தே.பொருட்கள்:மைசூர் பருப்பு - 1/2 கப்
கத்திரிக்காய் - 6
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
பூண்டுபல் - 5
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு+உளுத்தம்பருப்பு = 1 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசைக்கு
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை:
*பருப்பை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
*குக்கரில் பருப்பு+அரிந்த வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+பூண்டு+மஞ்சள்தூள்+கத்திரிக்காய்+1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
*வெந்ததும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
*பின் உப்பு+கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.
பி.கு:
1 . இட்லி,தோசை,சப்பாத்தி,பூரிக்கு பரிமாறலாம்.
2 . சாம்பார் தண்ணியாக இருந்தால் தோசைமாவோ 1/2 குழிக்கரண்டி அல்லது அரிசிமாவு 1டேபிள்ஸ்பூன் கலந்து கொதிக்கவிட்டால் திக்காக இருக்கும்.
3 . சாப்பிடும் போது சாம்பாரில் 1 ஸ்பூன் நெய்விட்டு கலந்து சாப்பிட்டால் ரொம்ப சூப்பரா இருக்கும்.நெய்யில் தாளிப்பதை விடசாப்பிடும் போது கலந்து சாப்பிட்டால் வாசனை தூக்கலா இருக்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே பான் கீ மூன் வரவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், பயங்கரவாதத்தை வெற்றிக்கொண்டதை நினைவுகூரும் முகமாக இலங்கையில் 22 ஆம் திகதி படையினரின் அணிவகுப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. TNC
"வடபகுதியில் இடம்பெற்ற போரினால் உருவாகியிருக்கும் பாரிய மனிதாபிமான பிரச்சினையைத் தீர்த்துவைப்பதில் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்" என சிறிலங்கா அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கின்றது. "மே 13 ஆம் நாள் ஐ.நா. பாதுகாப்புச் சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையை ஒரோப்பிய ஒன்றியம் வரவேற்பதுடன், வடபகுதியில் உருவாகியிருக்கும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஐ.நா. மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றது" எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கின்றது.
மக்களே தமிழர்களுக்குச் சாதகமில்லாத பல தகவல்கள் இலங்கை இராணுவத்தால் வெளியிடப்படுகிறது. சற்றுப் பொறுமை காத்திடுங்கள். இலங்கை இராணுவம் கூறிவருவதை ஆதாராபூர்வமாக நிரூபிக்க முடியாது. தற்போது அவர்களால் வெளியிடப்படும் படங்கள் கூட இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. களத்தில் இறந்து கிடக்கும் பலரது உடலங்களை ஊகத்தின் அடிப்படையில் அவராக இருக்கலாம், இவராக இருக்கலாம் என இராணுவம் கூறிவருகிறது. இருப்பினும் தற்போது 500 மீட்டர் பரப்பளவில் புலிகள் முடக்கப்பட்டிருப்பதாக நாம் அறிகிறோம். அத்துடன் இந்த சிறு பரப்பளவும் தற்போது இராணுவத்தின கட்டிப்பாட்டில் வந்துள்ளதாக, படையினர் அறிவித்துள்ளனர்.



















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக