சனி, 23 மே, 2009

2009-05-23



More than a Blog Aggregator

by ஆயில்யன்


எவ்வளவுதான் நாம் நம்பிக்கை கொண்டிருந்தாலும் எந்த வேட்பாளாரும் கண்டிப்பாய் தான் ஜெயித்த பிறகு தனக்கென ஒரு கூட்டம் உருவாக்கிக்கொண்டு பொதுமக்களுக்கும் தனக்கும் இடையில் மெல்லிய திரையாக ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு திரியத்தான் போகிறார்.

நற்பணிகள் செய்வோம் என்ற சொல்லிக்கொண்டிருப்பவர்கள், நாளை செய்யாமலும் போகலாம் - நம்மால் அப்பொழுதும் கூட எந்த கேள்வியும் கேட்க இயலாது!

கட்சியினரின் கோரிக்கைகளை - எந்த விதமான வழிமுறைகளையும் பின்பற்றி - நிறைவேற்றுவதிலும், கட்சி தலைவர்களின் நிர்ப்பந்தகளுக்கு - எல்லா விதமான வழிமுறைகளிலும்- கட்டுபடுவதிலும் நாம் தேர்ந்தெடுக்கப்போகும் நபர் முன்னின்று செய்துதான் தீரவேண்டும்!

எல்லாரும் திருடர்கள் தான்!

திருட்டு நடந்ததே தெரியாத மாதிரி, திருடறவங்களை கண்டிப்பா தேர்ந்தெடுக்காதீங்க!

புதுசா யாருக்காச்சும் அந்த ஆஃபரை கொடுங்கப்பா...!


More than a Blog Aggregator

by ஆயில்யன்


எவ்வளவுதான் நாம் நம்பிக்கை கொண்டிருந்தாலும் எந்த வேட்பாளாரும் கண்டிப்பாய் தான் ஜெயித்த பிறகு தனக்கென ஒரு கூட்டம் உருவாக்கிக்கொண்டு பொதுமக்களுக்கும் தனக்கும் இடையில் மெல்லிய திரையாக ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு திரியத்தான் போகிறார்.

நற்பணிகள் செய்வோம் என்ற சொல்லிக்கொண்டிருப்பவர்கள், நாளை செய்யாமலும் போகலாம் - நம்மால் அப்பொழுதும் கூட எந்த கேள்வியும் கேட்க இயலாது!

கட்சியினரின் கோரிக்கைகளை - எந்த விதமான வழிமுறைகளையும் பின்பற்றி - நிறைவேற்றுவதிலும், கட்சி தலைவர்களின் நிர்ப்பந்தகளுக்கு - எல்லா விதமான வழிமுறைகளிலும்- கட்டுபடுவதிலும் நாம் தேர்ந்தெடுக்கப்போகும் நபர் முன்னின்று செய்துதான் தீரவேண்டும்!

எல்லாரும் திருடர்கள் தான்!

திருட்டு நடந்ததே தெரியாத மாதிரி, திருடறவங்களை கண்டிப்பா தேர்ந்தெடுக்காதீங்க!

புதுசா யாருக்காச்சும் அந்த ஆஃபரை கொடுங்கப்பா...!
தேசம்...
எம் தேசம்
அது என்னவாய்...?

மனிதம் செத்து
மானுடம் மடிந்த படி.
புத்தன் வாழ்ந்த
சத்திய பூமியா-இல்லை
பேய் பிசாசுகளின
சுதந்திர தீவா.
மயிர் கொட்டியின்
உயிரை விடக்
கேவலமாய்...

தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்
என்றானே பாரதி.

இன்று...
என் தேசத்தில்
பட்டினிச் சாவு
நித்தமும்...
நச்சு பூச்சியை
நசிக்கக் கூட
நெஞ்சில் வலி,
எம் தேசத்தில்-இன்று
எத்தனை உயிர்கள்
எத்தனை விதமாய்.

புத்தனும் போதித்திருக்க
மாட்டான்
பதவிக்காக
பட்டினிக் கொலையும்,
மண்ணுக்காக
மனித படு கொலையுமாய்
அஃறினையாய்
உயர்தினையாய்
எத்தனை உயிர்கள்.
எம் தேசத்தில் மாத்திரம்
எழுதினானா
ஒரே நாளில்
உயிர் பறிக்க
பிரமன்.

சொறிந்த புண்ணையே
சொறிந்து சொறிந்து
சீழ் வடிய வடிய
மூடிக் கட்டிய
வேட்டியும் சால்வையுமாய்
சிம்மாசனத்தில்...
மாறிய உருவங்களும்
மாறாத மனங்களுமாய்
அரக்க வம்சங்கள்
எம் தேசத்தில்.

தாயே...
என் தேசத்துத் தாயே
உன் கை ஒடித்து,
கால் முறித்து,
உன்
பிஞ்சுக் குழந்தை
குரல்வளை நெரித்து,
உன்
நெஞ்சு மிதித்தே
நடக்கிறார்கள்.

மனிதம் தொலைந்து
ஒளிந்து கொண்டது
புத்தனின்
முதுகிற்குப் பின்னால்.
பொறுமைக்குப்
பொருள் தெரியா
அகராதி அவர்களது.

காலங்கள் எத்தனை
அவலங்கள்
பார்த்தபடி...
பேச்சு வார்த்தை...
பேச்சு வார்த்தை...
யார் யாரோடு ???
"சப்" என்று
காதுக்குள் வலியெடுக்கும்
பொய் வாய்ப்பாடுகள்
வெளி நாடுகளுகளோடு.

வயோதிபர் மடங்கள் போல
விதவை மடங்கள்...
அநாதை மடங்கள்...
மடங்காய்...
இரு மடங்காய்...
மும் மடங்காய்...
முட்டி வழியமுன்
முடிவெடு தாயே
முடிவெடு
காப்பாற்று
உன் தேசத்தை !!!

வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியிலிருந்து வெளியேறிச் சென்று நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை மனிதக் கேடயங்களாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனஅழிப்புத் தாக்குதலில் இன்று திங்கட்கிழமை 1,496 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.இவர்களில் 476 பேர் சிறுவர்கள்.

ஹேமா(சுவிஸ்)
தேசம்...
எம் தேசம்
அது என்னவாய்...?

மனிதம் செத்து
மானுடம் மடிந்த படி.
புத்தன் வாழ்ந்த
சத்திய பூமியா-இல்லை
பேய் பிசாசுகளின
சுதந்திர தீவா.
மயிர் கொட்டியின்
உயிரை விடக்
கேவலமாய்...

தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்
என்றானே பாரதி.

இன்று...
என் தேசத்தில்
பட்டினிச் சாவு
நித்தமும்...
நச்சு பூச்சியை
நசிக்கக் கூட
நெஞ்சில் வலி,
எம் தேசத்தில்-இன்று
எத்தனை உயிர்கள்
எத்தனை விதமாய்.

புத்தனும் போதித்திருக்க
மாட்டான்
பதவிக்காக
பட்டினிக் கொலையும்,
மண்ணுக்காக
மனித படு கொலையுமாய்
அஃறினையாய்
உயர்தினையாய்
எத்தனை உயிர்கள்.
எம் தேசத்தில் மாத்திரம்
எழுதினானா
ஒரே நாளில்
உயிர் பறிக்க
பிரமன்.

சொறிந்த புண்ணையே
சொறிந்து சொறிந்து
சீழ் வடிய வடிய
மூடிக் கட்டிய
வேட்டியும் சால்வையுமாய்
சிம்மாசனத்தில்...
மாறிய உருவங்களும்
மாறாத மனங்களுமாய்
அரக்க வம்சங்கள்
எம் தேசத்தில்.

தாயே...
என் தேசத்துத் தாயே
உன் கை ஒடித்து,
கால் முறித்து,
உன்
பிஞ்சுக் குழந்தை
குரல்வளை நெரித்து,
உன்
நெஞ்சு மிதித்தே
நடக்கிறார்கள்.

மனிதம் தொலைந்து
ஒளிந்து கொண்டது
புத்தனின்
முதுகிற்குப் பின்னால்.
பொறுமைக்குப்
பொருள் தெரியா
அகராதி அவர்களது.

காலங்கள் எத்தனை
அவலங்கள்
பார்த்தபடி...
பேச்சு வார்த்தை...
பேச்சு வார்த்தை...
யார் யாரோடு ???
"சப்" என்று
காதுக்குள் வலியெடுக்கும்
பொய் வாய்ப்பாடுகள்
வெளி நாடுகளுகளோடு.

வயோதிபர் மடங்கள் போல
விதவை மடங்கள்...
அநாதை மடங்கள்...
மடங்காய்...
இரு மடங்காய்...
மும் மடங்காய்...
முட்டி வழியமுன்
முடிவெடு தாயே
முடிவெடு
காப்பாற்று
உன் தேசத்தை !!!

வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியிலிருந்து வெளியேறிச் சென்று நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை மனிதக் கேடயங்களாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனஅழிப்புத் தாக்குதலில் இன்று திங்கட்கிழமை 1,496 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.இவர்களில் 476 பேர் சிறுவர்கள்.

ஹேமா(சுவிஸ்)


More than a Blog Aggregator

by Asokaa Photo











More than a Blog Aggregator

by Asokaa Photo

கருத்துகள் இல்லை: