ஹலோ.. யாரு லலித்மோடிங்களா?? நாங்க குன்னாம்பட்டி மாரியம்மன் கோவில்ல இருந்து பேசறோம்.. இன்னைக்கு கொடையில ஆட வேண்டிய கரகாட்ட குரூப் வரலைங்க.. ஐபிஎல்ல ஆடற சீயர் லீடர்ஸை (cheer leaders) கொஞ்சம் அனுப்பி வைக்க முடியுங்களா??

ஹலோ.. யாரு ஷாருக்கானா பேசறது???
நாங்க கேகேநகர் மூனாவது குறுக்கு சந்து
ராமசாமி கிரிக்கெட் கிளப்பில இருந்து
பேசறோம்.. இன்னைக்கு மேட்ச்சுக்கு ரெண்டு
பேரு குறையறாங்க.. கொஞ்சம் கங்குலியையும்,
மெக்கல்லமையும் அனுப்பி வைக்க முடியுங்களா??
சென்னையிலிருந்து திருச்சிக்கு வழக்கமாய் ரயிலில்தான் பயணம் செய்வோம். எப்போதாவது டிக்கெட் இல்லாவிட்டால் கேபிஎன்னில் புக் செய்து பயணிப்போம். இம்முறை திடீரென்று ஒரு வாரத்திற்கு முன்புதான் திருச்சி செல்லலாமென்று முடிவு செய்து வலையில் தேடினால் எதிலும் டிக்கெட் இல்லை.
அரசாங்க SETC யில் புக் செய்ய நேரில் செல்ல வேண்டும், மேலும் மே 1 - வெள்ளி, சனி, ஞாயிறு நீண்ட வாரயிறுதி ஆதலால் SETCயிலும் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு குறைவே. இது போன்ற சமயங்களில் ரெட் பஸ் வெப்சைட்டில்தான் வழக்கமாய் ஆம்னி பஸ் புக் செய்வோம்.
சரியென்று நீண்ட நேரம் தேடி SSCM டிராவல்ஸ் என்ற பஸ்ஸில் வியாழன் இரவு 10 மணி பஸ், திரும்பி வர ஞாயிறு இரவு 10 மணி பஸ்ஸையும் புக் செய்து விட்டோம். எங்கள் போதாத நேரம் ஓரே சீட்டையே (எண் 7 & 8) செல்வதற்கும், திரும்பி வரவும் தேர்ந்து எடுத்திருந்தேன்.
வியாழன் இரவு சென்னை - அசோக் பில்லர் நிறுத்தத்தில் 10:15 க்கு ஏறிக்கொள்ள பதிவு செய்திருந்தோம். 10:15க்கு வரவேண்டிய பஸ், 11 மணிக்குத்தான் வந்தது, போன் செய்து கேட்டால் கோயம்பேடில் டிராபிக், அதனால்தான் லேட் என்றனர். அசோக் பில்லர் ஆம்னி பஸ் நிறுத்ததில் ஒரு வசதியும் இல்லை. கிட்டத்தட்ட 500 பேர் அந்த இரவில் நடு ரோட்டில் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு நிழற்குடை, சேர்கள் எதுவுமில்லாமல் இருக்கிறது.
ஒரு வழியாக வந்த பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் அடுத்த தலைவலி ஆரம்பித்தது. சீட் எண் 7-ல் புஷ்பேக் வசதி சரியாக வேலை செய்யவில்லை. உட்கார்ந்து கொண்டே இரவு நேர பிரயாணம் என்பது கொடுமையான அனுபவம். கஷ்டப்பட்டு பிரயாணம் செய்தோம். பஸ்ஸின் உரிமையாளரும் அப்போது இருந்தார், அவரிடம் பிரச்சனையை கூறி பிறகு சரி செய்யக் கூறினேன். சரியென்று தலையாட்டினார். பிறகு பஸ் சென்னையை சுற்றி வேளச்சேரி சென்றது. அங்கிருந்து மேடவாக்கம் வழியே தாம்பரம் செல்ல 12 மணியாகி விட்டது.
இப்படியே ஊர் சுற்றிக் கொண்டு மெல்ல சென்று காலை 745 மணிக்கு திருச்சி தில்லைநகரில் இறக்கி விட்டனர். இரவு 11 மணிக்கு ஏறி காலை 745 வரை, கிட்டத்தட்ட 9 மணி நேரம் பயணம். இத்தனைக்கும் தூரமென்னவோ 300 கிமீ தான். மிகவும் மோசமான பயணம். இறங்கும் போது, டிரைவரிடமிடமும் புஷ்பேக் பிரச்சினையை சொல்லி சரி செய்ய நினைவு படுத்தினோம்.
ஞாயிறு இரவு திரும்பவும் அதே பஸ், அதே இருக்கையில் பயணித்தோம். சீட் சரி செய்யப் படவில்லை. டிரைவரும், செல்போனில் காண்டாக்ட் செய்த ஓனரும் சரியான பதில் தரவில்லை. திரும்பி வரும் போதும் இரவு 1030க்கு திருச்சியில் எடுத்து, காலை 8 மணிக்கு சென்னையில் இறக்கி விட்டனர்.
போதுமடா இந்த பிழைப்பு என்றாகி விட்டது. திரும்பவும் வாழ்க்கையில் SSCM டிராவல்ஸ் ஏறக்கூடாது என முடிவு செய்தேன். ரெட் பஸ் வெப்சைட்டில் மோசமான ரிவியூ கமெண்ட்டுகளை பதிவு செய்தேன். இதற்கு கன்ஸூயுமர் கோர்ட்டில் புகார் செய்யலாமா, அப்படி செய்தால் சீட் சரியில்லாததற்கு என்ன ஆதாரம் காட்ட முடியும் என்று சொல்லுங்களேன், எங்களிடம் டிக்கெட் பிரிண்டவுட் மட்டுமே இருக்கிறது.
ஒவ்வொரு முறை நாங்கள் ஊருக்கு செல்ல கோயம்பேடு செல்ல எத்தணிக்கும் போதெல்லாம் ஆட்டோ ஓட்டுனருடன் பெரும் பேசமே நடக்கும். வாய் கூசாமல் பெரும்பாலானோர் 150 ரூபாய் கேட்கிறார்கள், எந்த ஊர் நியாயம் என்றே தெரியவில்லை. 7 கிமீ தூரத்திற்கு 150 ரூபாயா? நான் மும்பையில் இருந்த போது ஒரு கி.மீ தூரத்திற்கு 9 ரூபாய் கொடுத்ததாய் ஞாபகம். அந்த கணக்கில் பார்த்தால் 63 ரூபாய்தான் வருகிறது. இப்போது டீசல் விலை வேறு 4 ரூபாய் (இரு தடவையாய்) குறைந்து இருக்கிறது. கேட்டால் டிராபிக் இருக்கும், திரும்பி வர ஆள் இருக்காது என்று ஆயிரம் காரணங்கள் கூறுகிறார்கள். பேரம் பேசி 100 ரூபாய்க்கோ, 120 ரூபாய்க்கோ ஒவ்வொரு முறையும் செல்கிறோம்.
சென்னையில் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்? மும்பையில், புனேயில் இப்படி இல்லையே, நியாயமாய் மீட்டர் போடுகிறார்களே. இவர்களை என்ன செய்தால் திருத்தலாம், யோசனை சொல்லுங்களேன்?
பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட 3 Km இற்கும் குறைவான பரப்பில் அகப்பட்டுள்ள கிட்டத்தட்ட 50000 மக்கள் கனரக ஆயுதங்கள் மூலம் கொல்லப்படவும்,அதிக எண்ணிக்கையில் காயப்படுத்தப்படவும்,காயங்கள் குணப்படுத்தப்படாமல் நோயினாலும்,போசாக்கின்மையாலும் இறக்கவும் வாய்ப்புக்கள் பெருகி விட்டன என சர்வதேச மன்னிப்பு சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
இவ்வேளை அரசாங்கத்தின், மீடியா மீதான அடக்கு முறை சில மாதங்களாகக் கடுமையாக அதிகரித்து வந்துள்ளது. 2006ம் ஆண்டிலிருந்து இதுவரை 16 மீடியா பணியாளர்கள் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டும் பலர் கடுமையாக மிரட்டப்பட்டும், துன்புறுத்தப்பட்டும், காணாமற் போயுமுள்ளனர். சமீபத்தில் வவுனியா தடுப்பு முகாம்களில் மக்கள் எதிர் நோக்கும் இன்னல்களை வெளிக் கொணர்ந்த பிரித்தானியாவின் சானல் 4 ஊடகவியலாளர்கள் மூவர் நாடுகடத்தப்பட்டதுடன் பாதுகாப்பமைச்சால் இலங்கையிலிருந்து இவ்வாறான தகவல்கள் சொல்லக் கூடாது என மிரட்டப்பட்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக