பு ... மாணவர்கள் கவலைக்கிடம் ... போன்ற செய்திகள் உண்டு, ...

நல்ல தண்ணீர், காற்று, சாப்பாடு, ஏ. சி ... இது போன்று வசிதியாய் வாழ்வதால், சிறிய food poision கூட எமனாகி விடுகிறதா ?....


யாரேனும் விளக்கினால் நல்லது.

கருத்துகள் இல்லை: