புதன், 19 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-15

இன்றைக்கு அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவலாகி நிற்கின்றன. சந்தை சுதந்திரத்தை வலியுறுத்தி பல கோடிகளை சுருட்டிய முதலாளித்துவம் (முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் - ஏகாதிபத்தியம்) இவ்வளவு காலம் தண்ணீர் தொட்டிக்குள் நின்று கொண்டிருந்தது. தண்ணீர் இறங்கியதும் அதன் அம்மணத்தை உலகம் இன்றைக்கு பார்த்து காறித்துப்புகிறது.

முதலாளித்துவத்தின் கட்டமைப்பிலேயே எல்லா கோளாறுகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றாக பார்க்கலாம். அந்த வரிசையில் முதலில் ...

முதலாளித்துவ பொருளாதாரம்

நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் காரணங்களாய் வரையறுப்பது.

1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
2. அந்நிய செலாவணி அதிகரிப்பு
3. பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகரிப்பு
4. ஏற்றுமதி அதிகரிப்பு
5. நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு

கவனியுங்கள்
- மக்களின் வாழ்க்கைத்தரம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் – இதெல்லாம் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள் இல்லை.

• மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தால், பல்வேறு தொழில்களை நடத்தி வரும் முதலாளிகளின் கைகளுக்கு லாபம் போகிறது. உற்பத்தி அதிகமானால், ஏற்றுமதி அதிகமாகும். அதன் விளைவாக அந்நிய செலாவணி கையிருப்பு அதிகமாகும். இதில் பெரும்பான்மையான மக்களுக்கு எதுவும் கிடைக்க என்ன இருக்கிறது.

• பங்குச் சந்தை மதிப்பு உயர்வது, உண்மை மதிப்பு அல்ல! காகித மதிப்பு தான். சூதாடிகள் செயற்கையாக ஏற்றுகிறார்கள், இறக்க வைக்கிறார்கள். இதில் பெரும்பான்மையான மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. மாறாக அத்தியாவசிய பொருட்களில் இவர்கள் ஊக பேர வணிகத்தில் விளையாடி, கொள்ளையடித்து விலையை ஏற்றிவிடுகிறார்கள்.

• நிதி நிறுவங்களின் லாபம் - ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு நிறுவனமும் கணக்கு காட்டுகிறார்கள். 99% நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தை 10% தான் காட்டுகின்றன. நட்ட கணக்கு கூட காண்பிப்பார்கள். அதில் வேறு சங்கடங்கள் இருப்பதால், தவிர்க்க முடியாமல், லாப கணக்கு காண்பிக்கிறார்கள். இந்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி விலக்கு, பல மான்யங்களை அள்ளி வழங்குகின்றன. ஆனால், லாப வெறி கொண்ட பன்னாட்டு நிறுவங்கள் தனது லாபத்தை குறைத்து காட்டுகின்றன. தில்லியில் தணிக்கையாளர்களுக்கான நடந்த சிறப்பு கூட்டமொன்றில் நிதியமைச்சர் சிதம்பரம் இது குறித்து நிறைய வருத்தப்பட்டார்.(!)

கேள்வி: கோயில் என்பது என்ன? பிரார்த்தனை என்றால் என்ன?

பதில்: கோயில் என்பது கடவுளின் படுக்கை அறை. அங்கு பக்தர்கள் கூடி நின்று தூங்கும் கடவுளைத் துயிலெழுப்புவதே பிரார்த்தனையாகும்.

-------------------------------- அறிஞர் அண்ணா,"திராவிட நாடு" பொங்கல் மலர் 1956
சந்திப்பு முடிந்து உடனே அலுவலகம் வரவேண்டியிருந்ததால் இந்தப் பதிவை எழுதச் சாத்தியமாயிற்று. இல்லையென்றால் திங்கட்கிழமைதான் எழுத முடிந்திருக்கும். முந்தைய பதிவில் கூறியிருந்தபடி சட்டக்கல்லூரி விவகாரம் குறித்து என்னுடைய புரிதலை இன்னும் விரிவாக்கிக் கொள்ளமென விரும்பியதால் அது குறித்து நடக்கவிருந்த வலைப்பதிவர் சந்திப்பிற்குச் சென்றிருந்தேன். யார் யார் வந்திருந்தார்கள், என்னென்ன சாப்பிட்டோம் என்ற


More than a Blog Aggregator

by புதுகைச் சாரல்

சட்டக்கல்லூரி கலவரம் - போலீசுக்கு பாராட்டு


சட்டக்கல்லூரி கலவரம் பற்றி பல பதிவர்கள் எழுதி தீர்த்து விட்டார்கள்..


அதனால் நான் சொல்ல வருவதை சுருக்கமாக சொல்லி விடுகிறேன்..வழக்கமாக போலீசுக்கு ஒரு கொள்கை உண்டு. பொது இடத்தில் இல்லாமல், பொது மக்களுக்கு இடையூறு செய்யாமல் இரண்டு ரவுடி கும்பல்கள் சண்டையிட்டு கொண்டால் பெரும்பாலும் தலையிட மாட்டார்கள்..


இதற்கு பல உதாரணங்கள் உண்டு.ஏனெனில் எந்த ரவுடி கும்பலில் எவன் செத்தாலும் போலீசுக்கும் சமுதாயத்திற்கும் லாபமே. இதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை..


சட்டக் கல்லூரி கலவரத்திலும் போலீசார் இந்த அணுகுமுறையையே பின்பற்றி இருப்பதாக தெரிகிறது. அடிதடி நடந்த இடம் ட்ரெயின் ஸ்டேஷனோ, இல்லை மக்கள் வந்து போகும் இடமோ இல்லை. கல்லூரி உள்ளே நடந்து இருக்கிறது..சரி, சண்டை போட்டது யார்? படத்தில் ஒருவன் கத்தியுடன் ஓடி வருகிறான்..மற்றொரு கும்பல் உருட்டு கட்டை, இரும்பு கம்பியுடன் திரிகிறது.உண்மையில் மாணவர்களாய் இருந்தால், கத்தியும் இரும்பு கம்பியும் எப்படி வரும்? ஆக இவர்கள் மாணவர்கள் என்பதை விட, ரவுடிகள் என்பது தான் சரி.


கல்லூரிக்கு வருவதாலேயே எல்லாரும் மாணவ மணிகள் என்று ஆகிவிட முடியாது..ஆக அடித்துக் கொண்டிருப்பது இரண்டு ரவுடி கும்பல்கள் என்று தெரிகிறது. இந்த‌ கும்ப‌லில் எவ‌ன் ஒழிந்தாலும் யாருக்கு ந‌ஷ்ட‌ம்? இவ‌ர்க‌ளா வ‌ந்து ச‌ட்ட‌த்துறையை காப்பாற்ற‌ போகிறார்க‌ள்? இல்லை ச‌ட்ட‌ மேதைக‌ளாக‌ போகிறார்க‌ளா??நாட்டுக்கு ந‌ஷ்ட‌மா? ச‌முதாயத்திற்கு ந‌ஷ்ட‌மா? ஒரு வேளை அவ‌ர்க‌ள் வீட்டுக்கு வேண்டுமானால் ந‌ஷ்ட‌மாக‌ இருக்க‌லாம்..


ஆனால், இத்த‌கைய‌ பிள்ளைக‌ள் இருப்ப‌தை விட‌ இல்லாம‌ல் இருப்ப‌தே நல்லது என்று அவ‌ர்க‌ள் கூட‌ நினைக்க‌க்கூடும்..இப்ப‌டிப்ப‌ட்ட‌ ர‌வுடி கும்ப‌லில் எவ‌ன் ஒழிந்தாலும் ச‌ரி என்று "க‌ண்டுக்காம‌ல்" விட்ட‌ காவ‌ல் துறையை பாராட்டுகிறேன்!

கருத்துகள் இல்லை: