புதன், 19 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-15



More than a Blog Aggregator

by ஹிப்ஸ்...

சென்னையின் அரிய புகைப்படங்கள்:
http://www.flickr.com/photos/30886342@N00/sets/72057594094737914/show/

தமிழ்நாட்டின் தலைநகரும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

மேலும் விவரமறிய : கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88

நன்றி : விக்கிபீடியா


More than a Blog Aggregator

by ஹிப்ஸ்...

The all-in-one digital media player that lets you find anything and play everything.
http://www.ziddu.com/download.php?uid=a6uglpuraKqbluKnYqqhkZSrX6qgmp2q2
Activator for real player 11
http://www.ziddu.com/download.php?uid=bLCalJWlaK6bnJuqZ%2FiblJStYqqfkZSsbQ%3D%3D5


More than a Blog Aggregator

by வலசு - வேலணை
கடவுள்!
இருக்கிறார்,
இல்லை,
இருந்தால் நல்லாயிருக்கும்,
என்கின்ற
வாதப் பிரதிவாதங்கட்கப்பால்
இதோ "நான்" கடவுள்
அவதரித்து விட்டேன்!

புத்தனைப் போல்
போதி மரத்தடியின்
பௌர்ணமி இரவிலல்லாமல்
அமவாசை கடந்த மூன்றாம்நாள்
விடிகாலைப் பொழுதில்
இடியுடன் கூடிய
அடைமழை பொழிகையில்
ஜன்னனால் தெரிந்த
வெட்டி இறங்கிய
மின்னல் கீற்றுடன்
எனக்குள் அந்த
உளவியல் மாற்றத்தை
உணர்ந்து கொண்டேன்.

பக்தனைப் போல்
வேடம்கொண்டு
பித்தனாய் அலைபவனே
இங்கே வா.
இதோ உன் முன்
கடவுளாய் "நான்"!

முந்து சிவன்,
அவன் மனைவி மாதேவி,
அவர்தம் பிள்ளைகாள்
கணேசன், கந்தன்.
பாற்கடலில் பள்ளி கொள்ளும்
பரந்தாமன், அவன்தன்
தொப்புட் கொடி மைந்தன்
பிரம்மன் இவர்களா
உன் கடவுள்?

இல்லை
அல்லா, யேசு போல்
அல்லாமல்
மானிட உருக்கொண்ட
பாபா, பகவான் அம்மாவா?
அவர்களெல்லாம் சும்மா.
வெறும் பம்மாத்து.

புரிகிறது உன் குழப்பம்.
யாரடா "நான்" என்று.
நன்று.
குழம்பு,
சந்தேகப்படு,
தெளிவடை.

வேண்டுமானால்
வைதேகி தேகம்
தகிக்காத அக்கினியைக்கூட
சந்தேகப் படு.
பின்னொரு நாளில்
சலவைத் தொழிலாளியின் சொற்கேட்டு
சீதையைக் காட்டுக்கனுப்பிய
ராமனிலும் "நீ" மேலாவாய்.

ஆகா எப்படி நம்புவதா?
வாடா வா.
உன்னைத்தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்
மூடனைப் போல்
சொல்வதற்கெல்லாம்
தலையாட்டாமலொரு
சீடனைப் போல்
அந்த இராமகிருஷ்ணருக்கு
வாய்த்த விவேகானந்தனாய் வா.
உனக்குத்தான்
"நான்" காட்சியளிப்பேன்.

"நான்"
இது என்
பதினோராவது அவதாரம்
ஏன்?
இறுதியானதும் கூட.
ஆம்!
"நான்"-ஏ "நான்"-ஆய்
ஆனபின்
இனியெதற்கு
இன்னோரவதாரம்?

தந்தையின் விந்தாய்
தாயின் முட்டைநாடி
"நான்" நீந்திச் சென்றதுவென்
மச்ச அவதாரம்.

ஓவரி (ovary) யிலிருந்து
தாயின் முட்டையை
பலோப்பியன் குழாய் வழியே
"நான்" சுமந்து வந்ததுவென்
கூர்ம அவதாரம்.

முட்டை துளைத்து
விந்து நுழைகையில்
"நான்" கொண்டது
வராக அவதாரம்.

முதற்கலமிரண்டாய் பிரிந்ததை,
பின்,அதுவொரு பிண்டமாய் வளர்ந்ததை
பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு (Big bang)
என்கிறார்கள் பேதை விஞ்ஞானிகள்.
அவர்கள் அந்தப் பிரபஞ்சமே "நான்"
என்பதை அறியாத அஞ்ஞானிகள்.

ஒரு "தூண்"-இற்குளிருந்து
வெளிப்படுவதுவாய்
ஒரு தாயிற்குளிருந்து
"நான்" வெளிப்பட்டது
நரசிம்ம அவதாரம்.

மழலையாய் இருக்கையிலெனை
வாஞ்சையுடன் அணைப்போர்
நெஞ்சில் "கால்"-ஆல் உதைக்கையில்
"நான்" கொண்டது
வாமன அவதாரம்.

ஆறாம் வயதில் கவண் எடுத்து
"வில்"-லாய் விளையாடிப் பலருக்குத்
தொல்லை கொடுத்த
பாலகப்பருவமதில்
"நான்" எடுத்தது
பரசுராம அவதாரம்.

அதன்பின்
பதின்மப் பருவம் வரை
எந்தப் பெணணையும்
ஏறெடுத்தும் பாராததில்
"நான்" பூண்டது
ராம அவதாரம்.

கல்விச் சாலையில்
எழுதுகோல் "ஏர்" பிடித்து
ஏணிப்படிகளாய் வகுப்புகள்
ஏறுகையில்,
"நான" ஏற்றிருந்தது
பலராம அவதாரம்

என் வயதொத்த பெண்கள்
பாரதி சொன்ன பதினாறு வயதுப்
பருவமடைகையில்
கோபியர் சூழ்ந்த
கோபால கிருஷ்ணனாய்
எனக்குள் "நான்" மாறியது
கிருஷ்ண அவதாரம்.

கல்விக்காலம் முடிந்து
கதி கலங்கித் திரிந்ததும்
மாயைகளுக்குள்
மதி மயங்கி நின்றதும்
விதி வலிதென்று
விழி பிதுங்கி நின்றதும்
என்னைத் தேடித்தேடி
எங்கோவெல்லாம்
"நான்" அலைந்ததும்
கல்கி அவதாரம்

ஈற்றில் இதோ
பதினோராவதாய்
"நான்" அடைந்தது
நான் அவதாரம்.
ஆம் "நான்" கடவுளானவன்

அடேய்!
எதற்காயென் பின்னால்
வருகிறாய்?
"நான்" ஐக் கடவுள்
என்று ஏற்றுக் கொண்டதாலா?

போடா வெண்ணெய்.....

************

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைபவர்கட்கு:
வெண்ணெயை உருக்கினால் நெய்.
உன்னை ஒருக்கினால் "நீ" கடவுள்.


More than a Blog Aggregator

by வலசு - வேலணை
யார் நான்?
இப்படித்தான்
தனித்திருந்து இனித்திருந்த
பொழுதொன்றில்,

நான்-இற்குளிருந்தொரு
நான்-ஒன்று தன்
ஆத்ம விசாரணையை
ஆரம்பித்தது.
யார் நான்?

ரத்தமும் தசைப்பிண்டமும்
நித்தமும் நிழலாடும் - மன
சித்தமும் அதன் யுத்தமும்
பித்தமுமென்புமுள தோற்பையாம்.

நான்-இற்குளிருந்தின்னொரு
நான்-ஒன்று விடை பகர்ந்தது.
அதையேற்கமறுத்து
நான்-இற்குள்ளிருந்து
வெளியே குதித்தது
இன்னுமொரு நான்.

யுகந்தோறும் அவதரிப்பதாயில்லாமல்
தினந்தோறும், ஏன் கணந்தோறும்
கலங்கள் புதிதாய் ஜனிக்கையில்,
இன்றிருக்கும் நான் எப்படி
நேற்றிருந்த நான்-ஆகும்?

நான் எனப்படுவது யாதெனில்
எண்ணங்கள் கொண்ட பல
வண்ணக் கலவைகள் சேர்
கிண்ணமென்பதே திண்ணமாகும்.

கணக்குத் தெரிந்த அந்த முதல் நான்
பிணக்குப் பண்ணியது நிறுவிக்காட்டுமாறு.
சுணக்கமின்றிச் சொன்னதந்த நான்
இணங்கச் சொல் இந்த நான்-ஐ
நானதன் எண்ணவுடைகளைக் கலைத்துப்போட

எல்லா நான்-களுக்கும்
நான்-ஐ அறிவதில்
அலாதி ஆர்வமாதலால்
ஏகமனதுடன் ஏற்றுக்கொண்டன.

முதலிலொரு முதலிரவுப்பெண்ணின்
வெட்கமகற்றி ஆடையகற்றும்
நளினத்துடன், நகநுனி கூடத்
தீண்டாது நாகரிகமாய்த் தான்
எண்ணங்கள் சூழ்ந்திருந்த
நான்-ஐத் தீண்டவாரம்பித்ததந்த நான்.

நேரம் செல்லச் செல்ல
கோரப் பல் முளைத்து
விகாரப் பட்ட முகத்துடன்
நான்கங்குல நகமும் நீண்ட,
காடையன் ஒருவனின் காமவெறியுடன்
நகக்குறி, மற்றும் பற்குறி பதித்து
நான்-ஐச் சுற்றியிருந்த நினைவாடைகளை
கிழித்தெறியத் தொடங்கிப் பின்
களைத்து வீழ்ந்ததந்த நான்-ஐப் பார்த்து
கைகொட்டிச் சிரித்ததிந்த நான்-கள்.

நான்-ஆலா முடியாது?
அந்த நான்-இன் நான்;
அடங்க மறுத்தடம்பிடித்தது.
பெரியதாயொரு மண்வெட்டி
கொணர்ந்து பாளம்பாளமாய்
வெட்டியெறிந்ததந்த நான்
இந்த நான்-ஐ இவ்வளவு
நாட்களாய் சுற்றிவளைத்திருந்த
எண்ணத் திணிவுகளை.

ஈற்றில்,
இறுதிவெற்றியை அடையும்
உவகையுடன் மீந்திருந்த
ஒவ்வோரணுக்களையும் நோண்டி
அதன் இலத்திரன்களைப்
பிடித்திழுத்துவைத்து
சொறியத் தொடங்கியதந்த நான்.

துச்சாதனனுரித்துப் போட்ட
திரௌபதையின் துகிலாய்
திரண்டு கிடந்த,
அந்த நான் உரித்துப் போட்ட
நான்-களெல்லாம்,
கூக்குரலிட்டுக் கத்தின
"விடாதே, நான்-ஐக் கண்டுபிடி" என்று
அந்த நான்-இடம்.

புருவங்களுக்கு மத்தியில்
ஒளிந்திருக்கும் ஆத்மா(?)வாகிய
நான்-ஐக் கண்டறியப் போவதான
களிப்புடன் இறுதியணுவையும்
இலக்குவைத்து இயங்கத்
தொடங்கியதந்த நான்.

என்ன இருக்கிறது?
எப்படியிருக்கிறது?
ஆவலுடன் காத்திருந்த
உரித்துப் போடப்பட்ட
நான்-களிடம் அந்த நான்
சொல்லிற்று

"போடாங்... வெங்காயம்"
சவூதி அரேபியா நாட்டில் எழுத படிக்கத் தெரியாத வெளிநாட்டவர்கள் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

படிப்பறிவில்லாத வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது என்றும் அங்குள்ள நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைக்கு உள்துறை மந்திரியும், இளவரசருமான பிக்அப்துல்லா ஒப்புதல் அளித்துள்ளார்.

சவூதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிக்கிக் கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத வெளிநாட்டவர்கள் என்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

படிப்பறிவில்லாத அப்பாவி வெளிநாட்டு தொழிலாளர்களை சில கும்பல் குற்றச் செயல்களில் ஈடுபடுத்துவதை தடுக்கவே இந்த நடவடிக்கை.
.


100 மில்லியன் மாணவமணிகளுக்கு இந்த மென்பொருட்கள் இலவசமாகக் கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வந்துள்ளது.திரு.

பில்கேட்ஸ் அவர்கள் இந்தியாவில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்காக ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி பட்ட மேற்படிப்போ, பட்டப்படிப்போ படித்துக்கொண்டிருக்கும் தொழில்நுட்பப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது அடையாள அட்டைகளை அருகில் உள்ள அப்டெக், என்.ஐ.ஐ.டி கணினிப் பயிற்சிப் பட்டறைகளில் காண்பித்தால் அவர்களுக்கு மைக்ரோசாப்ட்டின் இலவச டிவிடி வழங்கப்படும்.

அந்த டிவிடியில் விண்டோஸ் சர்வர் 2003, விசுவல் ஸ்டுடியோ 2008, எஸ்க்யூஎல் சர்வர் 2005, மைக்ரோசாப்ட் எக்ஸ்ப்ரசன் ஸ்டுடியோ, விர்ச்சுவல் பிசி ஆகிய மென்பொருள்கள் அடங்கியிருக்கும்.

* Visual Studio 2005/2008 Professional Edition


* Expression Studio, includingo Expression Web


o Expression Blend


o Expression Designo Expression Media


* SQL Server 2005 Express


* SQL Server 2005 Developer Edition
* Windows Standard Server, XNA Game Studio 2.0 (with 12-month trial academic subscription to the XNA Creators Club)

மாணவர்களின் இணைய இணைப்பின் பேண்ட்வித் நன்றாக இருந்தால் அவர்கள்
http://www.dreamsparkindia.com/dreamspark/GetDreamTools.aspx?Tab=1 தளத்திலிருந்து நேரடியாகவே இந்த மென்பொருள்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

2009ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களின் இந்தச்சலுகை 11, 12ம் வகுப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படவிருக்கிறது என்பது இனிப்பான செய்தி.இதனால் இந்தியாவின் மனிதவளத்தை பில்கேட்ஸ் அபகரிக்கப்போகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் எழலாம். ஆனால் ஒன்றும் இல்லாமல் ஏதோ படித்தோம் / ஏதோ ஒரு வேலையைச் செய்தோம் / இறந்தோம் - என இல்லாமல் வாழ்வில் ஒரு திருப்புமுனைக்காக ஏங்கும் எத்தனையோ மாணவச் செல்வங்களுக்கு இந்தப் பயன்பாடுகள் கண்டிப்பாக உதவும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இது குறித்து மாற்றுக்கருத்துக் கூற விரும்புபவர்கள் பின்னூட்டம் இடலாம்.



Thanks: Tamil2000

கருத்துகள் இல்லை: