வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-13

13.11.2008. பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் அசோக ஹந்துங்கமவுக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அசோக ஹந்துங்கம இயக்கிய “”அக்ஷரய’ எனும் படத்தில் சிறுவன் ஒருவனை நிர்வாணமாக வைத்துப் படமெடுத்தமை தொடர்பாகவே இவருக்கெதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்தக் குற்றச்சாட்டு நீதிமன்றில் சுமத்தப்பட்டுள்ளது. இயக்குநர் ஹந்துங்கமவுக்கு எதிரான குற்றப் பத்திரிகை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவித்திருக்கிறார். இதில், 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் [...]
சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் நடத்திய காட்டுமிராண்டித்தாக்குதலின் எதிரொலியாக மதுரையில் 10 அரசுப் பேருந்துகளை விஷமிகள் சிலர் சேதப்படுத்தினர்.இதனால் மதுரையில் சில பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.இதனை அடுத்து அங்கு ஏராளமான ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இரவு நேரப் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.  
13.11.2008. மலையகத் தமிழர்களுக்குத் தனியான அலகொன்றை வழங்கவேண்டுமெனக் கோரி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் திங்கட்கிழமையும், மலையக மக்கள் முன்னணி செவ்வாய்க்கிழமையும் இருவேறு யோசனைத் திட்டங்களை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பித்தன. மலையகத் தமிழர்கள் வாழ்ந்துவரும் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளுக்கு அதிகாரப்பகிர்வுடன் கூடிய தனியான அலகொன்று வழங்கப்பட வேண்டுமென மலையக மக்கள் முன்னணி முன்வைத்திருக்கும் யோசனைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "மலையகத் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய யோசனைத்திட்டமொன்றை 1994ஆம் ஆண்டு பாராளுமன்ற விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தோம். அந்த யோசனைத் திட்டம் மறுபடியும் 2006ஆம் [...]
பூக்களாய்ச் சிரிக்கும் பிள்ளைகள்.
பூமிக்கு கிடைத்திருக்கும் நித்திய மலர்கள்.

அந்த மு்கத்தில் என்றும் புன்னகை தவழ்ந்திருக்க
இறைவனைப் பிரார்த்திக்கி்றோம்.

















பேரண்ட்ஸ் கிளப் அங்கத்தினர்கள் சார்பாக
அனைத்து குட்டீஸுகளுக்கும் மனமார்ந்த
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பகுதிகளில் ஆயுததாரிகளின் ஆட்கடத்தல் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் எனக் கூறப்பட்டு இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடந்த இரு மாதங்களில் மாத்திரம் பன்னிரெண்டு பேர் இரவு வேளைகளில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள்.


காணாமற் போனவர்கள் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.


1.2008.09.23 செல்லத்துரை தவலட்சுமி, விநாயகபுரம்.4, திருக்கோவில்.
2.2008.09.23 தம்பிமுத்து சுசிகரன், விநாயகபுரம்.4, திருக்கோவில்.
3.2008.09.23 விஜயராசா சுஷந்தன் (16 வயது) விநாயகபுரம்.4, திருக்கோவில்.
4.2008.09.23 திருமால் திருச்செல்வம், விநாயகபுரம்.4,(தகவல் - கொல்லப்பட்டுள்ளார்)
5.2008.10.20 ஸ்ரீகரன் பிரதீபா, அக்கரைப்பற்று.
6.2008.10.20 ஸ்ரீதரன் ஸ்ரீகாந்தன், அக்கரைப்பற்று.
7.2008.10.20 சீனித்தம்பி நடேசன், அக்கரைப்பற்று.
8.2008.10.20 கணபதிப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி, அக்கரைப்பற்று.
9.2008.10.28 தியாகராசா இந்திரன், அக்கரைப்பற்று.
10.2008.10.29 பேரின்பம் சத்தியன், அக்கரைப்பற்று.
11.2008.10.28 கந்தையா பாஸ்கரன், அக்கரைப்பற்று.
12.2008.11.10 ராசா மகேஸ்வரன் (38 வயது) இன்ஸ்பெக்டர் ஏற்றம், பொத்துவில்.

கருத்துகள் இல்லை: