
பொது நிகழ்ச்சியில் பேண்ட் ஜிப்பை அவிழ்த்த குற்றத்துக்காக பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் நேற்று கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.
மும்பையில் கடந்த மார்ச் மாதம் நடந்த லேக்மே பேஷன் ஷோவில் நடிகர் அக்ஷய் குமார் கலந்து கொண்டார். அப்போது அவரது பேண்ட் ஜிப்பை, அனைவரது முன்னிலையிலும் அவரது மனைவி டுவிங்கிள் கழற்றி விட்டார்.
நிகழ்ச்சியை நேரில் மற்றும் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, பொது நிகழ்ச்சியில் ஆபாசமாக நடந்து கொண்டதாக, அனில் நாயர் என்பவர் தான் சார்ந்த பொது நல சங்கம் சார்பில் போலீசில் புகார் கொடுத்தார். வகோலா போலீசார் அக்ஷய் குமார் மீதும், அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் அவரை உடனடியாக போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. காரணம் வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு சென்றிருந்தார் அக்ஷய். நேற்றுதான் விமானம் மூலம் மும்பை வந்தார். வழக்கு குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் தனது வக்கீலுடன் சென்று போலீசிடம் சரண் அடைந்தார்.
உடனே அவரை போலீசார் கைது செய்து, ஜாமீனில் விட்டனர். அக்ஷய் குமாரின் மனைவி டுவிங்கிளும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடப்பட்டார்.
பின்னூட்டத்துக்கும் பதிலா பதிவு போடுவுமில்லே..
நேத்திக்கு பதிவு போட்டோன்ன லெக்ஷ்மண் உங்களை இன்னும் யாரும் அடிக்க வரலயானு கேட்டார்.அடப்பாவிகளா!இது வேற ஆசை இருக்கா என்ன..நாம தான் துப்பாக்கியை வச்சிக்கிட்டு பின்னூட்டம் போடுங்கனு வேற சொல்லிப்புட்டேன்.
சரி...பின்னூட்டத்துக்கு பதில்களை பதிவாவே போட்டுறலாம்னு நினைச்சேன். பதிவுலக வரலாற்றில் முதல்முறையாக பின்னூட்டத்துக்கு பதில் பதிவு போடுறேன்ப்பா..நோட் பண்ணிக்கோங்க..நோட் பண்ணிக்கோங்க..
1.செல்வேந்திரன்.. உங்க யோசனையை வாசிச்சோனயே என்னால அதை கலைஞர்ட்ட சொல்லாம இருக்க முடியல..அவர் அத கேட்டு இப்பவே நான் தில்லி போகணும்னு துடிச்சிட்டார். அதை மட்டும் அமலுக்கு வந்துறுச்சுனா.. நீங்க தான் பாராளுமன்ற சபாநாயகர்.தயவு செஞ்சி பதவியேற்ற பிறகு எனக்கு நன்றி சொல்ல வேணாம். நமக்கு தான் புகழ்ச்சியே பிடிக்காதில்லையா?
2.ஆயில்யன்...மீ த ரிப்பிட்டிங்க் :
இதென்ன வார்த்தை.. புதுசாத்தேன் இருக்கு..அர்த்தம் புரிலனாலும்நல்லாருக்குபாஸ்.
3.ராமலெக்ஷ்மிக்கா..நன்றி..சுந்தரானு ஒரு டீச்சர் உண்டு இல்லியா? ரேவன் கவிதை எனக்கு சொல்லிக் கொடுத்த டீச்சர் அவங்க..உங்களுக்குக் கூட எடுத்திருக்கலாம் இல்லியா?
4.பப்பு.. உங்க தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி..மதுரைக்கு இப்பதைக்கு வரல..
5.வினோத் கவுதம்..இம்புட்டு பயப்படுவீங்களா?குப்பன் யாஹூ..அதென்ன பெண்பதிவர்கள்..பரிசலையும் நர்சிமையும் ஆண்பதிவர்கள்னு சொல்வீங்களா? எழுத்துல பேதம் பிரிக்காதீஙக தயவு செஞ்சி..
6.சிவகுமார்..வாங்க வாங்க..எங்க இருக்கீங்க..பிரபுகுமார் சென்னைல அவன் மாமா பள்ளிக்கூடத்துல வேலை பார்க்கானாம்.பின்னூட்டத்துக்கு நன்றி
7.கோமா..நச் நச்சுன்னு எழுதுறீங்க இனிமேல் நீங்கள்தான் பிளாகர் உலகின் 'நச்சினார்க்கு இனியவர்' ..புகழ்ச்சி நமக்குப் புடிக்காது தெரியாதா.. ஆனாகூட சந்தோஷமாதான் இருந்துச்சு..
8.வண்ணத்துபூச்சியார்..நன்றி உங்க பின்னூட்டத்துக்கு.அந்த லிங்க பார்த்தேன். நல்ல பதிவுகளை அப்ப அப்ப தெரியப் படுத்துங்கள்.
9.மண்குதிரை..ஹலோல தான் பணிபுரிகிறேன்.
10..அமிர்தவர்ஷினி அம்மா...யம்மாடி..பின்னூட்டம் போட முடியாதா.. யாரங்கே..?
11சுந்தராக்கா.. நிலவு பேர் கொண்ட ஸ்நேகிதியா..ம்ம்ம்.மதியா? இதுல கூடவா கிசுகிசு.. அது சரி..அப்பல்லாம் நாங்க ரவுடியாக்கும்...



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக