வியாழன், 28 மே, 2009

2009-05-28

வெண்பூ... மிக வெள்ளந்தியானவர் என்பது அவருக்கே தெரியும் என்பதால் இந்தப் பெயரை வைத்துக் கொண்டாரோ என்று அவருடன் பழகிய பிறகு எழுந்த ஐயம்.

ஒரு வருடத்திற்கு முன்னர்,திரு பாலபாரதியின் புத்தக வெளியீட்டு விழாவில், மேடையில் யாராவது சற்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தால், எனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஒருவர் தனது 2 வயது மகனை லேசாக கிள்ளிவிட்டு, 'குழந்த அழறான்' என்று காரணம் சொல்லி வெளியில் சென்றுவிட்டு, அந்த மைக் பார்ட்டி பேச்சை முடித்தவுடன் உள்ளே வந்தமர்வதும், போவதுமாக இருந்தார்.வெண்பூ தான் அது.

பிறகு விழா முடிந்தவுடன் அறிமுகம் செய்து கொண்டேன். அன்றிலிருந்து, நான் பதிவு எழுத வேண்டும் என்று நினைத்தாலே " அருமை" என்று முதல் பின்னூட்டம் போட்டு விடுவார். எனது முதல் ஃபாளோயரும் இவரே.

அவ்வளவாக எழுதமாட்டார் என்பதால், பின்னூட்டப் பதிவரோ என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், சுழல் கதைகள் என சிறுகதைகளில் இவரது உயரத்தையும், தரத்தையும் காட்டினார். ட்விஸ்ட் வைத்து எழுதுவதில் வல்லவர்.

இதோ... இவரது கதை இன்றைய ஆனந்த விகடனில் 57ம் பக்கம் வந்துள்ளது. வாழ்த்துக்கள் நண்பா வெண்பூ..!( நண்பானு தான் முடிச்சேன் 3 சுழி 'ண்'க்காக பேர இன்னொரு முறை!)

இனி வெண்பூ வீட்டில்,

1.பம்மிப் பம்மி பிளாக் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது தங்கமணி கரண்டி சகிதம் வருவது தெரிந்தால் அலுவலக வேலை பார்ப்பதுபோல் சடாரென alt+tab தட்டி எக்ஸெல் ஃபைலை ஓப்பன் செய்ய வேண்டிய தேவை இருக்காது.. தெம்பாக, "விகடன்ல இருந்து ஒரு கத கேட்டாங்க.. டோண்ட் டிஸ்டர்ப்"னு தெனாவெட்டலாம்.

2. அலுவலகம் கிளம்பும் போது "விகடன்ல இருந்து செக் வந்தா பத்திரமா எடுத்து வை" என்று கித்தாப்பாக சொல்லி 'நாங்க என்ன வெட்டியாவா எழுதறோம்' என்ற செய்தியை உணர்த்தலாம்.

3. ஆணி அது இது என்று பொய் சொல்லாமல் இனி தைரியமாக பிளாக் எழுதலாம்..

வாழ்த்துக்கள் வெண்பூ..

சில நிகழ்வுகள் நம்மையும் அறியாமல் அடிமனதில் இருந்து மகிழ்வு கொள்ள செய்யும். சமீபத்திய உதாரணம் 'சூர்யா-ஜோ' திருமணம்.. ஏதோ நம் வீட்டுத் திருமணம் போன்ற உணர்வு ஏற்பட்டது.

அது போலத்தான் வெண்பூவின் கதை விகடனில் வந்தது.

அடிமனதில் இருந்து மகிழ்ந்தெழுந்து வரும் வாழ்த்துக்கள்...வெண்பூ..

..
சில சமயம் பெரிய பெரிய ஆளுங்கல்லாம் பல்பு வாங்கும்போது, அடடா பாவமேன்னு இருக்கும். அப்டித்தான் சமீபத்துல பெரிய பெரிய எழுத்துலக ஆட்களெல்லாம் பல்பு வாங்கி பல்பத்தை முழுங்கினப்போ அச்சச்சோன்னு இருந்திச்சி. அதுலயும் அநியாயத்துக்கு சிறுவர் மலர் , அம்புலி மாமா, லட்சுமி, ரமணி சந்திரனோடல்லாம் கம்பேர் பண்ணப்போ சிரிப்பும் பரிதாபமும் சேர்ந்து வந்துச்சி. ஆனா, ரெண்டு நாளா இவங்க தன் தெறமய காட்டு காட்டுன்னு காட்றத பாத்தா..................................................................ஏதோ பிரான்ஸ் பத்தி மட்டும்தான் ஒன்னும்புரியாம அக்கிரமமா காமடி பண்ணுவாங்கன்னா, இப்போ ட்ராஜிக்கல் காமடியும் ட்ரை பண்றாப்டியோ?

ராகுல் காந்திக்கும், பத்து மாசத்திலருந்து ஒன்றரை வயசுவரையுள்ள குழந்தைகளின் நடைக்கும் ஒரு ஒத்துமை இருக்கு. என்னான்னு கண்டுப் பிடிச்சவங்க மனசோட வெச்சிக்கங்க:):):)

கேன்ஸ் பெஸ்டிவலுக்கு வந்ததிலிருந்து ரெண்டுநாள்வரை ஐஸ்வர்யா ராய்,அந்தக் கடுகடுன்னு இருந்தாங்க. என்னாக் கடுப்போ தெர்ல. இது வெறும் பிரென்ச் மீடியாகிட்டயா இல்லை அவங்க மூடே நல்லால்லையா யாருக்குத் தெரியும்? Franck Duboscங்கற நடிகர நல்லா வெளிப்படையாவே கலாய்ச்சாங்க. அதோட இவங்களுக்கு போய் டேன் மேக்கப் போடற அதிபுத்திசாலிங்கள என்னத்த சொல்ல.

டா வின்சி கோட் பார்த்து நொந்தவங்க, பயப்படாம போய் ஏஞ்சல்ஸ் அண்ட் டேமன்ஸ் பாருங்க. ஆனா கேள்வியெல்லாம் கேக்கக் கூடாது. எப்டி புஸ்தகத்த மதிமயங்கிப் போய் படிச்சோமோ அப்டியே பாக்கணும். அதே டமுக்கு டிப்பா டிப்பாதான்னாலும், ஜாலியா போகுது. புக்கைப் படிக்காதவங்களுக்குக் கதைச்சுருக்கம் என்னன்னா, தலையச் சுத்தி மூக்கை தொடுற கலையை விளக்கும் படம். கூடுதலா, ரோமுக்கு விசிட்டடிச்சவங்க டீமா போய், ஹேய் இது நாம அப்போ பார்த்தமே, என்னப்பா கூட்டம் இம்மாத்தூண்டு இருக்குங்கங்கற ரேஞ்சில பட்டயக் கெளப்பி, பக்கத்துல இருக்கவங்களை சதாய்க்கலாம்.


தமிழ்நாட்ல பன்னெண்டாம் கிளாஸ்ல ஸ்டேட் பர்ஸ்ட்லருந்து, பார்டர்ல பாசானவங்க வரைக்கும் எல்லாத்துக்கும் காரணம் நம்ம gaptain தான். பின்ன, அவரு எலெக்ஷனுக்கு குடும்ப சகிதமா ஊர் சுத்தலைன்னா, அவரு புள்ள ஸ்டேட் பர்ஸ்ட் வந்து, டெக்னிக்கலா தமிழ்நாட்லருக்க அத்தன ஸ்டூடன்சோட மார்க்கையும் பிரிச்சி, பெயிலாக்கி, அதகளமா சாதிச்சி, அல்லு கெளப்பிருப்பாப்ல. ஆனா பாருங்க, இந்த மைனாரிட்டி கருணாநிதி கவர்மென்ட் அடுத்த நாள் எலெக்ஷன் கவுண்டிங்க்ல கூட சரியா கவனம் செலுத்தாம, பன்னெண்டு தொகுதி, ஓட்டிங் மெஷினையும் கரெக்ட் பண்ணாம, ராவோட ராவா நம்ம ஜூனியர் gaptainஐ பெயிலாக்குற வேலைய செஞ்சி பழிவாங்கியிருக்குது. இதுக்கெல்லாம் ஒரு நாள் பிரேமலதா மேடம்க்கு ராஜாத்தி அம்மா, அவங்க பர்னிச்சர் கடைல வெச்சே பதில் சொல்ற காலம் வரும்னு எச்சரிக்கிறேன், ஆமா!
Haiku doesn't tell a story - it takes a still photograph of a flash of lightning, in all its beauty, terror and suddenness. Some of the most thrilling Haiku-poems describe daily situations in a way that gives the reader a brand new experience of a well-known situation.

நான் ரசித்த ஜப்பானிய ஹைகூக்கள்:-

I kill an ant
and realize my three children
have been watching.

____________________

A sudden shower falls
and naked I am riding
on a naked horse!

___________________

Night, and the moon!
My neighbor, playing on his flute -
out of tune!

___________________

A giant firefly:
that way, this way, that way, this -
and it passes by.

___________________

First autumn morning:
the mirror I stare into
shows my father's face.

___________________

After killing
a spider, how lonely I feel
in the cold of night!

_____________________

The summer river:
although there is a bridge, my horse
goes through the water.

____________________

No blossoms and no moon,
and he is drinking sake
all alone!

____________________

Won't you come and see
loneliness? Just one leaf
from the kiri tree.


http://raviaditya.blogspot.com/feeds/posts/default
Haiku doesn't tell a story - it takes a still photograph of a flash of lightning, in all its beauty, terror and suddenness. Some of the most thrilling Haiku-poems describe daily situations in a way that gives the reader a brand new experience of a well-known situation.

நான் ரசித்த ஜப்பானிய ஹைகூக்கள்:-

I kill an ant
and realize my three children
have been watching.

____________________

A sudden shower falls
and naked I am riding
on a naked horse!

___________________

Night, and the moon!
My neighbor, playing on his flute -
out of tune!

___________________

A giant firefly:
that way, this way, that way, this -
and it passes by.

___________________

First autumn morning:
the mirror I stare into
shows my father's face.

___________________

After killing
a spider, how lonely I feel
in the cold of night!

_____________________

The summer river:
although there is a bridge, my horse
goes through the water.

____________________

No blossoms and no moon,
and he is drinking sake
all alone!

____________________

Won't you come and see
loneliness? Just one leaf
from the kiri tree.


http://raviaditya.blogspot.com/feeds/posts/default



ஐ.டி மற்றும் பிபிஓ துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்காக ஆபீஸ் கார்கள், பஸ்கள் நிறைய உண்டு. சென்னை OMR ரோட்டில் இவை சர் சர்ரென்று பறப்பதை காணலாம், இப்படி ஒரு வண்டிதான் பத்து மாதத்திற்கு முன்பு என்னை பைக்கில் இருந்து கீழே தள்ளியது.

இவற்றின் பின் புற கண்ணாடியில் பார்த்தால் ஒரு வாக்கியம் கண்ணுக்கு புலப்படாத பொடி எழுத்துக்களில் எழுதியிருக்கும். "If this vehicle is driven rashly, please inform us. Ph:22000000". ஒருவன் வண்டியை கன்னா பின்னா வேகத்தில் ஓட்டிச் செல்லும் போது நமக்கு இந்த வாக்கியம் எப்படி கண்ணில் தென்படும்? எப்படி மக்கள் படித்து, புகார் சொல்ல இயலும்? இந்த எழுத்துக்களை பக்கத்தில் சென்று படித்தாலே பத்து நிமிடம் ஆகும். இந்த லட்சணத்தில் இப்படி எழுதி வைக்கலாம் என்று யோசனை கொடுத்த அறிவாளி யார்? இதை விடவும் அபத்தமான செயல் இருக்க முடியுமா? நீங்களே சொல்லுங்களேன், இப்படி எழுதி வைத்திருப்பதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ??

கருத்துகள் இல்லை: