திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-09



கண்ணுற்றோர்: 259,111 :



கண்ணுற்றோர்: 361,338


www.youtube.com/watch?v=xbBsDOzxZlU

www.youtube.com/watch?v=PucI_AZLaA0

புதிய வரவுகளுக்குப் பார்வையாளர் சதவிகிதம் அதிகமாக இருப்பினும், இங்கே இளையராஜாதான் வென்றிருக்கிறார்.

பாலாவின் - நான்கடவுள் படத்தில் இளையராஜாவும் ரீமிக்ஸ் செய்துள்ளாராம்

டிரெண்ட் மைக்ரோ இண்டெர்னெட் செக்யூரிடி மென்பொருளின் நம்பகமான உரிமத்துடன் கூடிய லைசன்சு கீ இலவசமாகக் கிடைக்கிறது.
இணையத்தில் உலாவும்போதும்,பணப்பரிமாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போதும் தீய பயன்பாடுகளில் இருந்து கணினியைப் பாதுகாக்கும் ஒரு பயன்பாடுதான் டிரெண்ட் மைக்ரோ இண்டெர்னெட் செக்யூரிடி.

இதன் லைசன்சு உரிமம் இலவசமாக இணையத்தில் கிடைத்தது.
ஒரு ஆண்டுக்கான பணம் கிட்டத்தட்ட 50$. மொத்தம் 3 ஆண்டுகளுக்கு 150$ கட்டினால் கிடைக்கக் கூடிய பாதுகாப்பு இலவசமாகக் கிடைப்பது என்பது ஒரு நம்பமுடியாத செயலாக இருந்தாலும், ஏற்கனவே நிறுவியிருந்த 15 நாள் டிரையல் வெர்சன் ஆன நார்ட்டனை கணினியிலிருந்து காலி செய்துவிட்டு, டிரெண்ட் மைக்ரோவை இணையிறக்கி நிறுவினேன்.

புதிய சாவியையும் கொடுத்தேன். சாவியை ஏற்றுக்கொண்டு புதிய வைரஸ் படிவங்களை அப்டேட்டும் செய்துவிட்டது. காலாவதிதேதியை செப்டம்பர் 29, 2011 என்று காட்டுகிறது. ஏற்கனவே கணினியில் இருந்த தொற்றுகளையும் நீக்கிவிட்டது.

விண்டோஸ் விஸ்ட்டா மற்றும் எக்ஸ்ப்பி இயங்குதளங்களுக்கு ஏற்புடையதாக உள்ளது.

இணையிறக்கச் சுட்டி : http://www.trendmicro.com/download/product.asp?productid=32

இதில் டிரெண்ட் மைக்ரோ இண்டெர்னெட் செக்யூரிட்டி 2008க்கான டவுன்லோட் லின்க்கை க்ளிக் செய்து தரவிறக்கம் செய்யவும். கணினியில் அதை இன்ஸ்டால் செய்யவும்.

பிறகு PFEP-9991-7436-4997-1545 சாவியைக் கொடுத்ததும், டிரெண்ட் மைக்ரோ தளத்துடன் இணைந்து சாவியை ஒப்பிட்டுப் பார்க்கிறது. நல்ல சாவிதான் எனக் கூறிவிட்டு புதிய வைரஸ் எதிர்ப்புப் படிவங்களை அப்டேட் செய்வதற்கு அனுமதியளித்து அப்டேட்டும் செய்கிறது.


இதை நான் கண்ட இடம் :
http://www.fatwallet.com/forums/hot-deals/875094/
http://www.sccoast.net/tools/internetsecurity/
http://www.sccoast.net/tools/internetsecurity/faq.php

இது போன்ற தொழில்நுட்பப் பதிவுகள் : ஆங்கிலத்தில்

உங்கள் கோப்புகளை ஏதேனும் கோப்புப்பகிர்வான் (File sharing) தளங்களில் ஏற்றி அதன் சுட்டியை நண்பர்களுக்குக் கொடுத்து அவர்களை இணையிறக்கம் (Download) செய்யச் சொல்லி கோப்புகளைப் பகிர்ந்து மகிழ்ந்தவர்கள் இணையத்தில் எத்தனையோ பேர்.



அதுபோல உங்கள் கணினியின் திரையை தொலைவில் உள்ள நண்பர்கள் பார்ப்பதற்கும், அங்கே இருந்தபடி உங்கள் கணினியையே இயக்கவும் உதவும் ஒரு மென்பொருள்தான் டீம்வியூவர்.


சில வினாடிகளுக்குள்ளாகவே உலகின் ஏதோ ஒரு இடத்தில் உள்ள நண்பரது கணினியையும், உங்களது கம்ப்யூட்டரையும் இணைத்து அவரது கணினியை நீங்களும், உங்கள் கணினியை அவரும் இயக்கலாம்.

கோப்புகளைப் பகிர்வதும், இணைய அரட்டை (chat) அடிப்பதும் இதில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.

வணிக ரீதியில்லாத, தனிமனிதப் பயன்பாடுகளுக்கு இந்த அப்ளிகேசன் இலவசமாகவே கிடைக்கிறது.

தொலைதூரத்தில் உள்ள சர்வர்களை (remote server) இங்கிருந்தே இயக்கவோ, மறுபடி துவக்கவோ (Reboot) இயலும்.

நிறைவான பாதுகாப்பையும் (hight security), அது உயர் வேகத்தையும் டீம்வியூவரிடம் எதிர்பார்க்கலாம்.

ஃபயர்வால் (firewall) பாதுகாப்புச் சுவர் போன்றவற்றை பல நேரங்களில் ரிமோட் டெஸ்க்டாப் (Remote Desktop) ஊடுருவாது.

ஆனால் ஃபயர்வால் பிரச்சினைகளை டீம்வியூவர் எதிர்கொள்வதில்லை. ஏதேனும் ஒரு மென்பொருள் பயன்பாட்டை கணினியில் install செய்வதற்கு அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமம் தேவைப்படும். ஆனால் டீம்வியூவரை இன்ஸ்டால் செய்வதற்கு Administrator உரிமம் தேவைப்படாது.

http://www.teamviewer.com/

முளையிலேயே வெறுப்பு

பார்ப்பனர் தங்கள் குழந்தைகளை சிறுபிராயம் முதற் கொண்டே நம்மை தாழ்ந்த ஜாதியார் என்று நினைக்கும்படி பழக்கி வருகிறார்கள். அதாவது, தங்கள் குழந்தைகளை "அடி!அடி!! அவள் மீது படாதடி; அவள் சூத்திரச்சிடி; அவள் மீது பட்டு விட்டையே! போய் பாவாடையை நனைத்து குளித்து விட்டுவா" என்று பெண் குழந்தைகளுக்கும், அடே சூத்திரன்கள் மேலெல்லாம் பட்டு அவன்களை தொட்டுட்டு வந்துட்டையே! போ! போ! போயி குளிச்சுட்டு வா என்றும், பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குப் போனவுடன் பாவாடையை அவிழ்த்து வை, துண்டை அவிழ்த்து வை என்றும் சொல்லி நம்மிடம் அதுகளுக்கு ஒரு இழிவைச் சொல்லி கற்பிக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் ஏதாவது ஏனம்மா பள்ளிக்கூடத்திற்கு போனதற்காக துண்டை அவிழ்த்து வைக்கச் சொல்லுகிறாய் என்று கேட்டால், "என்னடி அங்கு போய் சூத்திரக் குட்டிகளோடு நெருங்கி உட்கார்ந்து அவர்களை எல்லாம் தொட்டுவிட்டு இங்கு வந்து வீட்டிற்குள் புகலாமா?" என்கிறார்கள். இதிலிருந்து அந்தக் குழந்தைகளுக்கு முளையில் இருந்தே பிராமணரல்லாதாரிடம் அருவருப்பும், அவர்கள் தொடக் கூடாத ஜாதி என்கிற உணர்ச்சியும் ஏற்பட்டு விடுகிறது.

இந்தக் கொடுமைகளையெல்லாம் நமது பெரியவர்கள் அறிந்தேதான் பார்ப்பனன் என்பது அமங்கலவஸ்த்து வென்றும், அவனைக் காண்பதே சகுனத் தடை, அதாவது கெட்ட சகுனம் என்றும், நாம் போகும் காரியங்கள் அவன் கண்ணுக்குத் தெரிந்தால் கூட அவற்றைக் கெடுத்துதான் வாழப் பார்ப்பான் என்கிற எண்ணமும் அதில் வைத்து அவ்வளவு தாழ்மையாய் கருதி அனுபவத்தில் நமது பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்து வந்தார்கள்.

ஆனால், நாம் அவற்றையெல்லாம் மறந்து அதற்கு நேர் விரோதமாய் பார்ப்பனர் எழுதி வைத்ததை ஒப்புக்கொண்டு நாமும் நம்ம குழந்தைகளுக்கு அய்யர் மேல் பட்டுவிடாதே, அம்மாமி மேல் பட்டு விடாதே, அவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுவதுடன் நாமும் நம்மைத் தாழ்ந்தவர்கள் என்றே நினைத்துக் கொள்கிறோம்.

ஆதலால் நமது குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடப் படிப்பிலிருந்தே இதை ஒரு பாடமாய் வைத்து இவைகளின் உண்மைகளைப் பற்றி சொல்லிக் கொடுத்து அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மாற்ற தகுந்த ஏற்பாடு செய்து வந்தால்தான் நமது சுயமரியாதையையாவது அடைய முடியும்.

------------------------ தந்தைபெரியார் - "குடிஅரசு" 5.9.26

கருத்துகள் இல்லை: