திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-09

   ஒரு வாரமாக சென்னையிலேக் குப்பைக் கொட்டியதன் விளைவாக சென்னையைப் பற்றிக் கவிதை எழுதிவிட்டேன். (என்னது அதுக் கவிதையா??). இன்று சிலப் புதிர் கேள்விகள். அனைத்திற்கும் சரியாய் பதில் சொல்பவர்கள் "நான் மெட்ராஸ்காரன்டா" என போக்கிரிப் பொங்கல் போட்டுக் கொள்ளுங்கள்.(அதாம்ப்பா,காலர தூக்கி விட்டுக்கோங்க)

1) சென்னையில் முட்டை அதிகம் கிடைக்குமிடம் எது?

2) சிகரெட்டைக் கண்டாலே "ஆ" வென அலறுபவர்கள் சென்னையில் எங்கு வசிக்கிறார்கள்?

3) தேநீர் பகுதியில் மக்கள் கூட்டம்.எங்கே?

4) நமீதாவின் இடுப்பில் இருப்பதை ஆக்குபவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். பதிவுலகத்திற்கும் ராசியான ஏரியா இது.

5) பரிசல்காரன் சென்னையில் இருந்தால் இங்கேதான் வசிப்பார்.

6) விஜயகாந்த் வசிப்பதால் இது வில்லேஜ்தான். ஆனால் சென்னை மாநகரில்தான் உள்ளது.

7) இங்கே பஞ்சாமிர்தம் கிடைக்காது.

8) சேரிதான். ஆனால் காஸ்ட்லியான சேரி.

9) உப்புக் கொட்டிய இடம்.கடலல்ல.

10) ஈக்கள் மொய்க்கும் ரயில்வே ஸ்டேஷன் எது?

நாளைய உலகம்



மறு உயிரெடுத்திருப்பது

புதிய நம்பிக்கை..

காற்றில் கரைந்த

உறுதிமொழிகள்!

தறிகெட்டுத் தடுமாறும்

முறைகேடுகள்!

புற்றீசல்களாக

பரிணமித்த எண்ண அலைகள்...

தாங்க இயலாத தவிப்புகள்

சொல்லண்ணாத துயரங்கள்!

ஆதரவு தேடும் அவலம்...

உணர்வுகளின் உருக்கம்!

தான் ஆடாவிட்டாலும்

தசை ஆடும் வினோதம்!

அந்தோ...பரிதாபம்

அதற்கும் வேட்டு!

அசலோடு கலந்து விட்ட

போலி வித்துகள்!

இனம் கண்டு

புறந்தள்ளி புறப்படு...

வீறு கொண்டு

விழித்தெழு...

நாளைய உலகம்

போற்றிப் புகழும் உன்னை!

சிலம்பாட்டத்தில் 'சின்ன ரம்பா....'
சிம்பு வைத்த செல்லப் பெயராம்

அழியாத வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடித்துவிட்டது ரம்பாவின் தொடை! Silambattamஇன்றளவும் இந்த வரலாறை மீற ஒரு நடிகைக்கும் சாமர்த்தியம் இல்லை. ஆனால், சனாகானிடம் எதைக் கண்டாரோ? 'சின்ன ரம்பா' என்றே அழைக்கிறாராம் சிம்பு. அழைத்தால் போதுமா? அதை பதிவு செய்ய வேண்டாமா? சிலம்பாட்டம் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் சனாகானை மேலே சொன்ன 'பட்ட பெயரோடு' அழைத்து ஒரு பாடலே பாடியிருக்கிறாராம்.

'பம்பாய் இப்போ மும்பையானது. சின்ன ரம்பா இப்போ தெம்பாதான் திரியுது' என்று தொடங்குகிறதாம் அந்த பாடல். தன்னை ரம்பா என்று அழைப்பதில் ரொம்பவே சந்தோஷப்படுகிறார் சனாகானும். ஒவ்வொரு படத்திலும் தனது அசோக் பில்லர் தொடைகளை காட்ட தயங்கியதே இல்லை ரம்பா. சனாகான் அப்படி ஏதாவது இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறாரா என்பதை சிலம்பாட்டம் வந்த பிறகுதான் முடிவு செய்யவேண்டும்.

சின்ன ரம்பாவுக்கு யூனிட் கொடுக்கும் முன்னுரிமை மற்றொரு நாயகியான சினேகாவுக்கு சின்ன கோபத்தை வரவழைத்திருக்கிறதாம். ஆனாலும், தனது முறை வரட்டும். நடிப்பாலேயே அடிக்கிறேன் என்று சபதம் செய்திருக்கிறாராம். இரண்டு பெண்கள் ஓரிடத்தில் இருந்தால், கலகலப்பும் உண்டு. கைகலப்பும் உண்டு!

புகை உடலுக்கு பகை
'சுருட்டு' மும்தாஜ் அட்வைஸ்

அட, மும்தாஜா இது? தேவையில்லாமல் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த எக்ஸ்ரா Mumtajசதைகளை குறைத்து 'ஏஞ்சல்' போலிருந்தார். ஒரு காலத்தில் தனது ரசிகர்களை சென்னைக்கு அழைத்து பிரமாண்ட சந்திப்பு நடத்துகிற அளவுக்கு எதிர்கால கனவுகளை வளர்த்துக் கொண்டிருந்த மும்ஸ், திடீரென்று எங்கு போனார் என்றே தெரியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய.டிராஜேந்தருடன் வீராசாமி என்ற படத்தில் நடித்ததோடு சரி. அதன்பின் வந்த வாய்ப்புகளையும் ஓரம் கட்டி விட்டார். இவராக கட்டினாரா? அல்லது கட்டப்பட்டாரா? என்பது ஆராய்ச்சிக்கு தேவைப்படாத விஷயம்.

மும்சுக்கு டும்டும்டும் என்று வந்த தகவல்களும் அவர் தரப்பில் மறுக்கப்பட்டன. இந்நிலையில் ராஜாதிராஜா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மும்தாஜை அழைத்த ஷக்தி சிதம்பரத்திற்கு பெருத்த ஆச்சர்யம். நேற்றுதான் சினிமாவில் நடிக்க வந்தது போலிருக்கிறாரே? அதற்காக ஹீரோயின் வேடம் கொடுத்துவிட முடியுமா என்ன? பாழாய் போன அதே கவர்ச்சி வேடம்தானாம். போதும் போதாதற்கு வாயில் சுருட்டை வேறு கொடுத்துவிட்டார்கள்.

ஷாட்டில் மட்டுமல்ல, பிரேக்கில் கூட சுருட்டும் விரலுமாக அமர்ந்திருக்கிறார் மும்ஸ். தேடி தேடி சேகரித்த அந்த பழைய அழகை சுருட்டு காலி பண்ணிவிடுமே என்ற கவலையோடு அவரை பார்த்தால், ஷாட்டுக்கு மட்டும்தான் புகை. மற்ற நேரங்களில் புகை எனக்கு பகை என்றார்! (வீராச்சாமியின் இன்ஸ்பிரேஷனாக இருக்குமோ) படத்தில் அமைச்சராக வரும் மும்ஸ், படம் முழுக்க கேரவேனிலேயே பயணிப்பாராம். நடிகர் நடிகைகளுக்கு கேரவேன் கொடுக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் பிடிவாதம் காட்டும் நேரத்தில், கதைப்படியே கேரவேன் வருவதால், ஜம் உலா வருகிறார் மும்ஸ்.

09.11.2008. அண்மைக் காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் 8 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன், 4 பேர் காயமடைந்திருந்தனர். இந்த நிலையில் அண்மையில் பதவி உயர்த்தப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் 42 உறுப்பினர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா  என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன், இராணுவத்தினரின் பாதுகாப்பைக் கோரியுள்ளார். கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்பட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளே இந்தப் படுகொலைகளுக்குக் காரணம் என தமிழ் [...]


More than a Blog Aggregator

by anbagam- a home for hiv affected children
இங்கு இருக்கும் குழந்தைகள் அனைவரும் HIV + VE பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சிலர் தாய் மற்றும் தந்தை இறந்தபின் , உறவினர்களால் ஒதுக்கப்பட்டு ஆதரவற்று இருப்பவர்கள் .

சிலர் பிறந்த சில மணி நேரங்களிலேயே பெற்றோரால் குப்பை தொட்டியில் வீசப்பட்டு கிடந்தவர்கள்.

இந்த குழந்தைகள் தற்போது மிக்க நலமுடன் உள்ளனர்.

இவர்கள் தினமும் நல்ல உணவு உண்டால் இன்னும் பல்லாண்டு உயிர் வாழ முடியும் .

நல்ல உணவு என்றால் சரிவிகித உணவு மட்டுமே . நீங்கள் நினைப்பது போல இவர்கள் மற்ற குழந்தைகள் போல எல்லா வகை உணவும் சாப்பிட முடியாது

கருத்துகள் இல்லை: