வெள்ளி, 14 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-12

அதிகாலை இதற்கு முன்னர் வெளியிட்டிருந்த  செய்தியில் "மர்மயோகி"-யின் மூடுவிழா பற்றி குறிப்பிட்டிருந்தோம். அதேசமயம் கமலஹாசனின் அடுத்த படம் குறித்த கொசுறு செய்தியையும் வெளியிட்டிருந்தோம். "தலைவன் இருக்கிறான்" - இது கமலஹாசனின் புதிய படத்தின் தற்போதைய பெயர். இது கூடிய விரைவில் மாறலாம் என கோடம்பாக்கத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மர்மயோகி தொடராததால் கமலஹாசன் உடனடியாக இப்படத்தில் முழுமூச்சுடன் இறங்கிவிட்டதாக தெரிகிறது. மர்மயோகிக்காக திரிஷா மற்றும் ஸ்ரேயாவிடம் கால்ஷீட் வாங்கியுள்ளதால் இருவரையும் இப்படத்தில் நடிக்க வைக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் ஆஷன் கலந்த ஜனரஞ்சக மசாலா திரைப்படமாக இருக்கும். இப்படத்தில் மோகன்லால் , ரிஷிகபூர், வெங்கடேஷ் எனப் பெரிய திரையுலக ஜாம்பவான்களை நடிக்க வைக்க முயற்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வசூல்ராஜா படத்தைத் தயாரித்த ஜெமினி சர்க்யூட் இப்படத்தை தயாரிக்கும். படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாண்டில் நடைபெறும். மர்மயோகி போனா என்ன ? "தலைவர் நீங்க கலக்குங்க" !
இலங்கை அ‌ம்பாறை மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உக‌ந்தை வன‌ப்பகு‌தி‌யி‌ல்ஊடுரு‌விய ‌இலங்கை சிற‌ப்பு அ‌திரடி‌ப் படை‌யின‌ரி‌ன் அ‌ணி ஒ‌ன்றை‌த் த‌மி‌ழீழ‌ விடுதலை‌ப் பு‌லிக‌ள் வ‌ழிம‌றி‌த்து‌த் தா‌க்‌‌கிய‌தி‌ல் ‌சிற‌‌ப்பு அ‌திரடி‌ப்படை‌யை‌ச் சே‌ர்‌ந்த உய‌ர‌திகா‌ரி ஒருவ‌ர் உ‌ட்பட 2 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், ஒருவ‌ர் படுகாயமடை‌‌ந்தா‌ர் எ‌ன்று பு‌லிக‌ள் ஆதரவு இணையதளமான பு‌தின‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

· 

கொலைகாரனுக்கு நல்ல சார்ப்பான கத்தி சப்ளை. கத்திக்குத்து வாங்கி சாகபோறவனுக்கு முன் கூட்டியே ஒப்பாரி. அடடா, என்ன மனிதாபிமானம்.

· புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறான்.' - இது பழமொழி அல்ல.

· தலைக்கு குண்டு. வாய்க்கு சோறு. ஆக வாய்க்கரிசி.

· உயிரோடு இருக்கும்போது நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களுக்கு, தரமான மருத்துவம் கொடுத்து காப்பாற்ற வக்கற்ற வாரிசுகள், செத்தப் பிறகு ஊர் மெச்சவேண்டும் என்பதற்காக 'கருமாதியை' ரொம்ப விசேஷமாக நிறைய செலவு செய்து கொண்டாடுவார்கள். வருஷா வருஷம் 'தேவசத்தை' சிறப்பாக செஞ்சி சொந்தக்காரங்ககிட்ட நல்லபெயர் வாங்குவார்கள். அற்ப இந்துசமூக புத்தி.

· ஈழத்தமிழர்களுக்கு ஏராளமான நிதி குவிகிறது.

· குண்டால் அடிச்சி சோறுபோடுறான்.

· 'இனி நம்ம கிட்ட ஒண்ணுமில்லே. எல்லாம் மேலே இருக்கிறவன்கிட்டதான் இருக்கு.' -கையாலாகாத டாக்டரின் வசனம்.

· "அவளே போனபிறகு, நான் உயிரோடு இருக்கிறதுல அர்த்தம் இல்ல. என்னைவிடுங்க நானும் போய் சாகிறேன்."

பொண்டாட்டியை இவனே தூக்குல மாட்டி தொங்க விட்டுவிட்டு, ஊர் மக்கள் மத்தியில் வசனம் பேசுகிறான் கொலைகார கணவன்.

· "தமிழர்களின் நலனுக்காகத்தான் போர்" என்று ராஜபக்சே சொல்கிறார்.

தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்திற்கு ஆயுத உதவி.

நிவாரண உதவி என்ற பெயரில் தமிழர்களுக்கு வாய்க்கரிசி.

இதுதாண்டா இந்தியா.

http://mathimaran.wordpress.com

பொதுவாகவே, சர்வதேச சங்கத்தை நாம் ஓர் உண்மையான உலகப் பாதுகாப்புச் சங்கம் என்று சொல்ல முடிவதில்லை.

அதை வலுத்தவர்கள், தந்திரக்காரர்கள் பாதுகாப்புச் சங்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.

யோக்கியமான ஒரு சர்வதேசப் பாதுகாப்புச் சங்கம் இருக்கவேண்டுமானால், அது உலக எல்லா தேசங்களுக்கும், ஒவ்வொரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பிரதிநிதிகள் அடங்கிய சபைக்கு உலக அரசியல், இராணுவம் ஆகியவை முழுவதையும் ஒப்படைத்து-விட்டு, இன்று தனித்தனி இராஜாவாகவோ, சர்வாதிகாரியாகவோ இருப்பவர்களுக்கு ஜீவனாம்சம் கொடுத்து உட்கார வைத்து, அச்சபைக்குத் தலைவராகத் தேசம், ஜாதி, மதம், கடவுள் செயல் என்கின்ற குறுகிய நோக்கமற்று உலகமெல்லாம் ஒரு தேசமாகவும், மக்களெல்லாம் ஒரே (மனித) ஜாதியாகவும் கருதுபவராகவும், உலக சொத்துக்கள் எல்லா மக்களுக்கும் சொந்தமானது என்கிற சகோதர உணர்ச்சி உள்ளவராகவும் உள்ளவரைத் தலைவராகப் போட்டு ஆட்சி நடத்தப்படுமானால் அது உண்மையான சர்வ தேசப் பாதுகாப்புச் சங்கமாக இருக்கலாம்.

பார்ப்பான் கூலி கொடுக்காமல் வேலை வாங்கிக் கொள்ள உரிமையுள்ளவனென்பதும்; பணக்காரன் ஏதாவது கூலி கொடுத்து வேலை வாங்க வேண்டும் என்பதும் தவிர - மற்றபடி மற்ற ஜனங்களைவிட தாங்கள் மேலானவர்கள் என்பதிலும், இந்நிலை கடவுளால் அளிக்கப்பட்டது என்பதிலும் வித்தியாசமான அபிப்பிராயம் இல்லவே இல்லை.

இப்படிப்பட்ட இந்த இரண்டு கூட்டத்தாரும் சேர்ந்துதான், இந்தியாவின் தேசாபிமானத்துக்குக் கர்த்தாக்களாய் இருக்கிறார்கள்.


எப்படியென்றால், பணக்காரன் பணத்தைப் பல இலட்சக்கணக்காய்க் கொடுக்கிறான்; பார்ப்பான் தந்திரத்தைப் பிரயோகிக்கிறான்; இருவரும் சேர்ந்து கூலிகளைப் பிடித்துத் தேசாபிமானப் பிரச்சாரம் நடத்தி அதற்குச் செல்வாக்கை உண்டாக்கி விடுகிறார்கள்.

ஆகவே, இந்த இரண்டு கூட்டத்தார்களாலும் இவர்களுடைய கூலிகளாலும் நடத்தப்படும் தேசாபிமானம் பாமர மக்களுக்குப் பயன்படுமா - அல்லது இந்த மூன்று கூட்டத்தையும் வெளியாக்கி அவர்களை ஒழிக்க முயற்சிக்கும் தேசத் துரோகம் பாமர மக்களுக்குப் பயன்படுமா என்பதை அறிஞர்கள் யோசிக்க வேண்டும்.

-----------------தந்தைபெரியார் - 'குடிஅரசு', தலையங்கம் 29.9.1935
புத்த பிக்குகள் இனவாதத்தைப் பரப்பி அரசியல் செய்ய முற்பட்டதால், பௌத்த ஆலயங்களில் பூசை செய்யவே ஆளில்லை. பௌத்த மதத்தப் போதிக்க வேண்டிய புத்த பிக்குகள், சிங்களப் படையினர் கிளிநொச்சியை இதோ பிடித்து விடுவார்கள், அதோ பிடித்துவிடுவார்கள் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.  மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக, ராணுவத் தளபதியைப்போல் புத்த பிக்குகள் பேசுகிறார்கள்?
புதுக்குடியிருப்பு உடையார்கட்டுப் பகுதியில் வசித்து வரும் பூநகரி ஞானிமடத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ரஞ்சிதமலர் கேதீஸ்வரன் தனது உறவினரான 84 வயதுடைய செல்லம்மா சுந்தரராஜனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வாகனத்தில் மூலம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து வவுனியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வந்த போது அவரது பிரயாணப் பையில் இருந்து 3.5 கிலோ நிறையுடைய சி - 4 ரக வெடிமருந்து இருந்த காரணத்தினால் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: