திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-07

சரண் இயக்கிய "ஜே ஜே' படத்தில் அறிமுகமான அமோகாவுக்கு அதன்பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் வரவில்லை. இதையடுத்து நிஷா கோத்தாரி என்ற பெயரில் ஹிந்திப் படங்களில் நடித்து வந்தார்.
ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

15. அண்டவெளியில் அதிசயம்

புவியியல் பேராசிரியர் சாம்பசிவம் தனது உரையை ஆரம்பிக்கும் பொழுது மதியம் மணி இரண்டுக்கு மேலாகிவிட்டது. நிறுத்தி நிதானித்துப் பேசும் அவர் பேச்சை மிக உன்னிப்பாக எல்லோரும் செவிமடுத்தனர்.

காலை யோகி குமாரஸ்வாமியின் உரை பிரபஞ்சத் தோற்றம் குறித்து உபநிஷத்துக்கள் என்ன சொல்கின்றன என்பதாய் இருந்ததினால், இப்பொழுது அந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி புவியியல் விஞ்ஞான உண்மைகளாய் இவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்கும் ஆவல் எல்லோருக்கும் இருந்தது.

பேராசிரியர் சாம்பசிவம் நிதானமாகத் தன் உரையை ஆரம்பித்தார்.
"நமக்குத் தெரிந்த சூரியனின் குடும்பத்தில் பூமியைச் சேர்த்து ஒன்பது கோள்கள். பல கோள்களுக்குத் துணைக்கோள்கள் உண்டு. கவிஞர் பாடிய வெள்ளை நிலாதான் பூமிக்குத் துணைக்கோள்; இயற்கையான துணைக்கோள். செவ்வாய்க்கு இரண்டு என்றால், வியாழனுக்குப் பதினாறு துணைக்கோள்கள்! இதுவரை கண்டுபிடிக்காத எத்தனையோ துணைக்கோள்கள் சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் அபிப்ராயப்படுகிறார்கள்.

"சூரியன், சந்திரன், மற்றும் வானவெளியிலும் மினுக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள்-- நமது புலனுக்குத் தெரியும் இவை சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளி மட்டுமே அண்டவெளியல்ல. மிகவும் சகிதிவாய்ந்த தொலை நோக்கியால் விண்வெளியைப் பார்த்தால், ஆச்சரியப்பட்டுப் போவோம். பிரகாசமிக்க ஒளிவெள்ள கோலாகலம் தான்! அந்த பால்வெளி வீதியில் ஒளிவெள்ளத்தைப் பீச்சியடிக்கும் பல கோடி விண்மீன்களின் சாகசம் தான் அந்த வெளிச்சத் திருவிழா!

"பால்வெளியைப் பற்றி இதுவரை நமக்குத் தெரிந்தவைகளை விட, தெரியாதவை அதிகம். பன்மடங்கு பெருக்கம் கொண்ட கோடிக்கணக்கான பால்வெளிகளின்தொகுப்பே அகண்டவெளி. கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங்கள்; கோடிக்கணக்கான விண்மீன்கள்! அந்தக் கோடியில் நமக்குத் தெரிந்த ஒரு விண்மீன்,சூரியன்! அவ்வளவுதான்!

"கற்பனைக்கும் விஞ்சிய அகண்டப் பெருவெளி இந்த அண்டவெளி. இன்னும் அறிய வேண்டிய இயற்கையின் சூட்சுமங்கள், அனந்த கோடி! ஒன்றுக்கு ஒன்றான ஈர்ப்பு விசையால் தான் அண்டத்திலுள்ள அனைத்தும் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பதை அறிவோம். இந்த ஈர்ப்பு விசை இற்றுப் போனதால், அண்டவெளியிலிருந்து காணாமல் போன அல்லது வெவ்வேறான திசைகளில் இடம் மாறிப்போனவை எத்தனையோ!

"ஆக ஒன்றுடன் ஒன்றான இந்த ஈர்ப்பு விசைதான் கோள்கள், விண்மீன்கள்
என்ற அத்தனையின் ஆக்கத்தையும், அழிவையும் தீர்மானிக்கின்றன். இதைத்
தவிர அண்டவெளியைப் பற்றிய ஒரு முக்கியமான சமாச்சாரம் சொல்ல
வேண்டும்" என்ற பேராசிரியர் சாம்பசிவம் தொண்டையைச் செருமிக் கொண்டார்.

(தேடல் தொடரும்)
நீங்கின் தெறூஉங் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள் (1104)

இந்தக்குறள் காமத்தைப்பற்றி மட்டுமே பேசுகிறது என்று புரிபவர்கள், ஸாரி இங்கேயே விலகிவிடலாம். (அன்றைய காலங்களில் காமம் என்ற சொல் இன்றைய காதலுக்கு ஒப்பாக பயன்படுத்தப்பட்டதெனவும், காதல் என்பது அன்பு என்ற சொல்லுக்கு இணையாக பயன்படுத்தப்பட்டதெனவும், இங்கே நான் காமம் என்று குறிப்பது நாம் அந்தச் சொல்லுக்கு உருவேற்றி வைத்திருக்கும் இன்றைய அர்த்தத்தில்தான் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்)

உணவு, உறக்கம், கடமை மறந்து காதலன் காதலியை நினைத்துக்கிடக்கிறான். அது எதனால்? அதன் பயன் என்ன.? காலம், காலன், மனிதன் இவற்றை மீறி யாராவது அவள் அவனுக்குத்தான் என்ற உறுதியைத் தந்துவிடமுடியுமா? அப்புறமும் ஏன் இப்படிக்கிடக்கிறான்.? ஒருபொழுதில் இருவரும் சுகித்துக்கிடக்கிறார்கள். அதன் நினைவுகளில் நீந்திக்கிடக்கிறானா? அவள் உயிரோடு ஒப்புக்கொடுத்திருக்கிறாளே? அந்தக்கனமா? அவள் அருகிருந்தால் இந்த வெளியுலகில் இயல்பாகத்தான் இருக்கிறான். சொல்லப்போனால் ஒருவருக்கொருவர் அடித்தும் கொள்கிறார்கள். அந்த‌ அன்போ? இவனுக்கான வார்த்தைகளை தேவ மொழிகளிலிருந்து திருடிக்கொண்டு வருகிறாள். காதோரம் கிசுகிசுக்கிறாள். அந்தப்போதையா?அருகில் செல்கையில் இதத்தையும், விலகிச்செல்கையில் வெப்பத்தையும் தரும் இந்த அற்புதத்தீயை எங்கே பெற்றாள் இவள்?

நேற்றிரவில் என் கன்னங்களில் நீர்..!


டிஸ்கி : "Warning to bachelors" தொகுப்பை எழுதிய தாமிரா ஊரிலில்லை எனவும் இது அவரது கோஸ்ட் எழுதியது எனவும் ஒப்புக்கொள்கிறோம்.

கடைசியில் எதனை எழுதக்கூடாது என்று எங்கள் பேனா முனைகள் தயங்கியதோ, அதை எழுதியே தீர வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இன்னமும் இதயத்தின் ஓரத்தில் கசியும் நம்பிக்கையின் கடைசித் துளி ஈரத்தில் எழுதப்படும் உணர்வின் வெளிப்பாடு இது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய், ஆழிப் பேரலைபோல் பொங்கி எழுந்த எம்மக்களின் உணர்வுகளை உண்டியல் ஓட்டைகளில் அடைக்க முயலும் உங்கள் ராசதந்திரங்கள் ஒரு புறம் அரங்கேற, தமிழ் மக்களின் பிணங்களின் மீது ஏறி தொலைந்து போன தங்கள் முகவரியைத் தேடி அலையும் காங்கிரஸ் கணவான்கள் ஒருபுறம், எம்.ஜி.ஆரின் பின வண்டியில் துவங்கிய அரசியல் பயணத்தை, ராசீவின் உடல் சிதறல்களில் வேகப்படுத்தி, ஈழத் தமிழர்களின் கல்லறைகளில் நிறைவு செய்யத் துடிக்கும் பார்ப்பன பனியா ஜெயலலிதா கும்பலின் கால்களில் விழுந்து கிடந்த போதே தமிழர்களின் அரசியல் அறிவு மழுங்கிப் போனது.
கடைசியில் எதனை எழுதக்கூடாது என்று எங்கள் பேனா முனைகள் தயங்கியதோ, அதை எழுதியே தீர வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இன்னமும் இதயத்தின் ஓரத்தில் கசியும் நம்பிக்கையின் கடைசித் துளி ஈரத்தில் எழுதப்படும் உணர்வின் வெளிப்பாடு இது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய், ஆழிப் பேரலைபோல் பொங்கி எழுந்த எம்மக்களின் உணர்வுகளை உண்டியல் ஓட்டைகளில் அடைக்க முயலும் உங்கள் ராசதந்திரங்கள் ஒரு புறம் அரங்கேற, தமிழ் மக்களின் பிணங்களின் மீது ஏறி தொலைந்து போன தங்கள் முகவரியைத் தேடி அலையும் காங்கிரஸ் கணவான்கள் ஒருபுறம், எம்.ஜி.ஆரின் பின வண்டியில் துவங்கிய அரசியல் பயணத்தை, ராசீவின் உடல் சிதறல்களில் வேகப்படுத்தி, ஈழத் தமிழர்களின் கல்லறைகளில் நிறைவு செய்யத் துடிக்கும் பார்ப்பன பனியா ஜெயலலிதா கும்பலின் கால்களில் விழுந்து கிடந்த போதே தமிழர்களின் அரசியல் அறிவு மழுங்கிப் போனது.
மகாராஷ்டிர மாநில காவல்துறையில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து, சிறுபான்மை கல்வி கூட்டமைப்பின் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவர் சிறப்பு காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்படுவார். இதன் மூலம், முஸ்லிம் இளைஞர்கள் காவல்துறை பணியில் சேர மேலும் வாய்ப்புகள்

கருத்துகள் இல்லை: