செவ்வாய், 19 மே, 2009

2009-05-19

வதந்திகள் - அரசாங்கச் செய்திகள் இவற்றின் குழப்பத்தை நீக்கவும் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பேசும் மக்களின் கலக்க நிலையைப் போக்கவும் நேரந்தாழ்த்தாது உடனடியாக LTTEயின் தலைவர் நேரடியாகத் தோன்றித் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும்! அரசியலில் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் மனிதத்தின் பெயரால் எனது தனிப்பட்ட கருத்து இதுவாகும். எந்த உயிரையும் கொல்லும் உரிமை எவருக்கும் இல்லை என்ற எனது கோட்பாட்டின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அது எவராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே எனது 14.05.2009 திகதி இடுகையில் சொல்லியபடி ஈழத் தமிழரைக் காப்பாற்ற - சதாமை எப்படி அமெரிக்கா கைது பண்ணியதோ அதே போல மகிந்த ராஜபக்க்ஷவையும் கைது பண்ணுவதே ஒரேவழி! என்ற செய்திக்கு அமைவாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். போரினால் பாதிக்கப்ட்ட மக்கள் அனைவரிடமும் பூரணமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் எல்லோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீதியான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். இதுவே எனது மனிதாபிமான பகிரங்க வேண்டுகோளாகும்.
6000 அடி உயரத்திலிருந்து பாரசூட் இல்லாமல் குதித்து உயிரோடு இருக்கிறார் ஒரு skydiver.
ஆச்சரியமாக இல்லை???

இங்கிலாந்தின் Tamworth, Staffordshireஐச் சேர்ந்த James Boole என்பவரே இவ்வாறு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியவர்...
இவர் நிலத்தை அடைய சற்று முன்னரே தனது பாரசூட்டை விரித்துள்ளாஅராம்...
சற்று முன்னென்றால் எவ்வளவு நேரம்???
அது தான் ஆச்சரியம் சாமி... நிலத்தை அடைய 2 செக்கண்ட்ஸுக்கு முன் !!!



James Boole



இந்த நபர் ஒரு பிள்ளைக்கு அப்பா.
ஒரு டீ.வி. விவரணச் சித்திரத்துக்காக இன்னொரு Skydiverஐ படம் பிடிக்க சென்றுள்ளார்.

கூட பறந்தவர் தவறாக சிக்னல் கொடுத்ததால் பனி மிகுந்த ஒரு மலையின் உச்சியை அடைய 2 செக்கண்ட்ஸுக்கு முன்னரே தனது பாரசூட்டை விரித்துள்ளாராம்...
6000 அடியிலிருந்து பறக்கத் தொடங்கியிருக்கிறார்கள் இவர்கள்.
மலையின் உச்சியை வந்தடையும் போது இவரின் கதி 100 mph !!!

James Booleஇன் பின்பகுதி, விலா என்புகள், பற்கள் என்பவற்றுக்கு சிறிது சேதம் ஏற்பட்டிருக்கிறதாம்...

இந்த படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்ததாம்.
விபத்து நடந்த உடனே மொஸ்கோவிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்களாம்...
இங்கிலாந்துக்கு திரும்ப முதல் கொஞ்சம் உடல்நிலையை தேற்றிவிட்டு செல்வதற்காக ரஷ்யாவில் தங்கியிருக்கிறாராம் இவர்...

இவர் ஒரு மெக்கானிக்கல் எஞ்ஜினியர்.
இவர் கடந்த 12 வருட காலமாக பாரசூட்டில் பறந்து பழக்கம் உள்ளவர்.
2000க்கும் மேற்பட்ட தடவைகள் பறந்து அனுபவம் உள்ளவர்...

அவனவன் சைக்கிள் மோதியே எமன்கூட ஐக்கியமாயிடுறானுங்க...
இந்தாளு என்னான்னா அலேக்கா பறந்து வந்தும் அதுவும் பாரசூட் இல்லாம பறந்து வந்து சின்ன விபத்தோட தப்பிச்சிருக்காரு...

என்ன கொடுமை இது சரவணன் ???
:-)

விடுதலைப் புலிகள் இறந்த பின்னரும் அவர்களைக் காட்டிக் கொடுத்த 'பெருமை'யைப் பெற்றுள்ளார் கருணா


விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினரின் உடல்களை, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி அரசுப் படைகளுக்கு ஆதரவாக மாறி, புலிகள் வலுவிழக்க முக்கிய காரணமாக இருந்த கருணாதான் அடையாளம் காட்டியுள்ளார்.

இதன் மூலம் புலிகளின் இறந்த உடல்களையும் காட்டிக் கொடுத்தவர் என்ற 'பெருமை' அவருக்குப் போய்ச் சேர்ந்துள்ளது.

விடுதலைப் புலிகள் குறித்து இலங்கை ராணுவத்திடம் முழுமையான தகவல்கள் இல்லை. முன்னாள் புலிகள் இயக்கத்தினரை வைத்துத்தான் பிடிபட்டவர்களையும், கொல்லப்பட்டவர்களையும் அவர்கள் அடையாளம் கண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை நடந்த சண்டையில் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளைக் கொன்றதாக ராணுவம் அறிவித்தது. இந்த சண்டையின்போது பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதாக அது கூறியது. இவர்களில் பிரபாகரன் இறந்தது குறித்து குழப்பச் செய்திகளை வெளியிட்டது  இலங்கை ராணுவம் .

 இந் நிலையில் நேற்று கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் உடல்களை அடையாளம் காணும் பணியில் கருணாவை ஈடுபடுத்தியுள்ளது இலங்கை ராணுவம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கருணா ஒவ்வொரு உடலையும் அடையாளம் காட்டி, அது யார், என்ன என்ற விவரத்தை ராணுவத்திற்குத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் விடுதலைப் புலிகள் இறந்த பின்னரும் அவர்களைக் காட்டிக் கொடுத்த 'பெருமை'யைப் பெற்றுள்ளார் கருணா.

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3449:2009-05-19-09-32-14&catid=35:2008-09-21-04-32-20&Itemid=53


தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நலமாக உள்ளதாக கே.பத்மநாபன் கூறியுள்ளார்




இன்று(18.05.2009) மாலை சனல் 4 தொலைக்காட்சிக்கு புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் எஸ்.பத்மநாதன் செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேறு இடத்தில் இருப்பதாகவும் சற்று முன்னர் அங்கு தான் செய்மதி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேசத் தொலைக்காட்சிகள் அனைத்திலும் பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியிட்டிருந்த இந்த வேளையில், இச் செய்தியானது உலகை உலுப்பியுள்ளது. சனல் 4 செய்திகளின் ஒளிவடிவம்


(காணொளி) .





http://link.brightcove.com/services/player/bcpid1184614595?bctid=23638890001




http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1242674585&archive=&start_from=&ucat=3&





பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அதற்கு மேல் முதலாவதாக உள்ள படம் 2004-கார்த்திகை 26 எடுக்கப் பட்டது.

4 வருடங்களுக்கு மேலாகிய பின்பு அவர் 2009 இளமையாகத் தோற்றம் அளிப்பது எப்படி?

முகத்தில் இருந்த சுருக்கங்கள் எங்கே?

இறந்தவர்களின் உடல்களைப் பார்த்தவர்கள் சொல்லுங்கள் இறந்தவர்களின் கண்கள் இப்படியாகவா இருக்கும்?

கொல்லப் பட்டவர்களின் உடல்களைப் பார்த்த அனுபவமுள்ளவர்கள் சொல்லுங்கள். கொல்லப் பட்டவரின் முகம் இப்படியா இருக்கும்?

இருபத்தி நான்கு மணி நேர தாக்குதலுக்கு உள்ளான ஒரு பிரதேசத்தில் இருந்த பிரபாகரன் இப்படி கனகச்சிதமாக சவரம் செய்திருப்பாரா?

மேலும் வாசிக்க...
http://veltharma.blogspot.com/2009/05/blog-post_19.html
http://kundumani.blogspot.com/2009/05/blog-post_3404.html


கருத்துகள் இல்லை: