புதன், 19 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-15

மேசைக்கணினிகளின் மானிட்டரை ஆஃப் செய்துவிட்டுப் பாடல்களை மட்டும் ஒலிக்கும்படி செய்யும் இணைஞர்கள் எத்தனையோ பேர் இருக்கிறோம்.

ஆனால் மடிக்கணினியில் இவ்வாறு மானிட்டரை மாத்திரம் அணைத்துவிட்டுப் பாடல்களைக் கேட்பதற்கு வழிவகை உள்ளதா? இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அமைந்ததுதான் இந்தப் பதிவு.



65 கேபி அளவுள்ள ஒரு சிறிய மென்பொருள் பயன்பாட்டை இயக்குவதன் மூலம் மானிட்டரை அணைத்துவிட முடியும்.

இந்த அப்ளிகேசனை நிறுவுவதற்கு முன் உங்கள் கணினியில் மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம் ஒர்க் 2.0 நிறுவியிருக்க வேண்டும்.



பயன்பாட்டை தரவிறக்கம் செய்ய

மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம் ஒர்க் 2.0 



தமிழ்நெஞ்சம்   


இணைப்பு

உங்களிடம் ஒரு இணையத்தளம் அல்லது வலைப்பதிவு இருந்தால் அது தொடர்பான சகல விடயங்களையும் அறிந்திருத்தல் அதனை ஒரு தேடுபொறிக்கு இயைவானதாக மாற்றி அமைக்க உதவும் (SEO). அனால் Google page rank, Alexa rank போன்ற அனைத்தையும் ஒவ்வொரு இணையத்தளமாக போய் அறிந்து கொள்ளுவது மிகவும் கடினமானதாகும்.
இதற்கு தீர்வாக வந்துள்ளதுதான் Quarkbase இணையத்தளம்.
இந்த இணையத்தளம் ஒரு Web 2.0 சேவையாகும். இந்த இணையத்தளத்தில் நீங்கள் உங்கள் இணைய முகவரியை கொடுத்து தேடு என்று சொடுக்கினால் போதும். உங்கள் இணையத்தளம் தொடர்பான விடயங்களை உடனேயே அழகாக வரிசைப்படுத்தி விடும்.
உடன போய் தேடி பாருங்க..
ஊரோடி 
இணைப்பு
ശബരിമല അവലോകന യോഗം പമ്പയില്‍ തുടങ്ങി. ദേവസ്വം ന്ത്രേി ജി. സുധാകരന്‍റെ അധ്യക്ഷതയില്‍ രാവിലെ 10 മണിക്കാണ്‌ യോഗം തുടങ്ങിയത്.

ഈ മാസം 15-നു മുഖ്യമന്ത്രി ശബരിമല തീര്‍ത്ഥാടന ഒരുക്കങ്ങള്‍ വിലയിരുത്താന്‍ എത്തുന്നതിനു മുന്നോടിയാണ് ഇന്നത്തെ അവലോകന യോഗം. ശബരിമലയുമായി ബന്ധപ്പെട്ട് പ്രവര്‍ത്തിക്കുന്ന 22 വകുപ്പുകളുടെ പ്രതിനിധികള്‍ യോഗത്തില്‍ പങ്കെടുക്കും. ശബരിമല തീര്‍ത്ഥാടനത്തിനുള്ള അവസാനവട്ട ഒരുക്കങ്ങള്‍ യോഗത്തില്‍ ചര്‍ച്ച ചെയ്യും.
மார்பகம் என்பது பால் கொடுக்கும் ஒரு உறுப்பு. அதையெல்லாம் முடி வைப்பதால்தான் நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கிறது என்று கூறி டாப் லெஸ்சாக படம் எடுத்து பரபரப்பை கிளப்பியவர் வேலு பிரபாகரன்.

காதல் அரங்கம் என்ற அந்தப் படத்தைப் பார்த்த சென்சார் பாதி படத்தை கத்தரித்தால்தான் சான்றிதழ் கிடைக்கும் என கறாராக கூற, படத்தை மறு தணிக்கைக் குழுவுக்கு அனுப்பினார்.

விவரம் தெரியாதவர்கள். வேலு பிரபாகரனின் மார்பக விளக்கத்தை ஏற்றுக் கொள்ள அவர்களும் தயாராக இல்லை. விசால மனம் கொண்டவர்கள் சென்சார் பொறுப்பேற்கும் வரை காத்திருக்க முடியாதே.

அதனால், சென்சார் சொன்ன இடங்களை எல்லாம் கத்தரித்து வெஜிடேரியனாக விரைவில் படம் வெளிவர இருக்கிறது.


பிரபல நடிகை காவ்யா மாதவன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

குவைத்தில் பணியாற்றும் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், ஒரு சில படங்களே தன் வசம் உள்ளதால், அவற்றை முடித்துக் கொடுத்த பின் தங்கள் திருமணம் நடைபெறும் என்றும் கொச்சியில் வியாழனன்று செய்தியாளர்களிடம் காவ்யா மாதவன் கூறினார்.

கடந்த 1991ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகமான காவ்யா மாதவன், பின்னர் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றிலும் காவ்யா நடித்துள்ளார்.

திருமணத்திற்குப் பின் நடிப்பது குறித்து இப்போதே எதுவும் கூற முடியாது என்றார் காவ்யா.
கும்பகோணத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் நினைவாக, கட்டப்பட்ட நினைவு மண்டபத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக "நினைவு மண்டபம்' கட்ட வேண்டும் என குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற தமிழக அரசு நினைவு மண்டபம் கட்ட 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

குடந்தை பாலக்கரையில் 10,000 சதுர அடி பரப்பளவில் நினைவு மண்டபம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது முடிவடைந்துள்ளது.

இதில் ரூ. 29.50 லட்சத்தில் நினைவுத் தூண் அமைக்கும் பணியை குடந்தை அரசு கவின் கலைக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களும், ரூ. 30.50 லட்சத்தில் தியான மண்டபம், அலங்கார மின் விளக்குகள், பூங்கா, சுற்றுச்சுவர் ஆகியன அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகமும் மேற்கொண்டன.

இந்த நினைவு மண்டபத்தை திறந்து வைத்து, அங்குள்ள தியான மண்டபத்திற்குச் சென்ற மு.க. ஸ்டாலின், உயிரிழந்த குழந்தைகளின் பெயர்ப் பலகையின் முன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கருத்துகள் இல்லை: