திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-09

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் புதன் வரை இரவு 9 மணி முதல் 10 மணி வரை - ஒளிபரப்பாகிறது 'ஏர்ட்டெல் சூப்பர் சிங்கர் 2008'. இதனைத் தொகுத்து வழங்குபவர் சின்மயி.
இதன் கோப்புக்காட்சிகளை இணையத்தில் தேடியபோது..

Where Can I See Airtel Super Singer Videos - Online?

Here are some sample videos for Airtel Super Singer by Vijay TV













Do you want to See More Videos?

http://www.metacafe.com/tags/airetel_super_singer/newest/

http://video.google.com/videosearch?q=airtel+super+singer&emb=0&aq=f#

Talent show for singers Judges:Harish Raghavendra, Anuradha sriram,Sirpi www.istream.in


தேவையானப்பொருட்கள்:

நெல்லிக்காய் - 5 அல்லது 6
சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முழு நெல்லிக்காயைப் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.

சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.

ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரை விட்டு அதில் சர்க்கரையைப் போட்டு அடுப்பில் வைத்துக் கிளறி விடவும். சர்க்கரை நன்றாகக் கரைந்தப்பின், அதில் நெல்லிக்காய் துண்டுகளைப் போட்டு கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, நெல்லிக்காயில் சர்க்கரைப் பாகு நன்றாக ஒட்டும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பாகு சற்று நிறம் மாறி காயுடன் நன்றாகக் கலந்தப் பின் கீழே இறக்கி வைக்கவும்.

இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாம்பார் மற்றும் தயிர் சாதத்துடன் பரிமாறலாம்.


More than a Blog Aggregator

by சிவாஜி
Ask, & it'll be given to you;
Seek, & you'll find;
Knock, & it'll be opened to you.

-Bible


More than a Blog Aggregator

by சிவாஜி
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை.

-காரல் மார்க்ஸ்


More than a Blog Aggregator

by சிவாஜி
There is no end; no beginning. There is only infinite passion of life.

நாளையும் மற்றுமொரு நாளே...

அவ்வைக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனி என்று இலக்கியத்திலும், தெய்வீக மரம் என்று புராணங்களிலும் இடம் பெற்ற நெல்லிக்காயும் அதன் மரமும் மிக்க மருத்துவ குணம் நிறைந்தது.

இதில் எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு,அதிகளவில் வைட்டமின் 'சி' உள்ளது. ஆரஞ்சு, கொய்யா, எலுமிச்சை போன்ற பழங்களை விடவும் அதிக வைட்டமின் 'சி' கொண்டது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

இரத்தக்குழாயைச் சுத்தப்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்கும். இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். நெஞ்செரிச்சல், குடற்புண், வயிற்றுப்போக்கு ஆகியவற்றைக் குணப்படுத்தும். இதயநோய் மற்றும் கண்நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும். முடி உதிர்வதைத் தடுக்கும்.

கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டுவிடுவார்கள். தண்ணீர் சுவையாக மாறிவிடும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நெல்லிக்காயைச் சமைத்தாலும், இதிலுள்ள வைட்டமின் 'சி' யின் அளவு குறைவதில்லை.

மிகவும் துவர்ப்பாகவும், புளிப்பாகவும் இருக்கும் நெல்லிக்காயைக் கடித்து சாப்பிடுவதே ஒரு கலை. முகம் சுளிக்க சுளிக்க, பற்களால் கடித்து மென்று கொண்டே இருந்தால், அதன் துவர்ப்பும், புளிப்பும் மாறி, இனிப்புச் சுவை தோன்றும். தின்று முடித்தப்பின், தண்ணீர் குடித்தால், அடடா...... அது ஒரு இனிமையான சுவை. வாழ்க்கையின் தத்துவமும் இதுதானோ??

செய்து பாருங்கள்:

நெல்லிக்காய் உடனடி ஊறுகாய்
நெல்லிக்காய் இனிப்பு ஊறுகாய்

கருத்துகள் இல்லை: