திங்கள், 10 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-06

ரஜினியின் பேட்டியை ஒளிபரப்பிய சன் டிவி குசேலன் சம்பந்தப்பட்ட கேள்வி பதில்களை ஒளிபரப்பவில்லை, முதலில் இந்த பேட்டிகளை எப்படி ஒளிபரப்பியது என்றே புரியவில்லை!!! குசேலன் வெளியீட்டில் இருந்து சமீப காலங்களில் ரஜினி எதிர்ப்பு செய்தியாகவே கூறி கொண்டு இருந்தது. ஆனால் சன் டிவி இந்த பேட்டியை ஒளிபரப்பியதன் மூலமே நல்ல ரீச் கிடைத்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

வழக்கம் போல ரஜினி பேட்டியில் குறை கூறி கிண்டலடித்து, திட்டி பேசுபவர்கள் பேசி கொண்டே தான் இருக்கிறார்கள்..இதெல்லாம் புதுசா என்ன! :-) எத்தனை பார்த்து இருக்கோம் ;-) ஒருத்தரை பிடிக்கலைனா அவர் என்ன செய்தாலும் பேசினாலும் குற்றம் தான், அது நொள்ளை இது நொட்டையினு ஏதாவது குறை கண்டு ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க.

இதுல இந்த இந்த தினமலர் போன்ற பத்திரிக்கைகள் வேறு..இவங்களா ஒரு தேதி அறிவித்து சந்திப்பு என்று போட்டு அன்று கல்லா கட்டிப்பாங்க, அப்புறம் சந்திப்பு நடக்கலைனா (எப்படி நடக்கும்) ரஜினி ரசிகர்களுக்கு ஹல்வா கொடுத்தாட்டாருன்னு அதையும் செய்தியா போட்டு கல்லா கட்ட வேண்டியது. அப்புறம் பேட்டி முடிந்ததும் ரஜினி ஓட்டம்! னு அண்ட புளுகு புளுக வேண்டியது. நீங்களாகவே அறிவிப்பு செய்தீங்க நீங்களாகவே இல்லைன்னு சொன்னீங்க இதற்க்கு ரஜினி என்ன பண்ணுவார்.

ரஜினி ரசிகர்கள் கூட்டம் நடந்து விட்டது நாட்டுல இருக்கிற அத்தனை பிரச்சனையும் தீர்ந்து விட்டது என்று குமுதம் கார்ட்டூன் போட்டுள்ளது, ஏன்யா! நடக்காத சந்திப்பை கவர் ஸ்டோரி, கவர் இல்லாத ஸ்டோரி, சூப்பர் ஸ்டோரி னு போட்டு காசு பார்க்க வேண்டியது (இந்த சந்திப்பையும் எப்படியும் இரண்டு வாரத்திற்காவது ஓட்டுவீங்க) அப்புறம் நீங்களே இந்த மாதிரி கார்ட்டூன் போட்டு நக்கல் அடிக்க வேண்டியது. குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுறது என்பது இது தானா! ரஜினியா வந்து ஒவ்வொரு முறையும் தேதி கூறி தள்ளி வைத்துட்டு இருந்தாரு! அப்படியே தள்ளி வைத்தாலும் அது ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் உள்ள பிரச்சனை உங்களுக்கென்ன! நீங்க தான் நாட்டு மக்கள் பயன் பெற உருப்படியான படங்களை!!! நடு பக்கத்தில் போட்டு நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிட்டு இருக்கீங்கல்ல, எந்த ஒரு சினிமா சம்பந்தப்பட்ட செய்தியும் போடாம மக்களுக்கு அறிவு வளர்க்கும் திருக்குறள் சத்யசோதனை பற்றிய கருத்துக்களை கூறிட்டு இருக்கீங்கல்ல அதையே தொடர்ந்து செய்ய வேண்டியது தானே..உங்களை யாரு வந்து ரஜினி சந்திச்சாரா பேசினாரா மூச்சுட்டாரா தும்மல் போட்டாரான்னு வந்து பார்க்க சொன்னது. போய் எல்லோரும் முதல்ல உங்க வீட்ட சுத்தம் செய்யுங்க..அப்புறம் வந்து அடுத்தவன் வீடு நாறுதுன்னு சொல்லலாம்.

ரஜினி அரசியலுக்கு வருகிறார் வரலை அது ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் உள்ள பிரச்சனை, என்னமோ ரஜினி ரசிகர்கள் மேல ரொம்ப அக்கறை மாதிரி எல்லோரும் மாஞ்சு மாஞ்சு விவாதிச்சுட்டு இருக்காங்க, ஐடியா கொடுத்துட்டு இருக்காங்க. இதுல இவர்கள் எல்லாம் எப்ப திருந்த போகிறார்களோ என்று வசனம் வேறு! சிரிப்பு தான் வருது. வீட்டுல உட்காந்துட்டு அவன் சரி இல்லை இவன் ஏமாத்துறான், இவனுகளுக்கு வேற வேலை வெட்டியே!!! கிடையாது, பால் ஊத்துறான், கற்பூரம் காட்டுறான் னு சொல்ற ஒரு சில பேர் இந்த வலைப்பதிவை கட்டிட்டு, எப்ப பார்த்தாலும் தமிழ்மணத்துலையே குத்த வைத்து உட்காந்துக்கிட்டு எந்த மாதிரி பதிவு போட்டு ஹிட் ஏத்தலாம், எவனை திட்டலாம், எப்படி ஒருத்தனை கட்டம் கட்டலாம் னு (இன்னும் கொஞ்சம் இருக்கு நாகரீகம் கருதி குறிப்பிடவில்லை) கம்ப்யூட்டரை கட்டிட்டு அழ வேண்டியது இதுல மற்றவர்களுக்கு அறிவுரை மற்றும் கிண்டல் வேறு!, வெட்டி வேலை செய்கிறான் என்று. ஒருத்தன் என்ன செய்தாலும் குற்றம் அதே நாம செஞ்சு அதை யாரும் கேட்கலைனா நாம குற்றமே செய்யலைன்னு அர்த்தம் கிடையாது. ரசிகனாவது பால் ஊத்துறதையும் கற்பூரம் காட்டுறதையும் அந்த ஒரு நாள்ல முடிச்சுட்டு அவன் பொழைப்ப பார்க்க போயிடுறான், ஆனா அவனை கிண்டல் செய்யும் மற்றவர்கள்...எதற்கெடுத்தாலும் லாஜிக் பார்த்து பேசும் அதி புத்திசாலிகள்... !!!

அவன் கண்ணுக்கு தெரிஞ்சு வெட்டி செலவு பண்ணுறான், நாம கண்ணுக்கு தெரியாம வெட்டி செலவு பண்ணிட்டு இருக்கோம், நேரத்தை விரயம் செய்து கொண்டு இருக்கிறோம். இந்த அதி புத்திசாலிகளுக்கு தன்னிடம் உள்ள குறைகள் புரியாது சொன்னாலும் அதற்க்கு ஏதாவது லாஜிக் பேசுவாங்க. இப்படி இருக்கிறவங்க தங்களிடம் உள்ள பிரச்சனைகளை உணர மாட்டாங்க..அடுத்தவன் சரி இல்லை, முட்டாள்னு குறை கூறிட்டு இருப்பாங்க. ஒருத்தனை விரல் நீட்டி குற்றம் கூறும் போது மற்ற விரல்கள் நம்மை நோக்கி தான் இருக்குங்கறதை மறந்துடாதீங்க.

அவசியமில்லாமல் ஒருவரை குறை கூறி அல்ப சந்தோசப்படுவதையும் அடுத்தவருக்கு அறிவுரை கூறுகிறேன் பேர்வழி என்று நக்கல் அடிப்பதையும் ஐடியா கொடுப்பதையும் விட்டு விட்டு, அதி புத்திசாலிக பாஷையில சொல்வதுன்னா உருப்படியா வேற வேலை இருந்தா போய் பாருங்க இல்ல... நல்ல!! பதிவு எழுத முயற்சி செய்யுங்க. ஏன்னா! நீங்க தான் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வழியில் செலவழிக்கிறவங்க ஆச்சே!
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க டில்லி வரும் அந்நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. டில்லியில் 'பீமஸ்டெக்' எனப்படும் 7 தெற்காசிய பிராந்திய நாட்டுத்தலைவர்களின் மாநாடு எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டில்லிக்கு வருகிறார். இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் [...]

போலீஸ் அதிகாரி, ஒரு அசைன்மென்ட்டுக்காக மாணவன் ஆகிற கதை. அடிக்கிற ட்யூட்டியையும், படிக்கிற ட்யூட்டியையும் ஒரே நேரத்தில் கொடுத்து, 'தல'ய்க்கு பாரம் ஏற்றியிருக்கிறார் இயக்குனர் ராஜுசுந்தரம். அதில் கொஞ்சத்தை நமது தலைக்கும் டிரான்ஸ்பர் செய்கிறது திரைக்கதை. இதுதான் கொஞ்சம் 'ஜண்டுபாம்' ரகமே தவிர, மற்ற காட்சிகள் எல்லாம் மிரட்டல் கேம்!

இன்டர்நேஷனல் தாதா சுமனின் கூட்டாளி தேவன், ஒரு சந்தர்பாத்தில் சுமனுக்கு எதிராக அப்ரூவர் ஆகிவிடுகிறார். நீதிமன்றத்தில் ஒப்படைக்க போகும்போது தப்பிக்கும் அவர் மீண்டும் கிடைத்தால்தான் சுமனை உள்ளே தள்ள முடியும். தேட ஆரம்பிக்கிறது போலீஸ். தேவனின் மகள் பியா ஊட்டியில் உள்ள கல்லூரியில் படிக்கிறார். மகளை பார்க்க தேவன் அங்கு வருவார் என்பதை மோப்பம் பிடிக்கும் போலீஸ், அவரை பொறி வைத்து பிடிக்க அஜீத்தை அனுப்புகிறது. மாணவராக கல்லூரிக்குள் நுழையும் அஜீத்தின் அனுபவங்களும், அவஸ்தைகளும்தான் கதை.

ஜவ்வரிசி பாயாசத்தில் புளியங்கொட்டையை போட்ட மாதிரி துருத்திக் கொண்டு தெரிகிறார் மாணவர் அஜீத். ஆனால், இந்த அஜீரணத்தை பேலன்ஸ் பண்ணுகிறது ஜெல்லூசில் வசனங்கள்! "நான்தான் எனக்கு தொப்பைன்னு ஒத்துக்கிறனே..." என்று சொல்லும்போது, தலயின் சரண்டர் சல்யூட் அடிக்க வைக்கிறது. சண்டை காட்சிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு தோட்டாவாக பாய்கிறார் தல. பாடல் காட்சிகளில் இன்னும் பிரமாதம். ஒவ்வொரு மூவ்மென்டும் அஜீத்தின் உடலுக்குள் ராஜுசுந்தரத்தின் வேகமாக தெறிக்கிறது. முதல் பார்வையிலேயே நயன்தாராவிடம் அவுட் ஆகிவிடும் அஜீத்தின் கம்பீரமும், வழிகிற காதலும் தியேட்டரை துவம்சமாக்குகிறது.

அட, நயன்தாராவா இது? சுற்று சூழலா, அல்லது சொந்த சூழலா தெரியவில்லை. தாஜ்மஹாலுக்கு வெள்ளையடிக்க வேண்டிய நேரம் வந்திருச்சுய்யா வந்திருச்சு! திறந்து கிடக்கும் பின் முதுகோடு படம் நெடுகிலும் நடமாடுகிறார். சங்கப்பலகையில் பொறிக்கப்பட வேண்டிய இவரது தங்க பலகை முதுகு, இந்த படத்தில் 'பிளாக் போர்டாகி போச்சே' என்ற கவலைதான் எழுகிறது.

காதலை வெளிப்படுத்தாமலே காதலிக்கும் நவ்தீப்பிடம், "இன்னும் நீ ஐ லவ் யூ சொல்லலே" என்று ஞாபகப்படுத்தி வாங்கும் பியாவின் காதலில் பட்டாம்பூச்சியின் அழகு. கடத்தப்படும் இவரை பொறி பறக்கும் சண்டைக்குப் பின் அஜீத் மீட்டெடுப்பது கம்பீரம்.

ஜெயராம், சுமன் வகையறாக்கள் இடமாறு தோற்றப்பிழை. காமெடியில் சுமனும், சீரியஸ் காட்சிகளில் ஜெயராமுமாக மாறிப் போயிருக்கிறார்கள். நாசரின் அரவணைப்பில் வளர்ப்பு மகனின் பிளாஷ்பேக், கண்ணீர் சென்ட்டிமென்ட். சித்திகளின் மனசை சிக்கனமாக பார்வைகளாலேயே வெளிப்படுத்தி விடுகிறார் சுஹாசினி. அப்பளம் சுடுவது மாதிரி கூட இருக்கிற தடியன்களை போட்டுத்தள்ளும் சுமனின் வேகமும், அதை தொடர்ந்த அவரது அழுகையும் சீரியஸ் காமெடி!

அர்ஜுன் ஜெனாவின் ஒளிப்பதிவில் ஆங்கில படத்தின் கம்பீரம். யுவன்சங்கர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மயக்கம். அஜீத்தின், மாணவன் என்ட்ரி மாதிரியே அமைந்திருக்கிறது ராஜுசுந்தரத்தின், டைரக்டர் என்ட்ரியும்.

அறிமுக காட்சியில் 'gun'னோடு தோன்றுவதால் ஏகன் என்று டைட்டில் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

venkatesan



More than a Blog Aggregator

by rammalar

Quotes by Gandhi

Earth provides enough to satisfy every man’s need, but not every man’s greed.

My life is an indivisible whole, and all my activities run into one another: and they have their rise in my insatiable love of mankind.

The best way to find yourself, is to lose yourself in the service of others. 

Even a believer in nonviolence has to say between two combatants which is less bad or whose cause is just.

Where there is fear, there is no religion.

There are limits to self-indulgence, none to restraint.

No culture can live, if it attempts to be exclusive.

Be the change you want to see in the world. 

Interdependence is and ought to be as much the ideal of man as self-sufficiency.  

Live as if your were to die tomorrow. Learn as if you were to live forever.

      


More than a Blog Aggregator

by OSAI Chella

கருத்துகள் இல்லை: