புதன், 19 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-15


பிற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள்.

வித்துவை உடலில் சுவற விட்டு, உடல் நலம் காத்து, மன வளம் காத்து, இளமை காத்து, எப்போதும் முதுமை இல்லாது இருக்கும் முறை ஒன்றையும். இரண்டாவதாக இரசவாதம் மூலமாக முப்பு என்ற முறையையும் கண்டு பிடித்தார்கள். இரசவாத முறை Philosopher Stone என்று மேல் நாட்டில் அனுபவத்திற்கு வந்தது இதை உண்டு விட்டால், முறையாக உடலை விட்டு உயிர் பிரியாது உடலை விட்டு உயிர் பிரிய வேண்டும் என்றால், உடலை விட்டு வித்து வெளியேற வேண்டும். வித்து உடையாமல்; உயிர் பிரியாமல் காத்துக் கொள்வதுதான் முப்பு என்ற மருந்து. அதைச் சாப்பிட்ட பிறகு ஒரு சிக்கல் எல்லாச் சித்தர்களுக்கும் வந்தது. உலகில் 200 வருடம் 300 வருடம் 500 வருடம் கூட வாழ்ந்து விட்டார்கள். எல்லாம் அனுபவித்தாகிவிட்டது. உலகை விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள் உயிர் போகவில்லை.

உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, தவளை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பத்துப் பதினைந்து நாட்கள் அப்படியே இருக்கும். தேவையில்லாதபோது உயிரை விட்டு விடும். லம்பிகா யோகம் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் உள்ள உணர்வுகளெல்லாம் நின்றுவிடும். ஆனால் உயிர் போகாது. ஆனால் அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன. உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.

மனிதர்களில் சிலர் லம்பிகா யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள். அதனாலேயும் உடலைவிட்டு உயிர் பிரியாத ஒரு சிக்கல் ஏற்பட்டது. காரணம் மனிதன் லம்பிகா யோகம் செய்து மயக்க நிலையிலிருந்து திரும்பி வராமல தன்னை மறந்து விடுகிறான். உயிர் இருக்கிறது. ஆனால் உணர்வு தெரிவதே இல்லை. உடனே மற்றவர்கள், இவர் இறந்து விட்டார் என்று கருதி அடக்கம் செய்து விடுகிறார்கள்.அதனால் அப்பயிற்சி நமக்குத் வேண்டியது இல்லை. தேவையும் இல்லை. அத்தகைய சிக்கல்கள் வராமலும் அதே சமயம் உடல் நலத்தைக் காத்து, ஆயுளைப் பெருக்கி, வாழும் காலம் வரைக்கும் நோயின்றி வாழ வைக்கக் கூடியதே காயகற்பக் கலையாகும்.

- அருட்தந்தை


நாள்:

ஆண்கள் 16-11-2008 காலை 5-30 மணி முதல் 8-30 மணி வரை

பெண்கள் 16-11-2008 காலை 10-30 மணி முதல் 12-30 மணி வரை

இங்கனம்

திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை
மற்றும் M.K.G. நகர் யோகா மையம்

பயிற்சி நடைபெறும் இடம்:

M.K.G. நகர் மனவளக்களை யோகா தவமையம்
கிருஷ்ணசாமிக்கவுண்டர் நகர், T.P.A.காலனி,
முத்து நகர், (காசி விஸ்வநாதர் கோவில் அருகில்)
திருப்பூர் - 641 607
தொலைபேசி எண் 0421-6536493


தித்திக்கும்தன் குராலால் இலங்கை வானொலி இரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் எ.ஆர்.வி.லோஷன் அண்ணா. பட்டிதொட்டி எல்லாம் சூரியன் எப்.எம் வானொலியினை பிரபலப்படுத்தியவர்களில் மிகவும் முக்கியமானவர். சூரியராகாங்கள், அட்டகாசம் இரண்டு நிகழ்சிகளும் சூரியனில் நான் அதிகம் விரும்பி கேட்கும் நிகழ்சிகள் ஆகும். இவர் சூரியன் எப்.எம் வானொலியின் நிகழ்ச்சி முகாமையாளாராக இருந்தபோது, யுத்தகளமுனைகளில் நடைபெறும் இருதரப்பினதும் இழப்புக்களை உடனுக்குடனும் நடுநிலையுடனும் வெளியிட்டவர். மற்றும் காலையில் இlosanவரும் பேப்பர் போடியனும்{செந்துரன் அண்ணா} அரசின் திரை மறைவு வேலைகளையும் அரசின் பொய் பிரசாராங்களளையும் துகிலுரித்துக்காடடியவர். பேப்பர் போடியன் விடுதலை புலிலிற்கு ஆதராவாக கருத்துச் சொல்லும் வேளைகளில் எல்லாம் லாவகமாகவும் புத்திசாதுரியமாகாவும் பதிலலிப்பவர்.இவர்கள் இருவரின் சொல் தாக்குத்லுக்கு அதிகம் இலக்காகுபவர்கள் கோத்தபாய ராஜபக்ஷாவும்,இரானுவப் பேச்சாளர் பிரசாத்சரமரசிங்காவும்தான்। இவர்களின் பேச்சின் உண்மை தன்மையும் மக்களிடையெ அடைந்தபிரபலமும் அரசிற்கு அச்சத்தினை ஏற்படுத்தியது அதனால்தான் அப்போது சூரியன் வானொயின் செய்தி முகாமையாளாராக இருந்த நடராஜா குருபரனும் மிகவும் உயர்பாதுகாப்பு நிறைந்த பகுதியில் வைத்துக்கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்படார் இதன் பின்னர் ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பையும் அரசு தடைசெய்தது. இவ்வாறு சூரியன் எப்.எம் இனை பலமுறைகளில் ஒடுக்குவத்ற்கு அரசு திட்டமிட்டு செயற்பட்டது. இதன் பின்னர் லோஷன் அண்ணா வெற்றி எப்.எம் இனைந்ததுடன் அவரின் குரலை யாழ்பாணத்தில் இருக்கும் எங்களால் கேட்கமுடியவில்லை என்பது துரதிஸ்ரம் தான்.எ.ஆர்.வி.லோஷன் அண்ணாவை கைதுசெய்ததன் மூலம் இலங்கைஅரசு ஊடகவியளாளருக்கு,குறிப்பாக தமிழ் ஊடகவியளாளர்களுக்கு எதிரானதன் நிலைபாட்டை மீண்டும் காட்டியுள்ளாது .

லோசன் அண்ணாவி வலைப்பூ செல்ல அழுத்தவும்

ஒவ்வருவரும் ஒவ்வருமாதிரி சிந்திக்கிறார்கள் நான் சிந்திப்பது போல் நீங்கள் சிந்திப்பதில்லை நீங்கள் சிந்திப்பது போல் உங்கள் பெற்றோரோ, உங்கள் நண்பர்களோ, உங்கள் உறவினர்களோ, சிந்திப்பதில்லை உலகத்தில் உள்ள ஒவ்வருவரும் ஒவ்வரு விதமாக சிந்திக்கிறார்கள்.


ஆனால்....


சிந்தனையை, அது சிந்திக்கப்படுகின்ற வகையினை அடிபபடையாகக் கொண்டு உலகில் உள்ள அனைவரையும் இரண்டு விதமாக நோக்கலாம்
தோல்விகளையும் நம்பிக்கையீனங்களையும், ஏமாற்றங்களையும் இயலாமைகளையும், துரோகங்களையும் ,எதிர்மறையான காரியங்களையும் அடிப்படையான சிந்தனையாகக் கொண்டு வாழ்ந்து வரும் ஒரு வகையினர் ,
சின்ன சின்ன வெற்றிகளையும் ,அடைந்தே தீரவேண்டும், என்ற இலக்குடன் அடைய முடியும் என்ற நம்பிக்கையுடன் ,அடையவேண்டும் என்ற விடாமுயற்சியுடன் ,வாழ்கையின் முன் ஓடிச்செல்லும் ஒரு சிலர்
யார் சாதிக்கிறாற்கள்?
சின்ன வெற்றிகளையும் தமக்கு சாதகமாக்கி கொண்டு தன்நம்பிக்கையுடன் தளராத உறுதியுடன் சிந்திப்பவர்களே சாதிக்கிறார்கள்.
சிந்தனை என்பது ஒரு வலிமையான ஆயுதம் சிந்தித்து சிந்திப்பதன் படி செயற்பட்டால் சிகரங்களும் சின்ன புள்ளிகளாகும்.
சிந்தனையே உங்களை சிறப்பாக்குகிறது நீங்கள் சிந்திக்கும் சிந்தனை சிறப்பாகவும்,நல்லவையாகவும் அமைந்திட்டால் நீங்களும் சாதனையாளார்தான்.
நகவிடுக்கில் ஊசிசோருகிடும்
பின்னிரவு நாயின் ஊளைச்சத்தம்
இதயத்தின் துடிப்புக்களை
காதுகள் உணரும்
நரகத்தின் வசல் வரை
உயிர் பயனமாகும்
கிரவல் வீதியில்
பூட்ஸ்காலின் ஓசை
தூசிகளாய் தங்கிவிடும்
மனவோரங்களில் மரணத்தின் வலிகள்
உயிரினை உருக்கிடும்
தேசத்தின் காற்றலைகளில்
குருதியின் வாசனை கலந்திருக்கும்

உண்ணா விரதப்போராட்டங்களாலும் கண்டனப்பேரணிகளினாலும் ஈழத்தமிழருக்கான ஆதரவுளை வெளிக்காட்டிவரும் தமிழக உறவுகளிற்கு.

நீங்கள் ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள்......

இதுவரை நீங்கள் இதுவரை நடத்திய இத்தகைய போராடடங்களால் விளைந்த பயன் என்ன? இந்தியா அரசாங்கம் சிறீலங்கா இராணுவத்திற்கான உதவிகளை நிறுத்திவிட்டதா? இல்லை சிறீலங்கா இராணுவத்திற்கோ அல்லது சிறீலங்கா அரசிற்கோ ஒரு கண்டனமாவது தெரிவித்ததா? இல்லவே இல்லை இதுவரை மறைமுகமாக செய்துவந்த உதவிகளை இப்போது நேரடியாக செய்கிறது. இதுதான் உண்மை.01003

உங்கள் தலைவர்கள் எங்கள் வாழ்க்கையை வைத்து அரசியல் நடதுகிறார்கள்.  திரையுலக நட்சத்திரங்கள் உண்ணாவிரதம் இருந்தால், சின்னத்திரை நட்சதிதிரங்களும் உண்ணா விரதமிருப்பார்கள் இது வெளிப்படை உண்மை. விஜய் இரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்தால், அஜித் இரசிகர்கள்..... . திரு.கருணாநிதி கவிதை எழுதினால்,திரு.வைகோபாலசமி..... சும்மாவாஇருபார் , சரி உங்க திரு.ஜெயலலிதா..... அடுத்து திரு.இராமதாசு என்ன செய்வாரு கடைசி ஒரு கண்டன அறிக்கையாவது விட்டிடமாட்டார்.

உங்களுக்கே இது சிரிப்பா இல்ல........... இதுதான் தமிழகம், தமிழக அரசியல், அதற்கு தமிழக மக்களும் துனைபோகிறார்கள். யார் அழைத்தாலும் கூட்டங்களுக்கு சென்றுவிடுகிறீர்கள். இது உங்களின் அறியாமையா? இல்லை ஈழத்தமிழர் மேல் உள்ள அனுதாபமா? புரியவிலை

தமிழகத்தில் நீங்கள்செய்துவரும் ஆதரவுநடவைக்கைகள் அனைத்தும் அர்தமற்றதாகிவிட்டது மன்னிக்கவும் உங்கள் தலைவர்களால் அர்த்தமற்றதாக்கப்பட்டுள்ளது. வார்தைகளில் வீரம்பேசும் தமிழக தலைவர்களுக்கு எங்களின் அபிலாசைகள் புரியாது.

நிலவில் இந்தியனின் கொடி பறக்க விட்டதை பெருமிதத்தோடு பார்க்கிறோம்।அதே நேரத்தில் தமிழனின் கொடியும் பறக்கும் நாள் வெகு தொலைவின் இல்லை என உறுதியிட்டு கூறலாம்।ஆமாம், அவன் தான் ஈழத்தமிழன்...ஒட்டை,பித்தளை,இரும்பை வைத்தே வானூர்தி அமைத்தவன் அவன்।

நெஞ்சு துடிக்கிறது...ஒரு பயங்கரவாத அரசு,தமிழ் இனத்தையே அழிக்க துடியாய் துடிப்பது।இந்த இனப்படுகொலைக்கு என் இந்திய அரசும் துணை போவதை வெட்கி தலை குனிகிறேன்.இந்திய அரசு ஆயுதம் மட்டுமா அளித்தது.....ஆளையும்காட்டியுமல்லவா கொடுக்கிறது.

இந்திய அரசே.....விழித்துகொள்....,ஈழத்தில் சாவும் அப்பாவி தமிழனினால், அதற்கு நீங்கள் துணை போவதால்.....எங்கள் இதயத்தினுள் உள்ள இந்தியன் செத்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்து விட வேண்டாம்.

உலகத்திற்கு தமிழனை "பயங்கரவாதி" என்ற போர்வை போர்த்த நினைக்கும் இலங்கையின் தந்திர வலையில் இந்தியா விழவேண்டாம்.அங்கு நடக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த இந்தியா தவறிவிட்டது.ராஜபக்சேவிடம் "கெஞ்சும்"நிலையை அடைந்தது கேவலமாக உள்ளது.இன்னும் நம்முடைய வெளியுறவு கொள்கை தெளிவாக இல்லை.யாசர் அராபத்துக்கு ஆதரவு அளித்தோம்...அவர்களும் ஆயுதம் தூக்கியவர்கள்தான்.தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?அவன் என்ன அகதியாய் வாழப்பிறந்தவனா?

பக்கத்து மாநிலம் போன்று இருந்த, நேபாளத்தில் என்ன நடந்தது?மன்னர்களுக்கு அசிங்கமாய் ஆதரவு அளித்தோம்...மக்கள் யாரிடம் இருக்கிறார்கள் எனத்தெரியாமல்...கடைசியில் தேர்தல் முடிந்தவுடன் அசிங்கப்பட்டது இந்தியா தான்.அதேபோன்ற தவறை எம் தமிழினத்தின் மீது செய்ய வேண்டாம்.

அசிங்கமாய் இறையான்மை பற்றி பேசுகிறோம்.இலங்கை ஒரேநாடாய் எப்போது ஆனது....தமிழன் தான் அங்கு ஆட்சிசெய்தவன். வரலாற்றை மாற்ற முடியாது, மக்களை அழித்துவிட்டு.

ஈழம் அமைந்தால், தமிழ்நாட்டு தமிழனும் தனிநாடு கேட்பான் என்பது பிதற்றுவாதம்.....ஏன் நாங்கள் கேட்க போகிறோம்....?சமஉரிமையுடன் வாழும் போது.....!

இலங்கை இப்போதே அதன் சித்து வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது.ஆயுதப் பிச்சை எடுக்க பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும்பறந்து கொண்டிருக்கிறான்.அவன் சுயரூபம் புரியாமல் , நாம்(இந்தியா) அசிங்கப்படப்போவது உறுதி!இப்போது கூட காலம் கடந்துவிடவில்லை..தமிழர் பகுதியில் குண்டுமழை பொழிந்தால் உறவை மறுபரீசீலனை செய்ய நேரிடும் எனக் கூறுங்கள்.அந்த உரிமை நமக்கு நிறையவே உள்ளது,ஏனெனில் அடிபட்டு அகதியாய்,வரப்போவது இந்தியாவுக்குத்தான்.

அய்யா..தமிழ்நாட்டு பதவி வெறியர்களே.....கண்ணீர் வடித்ததுபோதும்...கபட நாடகம் ஆடியது போதும்.செயலில் இறங்குங்கள்.....முதலாவதாக பா.ம.க மத்திய அரசிலிருந்து வெளிவரட்டும், எதுவும் நடக்காத பட்சத்தில் திமுகவும் வெளிவரட்டும்.அதன் பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகலாம்.

இதைக்கூட செய்யவில்லையெனில் நமக்கேன் தமிழன் பெயர்,கூட தமிழ்நாடு என்று....???
காலம் கடந்துவிடவில்லை.....செயல்படுங்கள்...தமிழினத்தை காக்க....உயிருடன் காப்பாற்ற..!!!!

கருத்துகள் இல்லை: