செவ்வாய், 11 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-10


சென்னைச் சேப்பாக்கம் மைதானத்தில், 09.11.08 அன்று, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சின்னத்திரைக் கலைஞர்கள் நடாத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளன் கலந்து கொண்டு உரையாற்றிய போது, தமிழீழம் அமைவதை எப்பொழுதும் இந்திய அரசு விரும்பவில்லை. அதற்காகவே இந்தியாவும், அமெரிக்காவும், அவற்றைப் பின்தொடரும் ஏனைய நாடுகளும் விடுதலைப்புலிகளைத் தடைசெய்திருக்கின்றார்கள் எனக் குறிப்பிட்டார். அவரது முழுமையான உரையின் ஒலிவடிவை இங்கே கேட்கலாம்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு, ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக இன்று விவாதிக்க  சபாநாயகர் அனுமதி மறுத்ததை கண்டித்து அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இன்று சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.  

மிழீழ விடுதலைப் புலிககள் - ஸ்ரீ லங்கா அரசு யுத்த நிறுத்தம் ஏற்பட, அந்நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன் மோகன்சிங்கை முதல்வர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் இன்று திங்கள்கிழமை, நவம்பர் 10ம் திகதி வெளியிட்ட அறிக்கை:

jingle bells பாடல் பப்புவுக்கு மிகவும் விருப்பம். இருவரும் ஒன்றாகச் சேர்ந்துப் பாட கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு ஸ்டான்சாதான்! (விரைவில்
ஒலிபதிவேற்றப்படும்!! :-))

Oh, jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh
Jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh


எங்களின் இன்னொரு விருப்பப் பாடல்,

முட்டைக்குள்ளே இருக்கும்போது
முட்டைக்குள்ளே இருக்கும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!

றெக்கையை பிக்கும்போது
றெக்கையை பிக்கும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
ஹேர்கட் பண்ணிக்கறேன்
ஹேர்கட் பண்ணிக்கறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!

மசாலாத் தடவும்போது
மசாலாத் தடவும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
மேக்கப்பு போட்டுக்கறேன்
மேக்கப்பு போட்டுக்கறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!


எண்ணெய்க்குள்ள போடும்போது
எண்ணெய்க்குள்ள போடும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
ஆயில்பாத் எடுத்துக்கறேன்
ஆயில்பாத் எடுத்துக்கறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!

வாய்க்குள்ள போடும்போது
வாய்க்குள்ள போடும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!

சாதாரண sing-song ட்யூன்தான்! பாடுவதற்கு எளிதாகவும், விளையாட்டாகவும் இருக்கும்!!

சட சடவென பெரும் மழை, மார்கெட் மாதிரியான ஓரு செட்டப், ஜீவாவுக்கு பின் மழையில் நினைந்த கோழியாய் பூனம் பாஜ்வா, ஜீவாவுக்கு எதிராய் ஓரு வில்லன்.. இவர்கள் இருவரை சுற்றி ரவுண்ட் டிராலி போட்டு ஓரு சுற்று சுற்றிவிட்டு ஜீவா க்ளோஸப்பில்

"வேணான்னே தப்பு.."

"டேய்.. நான் யாருன்னு தெரியுமா?" என்று கோபத்துடன் கையில் கத்தியுடன் பொறிய..

"நீ.. யாரா இருந்தா என்ன தப்புண்ணே.." என்று ஓரு ஹிட் விடுகிறார்.

இது தெனாவட்டின் டிரைலர்..யாருக்கோ சொல்வது போலிருக்கிறது.. யாருக்கு???

ஆனால் ஓரு விஷயம் தெனாவெட்டின் முந்தய டிரைலரை விட இந்த டீசர் அருமை..
*********************

கமலின் மர்மயோகி ட்ராப் செய்யபட்டுவிட்டது. ராஜ்கமல் நிறுவனத்துடன் கார்பரேட் பிரமிட் சாய்மீரா சேர்ந்து தயாரிக்கவிருந்த அந்த படம், சாய்மீராவின் கவலைக்கிடமான நிதி நிலமை காரணமாய் கைவிடப்பட்டது..கமலின் தரப்பில் "தலைவர் இருக்கிறார்" என்னும் புதிய படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்காக செய்கிறார். இந்த படம் சுமார் 50 முதல் 60 கோடி வரையிலான பட்ஜெட்டுடன் தயாராகவுள்ளது..

இந்த படத்தில் மோகன்லால், வெங்கடேஷ், ரிஷிகபூர் போன்ற் நடிகர்கள் நடிக்கிறார்கள். மோகன்லால் படத்தின் கதை, திரைக்கதைய்யின் பவுண்ட் ஸ்கிரிப்டை படித்துவிட்டு உடனே ஓ.கே சொல்லியதாய் கேள்வி.. படத்துக்கு இசை ஏ.ஆர்.ரகுமான்.

இந்த கார்பரேட்டுகளின் வீழ்ச்சியை பற்றி விரைவில்...

****************************

மொக்கை பதிவு போடுவதை பற்றி வினவு அவர்கள் ஓரு பதிவு எழுதியிருக்கிறார்கள்.. அது மிக நன்றாக உள்ளது..அவரின் கருத்துகளும் சரியே.. அதை படித்த பதிவர்கள் ம்னம் திருந்தி நல்ல பதிவுகளை பற்றி மட்டும் எழுதுவதாய் சங்கல்பம் எடுத்திருப்பதாய் யூ.என்.ஐ. செய்தி பிரிவு சொல்கிறது.. இப்படி எல்லோருமே மாறி விட்டால் மொக்கை பதிவுக்காக இருக்கும் வாசகர்களுக்கு யார் எழுதுவார்கள் என்ற பரந்த எண்ணத்தில் இந்த மொக்கை பதிவு..ஹி..ஹீ..

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________

சவப்பபெட்டியின் முகத்தோடிருக்கிற
சுவர் முட்டிய
அறைகளின் மூலையில்
எங்கோ இருப்பவர்களுக்காய்
தூவிய பூக்கள்
காய்ந்து குவிந்து கிடக்கின்றன.

நாளுக்கு ஒரு மாதிரியாய்
போர் வகுக்கிற வியூகங்களில்
சிக்கிக் கொண்டிருக்கிறது
நீ பிடித்துச் செல்லுகிற தெரு.

பூட்டி ஏற்றப்பட்ட தொழிற்சாலையில்
வாங்க முடியாத போன
கடைசி மாத சம்பளத்துடன்
மீண்டுமொரு மரத்திற்கு நகர்ந்தாய்
நம்மீது விழ்த்தப்போகும் குண்டுகளுக்கான
செலவு விபரங்களை
ஜனாதிபதி நமது மொழியில் வாசித்தபொழுது
மூட்டையின் அடியிலிருக்கும்
ஒரு ரூபாய் காசிலிருந்து
கர்ஜிக்கும் மிருகம் குண்டாக வெடிக்கிறது.

நம்மை போர்
துரத்திக்கொண்டேயிருக்கிறது
அதன் நீண்ட நகங்கள்
ஒடுங்கிய இரவினை கிழித்தெறிய
நீ மீண்டுமொரு கோயிலின்
தாழ்வாரத்தில் பதுங்குகிறாய்.

மிகவும் பச்சைக்காடுகள்
முழுவதுமாய் அழிய
தெருக்கள் புதைந்த மண்மேட்டினை
உடைத்து
வந்த படைகள் அக்கராயன் குளத்தை
குடித்தபொழுது
எனது கைகளும் கூடவே ஈரமாகின.

ஒரு முறை நாம்முடன் பலர் ஒதுங்கிய
பள்ளிக்கூடத்தின் கூரைகளை
கைப்பற்றிய பிறகும்
அம்பலப்பெருமாள் சந்தியிலிருந்து
மிகவும் நிலத்துக்கான
பசியோடு பற்கள் முளைத்த கொடி பறக்கிறது.

இரண்டு போராளிகளின்
சேறு ஊறிய உடல்களுடன்
கைப்பற்றப்பட்ட பதுங்குகுழியில்
இடம்பெயர மனதின்றி
இன்னும் யாரோ தங்கியிருக்கிறார்கள்.

நம்மைப் போர் விடுவதாயில்லை
உன்னையும் என்னையும்
பிரித்து வைத்திருக்கிறது
எனது கனவுகளையும் தெருக்களையும்
தின்றுவிட்டு
உன்னை மரங்களின் கீழாய்
பின் வாங்க வைக்கிறது
நிலங்களை துண்டாடிவிட்டு
பசிக்கேற்ற முகங்களை அணிந்திருக்கிறது.

மீண்டும் இரவிரவாக வரப்போகும்
விமானங்களிடமிருந்து
தப்புவதங்காய் துடிக்கிற நாய்க்குட்டியைப்போல
மரம் உனக்கு மேலாய் பதறுகிறது.

நாளை நீ பேசப்போகும்
சொற்களை தேடியலைகிற கனவில்
இன்னும் நிறைய மரங்களுக்கு கீழாய்
அதனுடன் நீ பின்வாங்குவதைக் கண்டென்.
-0-------0-------0----------0---------0---------0------0------
08.11.2008

கருத்துகள் இல்லை: