

அப்பு, பட்ட போட்டு காய்ச்சுன மரமா இல்ல பட்ட போடாத மரம்,ஏன்னா பட்ட போட்டு காய்ச்சுனாதான் ஜ்வ்வு ஏறுமுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. அது சரி காய்ச்ச மரத்துக்கு கல்லடி, காய்ச்சாத மரத்துக்கு உங்க சொல்லடியா? அம்மாடி.
அவர்கள் " சுயம் " என்னும் தலைப்பில் எழுதிய கவிதை )

அவ்வைக்கும் தமிழுக்கும்
ஆயிரம் காலமாய் உறவுதான்...
தமிழ்க்கடவுளோடு
தர்க்கம் புரிந்து
சுட்ட கனி கொடுத்த
சூட்சுமம் இரசிக்கலாம் தான்...
என்றாலும்
தமிழ்ப்பாட்டி நினைவாக
தமிழ்க் கடவுள் சாட்சியாக
இன்றைக்கும் சிலர்
சுட்டகனிக்குப் பதிலாக
சுட்டகவிதை தருவதால்...
அப் போலிகளின் பெயரால்
ஏற்கனவே வெளிவந்த
எல்லா கவிதைகளின் மீதும்
எழுகிறது ஐயம்...
நம்மை...
சொக்க வைத்த பல கவிதைகள்
சுயம் தானா அல்லது
அவையும் இவைபோலவே
சுட்டவைதானா என்ற வினாவோடு!
அவர்கள் " சுயம் " என்னும் தலைப்பில் எழுதிய கவிதை )

அவ்வைக்கும் தமிழுக்கும்
ஆயிரம் காலமாய் உறவுதான்...
தமிழ்க்கடவுளோடு
தர்க்கம் புரிந்து
சுட்ட கனி கொடுத்த
சூட்சுமம் இரசிக்கலாம் தான்...
என்றாலும்
தமிழ்ப்பாட்டி நினைவாக
தமிழ்க் கடவுள் சாட்சியாக
இன்றைக்கும் சிலர்
சுட்டகனிக்குப் பதிலாக
சுட்டகவிதை தருவதால்...
அப் போலிகளின் பெயரால்
ஏற்கனவே வெளிவந்த
எல்லா கவிதைகளின் மீதும்
எழுகிறது ஐயம்...
நம்மை...
சொக்க வைத்த பல கவிதைகள்
சுயம் தானா அல்லது
அவையும் இவைபோலவே
சுட்டவைதானா என்ற வினாவோடு!
1.கொண்டயம்
நமக்கு வாழ்க்கையில் பயன்படுத்திய சொற்கள் என்றால் அது கொம்பும் கொண்டையும் தான். அவை இரண்டும் தலைக்கு மேலுள்ளவற்றைக் குறிப்பது. அதாவது உச்சியை, அது போல தான் கொண்டயம் என்னும் சொல்லும் கொங்கு வட்டாரத்தில் போர், வீட்டின் கூரை, மரம் போன்றவற்றின் உச்சியைச் சுட்டிக் காட்டும்.
வழக்கில் சொல்லும் போது " கொண்டயம் மேயோனும் கொண்டயத்துல ஏறிக்கிட்டான் " என்பதுண்டு.
கொடு - கோடு
கொண்டை - கொண்டயம் - கொம்பு
என்று எப்படி எல்லாம் தமிழ்ச் சொல் உருவாகின்றன.பாருங்கள்
2.சூட்டிப்பு
சுறுசுறுப்பையும் கவனிப்பையும் தெரியும்.அது என்ன சூட்டிப்பு ? சுறுசுறுப்பாக இருப்பவர்கள் விவரமாக இருப்பார்கள் என்று சொல்லுவதற்கில்லை. அந்த இரண்டையும் ஒருங்கே இணைய பெற்ற தன்மை குறிப்பது தான் சூட்டிப்பு என்பது. பேச்சு வழக்கில் " பையன் நல்ல சூட்டிப்பு " என வழங்கக் காணலாம்.
3.மொடக்கடி
அடிக்கடி வீட்டில் குழந்தைகள் மொடக்கடி செய்து நெருக்கடி உண்டாக்கும்.மொடக்கடி என்றால் முரண்டு பிடித்தல், ஒத்து வராமை, பிடிவாதம் என்று பொருள் படும்.
முகர்ந்து - மோந்து - மோப்பம் என்று திரிந்த வண்ணம்
முரண்டு -மொரண்டு என்று திரிந்து அழகான ஒரு சொல்லைத் தந்து உள்ளது.
4.ஒணத்தி
குழம்பு நல்ல ஒணத்தியாக இருக்கிறது என சொல்லுவதுண்டு.இங்கே ஒணத்தி என்பது சுவையாக என்று பொருள் படும்.
உண்ணும் பொருள் உணவு எனபது போல்,உண்ணும் உணவு சுவையாக இருந்தால் உணத்தி (ஒணத்தி) அதாவது பருத்தி, அகத்தி போன்று உருவான சொல் தான் ஒணத்தி( உணத்தி) என்பது . உறவினர் எனபது ஒரம்பரை என்று சொல்லப்படுவதுண்டு , பேச்சுத்தமிழ் உ என்பது ஒ வாக மாறும்.
வட்டாரச் சொற்கள் என்ற உடனே இழிவான சொற்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். மேற்கண்ட சொற்களே அந்த எண்ணத்தை உடைப்பவையாக உள்ளன என்றால் உண்மை. வட்டாரச் சொற்களை ஆய்வுச் செய்தால் ஆயிரம் ஆயிரம் சொற்களை அள்ளி எடுக்க முடியும். அதுவும் அழகான, அருமையான அமுதச் சொற்களை முடிந்தயளவு வாழ்க்கையிலும் பயன்படுத்தி, தமிழை வாழ வைப்போம்.இறுதியாக சிங்கையிலே தமிழ்மொழி மாதத்தை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. அவற்றைப் பற்றி ஒரு நிகழ்ச்சி தான் தமிழ் வசந்தம் ஒளிவழியில் ஒளிப்பரப்பாகும்
" தமிழை நேசிப்போம் தமிழ்ப் பேசுவோம் " என்னும் நிகழ்ச்சி.
அதைப் பற்றி ஒரு விழியம் ( video ) தான் தங்களின் விழிகளுக்கு
கண்டுக் களிக்கவும்

( Thanks : Images - www.coloring-pages-kids.com/ )
வயதாகி விட்டால் வீட்டில் முடங்கி கிடக்க வேண்டிய தானே என்று முதியோர்களை முணுமுணுக்கும் வார்த்தைகள் வயதின் வேதனையை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
இன்னும் ஒருபடி மேலாக,
"
வயதாகி விட்டால்
வயோதிகருக்கு
வளர்ந்துவரும் சமுதாயம்
வழங்குவது
வளர்த்துவிட்ட
முதியோர் இல்லமா ? " என்பதும்,
"
வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன் " ( நன்றி அனுஜன்யா அவர்கள் )
என்னும் வரிகளும் உள்ளத்தில் வலியை ஏற்படுகிறது என்பது உண்மை.
வயதுக்கே இத்தனை வலி என்றால், அச்சொல்லையே வேற்றுமொழிச் சொல்லாக வரையறுத்த கொடுமையை என்னவென்று இயம்புவது ?
வாழும் உலகத்தை வையம், வையகம் என்று எல்லாம் அழைக்கின்றோம்.
வையத்திற்கும்,வாழ்விற்கும் ஆதாரமானது உழவுத்தொழில்.அதனால் தான் வான்புகழ் வள்ளுவரும்,
"
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை " என்றார்.
உணவிற்கும்,விளைச்சலுக்கும் உறைவிடமாக விளக்கும் நிலத்தை வைத்திருந்த காரணத்தாலே வை - வய் - வயல் என்று அழைக்கப்பட்டது.அது மட்டுமா?
உணவு உட்கொள்கின்றோம்.அது உள்ளே சென்று ஒரு இடத்தில் வைக்கப்படுகின்றது.அந்த வைக்கப்பட்ட பகுதியே வை - வய் - வயிறு என்று கூறப்பட்டது.
வயிறு பற்றி வள்ளுவர் கூறுவதைக் கேட்டால் இன்னும் வியப்பின் விளம்பிற்கே இட்டு செல்லும்.
"
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி " என்பார்.
இதன் பொருள் என்னவென்றால்,
பொருளை ஈட்டுகின்றோம்;செல்வத்தை வைக்குமிடம் எது ?.
வங்கியிலா ? இல்லை வீட்டிலா ?
இல்லை இல்லை அதை வைக்க வேண்டிய இடம் ஏழைகளின் வயிறு என்று விளக்கமளித்து
உலகத்தில் வறுமையை விரட்டும் வழியை கூறுகின்றார்.
தாயின் வயிற்றில் இருந்து பிறந்தோம்; வையத்தில் வாழ்கின்றோம்; நாளும் பொழுது வளர்கின்றோம்; இந்த வளர்ச்சியை எப்படி வரையறுப்பது ?
உயரத்தைக் கொண்டா? இல்லை
உருவத்தைக் கொண்டா ? இல்லை இல்லை
வையத்தில் வாழ்கின்ற நாள்களைக் கொண்டு தானே,
அதனால் தான் வை - வய் - வயது என்று அகிலத்தில் இருக்கும் நாள்களை அளவிடக் கொண்டு அழைத்துக் கொண்டோம்.
பார்த்தீர்களா !!!
வாயில் வரும் வார்த்தையாக எல்லாம் வடிவம் பெற்று விடுவதில்லை.சிற்பி செதுக்கும் சிற்பம் போல செதுக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு செந்தமிழ்ச்சொற்களும் என்பதை சிந்தையில் கொள்ள வேண்டும்.
வயதைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல்தான் அகவை என்பது. அகவை என்று அழைக்கப்பட்டதின் காரணம் தான் என்ன?
கொஞ்சம் ஆராய்ந்துதான் பார்ப்போமே.
அகவை என்பதை அகம்+வை என்று பிரிக்கலாம். அகம் என்றால் என்ன?.
உள்ளம் என்பதையே அகம் என்று அழைக்கின்றோம்.
உலகியலை உற்று நோக்கினால் உணர முடியும். உடல்வலிமை இருப்பவர்கள் கூட உள்ளத்தில் உறுதியற்று, உவகையற்று இருப்பதால் வேதனைத்தீயில் வாடுவதைக் கண்ட
வாழ்வியல் தமிழன்,
உடம்புடன் உடன்பாடு கொள்வதைவிட உள்ளத்தோடு உடன்படிக்கை செய்வதே உயிர் வாழ்வதற்கு மட்டுமல்ல, வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்க உதவும் என்பதாலே அகம் என்பதை அளவுக்கோலாக கொண்டு வயதை அகவை என்று அழைத்திட்டான்.
வயதின் வரையறையும், அகவையின் அளவுக்கோலையும் அறியும் பொழுது அன்னைத்தமிழ் மேல் அளவிலா உவகை உண்டாகிறது அல்லவா.
வயதை இன்னும் வேற்றுமொழிச்சொல்லாக வகைப்படுத்துபவர்களுக்கு சொல்லிக் கொள்வது இதுதான்.
உருவ ஒற்றுமையில் ஒத்திருப்பதை விட உள்ளணுக்கள் ( DNA ) ஒத்துப்போனாலே உறவுகள் கூட உரிமை கொண்டும் உலகத்தில் உகத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றோம்.
இது வெறும் அறிவியல் அடிப்படை உண்மை மட்டுமல்ல, சொல்லாராய்ச்சிக்கும் அளவுக்கோல் இது என்பதை மறந்துவிட கூடாது.
இப்படி எல்லாம் அள்ள அள்ள குறையாத அமுதம் அன்னைத்தமிழில் அமைந்திருக்கையில்
அயல்மொழிக்கு அடிமையாக கூடாது என்பதே என் அவா.

(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )
அவன் என்னைக் கொச்சைப்படுத்திவிட்டான் என்று சொல்லி வேதனைப்படுகின்றோம்; சினப்படுகின்றோம்.
கொச்சைப்படுத்துதல் என்றால் என்ன ?
போருக்குச் சொல்லும் குதிரைகளை அந்நாளில் அழகுபடுத்துவர். குதிரைகளின் கழுத்தில் நீண்டு வளர்ந்து தொங்கும் பிடரிமயிரைக் கத்தரித்து விடுவதும் அந்த அழகு செய்வதில் அடங்கும்.இவ்வாறு கத்தரித்து விடப்பட்ட பிடரிமயிரை உடைய குதிரையைக் " கொய்யுளை மா " என்று சொல்லுவர்.
" கொய்தல் " என்பதற்குக் குறைத்தல் என்பது பொருள். " உளை " என்பதற்கு அசைகின்ற பிடரிமயிர் என்பது பொருள். மயிர் குறைக்கப்பட்ட மாவே இங்குக் " கொய்யுளை மா " எனப்பட்டது.
இந்தக் கொய்தல் அடியாகத்தான்
கொய் - கொய்சு - கொய்ச்சு - கொய்ச்சை - கொச்சை
என்னும் சொற்களும் தோன்றின. ஒருவருக்கு உரிய மதிப்பைக் குறைத்து விடுதலே " கொச்சைப்படுத்துதல் " என்பதற்குப் பொருளாகும்.
மொழிவழக்கிலும் கொச்சைவழக்கு என்பது இன்று பேசப்பட்டு வருகின்ற ஒன்றாகும்.
மொழியில் உள்ள சொற்களைச் செப்பமாகப் பேசாமல் அதனதன் வடிவைச் சிதைத்துக் குறைத்துப் பேசுவதே " கொச்சை " என்பதற்குப் பொருளாகும்.
சொற்களை அப்படியே முழுமையாகப் பேச முடியாமல் திரித்துக் குறைத்துப் பேசுவதும் எழுதுவதும் தவிர்க்க முடியாததே. சான்றோர்கள் வழக்கிலும் இது நிகழ்ந்து வந்துள்ளது.
" இந்தப் பூவினை மோந்துபார் " என்று சொல்கிறோம். மோந்துபார் என்பதன் உண்மையான வடிவம் " முகர்ந்து பார் " என்பதுதான்.
முகர் - முகர்தல் - முகர்ந்து பார்த்தல் - மோர்ந்து பார்த்தல் - மோந்து பார்த்தல் என்றுதான் இச் சொல் சிதைந்தது.
முகர் - முகர்ப்ப நாய் - மொகர்ப்ப நாய் - மோர்ப்ப நாய் - மோப்ப நாய் என்றெல்லாம் இந்த வகையில்தான் நாம் இன்று பேசியும் எழுதியும் வருகிறோம்.
திருவள்ளுவரும் இந்த எளிய பேச்சு வழக்கினை ஒத்துக்கொண்டு " மோப்பக் குழையும் அனிச்சம் " என்றே சொல்லியுள்ளார்.
மொழியின் சொற்கள் பலவும் இவ்வாறு பேச்சு வழக்கில் திரிய நிறைய வாய்ப்பிருக்கிறது. பேச்சுத்தமிழ் என்பது பெரும்பாலும் முழுச்சொற்களின் சிதைந்த வடிவங்களையே கொண்டுள்ளது.
வந்து ஆயிற்று என்பது " வந்தாச்சு " என்றும் தின்று ஆயிற்று என்பது " தின்னாச்சு " என்றும் திரிவது போல நிறையச் சொல்லலாம்.
எளிமை காரணமாக - விரைவு காரணமாக மொழியின் சொற்கள் பேச்சு வழக்கில் திரியலாம். மொழியின் இந்த இயல்பை உணராமல் பேச்சு வழக்குத்தான் உண்மையான தமிழ். அந்தத் தமிழைத்தான் எழுதவும் வேண்டும் என்போர்கூட நம்மிடையை உள்ளனர்.
" நஞ்ச , புஞ்ச " என்று பேசுகிறோம். ஆதிமாந்தன் வேளாண்மையை எப்படி உருவாக்கினான் என்ற வரலாற்றை இந்தக் கொச்சை வழக்கினால் அறிந்து கொள்ள முடியாது.கல்லும் முள்ளுமாய் இருந்த நிலம் விளைவிற்காகச் செய்யப்பட்டது.அதுவே " செய் " என்று ஆயிற்று. தமிழில் " செய் " என்பதற்கு " நிலம் " என்று பொருள். நன்றாகச் செய்யப்பட்ட நிலம் " நன்செய் " என்றும் புன்மையாகச் செய்யப்பட்ட நிலம் " புன்செய் " என்றும் இந்த வகையில்தான் பெயர் பெற்றன.
நம்மைக் கொச்சைப்படுத்தினால் நம் மதிப்பு மட்டும்தான் குறையும். மொழியைக் கொச்சைப்படுத்தினால் நம் முன்னோர்கள் கண்ட அனைத்து அறிவும் கொச்சைப்பட்டு குறைகின்றது. தன்மானம், இனமானம் என்று மேடையில் முழங்கும் போலிகளுக்கு மொழிமானம் என்கின்ற ஒன்று தெரிவதேயில்லை. உண்மையில் மொழிமானமே எல்லா மானங்களுக்கும் மூலமும் முதலும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக