சனி, 23 மே, 2009

2009-05-23



More than a Blog Aggregator

by Senthuran


More than a Blog Aggregator

by Senthuran

நாளை  எம் தாய்த் தமிழகம் தீர்ப்புச் சொல்லப்போகிறது. இன்றோ தொப்புள் கொடி உறவுகள் ஆயிரமாயிரமாகக் கொல்லப்பட்டு விட்டனர்.

கொன்றது சிங்கள அரசின் வெறித்தனம் மட்டுமல்ல காங்கிரஸ் அரசு கொடுத்த பலமும் தான்.

உலகின் எந்த மூலையில் கேட்டாலும் இந்தியாவை மீறிச் சென்று உங்களை எங்களால் காப்பாற்ற முடியாது என்கிறார்கள் . அப்படியாயின் உலகின் பார்வையில் இந்திய மத்திய அரசு அத்தனை கொடூரமான அரசா?

முத்துக்குமார் முதலாய மாவீரர்கள் ஈழத்தமிழனை காக்க உயிராயுதம் ஏந்தினர் . தியாகி முத்துக்குமார் தன்னில் மூட்டிய தீ இன்று உலகெல்லாம் எழுச்சி எனும் வடிவம் கொண்டு பற்றி  எரிகின்றது. நீங்கள் இப்போது வாக்கெனும் ஆயுதம் நீங்கள் ஏந்தி நிற்கின்றீர்கள். அந்த ஆயுதம் எங்களைக் காக்கட்டும்.

இன்று எமது ஊரே மரண வீடாகி விட்டது. நாம் ஒவ்வொருவரும் கதறுகின்றோம். எங்கும் மரண ஓலம். எங்கும் பிணங்கள். அதனை அள்ளிப்போடுவாரும் இல்லை.

குண்டு பட்டு புண் பட்டு துடிக்கிறது ஈழத்தமிழ். பட்ட புண் ஆற மருந்தில்லை மண் அள்ளிப் போடுகின்றது. உயிர் வலி கொண்டு துடிக்கின்றது ஈழத் தமிழ்.

காங்கிரசுக்கு எதிராக நீங்கள் வாக்களித்து விட்டு வெளியில் வரும் போது உயிர் வலி கொண்டு துடிக்கும் ஓர் ஈழச் சிறுமி தன்  கைகளில் மலர் செண்டோடு உங்களைப்பார்த்துப் புன்னகைப்பாள் . அவளது சிரிப்பு உங்கள் தலைமுறையை வாழ்த்தும்.

அவளைக் கொன்றுவிடாதீர்கள் . காங்கிரசுக்கு வாக்குப் போட்டு விடாதீர்கள்.

 

நம்பிக்கையுடன்

உயிர் வலி கொண்டு துடிக்கும் ஈழத் தமிழ் உறவு

நாளை  எம் தாய்த் தமிழகம் தீர்ப்புச் சொல்லப்போகிறது. இன்றோ தொப்புள் கொடி உறவுகள் ஆயிரமாயிரமாகக் கொல்லப்பட்டு விட்டனர்.

கொன்றது சிங்கள அரசின் வெறித்தனம் மட்டுமல்ல காங்கிரஸ் அரசு கொடுத்த பலமும் தான்.

உலகின் எந்த மூலையில் கேட்டாலும் இந்தியாவை மீறிச் சென்று உங்களை எங்களால் காப்பாற்ற முடியாது என்கிறார்கள் . அப்படியாயின் உலகின் பார்வையில் இந்திய மத்திய அரசு அத்தனை கொடூரமான அரசா?

முத்துக்குமார் முதலாய மாவீரர்கள் ஈழத்தமிழனை காக்க உயிராயுதம் ஏந்தினர் . தியாகி முத்துக்குமார் தன்னில் மூட்டிய தீ இன்று உலகெல்லாம் எழுச்சி எனும் வடிவம் கொண்டு பற்றி  எரிகின்றது. நீங்கள் இப்போது வாக்கெனும் ஆயுதம் நீங்கள் ஏந்தி நிற்கின்றீர்கள். அந்த ஆயுதம் எங்களைக் காக்கட்டும்.

இன்று எமது ஊரே மரண வீடாகி விட்டது. நாம் ஒவ்வொருவரும் கதறுகின்றோம். எங்கும் மரண ஓலம். எங்கும் பிணங்கள். அதனை அள்ளிப்போடுவாரும் இல்லை.

குண்டு பட்டு புண் பட்டு துடிக்கிறது ஈழத்தமிழ். பட்ட புண் ஆற மருந்தில்லை மண் அள்ளிப் போடுகின்றது. உயிர் வலி கொண்டு துடிக்கின்றது ஈழத் தமிழ்.

காங்கிரசுக்கு எதிராக நீங்கள் வாக்களித்து விட்டு வெளியில் வரும் போது உயிர் வலி கொண்டு துடிக்கும் ஓர் ஈழச் சிறுமி தன்  கைகளில் மலர் செண்டோடு உங்களைப்பார்த்துப் புன்னகைப்பாள் . அவளது சிரிப்பு உங்கள் தலைமுறையை வாழ்த்தும்.

அவளைக் கொன்றுவிடாதீர்கள் . காங்கிரசுக்கு வாக்குப் போட்டு விடாதீர்கள்.

 

நம்பிக்கையுடன்

உயிர் வலி கொண்டு துடிக்கும் ஈழத் தமிழ் உறவு



More than a Blog Aggregator

by த.ஜீவராஜ்
வேலையில்லாத பொழுது
வீண்விவாதம் செய்ய
விரும்பாத மனது - முன்
எழுதியதைப் படித்து
பிழை திருத்தென்று
ஏவியது என்னை



இணையத்தை இயக்கி
என்னுடைய பதிவிலே
எழுதிவைத்த கவிதைகளை
ஏற்ற இறக்கத்தோடு
எழுத்தெண்ணிப் படிக்கையிலே
என்னே ஆச்சரியம்



கவிதை மாந்தர்கள்
இடப்பெயர்வும் அப்படித்தான்
சுயவிருப்பின் பேரில்
ஊரும்,வீடும் அழிந்ததெல்லாம்
தானே நடந்ததாய்



யார் செய்த அழிவுகள்
யார்,யார் இந்தக்
கோரங்களின் மூலம்
என்றெழுந்த கேள்விகளின்
தேடலின் தொடக்கமே-தெரிந்தே
தொலைக்கப்பட்டிருந்தது



நாளும் நடக்கிறது -நாட்டு
நடப்புக்களை எழுதியவர்களின்
ஞாபகார்த்த நிகழ்வுகள்
சுடப்படும் பயத்தில் -இங்கே
சுருண்டு கிடக்கிறது
பலரின் சுட்டுவிரல்கள்......



முழுமைபெறாக் கவிதைகளிடம்
மன்னிப்புக் கேட்டு
ஏக்கப் பெருமூச்சோடு
எழுந்து சென்றேன்
தேடுவார் அற்றவொன்றாய்
தெருவில் கிடந்தது யதார்த்தம்.....


Bookmark and Share





More than a Blog Aggregator

by த.ஜீவராஜ்
வேலையில்லாத பொழுது
வீண்விவாதம் செய்ய
விரும்பாத மனது - முன்
எழுதியதைப் படித்து
பிழை திருத்தென்று
ஏவியது என்னை



இணையத்தை இயக்கி
என்னுடைய பதிவிலே
எழுதிவைத்த கவிதைகளை
ஏற்ற இறக்கத்தோடு
எழுத்தெண்ணிப் படிக்கையிலே
என்னே ஆச்சரியம்



கவிதை மாந்தர்கள்
இடப்பெயர்வும் அப்படித்தான்
சுயவிருப்பின் பேரில்
ஊரும்,வீடும் அழிந்ததெல்லாம்
தானே நடந்ததாய்



யார் செய்த அழிவுகள்
யார்,யார் இந்தக்
கோரங்களின் மூலம்
என்றெழுந்த கேள்விகளின்
தேடலின் தொடக்கமே-தெரிந்தே
தொலைக்கப்பட்டிருந்தது



நாளும் நடக்கிறது -நாட்டு
நடப்புக்களை எழுதியவர்களின்
ஞாபகார்த்த நிகழ்வுகள்
சுடப்படும் பயத்தில் -இங்கே
சுருண்டு கிடக்கிறது
பலரின் சுட்டுவிரல்கள்......



முழுமைபெறாக் கவிதைகளிடம்
மன்னிப்புக் கேட்டு
ஏக்கப் பெருமூச்சோடு
எழுந்து சென்றேன்
தேடுவார் அற்றவொன்றாய்
தெருவில் கிடந்தது யதார்த்தம்.....


Bookmark and Share



கருத்துகள் இல்லை: