வெள்ளி, 22 மே, 2009

2009-05-22


குளிரூட்டப்பட்ட வெளிநாட்டு வாகனங்களில்
புழுதி பரந்திருக்கும்: பாவியகற்கள் பெயர்ந்திருக்கும்
சாக்கடை தேங்கி இருக்கும்; பன்றிகள் மேய்ந்திருக்கும்
உங்கள் தெருக்களில்; சந்துகளில்; முடுக்குகளில்
இருகரம் கூப்பி, எப்பக்கமும் தொழுது,
புன்முறுவல் தேக்கி,
உடன்பிறந்தவர்களைப் பார்க்க வரும்
தூரத்தேசத்து தமையன் போல...
அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஓகெனக்கல் குடிநீர்திட்டமா?
பொதுமருத்துவமனை திட்டமா?
எதுவேண்டும் வேண்டும் உங்களுக்கு?
வாரிவழங்குவார்கள்;
வாய் எனும் அட்சயப்பாத்திரம் கொண்டு!

68 கிரிமினல் குற்றவழக்குகள்
நிலுவையில் உள்ளவர்கள்
ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின்
மனைவிகள்; மைத்துனிகள்;
இனத்துரோகிகள்; மொழித்துரோகிகள்;
மக்கள் துரோகிகள்; நாட்டுத்துரோகிகள்
வந்துகொண்டு இருக்கிறார்கள்.

'கும்பி எரியுது; குடல் கருகுது;
குளுகுளு ஊட்டி ஒரு கேடா? - என
45 ஆண்டுகளுக்கு முன்பு முழங்கியவர்கள்
இன்று தாமே
கொடைக்கானலாக, ஊட்டியாக,
சிம்லாவாக; குலுமனாலியாக
நடமாடி வருகிறார்கள்.

ஆடிக்கொண்டும்; பாடிக்கொண்டும்;
மிமிக்ரி செய்துகொண்டும்
கலையுலக பழைய; புதிய
கலைத்தளபதிகள்
வந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஈழத்தமிழனுக்காக ஆதரவு கோஷம்
விண்ணைத்துளைக்க
அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்

ஆடு வெட்டிப் பந்தி வைக்க;
சீமைச்சாராயப் பந்தல் நடத்த
ஊதாநிறக் காந்தித் தாட்கள் வழங்க
குடம், குத்துவிளக்கு, தாலி,
தாம்பளம், தட்டுமுட்டுச் சாமான்கள் தானம்தர
அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

உண்ணா நோண்பு இருப்பார்கள்;
பேரணி நடத்துவார்கள்;
மனிதச்சங்கிலி கோப்பார்கள்;
ஆளுக்கு ஆஸ்கர் வாங்குமளவு நடிப்பதில்
திறமைசாலிகள்
வந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆம்...
வந்து கொண்டேயிருக்கிறார்கள்

- நாஞ்சில் நாடன்

'தீதும் நன்றும்' என்னும் தலைப்பில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆனந்தவிகடனில் தொடர் கட்டுரைகள் எழுதி வருகிறார். 22/04 - 29/04/09 இதழில் "அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்" என்ற உட்தலைப்பில் வெளிவந்த மூன்று பக்க கட்டுரையை சுருக்கி தந்துள்ளேன். அவருடைய சொந்த வார்த்தைகளிலேயே!

நன்றி : ஆனந்தவிகடன்

குளிரூட்டப்பட்ட வெளிநாட்டு வாகனங்களில்
புழுதி பரந்திருக்கும்: பாவியகற்கள் பெயர்ந்திருக்கும்
சாக்கடை தேங்கி இருக்கும்; பன்றிகள் மேய்ந்திருக்கும்
உங்கள் தெருக்களில்; சந்துகளில்; முடுக்குகளில்
இருகரம் கூப்பி, எப்பக்கமும் தொழுது,
புன்முறுவல் தேக்கி,
உடன்பிறந்தவர்களைப் பார்க்க வரும்
தூரத்தேசத்து தமையன் போல...
அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஓகெனக்கல் குடிநீர்திட்டமா?
பொதுமருத்துவமனை திட்டமா?
எதுவேண்டும் வேண்டும் உங்களுக்கு?
வாரிவழங்குவார்கள்;
வாய் எனும் அட்சயப்பாத்திரம் கொண்டு!

68 கிரிமினல் குற்றவழக்குகள்
நிலுவையில் உள்ளவர்கள்
ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின்
மனைவிகள்; மைத்துனிகள்;
இனத்துரோகிகள்; மொழித்துரோகிகள்;
மக்கள் துரோகிகள்; நாட்டுத்துரோகிகள்
வந்துகொண்டு இருக்கிறார்கள்.

'கும்பி எரியுது; குடல் கருகுது;
குளுகுளு ஊட்டி ஒரு கேடா? - என
45 ஆண்டுகளுக்கு முன்பு முழங்கியவர்கள்
இன்று தாமே
கொடைக்கானலாக, ஊட்டியாக,
சிம்லாவாக; குலுமனாலியாக
நடமாடி வருகிறார்கள்.

ஆடிக்கொண்டும்; பாடிக்கொண்டும்;
மிமிக்ரி செய்துகொண்டும்
கலையுலக பழைய; புதிய
கலைத்தளபதிகள்
வந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஈழத்தமிழனுக்காக ஆதரவு கோஷம்
விண்ணைத்துளைக்க
அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்

ஆடு வெட்டிப் பந்தி வைக்க;
சீமைச்சாராயப் பந்தல் நடத்த
ஊதாநிறக் காந்தித் தாட்கள் வழங்க
குடம், குத்துவிளக்கு, தாலி,
தாம்பளம், தட்டுமுட்டுச் சாமான்கள் தானம்தர
அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

உண்ணா நோண்பு இருப்பார்கள்;
பேரணி நடத்துவார்கள்;
மனிதச்சங்கிலி கோப்பார்கள்;
ஆளுக்கு ஆஸ்கர் வாங்குமளவு நடிப்பதில்
திறமைசாலிகள்
வந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆம்...
வந்து கொண்டேயிருக்கிறார்கள்

- நாஞ்சில் நாடன்

'தீதும் நன்றும்' என்னும் தலைப்பில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆனந்தவிகடனில் தொடர் கட்டுரைகள் எழுதி வருகிறார். 22/04 - 29/04/09 இதழில் "அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்" என்ற உட்தலைப்பில் வெளிவந்த மூன்று பக்க கட்டுரையை சுருக்கி தந்துள்ளேன். அவருடைய சொந்த வார்த்தைகளிலேயே!

நன்றி : ஆனந்தவிகடன்
கடந்த இரண்டு நாட்களில் மாணாக்கர் மூவர் மட்டக்களப்புப் பகுதியில் இருந்து காணாமற் போயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன, மட்டக்களப்பு, கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் 8 வயதுடைய சதீஸ்குமார் தினுஷிகா, ஏறாவூர் விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய வள்ளுவன் மதிசுதன் மற்றும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய ஏரம்பமூர்த்தி ஜனார்த்தனன் ஆகியோரே காணாமல் போன மாணாக்கர்களாவர்.

2009.04.30 ஆம் திகதியான இன்று மட்டக்களப்பு புறநகர் மற்றும் நகரப் பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்கள் இணைந்து கடத்தப்பட்ட மாணாக்கர்களை விடுவிக்கக் கோரி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர், நேற்று மாணவி காணாமற் போன செய்தி அறிந்ததில் இருந்து அப்பகுதி மக்கள் அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு வீதிகள் வெறிச்சோடி போயுள்ளதுடன், கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.

கடந்த மாதம் திருகோணமலையில் வர்ஷா எனும் பச்சிளம் பாலகி கடத்தல்காரர்களால் கடத்திக் கப்பம் கோரப்பட்டு இறுதியில் கொலை செய்யப்பட்டார், இது தொடர்பாக ஆயுதக் குழுவொன்று தொடர்புற்றுள்ளதாக செய்திகள் வந்த போதிலும் சந்தேக நபர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான கடத்தல் சம்பவங்களினால் பாடசாலைகளுக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர் தயங்குகின்றார்கள், இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமலும், சம்பந்தப்பட்டவர்களைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த அரசியல்வாதிகளும், பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களும் உளசுத்தியுடன் செயற்படுவதே சிறந்ததாகும்.

இச் சம்பவங்கள் இனிமேலும் தொடரக் கூடாது என்பதனால் களத்துமேடு தனது ஆதங்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.
கடந்த இரண்டு நாட்களில் மாணாக்கர் மூவர் மட்டக்களப்புப் பகுதியில் இருந்து காணாமற் போயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன, மட்டக்களப்பு, கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் 8 வயதுடைய சதீஸ்குமார் தினுஷிகா, ஏறாவூர் விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய வள்ளுவன் மதிசுதன் மற்றும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய ஏரம்பமூர்த்தி ஜனார்த்தனன் ஆகியோரே காணாமல் போன மாணாக்கர்களாவர்.

2009.04.30 ஆம் திகதியான இன்று மட்டக்களப்பு புறநகர் மற்றும் நகரப் பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்கள் இணைந்து கடத்தப்பட்ட மாணாக்கர்களை விடுவிக்கக் கோரி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர், நேற்று மாணவி காணாமற் போன செய்தி அறிந்ததில் இருந்து அப்பகுதி மக்கள் அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு வீதிகள் வெறிச்சோடி போயுள்ளதுடன், கடைகளும் பூட்டப்பட்டுள்ளன.

கடந்த மாதம் திருகோணமலையில் வர்ஷா எனும் பச்சிளம் பாலகி கடத்தல்காரர்களால் கடத்திக் கப்பம் கோரப்பட்டு இறுதியில் கொலை செய்யப்பட்டார், இது தொடர்பாக ஆயுதக் குழுவொன்று தொடர்புற்றுள்ளதாக செய்திகள் வந்த போதிலும் சந்தேக நபர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான கடத்தல் சம்பவங்களினால் பாடசாலைகளுக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர் தயங்குகின்றார்கள், இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமலும், சம்பந்தப்பட்டவர்களைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த அரசியல்வாதிகளும், பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களும் உளசுத்தியுடன் செயற்படுவதே சிறந்ததாகும்.

இச் சம்பவங்கள் இனிமேலும் தொடரக் கூடாது என்பதனால் களத்துமேடு தனது ஆதங்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.


More than a Blog Aggregator

by இ.பி.கோ 498A
செய்தி - 1


நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படையை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 25) டெம்போ டிரைவர். இவரது மனைவி பவித்ரா (19). இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1- 1/2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தன்னை தனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்று விடும்படி பவித்ரா தனது கணவரிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கு பழனிச்சாமி தனக்கு வேலை உள்ளது என்றும் வேண்டுமானால் உனது தாயாரை வரவழைத்து அவருடன் செல் என கூறியதாகவும் தெரிகிறது. நீங்கள் கொண்டு வந்து விடுங்கள் என கூறி கண வரிடம் பவித்ரா வாய் தகராறில் ஈடுபட்டதாக தெரி கிறது. இந்த நிலையில் பழனிச் சாமி வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் மனம் உடைந்த நிலையில் இருந்த பவித்ரா வீட்டில் இருந்த மண் எண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டு இறந்தார்.

இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ராவிற்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் ஈரோடு உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.


(தற்கொலைக்கான காரணத்தைக் கவனியுங்கள்)


செய்தி - 2


நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தியை அடுத்த மேட்டுகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்ராஜா (வயது 20). இவருக்கும் கொண்டிசெட்டிபட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகள் நித்யாவிற்கும் கடந்த 1-1/2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நித்யாவும், செந்தில் ராஜாவும், செந்தில்ராஜா வீட்டில் கூட்டு குடும்பமாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் நித்யா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.


இந்தநிலையில் கடந்த 24-ந் தேதி செந்தில்ராஜா நித்யா வீட்டிற்கு சென்று நித்யாவை மிரட்டி தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அவரிடம் 30 ஆயிரம் பணமும், 30 பவுன் நகை யும் உனது தந்தையிடம் வர தட்சணையாக கொண்டு வரச்சொல். இல்லையெனில் உன் தாய் வீட்டிற்கு அனுப்ப மாட்டேன் என கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நித்யாவின் தந்தைக்கு செந்தில்ராஜா போன் செய்து உங்களது மகள் மருந்து குடித்து விட்டதாகவும், அவரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளதாகவும் கூறினார்.

செய்தி அறிந்து அதிர்ச் சியடைந்த நித்யாவின் தந்தை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்த போது தன் மகள் இறந்து கிடந்ததாகவும், காலின் விரல்களில் காயம் இருப்பதாகவும் எனவே மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வேலகவுண்டம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


More than a Blog Aggregator

by இ.பி.கோ 498A
செய்தி - 1


நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படையை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 25) டெம்போ டிரைவர். இவரது மனைவி பவித்ரா (19). இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1- 1/2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தன்னை தனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்று விடும்படி பவித்ரா தனது கணவரிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கு பழனிச்சாமி தனக்கு வேலை உள்ளது என்றும் வேண்டுமானால் உனது தாயாரை வரவழைத்து அவருடன் செல் என கூறியதாகவும் தெரிகிறது. நீங்கள் கொண்டு வந்து விடுங்கள் என கூறி கண வரிடம் பவித்ரா வாய் தகராறில் ஈடுபட்டதாக தெரி கிறது. இந்த நிலையில் பழனிச் சாமி வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் மனம் உடைந்த நிலையில் இருந்த பவித்ரா வீட்டில் இருந்த மண் எண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டு இறந்தார்.

இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ராவிற்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் ஈரோடு உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.


(தற்கொலைக்கான காரணத்தைக் கவனியுங்கள்)


செய்தி - 2


நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தியை அடுத்த மேட்டுகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்ராஜா (வயது 20). இவருக்கும் கொண்டிசெட்டிபட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகள் நித்யாவிற்கும் கடந்த 1-1/2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நித்யாவும், செந்தில் ராஜாவும், செந்தில்ராஜா வீட்டில் கூட்டு குடும்பமாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் நித்யா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.


இந்தநிலையில் கடந்த 24-ந் தேதி செந்தில்ராஜா நித்யா வீட்டிற்கு சென்று நித்யாவை மிரட்டி தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அவரிடம் 30 ஆயிரம் பணமும், 30 பவுன் நகை யும் உனது தந்தையிடம் வர தட்சணையாக கொண்டு வரச்சொல். இல்லையெனில் உன் தாய் வீட்டிற்கு அனுப்ப மாட்டேன் என கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நித்யாவின் தந்தைக்கு செந்தில்ராஜா போன் செய்து உங்களது மகள் மருந்து குடித்து விட்டதாகவும், அவரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளதாகவும் கூறினார்.

செய்தி அறிந்து அதிர்ச் சியடைந்த நித்யாவின் தந்தை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்த போது தன் மகள் இறந்து கிடந்ததாகவும், காலின் விரல்களில் காயம் இருப்பதாகவும் எனவே மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வேலகவுண்டம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை: