வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-13


இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பையும் நலன்களையும் உரியவகையில் பேணுமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மன்மோகன்சிங்கிடம் வலியுறுத்தியுள்ளார்.
புதுடில்லியில் இன்று இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த வலியுறுத்தலை இந்திய பிரதமர் விடுத்தார். இதற்கு முன்னதாக தாம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் முகமாகவே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்துவதாகவும், அரசியல் தீர்வைக்காணும் முன்னர் பயங்கரவாதத்தை ஒழிப்பதே தமது நோக்கம் என்றும் மஹிந்த ராஜபக்ச, மன்மோகன் சிங்கிடம் தெரிவித்துள்ளார் இதன் போது தமது கருத்தை வெளியிட்ட இந்திய பிரதமர், பயங்கரவாதத்தை ஒழிக்கும் போராட்டத்தின் போது அப்பாவி தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார். 

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த மஹிந்த ராஜபக்ச,  தாம்  தமிழர்களின் பாதுகாப்புக்கான  உறுதிப்பாட்டை இந்திய பிரதமரிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார். தாம் தங்களின் மக்களை பார்த்துக்கொள்வோம் என்றும் அது தமது கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். தாம் முதலில் பயங்கரவாதத்தை ஒழித்த பின்னரே இனப்பிரச்சினைக்கான தீர்வை காணப்போவதாக குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை களைந்தப்பின்னரே அவர்களுடன் பேச்சு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையின் 13 வது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டம் தமிழர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கவுள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
--
People Of Thambiluvil www.thirukkovil.com



More than a Blog Aggregator

by தபால்காரர்
Are you a Sinhala stooge or Indian Prime Minister? shame on you Mr.Prime Minister!Shame on you!!! Shame on you Mr.Manmohan singh! Aren't you aware of the news of Indian Tamil fisherman getting killed by sadistic Sinhala srilankan army.This news has now become a daily incident in Raameswaram and Nagapattinam districts in Tamil Nadu.And worse,you give weapons to Srilankan army which they use to
அருவாவும் கம்புமா கதாநாயகன் திரிவதை கை கொட்டி இரசிக்குறோமே? அப்பிடிச் செய்யலாமா?? அந்தத் திரைபடந்தானே வெள்ளி விழா, வைர விழாக் காணுது?!

இவன் நம்ம பயன்னு சொன்னவுடனே, மனசு நெகிழுதே? அப்ப மத்த பயலுவ??

சட்டசபைத் தொடர்ன்னா, உள்ளயோ அல்லது வெளிலயோ எதோ ஒரு அசம்பாவிதம் காலங் காலமா நடக்குதே? அதுக்கு யார் காரணம்??

மொழிக்கும், தமிழ் இனத்திற்கும், சமுதாயத்திற்குமான‌ ஒரு அறப் போராட்டம்ன்னு வந்தா, கிடைச்ச‌து வாய்ப்புன்னு நல்லா ஒக்காந்து வடை போண்டா சாப்ட்டுட்டு காணொளியில காலத்தை ஓட்டுற நாம, சங்கத் தலைவனுக்கு ஒன்னுன்னா கெடந்து தவிக்கறமே?

அந்த‌ நேர‌த்துக்கு உண‌ர்ச்சியில‌ ப‌ரிதாப‌த்தைக் கொட்டிட்டு, அப்புற‌மா எல்லாத்தையும் ம‌ற‌ந்து போற‌மே?

சிவ‌காசிக் க‌ல‌வ‌ர‌ம்ன்னா யாருக்காவ‌து தெரியுமா? அதில இருந்து நாம‌ க‌த்துகிட்ட‌து என்ன‌??

எய்த‌வ‌ன் இருக்க‌ அம்பை நொந்து ப‌ய‌னில்லை!

குற்ற‌ம் புரிந்த‌வ‌ர்க‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்கள், அது யாராக‌ இருப்பினும்!!

அதற்கு முன்பாக, நாம் திருந்த வேண்டியவர்கள்!!!

இது எனக்கும் பொருந்தும். சுய பரிசோதனைக்கான‌ தருணம் இது!



More than a Blog Aggregator

by kuppusamy


கருவேல்.

1. மூலிகையின் பெயர் -: கருவேல்.

2. தாவரப்பெயர் -: ACACIA ARABICA.

3. தாவரக்குடும்பம் -: FABACEAE.

4. வேறு பெயர்கள் -: BABUL.


5. பயன் தரும் பாகங்கள் -: கொழுந்து, இலை, வேர்ப்பட்டை, மரப்பட்டை, மற்றும் பிசின்.

6. வளரியல்பு -: கருவேல் ஒரு கெட்டியான மரம். சுமார் 25 அடி முதல் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. தமிழகம் எங்கும் தரிசு நிலங்களிலும், மலைகளிலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கக் கூடியது. இதன் இலைகள் இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளை யுடையது. இலைகள் கால் அங்குல நீளத்தில் 10 - 12 இலைகளையுடையது, காய் சுமார் 6 அங்குல நீளமுடையது அதில் 8 -12 கொட்டைகள் இருக்கும். இந்த மரத்தில் கிளைகளில் வெண்மையான முட்கள் இருக்கும்.. மரபட்டைகள் வெடித்தும் கருப்பாகவும் மரக்கலராகவும் இருக்கும். மலர்கள் மஞ்சள் நிறமானவை அரை அங்குல விட்டமுடையவை. இவை ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பூக்கும். காய்கள் வெண்ணிறமான பட்டை வடிவானவை. விதைகள் வட்ட வடிவமானவை. வெள்ளாடுகள் காய்களை விரும்பிச் சாப்பிடும்.

7.மருத்துவப்பயன்கள் -: கருவேலம் பட்டை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். பிசின் சளியகற்றி தாதுக்களின் எரிச்சசல் தணிக்கும், காச்சல், வாந்தி, இருதயநோய், நமச்சல், மூலம், வயிற்றுக்கடுப்பு, நுரையீரல் நோய், கிட்னி சம்பந்தமான நோய்கள் குணமடையும். காமம் பெருக்கும், கொழுந்து தாதுக்களின் எரிச்சல் தணித்து அவற்றைத துவளச்செய்யும், சளியகற்றும்.

இலையை அரைத்துப் புண்கள் மீது வைத்துக் கட்ட விரைந்து ஆறும்.

துளிர் இலைகளை 5 கிராம் அளவுக்கு மசிய அரைத்து மோரில் கலக்கிக் காலை மாலையாகக் குடித்து வரச் சீதக் கழிச்சல் வெப்புக் கழிச்சில் பாஷண மருந்து வீறு ஆகியவை தீரும்.

இலையை அரைத்து இரவு தோறும் ஆசனவாயில் வைத்துக் கட்டி வர மூலம் குணமாகும்.

இளம் வேர் 20 கிராம் நன்கு நசுக்கி 1 லிட்டர் நீரில் விட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி 25 மி.லி. யாக காலை மாலை சாப்பிட்டடு வர இரத்தக் கழிச்சல், வெப்புக் கழிச்சல், பசியின்மை தீரும்.

பட்டைக் குடிநீரைக் கொண்டு வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், பல்லீறு அழுகல், பல்லாட்டம் ஆகியவை குணமாகும்.

கருவேலம்பட்டை, வதுமைக் கொட்டைத் தோலும் சமனளவு கருக்கிப் பொடித்துப் பல் தேய்த்து வரப் பல்லீறுகளில் உள்ள புண், பல் கூச்சல், பல்வலி, பல்லாட்டம் ஆகியவை தீரும்.

கருவேலம் பிசினை நெய்யில் வறுத்துப் பொடித்து 2 கிராம் காலை மாலை சாப்பிட்டு வரத் தாது பலப்படும். இருமல் தீரும். வயிற்றுப்போக்கு நிற்கும்.


------------------------------------(மூலிகை தொடரும்.)


கருத்துகள் இல்லை: