
LTTE இயக்கத்தின் தலைமைத்துவத்தையோ அதன் உறுப்பினர்களையோ கொலை செய்வதன் மூலம் இந்தப்பிரச்சினை ஒருபோதும் தீராது என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஜனாதிபதி எடுத்த கொடூர யுத்த கொள்கையால் LTTE இனர் , அவர்களால் சொல்லப்பட்டுவந்த பிரச்சினை என்பன பாரியதொன்றாகவும் சர்வதேச முக்கியத்துவம் உடையதாகவும் மாறியுள்ளது. ஏனெனில் தமிழ் மக்கள் பிரபாகரனை தமது அரசியல் தலைவராகவும் ஆத்மீக தலைவராகவுமே கருதி வந்தனர். இந்த வேதனைமிகு நேரத்தில் தமிழ் மக்களின் இதயத்துடிப்பு அதிகரித்துள்ளது. அரசியல் தேவையொன்றை வெற்றிகொள்ளும் அவசியம் தற்போது அதிகரித்துள்ளது. LTTE இனரின் தோல்வியோடு சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரித்துள்ளது. தமிழ் மக்களின் சுய ஆட்சி கொள்கை இத்துடன் முடிவடைந்து விட்டது என்று சிங்கள மக்கள் கருதுவார்களேயானால் அது போலியானது. இனிமேல் உலகில் உள்ள ஜனநாயக சக்திகள், "நீங்கள் தீவிரவாதத்தை முடித்து விட்டீர்கள். இப்போது தமிழ் மக்களுக்கு சுய ஆட்சியை வழங்கி அவர்களின் உரிமைகளை உறுதி செய்யுங்கள்" என ஜனாதிபதியை வேண்டலாம்.
அவ்வாறான நெருக்குதலுக்கு பணிவதற்கு அரசு, சம்பிக்க மற்றும் விமல் வீரவன்ச போன்றோரின் இனவாத பாதையில் இருந்து விலகி செயற்பட வேண்டிவரும். அரசு 1.9 பில்லியன் நிதியுதவியை பெறுவதற்காவது வடக்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டி ஏற்படும். தமிழர்களின் உரிமைகளை வழங்காது வேறு விடயங்களை பேசிக்கொண்டிருந்தால் தமிழ் மக்களின் போராட்டம் மீண்டும் உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது. அதனை தடுப்பதற்கு இனவாத நடத்தைகள் கட்டாயம் பின்தள்ளப்பட வேண்டும்.
நான் சொல்வது, இந்த யுத்த தோல்வியின் பின்னர் தமிழர் போராட்டத்தின் வடிவம் சிறிது காலத்திற்கே மாற்றமடையும். அது தற்போதைக்கு வெகுஜன , சர்வதேச மட்டத்தில் நடைபெறும். அதே போல் இடதுசாரிகள் என்றவகையில் நமக்கு தமிழ் மக்களின் சுய உரிமைப் போராட்டத்திற்காக ஜனநாயக ரீதியாக போராடுவதற்கு மாபெரும் கடமை இருக்கிறது. எப்படியானாலும் தமிழ் மக்கள் சார்பில் உடனடியாக யுத்த நிறுத்தம் ஏற்படப்போவதில்லை. ஆனால் மக்களின் உரிமைகள் நிர்ணயிக்கப்படாவிட்டால் அவ்வாறு ஏற்படாது என எம்மால் கூற முடியாது.
ஜனாதிபதி கூறுவது போல் வடக்கும் கிழக்கும் துரித அபிவிருத்திக்கு உற்படுத்தப்பட இருக்கிறது. ஆனால் அங்குள்ள பிரச்சினை அபிவிருத்தியல்ல. மொழி, கலாச்சாரம் மற்றும் தேசியம் என்பனவே பிரச்சினைகளாகும். அபிவிருத்தியால் மட்டும் அவர்களது உரிமையை நிர்ணயம் செய்ய முடியாது.
பிள்ளையான் மகாண சபைக்கு காணி, போலீஸ் அதிகாரங்களை கேட்கிறார். பிரதேச மக்களை புறக்கணித்து அபிவிருத்தியை மேற்கொள்ள முடியாது என நான் கூறுகிறேன். மேலும் உரிமைகளை வழங்காது அபிவிருத்தியை மேற்கொள்ள முயாதல்லவா?
-நன்றி
ராவய
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
முல்லா நசுருதீன் ஒரு முறை மங்கலான விளக்கின் வெளிச்சத்தின் கீழ் எதையோ தேடிக் கொண்டு இருந்தாராம். அந்தப் பக்கம் ஒரு வழிப்போக்கன் கேட்டானாம்... என்ன தேடுகிறீர்கள் என்று. முல்லா சொன்னாராம். எனக்கு அற்புதமான விளக்கு ஒன்று கிடைத்தது. அந்த விளக்கு இருந்தால் போதும், அதை ஏற்றியதும் இந்தப் பகுதி முழுவதும் இருட்டு என்பதே இருக்காது. ஆனால்; அதைத் தொலைத்து விட்டேன் அதை தேடுகிறேன் என்றாராம். அதற்கு அந்த வழிப் போக்கன் எங்கே தொலைத்தீர் எனக் கேக்க. முல்லா ஒரு இருட்டான பகுதியைக் காண்பித்து அங்கு என்று சொன்னாராம். அங்கே தொலைத்து விட்டு இங்கே எதற்கு தேடுகிறீர்கள் என்று கேட்டால் இங்கு தானே வெளிச்சமாக இருக்கிறது அதான் இங்கே தேடுகிறேன் என்றாராம்...!


















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக