திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-07

அரசியல் ஆசை நடிகர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ? ரசிகர்களுக்கு Vijayஇருக்கிறது. லேட்டஸ்டாக தனது ரசிகர்களை உசுப்பேற்றியிருக்கும் விஜய், பொதுநல நோக்கத்தோடு ஒரு விஷயத்தை அறிவித்தார். ஆனால் அவரே வியக்கும் விதத்தில் செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்புங்கள் என்று தனது ரசிகர்களை கேட்டுக் கொண்ட விஜய், ஃபெப்சி உண்ணாவிரத பந்தலில் இதுபற்றி விவரங்களை அப்டேட் செய்தார். இதுவரை விஜய் ரசிகர்கள் 30 ஆயிரம் தந்திகள் அனுப்பியிருக்கிறார்களாம் பிரதமருக்கு.

இன்னும் தொடர்ந்து அனுப்ப வேண்டும் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய். இதற்கிடையில் ஈழத் தமிழர் நிவராண நிதியாக 12 லட்சத்தை கொடுத்த லாரன்ஸ், உங்களை வாழ வைத்த தமிழனுக்காக நீங்கள் இன்னும் நிறைய செய்திருக்கலாமே என்று விஜயிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். குடுமிப்பிடி சண்டை ஆரம்பிச்சிடுச்சுப்பா...

ரசிகர்கள் அனுப்பிய 30 ஆயிரம் தந்தி
பெருமைப்படுகிறார் விஜய்

அரசியல் ஆசை நடிகர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ? ரசிகர்களுக்கு Vijayஇருக்கிறது. லேட்டஸ்டாக தனது ரசிகர்களை உசுப்பேற்றியிருக்கும் விஜய், பொதுநல நோக்கத்தோடு ஒரு விஷயத்தை அறிவித்தார். ஆனால் அவரே வியக்கும் விதத்தில் செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்புங்கள் என்று தனது ரசிகர்களை கேட்டுக் கொண்ட விஜய், ஃபெப்சி உண்ணாவிரத பந்தலில் இதுபற்றி விவரங்களை அப்டேட் செய்தார். இதுவரை விஜய் ரசிகர்கள் 30 ஆயிரம் தந்திகள் அனுப்பியிருக்கிறார்களாம் பிரதமருக்கு.

இன்னும் தொடர்ந்து அனுப்ப வேண்டும் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய். இதற்கிடையில் ஈழத் தமிழர் நிவராண நிதியாக 12 லட்சத்தை கொடுத்த லாரன்ஸ், உங்களை வாழ வைத்த தமிழனுக்காக நீங்கள் இன்னும் நிறைய செய்திருக்கலாமே என்று விஜயிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். குடுமிப்பிடி சண்டை ஆரம்பிச்சிடுச்சுப்பா...

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலகினால் தானும் பதவி விலகத் தயாராக இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்திய பார்மாசூடிக்கல் கம்பெனியான ரான்பாக்ஸியின் 63.92 சதவீத பங்குகளை ஜப்பானின் டெய்ச்சி சான்க்யோ நிறுவனம் முறையாக வாங்கிக்கொண்டது. ரான்பாக்ஸியில் மல்விந்தர்மோகன் சிங் குடும்பத்திற்கு இருந்த 34.8 சதவீத பங்குகளை வாங்கியதன் மூலம் டெய்ச்சி கைக்கு மொத்தம் 63.92 சதவீத பங்குகள் வந்துள்ளன. நாங்கள் வாங்க திட்டமிட்டிருந்த பங்குகளை எல்லாம் வாங்கி விட்டோம் என்று டெய்ச்சி சான்க்யோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தகாஸி ஷோடா தெரிவித்தார். இதனை ரான்பாக்ஸியின் தலைமை செயல் அதிகாரி மல்விந்தர் மோகன் சிங்கும் ஒத்துக்கொண்டார். கடந்த ஜூன் மாதத்தில் ரான்பாக்ஸியில் மல்விந்தர் சிங் குடும்பத்திற்கு இருக்கும் பங்குகளில் 34.8 சதவீத பங்குகளை வாங்கிக்கொள்வதாக ஒப்பந்தம் செய்திருந்தது. மேலும் வெளி சந்தையில் பங்கு ஒன்றுக்கு ரூ.737 என்ற விலை வைத்து 20 சதவீத பங்குகளையும் ரூ.22,000 கோடிக்கு அது வாங்கியது. இதன் மூலம் டெய்ச்சிக்கு மொத்தம் 63.92 சதவீத பங்குகள் வந்து விட்டன. மேலும் ரான்பாக்ஸியுடன் கூட்டு வைத்திருக்கும் இன்னொரு நிறுவனமான ஜெனோடெக்கின் பங்குகளையும் வாங்கிக்கொள்ள ஒப்பந்தம் செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்
மலேஷியாவை சேர்ந்த குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் - ஏசியா, டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து கோலாலம்பூருக்கும் திருச்சிக்குமிடையே தினசரி நேரடி விமான சேவையை துவங்குகிறது. டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு அனுப்ப இருக்கும் நேரடி விமான சேவைக்காக புத்தம்புது ஏர்பஸ் ஏ - 20 விமானத்தை ஏர் -ஏசியா பயன்படுத்த இருக்கிறது என்று ஏர் - ஏசியா வெளியிட்ட செய்தி குறிப்பு சொல்கிறது. மேலும் இதனை கொண்டாடும் விதமாக, கோலாலம்பூரில் இருந்து திருச்சி வர ரூ.699 மட்டும் ( ஏர்போர்ட் டாக்ஸ்கள், எரிபொருள் சர்சார்ஜ் தனி ) ஸ்பெஷல் கட்டணமாக வசூலிக்க அது முடிவு செய்திருக்கிறது. ஆனால் இந்த குறைந்த கட்டணத்திற்கான டிக்கெட்டை பயணிகள், அக்டோபர் 30ம் தேதியில் இருந்து நவம்பர் 9 ம் தேதிக்குள் வாங்கி விட வேண்டும். பயண நாள் அடுத்த வருடம் ஜூலை 31 க்குள் இருக்கலாம். திருச்சியை தவிர மற்ற இந்திய நகரங்களுக்கும் இன்னும் ஒன்றரை வருடத்தில் நாங்கள் விமான சேவையை துவங்க திட்டமிட்டிருக்கிறோம் என்று ஏர் - ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஃபெர்ணான்டஸ் தெரிவித்தார்.சென்னை, கோல்கட்டா, கொச்சி, பெங்களுரு நகரங்களுக்கும் அதன் பின் புதுடில்லி மற்றும் மும்பைக்கு விமான சேவை நடத்த நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம் என்றார் ஃபெர்ணான்டஸ்.
நன்றி : தினமலர்
பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு பற்றி இன்னும் அரசு யோசிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, பெட்ரோலியத் துறை செயலர் ஆர்.எஸ் பாண்டே நிருபர்களிடம் கூறியதாவது: தற்போதைய நிலையில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைப்பு பற்றி எவ்வித பரிசீலனையும் செய்யப்படவில்லை. பெட்ரோல் விற்பனையின் மூலம் கிடைக்ககூடிய லாபம் கணிசமாக அதிகரித்த போதிலும் டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டருக்கு அளிக்கப்படும் மானியத்தை ஈடுகட்ட வேண்டியுள்ளது. மேலும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு நிலை இல்லாமல் ஏற்றம் இறக்கத்தில் உள்ளது.
பனிரெண்டு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மூலம் லாபம் ஈட்ட துவங்கியுள்ளன. இருப்பினும் மற்ற மூன்று வகைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.155 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை: