திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-07

விரும்பியோ விரும்பாமலோ சமுதாயம் என்பது மனிதனின் வாழ்வியல் அங்கமாகிவிட்டது. சமுதாயம் என்பது யாது? எனும் கேள்வியெழும் போது அது நாம் எனவும் நம்மை சார்ந்தது என்றேதான் பதிலாகிறது. ஒரு விடயத்தை பேசும் உரிமை பெறும் போது, நான் இந்த சமூகத்தின் அங்கம் ஆதலால் எனக்கு சமூகத்தைப் பேசவும் கேட்கவும் உரிமையுண்டு என்கிறோம்.

சமுதாய இணக்கத்தில் நம் அங்கமென்றாகும் போது பல விதிகளுக்கும் உட்படுகிறோம். அதை மனித நாகரீக வளர்ச்சியின் வித்துக்கள் என்கிறோம். மனித சமூகத்தில் முக்கியமாய் அமைவது நன்னெறி பண்புகள். பண் பட்டதால் பண்பு அல்லது பண்பாடு என்கிறோம்.

எதிலும் முதல் தாக்கம் என்பது மிக முக்கியமானது என அறிகிறோம். முதல் தாக்கமே நமது அடுத்த செயல்பாடுகளுக்கு அடிப்படையாய் விளங்குகிறது. சக மனிதர்களோடு பழகுகையில் அல்லது முக்கிய நபர்களின் மனதில் இடம் பிடிக்கவும் நம் மீது நன்மதிப்பும் நற்பெயரும் பெறவும் முதல் தாக்கத்தை வழியுறுத்திக் கூறப்படுகிறது. அது 'எதிக்ஸ்' எனும் பெயரில் பல நிறுவனங்களிலும் மேற்படிப்பகங்களிலும் கற்பிக்கப்படுகிறது. பொதுவாக ஐந்து வகைகளை நாம் அன்றாட வழக்கில் காண்கிறோம்.

அழைத்தல்

ஒருவரை சந்திக்கும் போது முறையாக அழைக்கப்படுவது மிக முக்கியம். இது அழைப்பவரின் முதிர்ச்சியையும் மன உறுதியையும் குறிப்பதாகச் சொல்வார்கள். தகுந்த வார்த்தை பிரயோகம் இங்கே வழியுறுத்தப்படுகிறது. அது போக அழைக்கப்படுபவரின் கண்களை பார்த்துப் பேசுவதும் முக்கியம். ஒருவரை பெயரிட்டு அழைப்பதைவிட 'ஐயா' 'அண்ணா' போன்ற சொற்களே நயமாக இருக்கும்.

கை குலுக்குதல்

கை குலுக்கும் முறையிலும் ஒருவரின் மன உறுதி வெளிபடும் என்பார்கள். தொட்டும் தொடாமலும் அல்லாமல் அதிக இறுக்கமாகவும் இல்லாமல் கை குலுக்குதல் நலம். கை குலுக்கல் ஒருவரை நம்மோடு நெருங்கச் செய்தலுக்கு அவசியமானது எனப்படுகிறது.


தயவு செய்து மற்றும் நன்றி

இன்று நன்றி சொல்வது வழக்குடைந்து வரும் விடயம் என்பதை யாரும் மறக்க இயலாது. இதன் காரணம் ஒரு செயல் அவரின் கடமை என நினைக்கத் தோன்றுவதே. உதாரணத்திற்கு உணவகத்தில் நமக்கு உணவு பரிமாறுபவருக்கு நம்மில் எத்தனை பேர் நன்றியுரைக்கிறோம். மாறாக தாமதமானால் கோபம் மட்டுமே கொள்கிறோம். ஒருவரை பணிக்கும் போது அதிகாரம் செலுத்துவதை விட தயவு செய்து எனவும் தயவு எனும் பணிவுக் கொண்டும் சொல்லப்படும் போது நமது பேச்சின் இறுக்கம் தளர்வடையும்.

மன்னிப்பு

மன்னிப்பு தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை என சினிமா வசனங்களை எளிமையாக பேசிவிடலாம். மன்னிக்க மனம் வேண்டும் என்பார்கள். தவறை உணர்ந்தவரே மன்னிப்பும் கோருவார். மனிதனாக பிறந்தவர் தவறு செய்யாமல் இருப்பவரும் அல்லர் அப்படி தவறு செய்தவர்கள் அனைவரும் திருந்தாமல் போனவர்களும் அல்லர். அடுத்தவரை பாதிக்கும் அல்லது கவனச் சிதறலுக்கு வழி வகுக்கும் சிறு நிகழ்வாகினும் மன்னிப்புக் கேட்பதில் தவறில்லை.


குறுக்கிடுதல்

ஒருவரின் காரியத்தில் குறுக்கிடுவது அவர்களின் கவனத்தையே அல்லது செயல் திறனையோ பதிப்படையச் செய்யும்.

இப்படியாக முக்கிய ஐந்து விடயங்களை நமது நடைமுறையில் காண்கிறோம்.
குளிர் கால ஆலாபனைகள்.
மரங்கள் மஞ்சள் ஆடையில்
ஆதவன் ஒளிந்து காணவில்லை.
வானமோ அழுது வழிந்தபடி.
முக்காடு போட்ட
முகமூடி மனிதர்கள்.
இதுதான் வெளிநாடு...


வெளிறிய அவிந்த முகங்கள்.
ஆணா பெண்ணா அறியமுடியா
அறிமுகமற்ற
அரை குறை அளவலாவல்.
காதிருந்தும் கேட்காத
வாயிருந்தும் பேசாத
நாடு இருந்தும்
நாடோடிகளாய் நாம்.


திட்டுகிறானா பேசுகிறானா
அணைக்கிறானா அழைக்கிறனா
புரியாத புதிய பத்துப் பாஷைகள்.
இதுதான் வெளிநாடு...


நாய்க்கு உணவா
நமக்கு உணவா
நாலு பாஷையில் எழுதியிருந்தும்
புரியவில்லை யாருக்கு என்று.
பனியில் உறைகிறோமா
மழையில் குளிக்கிறோமா
மூக்கும் காதும் விறைத்துவிட
பாதத்தில் பாரமாய்
பாதணிகளைச் சுமந்தபடி.


மனம் விம்மினாலும்
பணம் பணம் என்று
பிணமாய் திரிகிறோம்.
மாத முடிவில்
மொத்தமாய் கட்டுகின்ற
வீட்டு வாடகை முதல்
காப்புறுதிகள் வரை.
மிஞ்சுவதோ மொய் எழுத.
இதுதான் வெளிநாடு...


மின்சார மயத்தில்
இரவும் பகலும் கூட
இரவல் பொழுதாகி
மணிக்கூட்டு முட்களோடு
நாமும் முண்டி ஓட
தொலைந்த நேரங்கள்
கலைந்த நின்மதிகள்
வராத வசந்தங்கள்
தேடினாலும் கிடைக்காமல்
தூர நின்று கை காட்டும்.
வெளிநாடாம் இது!
இங்குதான் சொர்க்கமாமே!


சொந்த நாட்டில்
சுகங்களைத் தொலைத்துவிட்ட
பரதேசிகள் நாம்.
ஈழத் தமிழனின் விதியில்
திணித்துவிட்ட
சங்கதியில் இதுவும் ஒன்று.


இதுதான் வெளிநாடு!!!


ஹேமா(சுவிஸ்)(14.11.2000)
குளிர் கால ஆலாபனைகள்.
மரங்கள் மஞ்சள் ஆடையில்
ஆதவன் ஒளிந்து காணவில்லை.
வானமோ அழுது வழிந்தபடி.
முக்காடு போட்ட
முகமூடி மனிதர்கள்.
இதுதான் வெளிநாடு...


வெளிறிய அவிந்த முகங்கள்.
ஆணா பெண்ணா அறியமுடியா
அறிமுகமற்ற
அரை குறை அளவலாவல்.
காதிருந்தும் கேட்காத
வாயிருந்தும் பேசாத
நாடு இருந்தும்
நாடோடிகளாய் நாம்.


திட்டுகிறானா பேசுகிறானா
அணைக்கிறானா அழைக்கிறனா
புரியாத புதிய பத்துப் பாஷைகள்.
இதுதான் வெளிநாடு...


நாய்க்கு உணவா
நமக்கு உணவா
நாலு பாஷையில் எழுதியிருந்தும்
புரியவில்லை யாருக்கு என்று.
பனியில் உறைகிறோமா
மழையில் குளிக்கிறோமா
மூக்கும் காதும் விறைத்துவிட
பாதத்தில் பாரமாய்
பாதணிகளைச் சுமந்தபடி.


மனம் விம்மினாலும்
பணம் பணம் என்று
பிணமாய் திரிகிறோம்.
மாத முடிவில்
மொத்தமாய் கட்டுகின்ற
வீட்டு வாடகை முதல்
காப்புறுதிகள் வரை.
மிஞ்சுவதோ மொய் எழுத.
இதுதான் வெளிநாடு...


மின்சார மயத்தில்
இரவும் பகலும் கூட
இரவல் பொழுதாகி
மணிக்கூட்டு முட்களோடு
நாமும் முண்டி ஓட
தொலைந்த நேரங்கள்
கலைந்த நின்மதிகள்
வராத வசந்தங்கள்
தேடினாலும் கிடைக்காமல்
தூர நின்று கை காட்டும்.
வெளிநாடாம் இது!
இங்குதான் சொர்க்கமாமே!


சொந்த நாட்டில்
சுகங்களைத் தொலைத்துவிட்ட
பரதேசிகள் நாம்.
ஈழத் தமிழனின் விதியில்
திணித்துவிட்ட
சங்கதியில் இதுவும் ஒன்று.


இதுதான் வெளிநாடு!!!


ஹேமா(சுவிஸ்)(14.11.2000)
"கடந்த ஒரு மாத காலமாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போர்த் தாக்குதலைச் சிங்கள இனவெறி அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்பதைவிட, ஒட்டுமொத்த தமிழினத்தையும் வேரோடு அழிக்கும் கொடூரப் போரை நடத்தி வருகிறது, பாசிச சிங்கள அரசு. பல்குழல் பீரங்கிகளையும் அதி நவீனத் துப்பாக்கிகளையும் கொண்டும் விமானத் தாக்குதல் மூலமாகவும் கிளிநொச்சி பகுதியில் குண்டுமழை பொழிந்தும், கிளிநொச்சி நகரைத் தரைமட்டமாக்கியும் இறுதித் தாக்குதலுக்கான மூர்க்கத்துடன் சிங்கள இனவெறி பிடித்த இராணுவம் களமிறங்கியிருக்கிறது.

குண்டு வீச்சுத் தாக்குதலால் பிணமாகிக் கிடக்கும் பள்ளி செல்லும் குழந்தைகள், இரத்தக் கறையுடன் வீதியில் இறைந்து கிடக்கும் புத்தகங்கள், குவியல் குவியலாகப் பிணங்கள், படுகாயமடைந்து சிகிச்சை பெற வசதியின்றித் தவிக்கும் பச்சிளம் குழந்தைகள், வீடிழந்துபடுகாயமடைந்து சொந்த மண்ணிலே அகதிகளாகிக் காடுகளில் ஒளிந்து வாழும் அவலத்தில் தமிழ் மக்கள், உணவோ மருத்துவமோ கிடைக்காமல் பட்டினியாலும் நோயினாலும் பரிதவிக்கும் தாய்மார்கள், குழந்தைகள் — என ஈழத்தமிழர்கள் மாளாத் துயரில் சிக்கித் தவிக்கின்றனர்.
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
நாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் நாளும் தேடி
நலமில்லா நாரியரைக் கூடி,
பூப் பிளந்து புலபுலவென, கலகலவெனவரும்
புற்றுஈசல் போல பிள்ளைகளைப் பெறுவீர்
காப்பதற்க்கும் வழியறியீர், கைவிடவும் மாட்டீர்
ஆப்பசைத்த குரங்குதன் நிலை பட்டீரோ.

-பட்டின‌த்தார்.



More than a Blog Aggregator

by rammalar

Do more than exist. Live.

Do more than hear. Listen.

Do more than agree. Cooperate.

Do more than talk. Communicate.

Do more than grow. Bloom.

Do more than spend. Invest.

Do more than think. Create.

Do more than work. Excel.

Do more than share. Give.

Do more than decide. Discern.

Do more than consider. Commit.

Do more than forgive. Forget.

Do more than help. Serve.

Do more than coexist. Reconcile.

Do more than sing. Worship.

Do more than think. Plan.

Do more than dream.

Do more than see. Perceive.

Do more than read. Apply.

Do more than receive. Reciprocate.

Do more than choose. Focus.

Do more than wish. Believe.

Do more than advise. Help.

Do more than speak. Impact.

Do more than encourage. Inspire.

Do more than add. Multiply.

Do more than change. Improve.

Do more than reach. Stretch.

Do more than ponder. Pray.

Posted by Swathi Swamy

Thanks: http://swathi-swamy.blogspot.com/2007/03/do-more.html

      

கருத்துகள் இல்லை: