வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-13

சென்னை சட்டக் கல்லூரியில் ஜாதி சண்டை அரங்கேறி இருக்கிறது. அந்த ஜாதி வெறிபிடித்த பரதேசிகளின் செயலை பார்க்கும் போது அவமானமாய் இருந்தது.. இந்த கம்மனாட்டி பசங்களா நாளை சட்டத்திற்கு போராடப் போகிறார்கள். ஜாதித் தலைவர்களுக்கும் சமூக விரோதிகளுக்கும் அடியாட்களாய் போக வேண்டிய பன்னாடை பரதேசிகள் எல்லாம் சட்டம் பயின்று என்ன மயிறப் புடுங்கப் போகுதுங்க? இதுங்களால ஈடூபாட்டுடன் இந்த படிப்பை படிப்பவர்கள் மீதும் ஒட்டு மொத்தமாய் வெருப்பு வருகிறது. சட்டம் படித்தால் சில நாய்கள் சட்டத்தால் கட்டுபடுத்த முடியாதவர்கள் என்று நினைத்துக் கொள்கின்றன. எதற்கெடுத்தாலும் வன்முறை தான் இவர்களின் வழி. ஜாதி சண்டை போடவா இந்த நாய்களை பெத்து வளர்க்கிறார்கள். இந்த பேமானிகளின் செயல்களை பார்த்து இவர்களை பெற்றவர்கள் எவ்வளவு கலங்கிப் போய் இருப்பார்கள்.. இதுக்காடா உங்களை எலலாம் கடன் வாங்கி கஷ்டப் பட்டு படிக்க வைக்கிறாங்க? இந்தக் கபோதிகள் சாப்பிட போனால் ஹோட்டலில் பணம் கொடுப்பதில்லை.. கேட்டால் வன்முறை.. போலிஸ்காரர்களுடன் எப்போதும் மோதல்.. எந்த பொது விதியையும் கடைபிடிப்பதில்லை.. எப்போதும் ஒரு வெறித்தனம்.. இதுக்காடா சட்டம் படிக்க வரீங்க? ஒவ்வொரு நாயும் கையில் ஆயுதங்களுடன் அடியாட்களை விட கேவலமாக காட்சி அளித்தார்கள்... த்தூ தெறி.. இந்த சொறிநாய்களின் உதவியுடன் தான் நீதி மன்றங்களுக்கு போக வேண்டும் என்பதை நினைக்கையில்.. பேசாமல் தூக்குப் போட்டு தொங்கலாம்..

இந்த வெறிநாய்களை அம்மணமாக்கி அடிபப்தற்கு முன் அப்போது அம்மணமாய் வேடிக்கை பார்த்த காவல் துறை துணிமாட்ட வேண்டும். அங்கே காக்கி சட்டை அணிந்து வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம் அம்மாணமகத் தான் தெரிந்தார்கள்.

சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் கொடிய ஆயுதங்களுடன்....
சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியவர்கள் கையில் லத்தியுடன் அம்மணமாய்..
சந்தோஷம்டா.. ரொம்ப சந்தோஷம்..

( வன்முறையில் ஈடுபடும் சில சொறி நாய்களின் மீதுள்ள நியாயமான கோபம் தான் இந்த பதிவு.. எல்லா சட்ட மாணவர்களையும் சாடுவது நோக்கமல்ல )

நமது வாழ்க்கையில் வெற்றிகள் குவியவேண்டும் என்று நம்மில் பலரும் விரும்புவதில் தவறில்லை.

மகிழ்ச்சியில் திளைக்க விழையும் முன்னோட்டமே நாம் குவிக்கும் வெற்றிகள்.

ஆனால், இந்த வெற்றிகள் ஏதோ குருட்டுத்தனமாக (அதிர்ஷ்டம்) தானே வந்து குவிந்துவிடும் என்று நினைத்தால் அதைவிட மிகப்பெரிய தவறு வேறு ஏதுமில்லை!

உழைப்பு, கடும் உழைப்பு, இடைவிடாத உழைப்பு - இப்படி பல கட்டங்களில் உழைத்து உழைத்துத்தான் வெற்றியை அறுவடை செய்ய முடியும். எனவே, இளையர்கள் முதல் முதியோர் வரை உழைக்க ஒருபோதும் பின்வாங்கக் கூடாது!

உழைப்பு என்பது மூலதனம் - முதல் இல்லாவிட்டால், வெற்றி என்ற லாபத்தை எவரும் நுகரவே முடியாதே!

குளிரைப் போக்க, குளிர்காய விரும்புகிறோம்; விறகு போடாமல், தீ மூட்டாமல், வெறும் வீட்டு அடுப்பின் கனலை மட்டுமே நம்பி, அந்த வெப்பமே போதும் என்று நினைத்தால், குளிர் தொல்லை நீங்குமா?

விறகு பிறகு, வெப்பம்தான் எனக்கு முதலில் வேண்டும் என்று விதண்டாவாதம் பேசி, வெற்றியைக் காண முடியுமா?

அவ்வளவு ஏன்? முதல் போடாமல், வைப்பு நிதியைப் போடாமல், வட்டி மட்டும் நமக்கு கைநிறைய, பை நிறையக் கிடைக்கவேண்டுமென்று விரும்பினால், அது வெற்றிப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லுமா? எங்காவது வங்கிக்குச் சென்று, அய்யா உங்கள் வங்கியிலிருந்து எனக்கு வட்டியை முதலில் கொடுங்கள்; பெருந்தொகையை பிறகு நான் முதலீடு (டெபாசிட்) செய்கிறேன் என்று எவராவது கூறினால், வங்கி மேலாளர் சிரிக்காமல் இருப்பாரா? இப்படிக் கூறுபவரை சரியான பைத்தியக்காரர் போலும் இந்த ஆசாமி என்று வெளியில் சொல்லாவிட்டாலும், மனதிற்குள் எண்ணமாட்டாரா?

எனவே, முடிந்துவிட்ட எல்லை என்று எதனையும் கருதாதீர்கள்!

அது உங்கள் பார்வையை, உழைப்பைப் பொறுத்தது! வாழ்க்கையில் உழைப்பின்மூலம் உயர்வதற்கு வயதாகிவிட்டது இனிமேல்தானா சம்பாதிக்கப் போகிறோம்? என்று விரக்தியுடன் பேசாதீர்கள்! முடியும், முடியும், முடியும் என்று மனதிற்குள்ளே சொல்லிக் கொண்டு எதையும் செய்யுங்கள். உள்ளத்தின் உறுதி, இடையறாத சிந்தனை மனதில் ஜெபிப்பதைப்போல எண்ணிக்கொண்டே உங்கள் அடிகளை எடுத்து வையுங்கள்!

உறவுகளை, நட்புகளை மட்டும் நம்பி உழைப்பை அலட்சியப்படுத்தி விடாதீர்! உழைப்பு அனைவருக்குமே மூலதனச் செல்வம். குடும்பம், அமைப்பு, இயக்கம், தொழிற்கூடம் என்று பல்வேறு மேலாண்மைத் துறைகள் இருந்தபோதிலும், அதில் உள்ள அனைவரும் உழைப்பில் உங்களை சிறப்பாக முன் உதாரணமாக, பின்பற்றத் தகுந்தவராக (சுடிடந ஆடினநட) இருக்கும்படி உழையுங்கள் - உழைத்துக் கொண்டே இருங்கள்!

நான் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேனே - ரிட்டயர் ஆகிவிட்டேனே இன்னும் என்ன உழைப்பது? என்று கேட்காதீர்கள்!

பணிக்குத்தான் ஓய்வே தவிர, உழைப்புக்கு, தொண்டுக்கு ஓய்வே கிடையாது. எனவே, ஓய்வு பெற்றவர்கள் - ஊதியம்பற்றிக் கவலைப்படாமல் - தொண்டறப் பணியில் ஈடுபட்டு சமுதாய வளர்ச்சிக்கு உழையுங்கள். மேலை நாடுகளில் பெரும் பெரும் சம்பளம் பெறுவோர்கூட, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் தங்கள் அந்தஸ்தை மறந்து எளிய தொண்டர்களாக (Volunteers) உழைப்பதில்தான் பெருமகிழ்ச்சியும், மனநிறைவும் கொள்கிறார்கள்!

சும்மா இருந்தால் சோம்பேறிகளாகி, துருப்பிடித்த கருவி பலம் இழந்து, வலுவிழந்து போவதுபோல் மனிதர்களும் ஆகிவிடுவர்! எண்ணிப் பாருங்கள்!

உலகத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்களோ, அதைப் பொருத்துத்தான் மற்றவர்கள் உங்களை மதிப்பதும், மதிக்காததும்!

வேர்களாகிய நீங்கள் சிறப்பாக இருந்தால்தான், விழுதுகள் பலமாக நின்று தங்களையும் பாதுகாத்து, உங்களையும் பாதுகாக்கும்!

மாம்பழம் வேண்டுமென்று விரும்பி எட்டி மரத்தின் கீழே நின்று வேண்டினால் மாம்பழம் கிடைக்குமா? மாமரத்தில் எவ்வளவுதான் மாங்காய் புளித்தாலும், அது ஒருபோதும் எட்டிக்காயை நமக்குத் தராதே!

எனவே, அடிப்படை, அஸ்திவாரம் போன்றவர்கள், குடும்பத்தில் முதியவர்கள், இளையர்கள் (கோபுரங்கள்) நன்கு வளர அடித்தல(ள)ம் சிறப்பாக - பலமாக இருக்கவேண்டாமா?

எண்ணுங்கள் - செயல்படுங்கள்!

coffin

இறந்த கணவனின் சடலத்தை நல்லடக்கம் செய்வதற்கு சென்ற மனைவி, கணவனின் பிரேதப் பெட்டி தலையில் விழுந்ததால், அதில் நசுங்குண்டு மரணமடைந்த பரிதாப சம்பவம் பிரேஸிலில் இடம்பெற்றுள்ளது.
பிரேஸிலின் றியோ கிரான்டே டுசுல் (Rio Grande do Sul) மாநிலத்திலுள்ள அல்வோர டா (Alvorada)நகரைச் சேர்ந்த ஜோஸி, சில்வெயிரா கொயிம்பிரா (Josi Silveira Coimbra) (76 வயது), ஞாயிற்றுக்கிழமை களியாட்ட நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட வேளையில் மாரடைப்பால் மரணமானார்.

இந்நிலையில் மறுநாள் அவரது சடலம் நல்லடக்கத்திற்காக காரில் எடுத்துச் செல்லப்பட்ட போது, அக்காரின் முன் ஆசனத்தில் அவரது மனைவியான மார்சினா சில்வா பார் செலொஸ் (Marciana Silva Barcelos) (67 வயது) அமர்ந்திருந்தார்.

இந்நிலையில் பிரேதக் காரானது பிறிதொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதில், பிரேதப் பெட்டி சரிந்து மார்சினா தலைமீது மோதியது. அதை அடுத்து அவர் ஸ்தலத்திலேயே மரணமானார்.

இச்சம்பவத்தில் மார்சினாவின் மகன்களில் ஒருவரும் பிரேதக் காரின் சாரதியும் , சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொதுவாக நீங்கள் உபயோகப்படுத்தும் வேர்ட் டாக்குமெண்ட் (.doc) என்ற பைல் எக்ஸ்டென்ஸனுடன் இருக்கும்...

வேர்ட் டாக்குமெண்ட் ஒரு எழுதி (எடிட்டர்) தான்...

நீங்கள் அனுப்பிய வேர்ட் டாக்குமெண்ட்டை எளிதாக திறந்து அதில் மாற்றங்கள் செய்துவிடலாம்...

அதனால் தான் அடோப் நிறுவனம் பி.டி.எப் என்ற வகையாக பைல்களை உருவாக்கியது...

.pdf என்ற பைல் எக்ஸ்டென்ஷனுடன் இருக்கும் இந்த வகையான கோப்புகளை எளிதில் மாற்றம் செய்ய இயலாது...

இதனால் உங்கள் தகவல்களை பாதுகாப்பாக பரிமாற்றம் செய்யலாம்...நம்பிக்கையோடு இருக்கலாம்...

https://www.pdfonline.com/convert_pdf.asp என்ற தளத்தில் மிக எளிமையாக உங்களது எம்.எஸ் வேர்டு பைல்களை பிடிஎப் கோப்புகளாக மாற்றும் வசதியை தருகிறார்கள்...

உங்கள் தேவை இணையம் மட்டுமே...மேலும் அதிகபட்சமாக 2 எம்.பி அளவுள்ள கோப்புகளை மாற்றலாம்...



படத்தின் மீது க்ளிக்கினால் பெரியதாக தெரியும்...

மொத்தம் இந்த இணைய தளத்தில் நாலே ஸ்டெப்பு...

1.மாற்றப்படவேண்டிய கோப்பு எங்கே இருக்கிறது் என்பதை பிரவுஸ் பட்டனை தொட்டு கணிப்பொறிக்கு காட்டவேண்டும்..

2.எந்த பெயரில் உங்கள் கோப்பு இருக்கவேண்டும் என்பதை சொல்லவேண்டும்

3.உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவேண்டும்...

4.கண்வர்ட் டு பிடிஎப் என்ற பட்டனை அழுத்தவேண்டும்...

அவ்ளோதாங்க...

இரண்டு நிமிடத்தில் நீங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சலுக்கு உங்கள் பி.டி.எப் கோப்பு வந்து சேரும்...


More than a Blog Aggregator

by செங்கை ஜாஃபர்
இந்துப் பயங்கரவாதம் மாலேகான் குண்டுவெடிப்புச் சதி தொடர்பாக மேலும் ஒரு சாமியார் கைது இந்து மதத்தவரின் தொடர்புகள் அம்பலம் மாலேகான் குண்டுவெடிப்புச் சதி தொடர் பாக தயானந்த பான்டே என் பவரை மும்பை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக் காவல் துறை யினர் கைது செய்துள்ளனர். இந்த ஆள், அம்ருதானந்த் என்று பெயர் வைத்துக் கொண்டு ஆன்மிகக் குருவாகச் சொல்லிக் கொண்டிருப்பவர். அத்துடன் ஜம்முவில் சாரதா சர்வக்ய பீடம் என்று
Vijay - Lawrence

சுண்டு விரலில் அடிபட்டால், நடுவிரலுக்கு மருந்து போடுகிற வழக்கம் நம்மை விட்டு போகவே போகாது போலிருக்கிறது. வந்த விஷயத்தை மறந்து, வேறொரு விஷயத்தில் லயிக்கிற நமது எண்ணம், இந்த முறையும் பளிச்சென்று வெளிப்பட்டிருக்கிறது.

இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு உடனடி நிவாராணம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் கூடியது திரையுலகம். அங்கே தமது உணர்வுகளோடு, உதவியையும் தர வேண்டும் என்ற உந்துதலில் பலரும் உதவித் தொகை வழங்கினார்கள். இந்த தொகையில் சிறு ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம்.

பெரிய நடிகர்கள் லட்சக்கணக்கில் தர வேண்டும் என்றும், சின்ன நடிகர்கள் ஆயிரங்களாவது தர வேண்டும் என்றும், வற்புறுத்தி பேசுவது வீண் விரோதங்களையே வளர்க்கும். நேற்று வந்த லாரன்ஸ் 12 லட்சம் கொடுக்கும் போது விஜய் ஒரு லட்சம் மட்டுமே கொடுக்கிறாரே, நியாயமா? என்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

தவறி விழுந்த சொந்தங்களை தாங்கி பிடிக்கும்போது, சிலருக்கு கால் பக்கமும், சிலருக்கு தலை பக்கமும் அமையும். அது அவரவர் பதட்டத்தை பொறுத்தது. பாதிப்புள்ளானவருக்கு தாங்கியவர்கள் மீது அன்பு இருக்கிறது. அதுதான் இப்போதைய நிறைவு!

கருத்துகள் இல்லை: