செவ்வாய், 11 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-10

எப்படி இவள் என் மனதில் வந்தாள். எதற்காக என் மனம் அவளை விரும்பியது. எனக்கு அவளை தவிர வேறு பெண் தான் பூமியில் இல்லையா என்ன ? இருந்தும் அவளை தேடியே என் மனம் செல்வதை உணர்கிறேன்.

இது வரை அவளிடம் இரண்டு வருடங்களாக தோழியாக கூட பழகவில்லை. அவளிடம் சண்டை தான் போட்டிருக்கிறேன். அவள் அவ்வளவு பெரிய அழகி என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இப்பொது எல்லாம் அவள் தான் எனக்கு அழகியாக தெரிகிறாள்.

அவளிடம் பழகிய ஆரம்ப நாட்களை நினைத்து பார்க்கிறேன். அவளிடம் பேச தொடங்கியதே சண்டையில் இருந்து தான். ஐய்யோஸ! பேச தொடங்கி விட்டால் வாயை மூட மாட்டாள். அவள் மிக பெரிய வாயாடி. யாராக இருந்தாலும் பேசியே விரட்டி விடுவாள்.

என் நண்பன் கூட பல முறை அவளை திமிர் பிடித்தவள் என்று என்னிடமே சொல்லியிருப்பான். நானும் அதை ஆமோதித்து இருக்கிறேன். அவளிடம் யார் மாட்டிக் கொள்ள போகிறானோ என்று பல முறை நானே நினைத்து இருக்கிறேன். அந்த அப்பாவி நானாக இருப்பேன் என்று நானே நினைத்ததில்லை.

கணவன் மனது நோகாமல் நடந்துக் கொள் என்று மகளிடம் தாய் சொல்வது போல் அவளிடம் நோகாமல் நடந்துக் கொள் என் காதலே என்று காதலுக்கு அறிவுரை கூறிக் கொண்டு இருக்கிறேன். ஆனால் என் காதல் அவளை நோகடிக்கவில்லை. என்னை படாத பாடு படுத்திக் கொண்டு உள்ளது.

அந்த திமிர் பிடித்தவளுக்கு என் காதலை சொல்லி விடலாமா என்று நினைத்தேன். அவளிடம் இருக்கும் திமிர் காதலை சொல்ல தடுத்தது ....என் தன்மானம். ஆண்ணிடம் அடக்கமாக நடந்துக் கொள்ளும் பெண்கள் எத்தனையோ பேர் இருக்க ஆண்களை மதிக்காத அவளையா என் மனம் விரும்புவது. என்ன செய்வது காதல் மதியாதார் தலை வைத்து தானே மிதிக்கும்.... காதலுக்கு தன்மானம் சற்று குறைவு தான். அதே சமயத்தில் காதல் தன்மானத்தை இழப்பது பெண் மானத்தை காக்கும் நல்ல பணியில் தான் என்பதால் அதை யாரும் தவறாக நினைப்பதில்லை.

எதோ சில சண்டைகள் போட்டோம். அதன் பிறகு சமாதானம் ஆகிவிட்டோம். இது நட்பு என்று எப்படி சொல்வது ? இலங்கை தமிழர்கள் பிரச்சனை சமாதானம் சற்று நேரம் தான். மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சண்டையை தொடங்கி விடும். நாங்கள் கூட அப்படி தான். சில நேரம் சமாதானம் ஆகிவிட்டது போல் தோன்றும். ஆனால் எதோ பிரச்சனை எங்களுக்குள் சண்டையை மூட்டிவிடும். என் காதலை சொல்லிவிட்டால் இதுவும் சண்டை அடித்தளம் அமைத்து விடமோ என்ற அச்சம். அது கூட பரவாயில்லை. இனி என்னிடம் பேச நிருத்தி விட்டால் இனி சண்டைக்கு கூட வாய்பில்லாமல் போய்விடும்.

"சரி விடுடா" இப்போதைக்கு காதல் சொல்ல வேண்டாம் என்று என் மனம் சொன்னது. மனம் சொல்லும் படி நடப்போம் என்று என் வேலையை செய்துக் கொண்டு இருந்தேன். உன் தோழி ஒருத்தி என்னிடம் பேச வந்தாள். உனக்கு இப்படி ஒரு நல்ல தோழியா என்று இவளுக்காக பரிதாபம் பட்டிருக்கிறேன்.

உன் தோழியிடம் சிரித்துக் கொண்டு பேசியிருப்பதில் எனக்கு நேரம் போனதை கவனிக்கவில்லை. சற்று தோலைவில் நீ எங்களையே பார்த்துக் கொண்டு இருப்பதை கூட நான் கவனிக்கவில்லை. நீ நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் இடத்தை நோக்கி வந்துக் கொண்டு இருந்தாய். வந்தவுடன் நீ உன் தோழியை திட்ட தொடங்கிவிட்டாய். எந்த காரணத்திற்காக உன் தோழியிடம் சண்டை போடுகிறாய் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. உனக்கு மட்டும் சண்டை போடுவதற்கு காரணம் எங்கிருந்து தான் கிடைக்குமோ என்று தெரியவில்லை.

உன் தோழியிடம் சண்டை போட்ட பிறகு நீ என்னிடம் பாய தொடங்கிவிட்டாய். நீ எதுக்காக கோபப்படுகிறாய் என்று எனக்கு புரியவில்லை. கடைசியாக நீ சொன்ன வாக்கியத்தில் புரிந்துக் கொண்டேன். "இனிமே நீ என்னை தவிர எந்த பொண்ணுக்கிட்டயும் பேசக் கூடாது. அதையும் மிறி நீ பேசுறத பார்த்தேன்... உன்ன என்ன பண்ணுவேன் எனக்கு தெரியாது" என்று மிரட்டிவிட்டு போனாய்.

ஒரு மலர் இப்படி வெடித்து விட்டதை பார்த்து பேசாமல் வாயடைத்து நின்றேன். "டாய். இப்போ உன் காதலை நீ சொல்லலேனா... ஆண் வர்கத்திற்கே அசிங்கம்.... போய் உன் காதலை சொல்லுடா!" என்று மனம் சொன்னது. "காதலைக் கூட வன்முறையில் சொல்லும் அவளிடம் மாட்டிக் கொள்ள போகிறாயா" என்று என் அறிவு என்னை பார்த்து பரிதாபப்பட்டது. அறிவு சொல்லவதை செய்வதை விட மனம் சொன்ன படி நடந்துக் கொள் என்று விவேகானந்தரின் வாக்கு. அதன் படி நானும் நடக்கிறேன்.

கல்லூரியில் ஒரு சந்தர்ப்பத்தில் 
எப்போதோ சந்தித்தோம் 
புன்னகையில் அறிமுகமாகி 
நாட்கணக்கில் நாட்டு நடப்பு பேசி 
நட்பாகி இருந்தோம்  

மணிக்கொரு தடவை ஒரு Sorry யோ அல்லது 
ஒரு Thanks ஸோ சொல்லிக் கொள்வோம் 
ஏன் சொல்கிறோம் என்று தெரியமலேயே
சில நிமிடத்திற்கொரு முறை ஒரு சிரிப்போ 
அல்லது ஒரு பொய்க் கோபமோ 
நம்மில் சாதாரணமாக வந்து செல்லும்

காரணம் ஏதுமின்றி சில நேரம் 
கண்ணீர் கசியும் 
நம் தணிமையில் சில வேளை 
பிரிந்திருக்க மனது சொல்லும் 
முயற்சி செய்வோம் முடியாமல் 
மனது தோற்கும் 
முகம் பார்க்கவும் குரல் கேட்கவும் 
தவியாய் தவிக்கும் மனது...

எத்தனையோ ஏகந்த வேளையில் 
தனிமையில் இருந்திருக்கிறோம் 
தவிப்பை உணர்தந்தில்லை 
நிரந்தரமாய் பிரியப்போகிறோம்  
என்ற போதுதான் 
இரும்புக் கரம் கொண்டு 
இதயம் பிழியப்பட்ட ரண வேதனை

முன்னமே பேசியிருக்கலாம் 
பேச வேண்டிய வார்த்தைகளை 
தொண்டை குழி வரை வந்து 
சொல்ல முடியாமல் போராடியிருக்கிறோம்...

முன்னைக்காட்டிலும் 
முனைப்பாய் இருக்கிறேன் 
உன்னை பார்ப்பதற்கு...
அப்போது மட்டும் ஏன் சொல்ல முடியாமல் போனது ? 
இப்போது கூட முடியுமோ என்னாவோ ...!

சக்கரக்கட்டி
Sakkarakatti

எல்.கே.ஜி காதலை தவிர, எல்லா காதலையும் பார்த்த தமிழ்சினிமாவுக்கு பணக்கார பசங்களின் 'பார்ஷ்' காதலை சொல்லியிருக்கிறது சக்கரக்கட்டி. விட்டால் நிலாவிலேயே ஒரு சீன் எடுத்து நிலாப்பிரபு ஆகியிருப்பார் இந்த கலாப்பிரபு. அந்தளவுக்கு பணத்தை வாரியிறைத்திருக்கிறார் பணக்கார அப்பா தாணு. காட்சிக்கு காட்சி காஸ்ட்லியாக டிசைன் பண்ணியிருக்கும் இயக்குனர், கதை விஷயத்தில் "பார்த்துக்கலாம்..." போக்கை கடை பிடித்திருப்பதுதான் ஷாக்.

கல்லு£ரி மாணவரான சாந்தனுவை இஷிதாவும், வேதிகாவும் விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள். ஆனாலும் வெற்றி என்னவோ இஷிதாவுக்குதான். காதலில் இடையிடையே எட்டிப்பார்க்கும் சந்தேக சைத்தான், இஷிதாவுக்குள்ளும் புகுந்து சிண்டு முடிய பார்க்க, ஊடல், கூடல் என்று கதை நகர்ர்ர்ர்ர்ர்ர்கிறது. கடைசிவரை தன்னை நம்பாத காதலிக்கு உண்மையை புரியவைக்க சாந்தனு எடுக்கிற முயற்சிகளும், மீண்டும் இஷி மனம் இளகினாரா என்பதும் கடைசி ரீல்.

அதிகம் வேலையில்லை சாந்தனுவுக்கு. அடிக்கடி பெருமுச்சு விடுவதும், இரண்டு காதலிகளை சமாளிப்பதுமே அவரது மற்றொரு வேலையாக இருக்கிறது. பாடல் காட்சிகளில் இன்றைய ஹீரோக்கள் பலருக்கும் சவால் விடுவது ஆறுதல். காம்பவுண்டின் அருகே நின்று காதலிக்கு தரிசனம் கொடுத்துவிட்டு, அடுத்த நொடியே வேறு கேட் வழியே ஓட்டமாக ஓடி, மற்றொரு கேட்டிலும் தரிசனம் தருகிற அந்த காட்சி இளமை துள்ளல். மொக்கை பிளேடு என்று நினைத்து தைரியமாக கையை கீறிக்கொண்டு, அது கொடுக்கும் 'ஷார்ப்' ட்ரீட்மென்ட்டில் விழி பிதுங்குவதும் இளசுகளின் உய்யலாலா...

ஒரு காட்சியில் சாந்தனுவின் நண்பன், "டேய் அந்த ஃபிகருக்கு இவ நல்லாயிருக்கா. இவளையே லவ் பண்ணிடேன்" என்கிறார். அந்த, 'நல்லாயிருக்கா' நடிகை வேதிகாதான். படத்தில் இவருக்கு கிடைப்பது என்னவோ காதல் தோல்வி. மற்றொரு புதுமுகம் இஷிதா. தமிழுக்கு பொறுத்தமில்லாத மும்பை முகம். அழுகிற காட்சிகளில் நடிக்கவும் தெரிந்திருக்கிறது. பாராட்டுகள்...

பட்டணத்து நாகரீகத்தை பேனா முழுக்க நிரப்பியிருக்கிறார் டைரக்டர் கலாப்பிரபு. வீட்டை விட்டு வெளியூர் கிளம்பும் அம்மா, தனது மகனிடமும், அவனது பிரண்ட்சுகளிடமும் "நோ வீடியோ, நோ பேட் ஹேபிட்ஸ்" என்று எச்சரித்துவிட்டே கிளம்புகிறார். லவ் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் மகளிடமும், அவளது தோழிகளிடமும் "நீங்க பேசிட்டு இருங்க" என்ற அசட்டு சிரிப்போடு அறையை விட்டு வெளியேறுகிறார் இன்னொரு அம்மா. வசனங்களில் பீறிடும் ஆங்கில மோகம், நகர இளைஞர்களின் நாகரீகம் என்றாலும், 'கொஞ்சம் குறைத்திருக்கலாமே' என்று முணுமுணுக்க வைக்கிறது.

ஒரு கம்பீர நாற்காலியோடு காதருகிலேயே உட்கார்ந்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். பாடல் காட்சிகள் வரும் நேரத்தில் கேன்ட்டீன் ஆசாமிகள் கடையை கட்டிவிட வேண்டியதுதான்! ரஹ்மானின் ஆர்மோனிய விரல்களுக்கு, மோதிரமாக அமைந்திருக்கின்றன, நடன அமைப்பும், கிராபிக்ஸ் யுக்திகளும்! ஆன்ட்ரூவின் ஒளிப்பதிவு மேலும் ஒரு சக்கரைக்கட்டி.

ஊட்டுவார்கள் என்று நினைத்தால், சர்க்கரையை காட்டுகிறார்கள்.

என்ன உலகமடா இது?

என்னிடம் இருப்பது இரண்டு பேங்க் அக்கவுண்ட்கள். அதில் ஒன்றை நீண்டநாட்களாக உபயோகப்படுத்தாமலே இருந்தேன். (ஒரு அக்கவுண்டில் போடுறதுக்கே இங்கே பணத்தை காணவில்லை. இந்த லட்சணத்தில் இரண்டாவது வேற..) சமீபத்தில் நேர்ந்த பணநெருக்கடியில் அந்த பேங்க் அக்கவுண்டை திறந்துபார்க்கலாம், ஒரு நூறு இரநூறு தேறாதா என்று எண்ணி நெட்டைத்திறந்தால் ஐடி, பாஸ்வேர்ட் ஞாபகமில்லை. நானும் பர்ஸிலுள்ள குப்பைகளை கிளறிப்பார்க்கிறேன், தலையை தட்டிப்பார்க்கிறேன், தண்ணி குடித்துப்பார்க்கிறேன். இப்போது பயன்படுத்துகிற அத்தனை பாஸ்வேர்ட்களையும் போட்டுப்பார்க்கிறேன். நான்கைந்து முறைகளுக்கு மேல் தவறாக போட்டால் லாக் ஆகிவிடும் என்று ராஜன் வேறு பயமுறுத்தினார். ஆகவே முயற்சியை பாதியிலேயே நிறுத்தினேன். வீட்டில் போய் தேடிப்பார்க்கலாம்.
எதிலாவது எழுதிவைத்திருப்பேன்.

என்ன உலகமடா இது?

யோசித்துப்பார்க்கிறேன். சராசரியாக ஒருநாளில் எத்தனை ஐடிக்கள், பாஸ்வேர்ட்களை பயன்படுத்துகிறோம்? அலுவ‌ல‌க‌த்தில் நுழையும் போதே கார்ட் ப‌ஞ்ச்சிங்கில் துவ‌ங்குகிற‌து. ந‌ல்ல‌ வேளையாய் அங்கு பாஸ்வேர்ட் இல்லை. அத‌ற்கும் பாஸ்வேர்ட் இருந்தால் எத்த‌னை நாள் அலுவ‌ல‌க‌த்துக்குள் போகாம‌ல் வெளியேவே நிற்க‌வேண்டிய‌ சூழ‌ல் வ‌ந்திருக்குமோ?

சீட்டில் உட்கார்ந்த‌தும், க‌ம்யூட்ட‌ரைத்திற‌க்க‌ ஒரு ஐடி, பாஸ்வேர்ட். ஆ.:பீஸ் மெயிலை திற‌க்க‌ அடுத்த‌து. SAP திற‌க்க‌ அடுத்த‌து. முக்கிய பைல்களை திறக்க அடுத்தது. யாகூ மெயிலுக்கு ஒன்று. ஜிமெயிலுக்கு ஒன்று. ICICI க்கு ஒன்று. அத‌ற்குள், ப‌ணமாற்ற‌லுக்கு இன்னொன்று. பிளாக‌ருக்கு ஒன்று. அத‌ற்குள் த‌மிலிஷ், த‌மிழ் இன், க‌வுண்ட‌ர் போல‌ ப‌ல‌வ‌ற்றுக்கும் ப‌ல ஐடிக்க‌ள், பாஸ்வேர்டுக‌ள். விக‌ட‌னுக்கு ஒன்று. ர‌யில்வே டிக்கெட் புக் செய்ய‌ ஒன்று. அவ‌ச‌ர‌ ப‌ஸ்டிக்கெட் புக் செய்ய இன்னொன்று. சினிமா டிக்கெட் புக் செய்ய‌ இர‌ண்டு (ச‌த்ய‌ம் ஒன்று, ஐநாக்ஸ் ஒன்று) புக் செய்து ரொம்ப‌ நாளாகிவிட்ட‌தால் ஞாப‌க‌த்தின் ஆப‌த்தான‌ நிலையிலிருக்கிற‌து. LIC க்கு ஒன்று. அலுவ‌ல‌க‌த்தின் சிறப்பு வேலைக‌ளுக்காக எப்போதாவது ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் சில‌ பாஸ்வேர்ட்க‌ள். மேலும் சில‌ முக்கிய‌ த‌ள‌ங்க‌ளில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ ஐடி, பாஸ்வேர்ட்க‌ள். இதில் பல இடங்களில் ஒரே பாஸ்வேர்டடை பயன்படுத்தினாலும், சில விஷயங்களில் சில நாட்களுக்கு ஒருமுறை பாஸ்வேர்ட்களை மாற்ற வேண்டிய கட்டாயம் வேறு.

அலுவ‌ல‌கத்துக்கு வெளியே வ‌ந்தால், ATM-ல் பின் ந‌ம்ப‌ர், CVV ந‌ம்ப‌ர், நெட் யூச‌ர் ஐடி, பார்வேர்ட், மேலும் சில‌ ப‌ல‌ப‌ய‌ன் அட்டைக‌ளின் ந‌ம்ப‌ர்க‌ள்.... ந‌ம்ப‌ர், ந‌ம்ப‌ர்.... பாஸ்வேர்ட், பாஸ்வேர்ட்.....

"சார், உங்க‌ போன் ந‌ம்ப‌ர் என்ன‌?"

"நைன், செவ‌ன், சிக்ஸ்.. எயிட்....திரி...ம்ம்... ரிஸ்க் வேண்டாம் உங்க‌ ந‌ம்ப‌ர் குடுங்க‌ மிஸ்ட் கால் குடுத்திர்றேன்"

டிஸ்கி : ஒரு வ‌ழியாக‌ அந்த‌ இர‌ண்டாவ‌து அக்க‌வுண்டின் ஐடி பாஸ்வேர்ட் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டு செக் ப‌ண்ணிய‌ பொழுது அதில் இருந்த‌ ப‌ண‌ம் ரூ.32. என்ன உலகமடா இது?
மர்மயோகியை தள்ளி போட்டுவிட்டாராம் கமல்

மர்மயோகியை தள்ளி போட்டுவிட்டாராம் கமல். கோடம்பாக்கத்தின் மற்றொரு kamalhasanசூடான செய்தி இதுதான். கிட்டதட்ட 100 கோடி செலவில் தயாரிப்பதாக திட்டமிடப்பட்ட மர்மயோகி சில தவிர்க்க முடியாத காரணங்களால் பிரேக் அடித்து நிற்கிறதாம்.

மலைக்கள்ளன் கதையை போலவே உருவாக்கப்பட்டுள்ளது இந்த கதை. ராபின் ஹ§ட் மாதிரி, இருப்பவர்களிடமிருந்து பறித்து இல்லாதவர்களுக்கு கொடுக்கிற கேரக்டரில் நடிக்கிறார் கமல். இந்த படம் வந்தால், நிஜமாகவே உலக நாயகன் ஆகிவிடுவார் என்பது நிச்சயம். ஆனால், இந்த வெற்றியை கொஞ்சம் தள்ளி போட்டிருக்கிறாராம் கமல்.

இதற்கிடையில் வெங்கடேஷ், மோகன்லால், அக்ஷய்குமார், கமல் இந்த நால்வரும் நடிக்கும் ஒரு படத்தை இடையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கமலே இயக்கவிருக்கும் இந்த படம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகுமாம்.

பரிதாபம் என்னவென்றால், மர்மயோகிக்காக கொடுத்திருந்த கால்ஷீட் தேதிகளை கூவி கூவி விற்றுக் கொண்டிருக்கிறார்கள் ஸ்ரேயாவும், த்ரிஷாவும். ஐயோ பாவம்

இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 5,000,000,000 டன் அளவிற்கு மண் அரிப்பு ஏற்படுவதாக ''வெட்டி வேர் இன்டர்நேஷ்னல் பிளாக்''கூறுகிறது. அதில் 30% கடலிலும்,10% அணைகளிலும் சேர்வதாகவும், 60% இடமாற்றம் அடைவதாகவும் கூறுகிறது. பொதுவாக நீரினால் தான் அதிகம் மண் அரிப்பு எற்படும்.இதில் கவனிக்கபடவேண்டியது, நீர் திரும்ப நீர் சூழற்சி முறையில் மேலே சென்றுவிடும். ஆனால் மண் ???
சென்ற மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை முடிந்தவுடன் என் கண்களுக்குப்பட்ட சில மண் அரிப்பு காட்சிகள். விவசாயத்தில் மிக முக்கியமானது மண் அரிப்பை தடுப்பது.Top Soil எனப்படும் வளமான மேல் மண் அது அடித்துச் செல்லப்பட்டால் விளைச்சல் குறையும். திரும்பவும் வளம் சேர்க்கவேண்டும். எனவே நல்ல விளைச்சலைப் பெற மண் அரிப்பை தடுப்பது மிக மிக அவசியம். வரும் முன் காப்போம்.

Prevention is Better than Cure.

கருத்துகள் இல்லை: